நாயம்

கோவாலுக்குக் கொள்ளைப் பிரியம்.

மிட்டாய்க் கடைக்கும் மீன் சந்தைக்கும்

சிட்டுக் குருவி லேகியம் வாங்கவும்

கூட்டிப் போவான் சைக்கிளில் ஏற்றி.

ராமே சரத்தில் வாளிக்காரன்

பின்னே நடந்து ஈரத்தோடு

தீர்த்த மாடப் போனதாய்க் கேள்வி.

கோவாலு மச்சினிக்குக் குமட்டல் எடுத்தால்

கோவாலைக் குரைப்பதில் என்ன நாயமாம்?

கொன்று புதைத்தான் கோவாலு.

எலுமிச்சை மரத்தின் கீழ் நாய் தூங்க

ஏணையில் கோவாலு மகன் கிடக்கக்

குச்சு நாய் வேணுமாம் குழந்தை விளையாட.

(கணையாழி)