சுழல்

வெள்ளை யடித்துச் சுவரின் மேல்

சின்னம் எழுத வந்தார்கள்.

பேசிச் சிரித்துப் பீடி புகைத்து

அளவாய்க் கொஞ்சம் நிறங்கள் கலந்து

பார்த்துப் பார்த்து எழுதி விட்டுப்

பக்கச் சுவரில் சிறுநீர் கழித்துப்

போனவர் மீண்டும் திரும்பி வந்து

இந்தச் சுவரை நனைத்துப் போவார்.

வெள்ளை யடிப்பதும் மூத்திரம் பெய்வதும்

நிலைக்கச் சுவர்கள் விழுந்து முளைக்கும்.

(கணையாழி)