மலர் அம்புகள்!
(அமரர் கல்கியின் கையெழுத்தில் உள்ள அத்தியாயம்)***
கல்யாணத்துக்கும் கமலாவுக்கும் பிரமாத ஆர்ப்பாட்டங்களுடன் கல்யாணம் நடந்தது.
அதற்கு பவானியும் உமாகாந்தனும் வந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிக் காரில் போகிறார்கள்.
"இந்தமாதிரியெல்லாம் வீண் ஆடம்பரம் இல்லாமல் நம் கல்யாணத்தை செய்து விட வேண்டும்" என்றான் உமா.
"நமக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே! இன்னும் என்னாத்திற்கு?" என்றாள் பவானி.
"எப்போது ஆயிற்று?"
"இதற்குமுன் எத்தனையோ ஜன்மங்களில் நமக்குக் கல்யாணம் ஆகியிருக்கிறது!" என்றாள் பவானி.
(*கடைசி அத்தியாயத்தை அமரர் கல்கியின் கையெழுத்திலேயே சுருக்கமாகக் காண்கிறோம்.)
சுபம்.

