Chapter 13
கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ்வதுதான் இல்லறம். அந்த வீட்டில் கருத்து ஒருமிப்பதற்கு இடமே இல்லை நர்மதாவும், பட்டப்பாவும் வட துருவமும், தென் துருவமுமாக இருந்தார்கள். சரீர இச்சையைக் கடந்துவிட்ட ஞானி என்று சொல்லமுடியாது. அந்தஏக்கம் அவளைத்தின்று கொண்டேயிருந்தது. மனைவி ரகசியத்தில் எப்படியோ இருந் துட்டுப்போகட்டும். அது ஒன்றும் தன்னை பாதிக்காது. ஊர் உலகத்தின் முன்னால் கணவன் மனைவியாக வாழவேண்டும்.
இப்படியொரு போலித்தனம். அவள் வர வர எதிலுமே பிடிப்பற்றுப்போனாள். தலை சீவிக்கொள்வதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. சில நாட்களில் ஊஞ்சலில் படுத்திருப்பாள். சில நாட்கள் சமயலறை வாசற்படியில் படுத்துத்தூங்கி விடுவாள். உள்ளே கட்டிலில் அவர்களுக்காக கங்கம்மா தைத்து வைத்த மெத்தை தூசு படிந்து கொண்டிருந்தது.
அந்த அறைக்குள் அவள் போவதில்லை. போனால்தானே பக்கத்து வீட்டு மாடியைப் பார்க்க வேண்டியிருக்கிறது? பூரணியும், பாலுவும் ஏகாந்தமாக இருப்பதும் கண்ணில் படுகிறது. அந்தப் பக்கத்து ஐன்னலை அறைந்து மூடினாள்.
இந்தத்தடவை பூரணி இரண்டாவது பிரசவத்துக்கு ஏழு மாசங்கள் கழித்துப்பிறந்த வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் முன் நர்மதாவைத்தேடி வந்தாள் அவள்.
"இங்கேயே இரேன் பூரணி அக்கா! நான் பிரசவத்துக்கு செய்யமாட்டேனா?" என்றாள் நர்மதா.
"அதெல்லாம் முடியாது நர்மதா அம்மா இல்லாமல் என்னால் தைரியமா இருக்கமுடியலை நான் போயிட்டுவறேன். எதுக்கும் நீ எந்தக் காரணத்தைக்கொண்டும் எங்கவீட்டுக்குப் போகவேண்டாம்."
ஏன்?”
'காரணம் உனக்கே தெரியும். நான் சொல்லணுமா?"
நர்மதா தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். பூரணி அரை மனசோடு போகிறாள் என்பதும் புரிந்தது.
அன்று பட்டப்பா சாப்பிடும்போது, "நாம இரண்டு பேருமா எங்கேயாவது போயிட்டு வரலாமே. எனக்கு இங்கே இருந்து அலுத்துப்போச்சு" என்று நர்மதா கேட்டாள்.
"எங்கே போகிறது?"
"போறத்துக்கு இடம்தானாஇல்லை? இப்படி காசி ராமேஸ்வரம்னு போறது. பணமா இல்லை. அக்காபோய் இரண்டு வருஷமாறது. வீட்டை விட்டு நகரலை"
"எனக்கு அதெல்லாம் பிடிக்கலை. இவ்வளவு பெரிய வீட்டைப் பூட்டிண்டு போறதும் கஷ்டம். குத்தகைகாரன் வருவான். அவனுக்கு பதில் சொல்லியாகணும். நீ வாணா போயிட்டு வாயேன். எந்தனையோ 'டூரிஸ்ட்' பஸ் போறது."
அவள் தன்னிடம் நம்பிக்கையில்லாமல் கணவனைக்கூப்பிட அவன் தட்டிக்கழிக்க, இப்பயே நாட்கள் ஓடின.
முன்பு பூரணி இல்லாத நாட்களில் பாலு சர்வ சுதந்திரமாக இந்த வீட்டில் நுழைந்து சாப்பிட்டுவிட்டுப் போவான். இந்த தடவை நர்மதா வாசல் கதவை அடைத்தே வைத்திருந்தாள்.
'காரணம் உனக்கே தெரியும்" சே! எத்தனை பெரிய வார்த்தை? இவள் புருஷனை இவளுக்குக் கண்டிக்க தைரிய மில்லை. என் பேரில் பழியை போட்டுவிட்டுப் போகிறாள் நான் ஒரு நிமிஷத்தில் அவனை என் வலையில் சிக்கவைக்க முடியும்.சே!..."
பாலு பல இரவுகள் நர்மதாவுக்காகக் காத்திருந்தான். தப்பித் தவறி வரமாட்டாளா?
கொல்லைப்பக்கம் அவளைப் பார்த்தால், "சாப்பாடு கிடைக்குமா?" என்று கேட்பான். "ஓ! ராத்திரி எட்டு மணிக்கு அவர் சாப்பிடச்சே வாருங்கோ. போடறேன்'
பட்டப்பா வருகிற நேரத்தில் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தாள் நர்மதா. தெரு விளக்குகள் எரியவில்லை. நிலவற்ற வானம். பொட் பொட்டென்று மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. பின் பலத்த மழையும் ஆரம்பித்தது. அந்த இருட்டில் நிற்க பயந்து கொண்டு ரேழிக்குள் நுழைந்தாள்.
சட்டென்று யாரோ தாழ்ப்பாள் போட்டார்கள். முரட்டுத்தனமாக அவள் உடலை அணைத்தார்கள்.
பாலு! பாலுதான்!
'அடப்பாவி! காரணம் எனக்கே தெரியும்னு பூரணி சொல்லிட்டுப் போயிருக்காளே. அவளுக்கு துரோகம் பண்ணச்சொல்றியா?"
இதிலே என்ன துரோகம் இருக்கு? உனக்கு தேவை இருக்கா இல்லையா?''
"தேவை தேவையில்லை என்பதெல்லாம் மனசைப் பொறுத்த விஷயம். என்னைப்போல இன்னொரு பெண்ணை நான் ஏமாத்த விரும்பலே"
பாலு ஒரு மிருகம்போல தோற்றமளித்தான்.
நர்மதா அவன் பிடியிலிருந்து பலமாக விடுபட்டு படுக்கை அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.
"கதவைத்திற நர்மதா. இதுவரையில் ஒன்னும் நடக்கலே. நடந்தமாதிரி ஊர்ப் பூரா சொல்லுவேன்"
"சொல்லிக்கோ”
"நிச்சயமாகச்சொல்லிடுவேன். நீ மானத்தோட ஊரில் இருக்கமாட்டே."
வாசற்கதவை யாரோ தட்டினார்கள். பாலு போய்த் திறந்தான் அவசரமாக வெளியே போய்விட்டான். நர்மதா அறையிலிருந்து வெளியே வந்தாள். தேம்பி அழுதபடி பட்டப்பாவிடம் வந்தாள்.
பட்டப்பா வேறு தினுசாகப்புரிந்து கொண்டான்.
"ஏன் அழறே! உனக்குத்தான் பூரண சுதந்திரம் குடுத்திருக்கேனே. நான் பண்ணின பாவத்துக்குப் பரிஹாரம் பண்ண வேண்டாமோ."
"நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..." அவள் அழுதாள்.
"இருந்தாத்தான் என்ன மோசம்? ஏனிப்படி போராடிக் கொண்டே இருக்கே?"
அன்று இருவரும் சாப்பிடவில்லை. இரவு வெகுநேரம் பட்டப்பா யோசித்துக் கொண்டிருந்தான். நர்மதாவின் உள்ளத்தில் அவ்வப்போது எழும் சலனங்களை அவள் மாய்த் துக்கொண்டு இப்படிப் போலியாக வாழ்வதுபோல் தோன் றியது. அந்தப்பெண்ணை இப்படி மாய விடுவது மகத்தான துரோகமாகத் தோன்றியது அவனுக்கு.
கோர்ட், விவாகரத்து இதற்கெல்லாம் அவள் ஒத்துக் கொள்ளக் கூடியவள் இல்லை. என்ன பண்ணலாம்?
அவளுடைய வாழ்க்கையிலிருந்து தான் விலகிப்போய்விட வேண்டும். கொஞ்ச நாட்களாகவே தனக்கு தூக்கம் வருவ தில்லை. மனம் சோர்ந்து போகிறது. எதிலும் பிடித்தமில் லாமல் இருக்கிறது. நர்மதாவைப்பார்த்தால் கூடப் பிடிக் கவில்லை.
கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கேயாவது போய்விடலாமா? எங்கேபோவது? இந்த எண்ணங்களே தன்னை எங்கே போனா லும் துரத்திக்கொண்டு வருமே! அவள் அவனுடன் இருந்து கொண்டிருக்கிறாளே தவிர, அவள் மனதில் அவனுக்கு இடமில்லை. சமூக நியதிக்காக இப்படி ஒரு நெருப்பில் அவள் வெந்துகொண்டிருக்கிறாள்.
நாலைந்து வருஷங்களுக்கு முன் அவர்களுடைய முதல் இரவில் அவளிடம் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தது. இன்று மறுபடியும் கடிதம் எழுதினான். மறுபடியும் கிழித்துப்
போட்டான்.
''நான் ஊரைவிட்டுப் போகிறேன். உன் இஷ்டப்படி இருக்கலாம்." இப்படி ஏழெட்டு முறைகள் எழுதி எழுதிக் கிழித்தான். அவள் மாறமாட்டாள். உணர்ச்சிகளுடன் போராடிக்கொண்டு, கணவனை நினைத்துக்கொண்டு அணு ணுவாகச் செத்துக்கொண்டிருப்பாள். இந்த மாதிரி சரீர இச்சைக்கு முக்யத்வம் கொடுக்கிறதானால் இந்த நாட்டில் இப்போதும் ஆயிரக்கணக்கான விதவைகள் சுத்தமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. ஆயிரக்கணக்கான வித வைகளிலே நூற்றுக் கணக்கில்கூட மறுமணம் நடைபெறுவதில்லை. ஏதோ ஓர் உன்னதமான உணர்வு அவர்களின் மனசில் நிலையாக இடம் பிடித்திருப்பதனால்தான் அவர்களால் அப்படி இருக்க முடிகிறது.
வெளியே வானம் நிர்மலாக இருந்தது. நஷத்திரங்கள் பொரிந்து கிடந்தன. சுகமான காற்று வீசியது. யார் வீட்டு ரேடியாவோ தன்யாசியை மீட்டிக்கொண்டிருந்தது. இரவின் முதல் ஜாமத்தில், ஊரடங்கிக் கிடக்கும்போது ஒலித்த சுஸ் ஸ்வரமான சங்கீதம் அவனை அழ வைத்தது. இறைவன் தாமத்தை மனமாறப் பாடிக் கேட்கும்போது ஏற்படுகிற உணர்வு இருக்கிறதே-சுகம் இருக்கிறதே - அதற்கு ஈடு இணை இல்லை. அவன் நாத வெள்னத்தில் லயித்துப்போயிருந்தான். இப்படி பாடிக்கொண்டு கோகுலம், பிருந்தாவனம், மதுரை என்று போய்விடலாமா? மேவாரின் அரசியாக இருந்த மீரா உலக பந்தங்களின் தளைகளை உடைத்துக் கொண்டு சுதந்தி ரமாக ஒரு பறவைபோல், காற்றுவெளியில் மிதக்கிற சுகானு பவத்தை நுகர்ந்து கொண்டு பிருந்தாவனத்துக் கண்ணனை தரிசிக்கப்போனாளாமே. அம்மாதிரி ஒரு உணர்வு தனக்கும் ஏற்பட்டு இப்போதே இந்த வீடு, வாசல், நர்மதா எல்லோ ரையும் மறந்து அவனை நாடிப்போனால் இதற்குப் பரிகாரம் கிடைக்குமோ!
நக்ஷத்திர ஒளியை, வைகறை என்று நினைத்து ஒரு பறவை ஜிவ்வென்று பறந்து போயிற்று.எல்லா ஜீவராசிகளையும்விட பறவை இனங்களுக்கு இயற்கையிலேயே ஒரு வரப்பிரசாதம் உண்டு. விண்வெளியில் சுத்தமான காற்றை உட்கொண்ட படி பறந்து திரியும் சுகம் அவைகளுக்கு உண்டு.
மேஐைக்கருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் அப் படியே தூங்கிப்போனான்.

