பிரதானம்

மழையில் நனையும் ஊர்வலம் எதுவோ

உருவம் சிதையக் கடந்து போகும்,

குறுக்குச் சந்தில் நெருங்கி நடந்து

வெற்றிலை உமிழத் தரையைத் தேடும்,

வாசல் மறித்து நீளும் குடங்களின்

வரிசையோடு நகர்ந்து கதைக்கும்,

எண்ணெய் கசியும் இனிப்புக் கூட்டிய

பொட்டலம் பிரித்துப் படித்து மெல்லும்

தெருவின் முகங்கள் பார்த்தது போதும்.

பொடிக்கடை முன்பு கண்கள் உருட்டி

விளம்பரம் செய்ய நிறுத்தி இருந்த

பொம்மைக் கழுத்து மூங்கில் தெரியத்

தலையைத் திருடிய பயலைத் தேடும்.

(கணையாழி)