Chapter 7

மாலை நான்கு மணிக்கு பட்டப்பாவும், நர்மதாவுமே வந்தார்கள்.

"அக்கா எங்களை சினிமாவுக்குப் போகச்சொன்னா என்றான் பட்டப்பா.

"நல்ல காதல் சினிமாவா கூட்டிண்டு போ..." என்றான் பாலு.

"காதல்லே நல்ல காதல், கெட்ட காதல்னு இருக்கா என்ன? ஓண்ணு காதல்னு இருக்கு, இல்லை காமம்னு கேட்டிருக் கேன். முந்தினது உயர்வானது. பிந்தியது மட்டமானது" பூரணி சிரித்தபடி சொன்னாள்.

”இப்ப சினிமாவிலே காதல் வரதில்லை. காமம்தான் ஜாஸ் இயா இருக்கு. அதுவும் ஆண்கள் கற்பழிக்கவே - அந்த ஒரு காரணத்துக்காகவே பிறந்தமாதிரி - பிறந்தவர்கள் என்கிற நிலையில், 'ரேப்' காட்சிகள் இல்லாமல் சினிமா இல்லை. நடிப் பாக இருந்தாலும் அந்தக் காட்சிகளில் எனக்கு வருத்தமாக இருக்கும். கடவுள் பெண் வர்க்கம் என்று ஒன்றை ஏன் திருஷ்டி செய்தான் என்று நினைப்பேன். பொம்மனாட்டியை மிகவும் கேவலப்படுத்தற மாதிரி சம்பந்தமில்லாம இந்தக் கண்றாவியைப் பார்க்க வேண்டியிருக்கு திரும்பவும் படபட வென்று பேசினாள் பூரணி.

பேச்சிலே அவள் ரொம்பக்கெட்டிக்காரி. நர்மதா அசந்து போய் நின்றாள்.எந்த விஷயத்தையும் லஜ்ஜைப்படாமல், வெகுளித்தனமாய் அவள் பேசுவதை ரசித்தாள்.

"நீங்களும் வாங்கோ” என்று அழைத்தாள் நர்மதா.

"நீ போடி... நாங்க எதுக்கு? ஆட்டபாட்டமெல்லாம் ஓய்ஞ்சு ஒரு பிள்ளை பெத்துக்கப்போறேன். கொஞ்சம் நிம்மதியா படுத்துத்தூங்கணும். இவர்காப்பி காப்பின்னு எடுத்துட்டார். நீ ஜாலியா போயிட்டு வா'

"நீங்க வாங்களேன் சார்" பட்டப்பா பேசினான்.

"போயிட்டு வாங்க... கொஞ்சம் அவாளைத்தனியா விட் டுட்டு உட்காருங்கோ"

சினிமா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ஒரு வரிசையில் கடைசியில் ஒரு சீட் காலியாக இருந்தது. பின் புற வரிசையில் இரண்டு 'சீட்'கள் இருந்தன. முதலில் பட்டப்பாவும், நர்ம தாவும் பின்புற வரிசையில் உட்கார்ந்தார்கள். கடைசி சீட்' காலியாக இருந்ததில் பாலு உட்காரச் சென்றான். அந்த வரிசையில் பெண்களே இருந்ததால் இவன் வருவதை அவர் கள் விரும்பவில்லை. ஆகவே, நர்மதா அந்த இடத்துக்கு வந்து உட்கார்ந்தாள். தனியாக உட்கார்ந்திருக்க நர்மதா வுக்கு என்னவோபோல் இருந்தது.

விளக்குகள் அணைந்தன. படம் ஓட ஆரம்பித்தது. வழக் கமான 'டூயட்'. ஓடிப்பிடித்தல், அனைத்தல். பின்புறமிருந்து ஒரு கை இருட்டில் அவள் தோளைத்தொட்டது. நர்மதா புல் லரித்துப்போனாள். கணவன்தான் என்று நினைத்தாள். அந்தக் அவள் கழுத்தில் சுருண்டிருந்த முடியை வருடிக் கொடுத்தது.

பிறகு சிறிதுநேரம் ஒன்றுமில்லை. திரும்பவும் தன்னை அந்தக்கரம் தொடவேண்டும் என்று ஏங்கினாள் அவள்.

இடைவேளையின்போது 'சீட்டில் பட்டப்பா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். இவளைக் குறும்புடன் திரும்பிப் பார்த்த பாலு "கூல் ட்ரிங்ஸ்' சாப்பிடறியா?" என்று கேட்டான்.

நர்மதா குழப்பத்துடன் தவித்தாள். கணவன் தூங்குகிறான். “உம்” என்று தலையை ஆட்டி வைத்தாள். இதற்குள் பட்டப்பா விழித்துக்கொண்டுவிட்டான்.

"ரொம்ப நாழியா தூக்கமோ?"

என்னவோ அப்படி அசந்து போச்சு...எனக்கு இதெல்லாம் பிடிச்சிறதேயில்லை. அக்கா தொத்தரவு பிடிக்காம வந்தேன்' என்றான் மனைவியிடம்.

'இருட்டில் தன்னைப்பரிவுடன் தொட்ட அந்தக்கை பாலு வினுடையதா? என்ன தைரியம் இருந்தால் இப்படித்தொட முடியும்? தொட்டா என்ன? எத்தனை நாளைக்கு இப்படி கரு கிண்டுஇருக்கிறது? அந்த சாயிராமே தேவலை. அவர் பேச்சைக் கேட்டுண்டு சினிமாவிலே சேர்ந்திருந்தா எத்தனை பெரிய நடிகரெல்லாம் என்னைத்தொட்டிருப்பா.."

மறுபடியும் இருட்டு. இப்போ முதல் இரவு, வழக்கம் போல் பால் பழம். கஷ்டம் கஷ்டம். இதெல்லாம் காண்பிக் விட்டால் என்ன தலையா வெடித்து விடும்? பல வீடுகளில் இதெல்லாம் இப்போது கிடையாது. மனைவியை அழைத்துக் கொண்டு எங்கேயாவது கிளம்பி விடுகிறான். நர்மதா சலித் துக்கொண்டாள். பக்கத்தில் இருந்த பெண்களும் இதை விரும்பவில்லை. 'நம்பப் பெண்ணுகூட உட்காந்து சினிமா பாக்கமுடியலை இப்போ. மானம் போவுது...' என்று ரகசியக் குரலில் ஆங்காரமாகப் பேசினாள் அந்த மூதாட்டி.

முதல் இரவில் ஆரம்பித்த காட்சிகள் படிப்படியாக மனைவியைக் கொடுமைப் படுத்துவது வரையில் நீண்டன.

"என்ன கதைன்னு சினிமா எடுக்கிறான்கள்? ஒண்ணு காதலும் ஊதலும். இல்லைன்னா பொம்மனாட்டி பிழியப் பிரிய அழுதுண்டு நிக்கணும். அதைப்பார்த்துட்டு நாம்பளும் அழணும். ஆதியிலே சீதை, திரௌபதி அழுதது போறலை. ன்னி வரைக்கும் நாமும் அழணும்னே கதை எழுதி படம் டுக்கிறாங்க...'' மூதாட்டியே பேசினாள்.

பாலுவுக்குப் படத்தைவிட நர்மதாவே சுவாரஸ்யமாக இருந்தாள்.

அவள் தலையிலிருந்து கட்டு மல்லிகை கும்மென்று மணத்தது.

"பட்டப்பா! உம் பெண்டாட்டி ரொம்ப அழகுடா என்றான், அவனை ரகசியமாகக் கிள்ளியபடி.

"அப்படியா?''

"அப்ப உனக்கு ஒண்ணும் தெரியலையா? ஆறு மாசத்துக் குமேலா அவளோட குடித்தனம் நடத்தறே. இந்த மாதிரி அழகு தெய்வத்தைக் கீழே நடக்கவே விடக்கூடாதுடா. கையிலே வச்சுண்டு தாங்கணும்...”

"அவகிட்டே நான் ஆசையாதான் இருக்கேன்''

அதற்குமேல் அங்கே அதிகமாகப்பேச முடியவில்லை. கத்தில் எதிர் 'சீட்' பெண்களை ஏதோ ஒரு சாக்கில் காலால், கையால், விரல்களால் தொடவிரும்பும் ஆண்கள். ஒரு பெண் படீரென்று திரும்பி வெடுக்கென்று ஒருத்தனை முறைத்துப் பாத்துவிட்டு தன் பின்னலை எடுத்து முன்னே போட்டபடி 'தூ! மானங்கெட்ட ஜன்மம்" என்று சற்று உரக்கவே முணு முணுத்தாள்.

'திரையில் எத்தனை விகாரமான காட்சிகள் ஓடினாலும் மனதைக்கட்டுப்படுத்தத் தெரியாத விகார வக்ர புத்தி மலிந் தவர்கள்,நாட்டில் மலிவாக இருப்பதே இதற்குக் காரணம் படித்தவள், மிகப்படித்தவள் மாதிரி இருந்த ஒரு அம்மாள், பின்னலைப் போட்டுக்கொண்ட பெண்ணிடம் சொன்னாள்.

பாலுவுக்கு சுரீர் என்றது. நர்மதா மறுபடியும் அந்தக் கரம் தன்னைத் தீண்டவேண்டும் என்று விரும்பி அடிக்கடித் திரும்பிப் பார்த்தாள். பட்டப்பா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் வீடு திரும்பும்போது பூரணியும், கங்கம்மாவும் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். கவிந்திருந்த பன்னீர் மரத்தில் வெள்ளை மலர்கள் வாசம் வீசீன. மரத்தில் அடைந் திருந்த குருவிகள் பொழுது விடிந்துவிட்டதாக நினைத்துக் கத்தின.

'அதோ வந்தாச்சு" என்றபடி கங்மம்மா கிளம்பினாள்.

"ரொம்ப சோந்து போயிருக்கே, மோராவது சாப்பிட்டுத் தூங்கு" சொல்லிக்கொண்டே கங்கம்மா தன் வீட்டுக்குள் சென்றாள்.

பூரணி உண்டாகியிருப்பதுபோல் நர்மதாவும் இருக்க வேண்டும் என்று அவள் ஆசைபட்டாள்.

"ஏழுமலையானே! கண் திறடா அப்பா"

மங்கிய நெய் விளக்கின் ஒளியில் ஏழுமலையான் நகைசிந் திக்கொண்டிருந்தான். "ஸ்ரீயக் காந்தாய” என்று கங்கம்மா ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் பலகாரம் பண்ணியாச்சு. நீங்க சாப்பிடுங்கோ. நர்மதா ! மறக்காம பாலை எடுத்துண்டு போ..."

படத்தின் முன்பாக சீனியிட்டு, ஏலம் போட்டு காய்ச்சிய நைவேத்தியம் பண்ணிய பால் மூடி வைக்கப்பட்டிருந்தது.

நர்மதா கணவனுக்குப் பரிமாறினாள். “நீயும் என்கூடவே உக்காந்துரு" என்று அவளை வற்புறுத்தி தன் பக்கத்தில் உட் காரவைத்துக் கொண்டான்.

"உனக்கு நல்ல புடவையா நாலு வாங்கலாம்னு பார்க்கிறேன். காஞ்சீபுரம் போய் பட்டுப் புடவைகளா வாங்க லாமா, இல்லை இங்கேயே வாங்கவா” என்று கேட்டான் பட்டப்பா.

"எனக்குப் புடவை வேண்டாம்."

"ஏன்?"

“இருக்கிற புடவைகளே பீரோவிலே மக்கிண்டு இருக்கு. மேலே மேலே வாங்கி மக்க வைக்கணுமா?"

பட்டப்பா அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

அளவற்ற சேர்கம், ஏமாற்றம் அந்த முகத்தில் அப்பிக் கிடந்தது. “இப்படியெல்லாம் என்னை ஏமாற்றமுடியாது. இனிமேல் இந்த உலகத்திலே நான் ஏமாறுவதற்கு என்ன இருக்கு? புடவையும், நகையும், வேளாவேளைக்குச் சோறும் வாழ்கையில் நிறைவைத் தந்து விடாது."

நர்மதா கண்கலங்கியபடி எழுந்து விட்டாள்; பாதிச் சாப்பாட்டிலேயே.

"சாப்பிடு நர்மதா...ப்ளீஸ்... உக்காரு. தெரியாமக் கேட் டுட்டேன். உனக்கும் பசிக்கும் நர்மதா. ராத்திரி தூக்கமே வராது..."

அவளுக்குக் கோபம் வந்தது. பரபரவென்று எல்லாவற் றையும் எடுத்து மூடி வைத்தாள். சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணியப்பாலை மட்டும் சாப்பிட்டாள். அதில் கொஞ்சம் மீற்றி அவனிடம் கொடுத்தாள்.

"நீ சரியாச் சாப்பிடவில்லையே. பாலையாவது சாப்பிடேன்"

இப்போது இருவரும் படுக்கை அறைக்குள் இருந்தார்கள்.

"பகவானின் பிரசாதம் சாப்பிட்டாலாவது என்னுடைய தகிப்பு அடங்குமோன்னு பார்க்கிறேன்”

பட்டப்பா விக்கித்துப்போய் நின்றான்.

அவனுக்குப் புரிந்தது.

"நர்மதா! உன்னை நான் வேணும்னு ஏமாத்தலை. எனக்கு இப்படியொரு குறை இருக்குன்னு எங்க குடும்பத்திலே யாருக்கும் தெரியாது. வெளியிலே சொல்லக்கூடிய குறையில்லை இது. எனக்கு அம்மா அப்பா இல்லை. அக்கா வீட்டிலே வளர்ந்தேன். பெரிய படிப்பாளியுமில்லை. நிறைய சிநேகிதர்கள் என்கிற வியாபகமும் கிடையாது. பெண்களைக்கண்டால் மனசிலே ஒரு மலர்ச்சி ஏற்படும். அவர்களின் சௌந்தர்யத்திலே ஒரு ஈடுபாடு. அவ்வளவுதான். சரீர சுகத்திலே திளைக்கவேண்டும் என்கிற நினைப்பே எனக்கு எழவில்லை “

"எனக்கு ஆசை இருக்கிறதே. என்னை அது சுட்டுப் பொசுக்குகிறதே" என்று அவள் அலற நினைத்தாள். ஆனால், தேம்பித் தேம்பி அழுதாள்.

இரவு நகர்ந்து கொண்டிருந்தது. வெகுநேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

பூரணி பாலுவிடம், "பாவம்! அந்தப் பெண் எப்படி எப் படியோ இருக்க வேண்டியவள். இந்தக் குரங்கிடம் அகப் பட்டு கசங்கறது." என்று சொல்லிக் கொண்டிருந்தாள். பாலு நர்மதாவின் நினைவாகவே இருந்தான். பூரணியின் பக்கத்தில் மிக நெருக்கமாக நின்றாலும், அவள் நர்மதாவைப் போலவே தோன்றினாள்]

திடும்மென்று நர்மதா கேட்டாள்.

“நான் எங்கம்மா ஊருக்குப்போயிட்டு வரேன்..."

"சரி .. எம்ப வருவே?

அவள் பதில் பேசவில்லை.

"வருவியா நர்மதா?"

"உம்..."

அவள் இப்போது கண் கலங்கினாள். அவள் திடீரென்றுக் குலுங்கிச்சிரித்தாள்.

"அம்மாவானா ஒவ்வொரு கடுதாசியிலேயும் 'நீ குளிக் கிறியான்னு எழுதிண்டு இருக்கா. உங்கக்கா தினமும் ஏழுமலையானை என் வயத்துலே ஒரு பூச்சி பொட்டு உண்டாகணும்னு வேண்டிக்கிறா .. எனக்கு சிரிப்பா வரது "

"பிள்ளைப்பேறு இந்தக் காலத்துக்கு அனாவசியமா க இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து மனுஷர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம்...அவா எதிர்பாக்கறதிலே ஒருதப்பும் இல்லை."

மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம். பட்டப்பாவும் நர்மதாவும் படுத்து விட்டார்கள்.

பாலு பூரணியை நச்சரித்தான்.

"சே... சே... மசக்கையிலே சோறு தண்ணி இல்லாம அவஸ்தப்படறேன். இப்ப என்ன வேண்டிக்கிடக்கு" என்று விட்டு அவள் தள்ளிப்போனாள்.

பொழுதும் விடிந்தது.