Chapter 4

கூடம் பூராவும் பூ மணந்தது. தட்டு நிறைய ஜாதி மல்லிகை அரும்புகளை வைத்துக்கொண்டு நெருக்கமாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள் பக்கத்து வீட்டுப் பூரணி. தூக்கம் கலைந்து எழுந்துவந்த நர்மதாவைப் பார்த்து அவள் விஷமமாகச் சிரித்துக்கொண்டே, "என்ன இன்னிக்கே இப்படிப் பகல்லே தூங்கறே!" என்று சேட்டாள்.

நர்மதாவுக்கும் அவள் கேள்வி புரிந்தது. அவளும் வெட் கத்துடன் சிரித்துவிட்டு கொல்லைப்பக்கம்போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். லேசாகப்பவுடர் போட்டுக்கொண்டு, குங்குமம் வைத்துக் கொண்டாள்.

"காப்பி சாப்பிட்டுட்டு வா. தலை பின்னி பூ வைக்கிறேன். ராத்திரி அசட்டுப் பிசட்டுன்னு இருக்காதே உம் போ" என்றாள் பூரணி.

"என்னது..." என்றாள் நர்மதா.

"என்னதா? ஒன்றும் தெரியாதமாதிரி"

இருவரும் சேர்ந்தே சிரித்தார்கள். அதற்குள் பூரணியைத் தேடிக்கொண்டு அவள் கணவன் பாலு வந்தான். சாப்பாட்டுக்கு 'பாக்டரி' யிலிந்து லேட்டாக வந்திருக்கிறான்.

ஆள் நல்ல உயரம். வாட்டசாட்டமான தேகம்.அரும்பு மீசை. சுருட்டை கிராப் இத்யாதி.

அவன் மனைவியைப் பார்த்துக்கொண்டே ஓரக்கண்ணால் நர்மதாவை அளந்தான். தலையிலிருந்து படிப்படியாக அவன் பார்வை மார்பில் இறங்கி அங்கே நிலைத்து நின்றது.

பூரணி இதை கவனித்து விட்டாள்.

"நர்மதா? இவர்தான் எங்காத்துக்காரர்"

சட்டென்று நர்மதா குனிந்து அவரை நமஸ்கரிக்கவும், 'ஓ ஹோ! பட்டப்பாவின் மனைவியா?" என்று கேட்கவும் சரியாக இருந்தது.

த்தோ வந்துட்டேன், கங்கம்மமா பூக்கட்ட கூப்பிட்டா" என்ற டி. பூரணி கிளம்பும்போது கங்கம் மாவே அடுக்களையிலி ருந்து வெளியே வந்தாள்.

"இங்கதான் சாப்பிடறது. பட்டப்பா கல்யாணத்துக்கு தான் நீ வரலை. இங்கே சாப்பிடேன். இலைபோடுடி நர்மதா '

இலை போட்டாயிற்று. நர்மதாவே சாப்பாடும் போட்டாள்.

இப்படி வாழைத்தண்டு மாதிரி கைகளா? நீண்ட நீண்ட விரல்களா? நெற்றியிலே தவழும் கூந்தலா? அதிர்ஷ் டம் சிலபேரை எப்படி வளைச்சு பிடிக்கிறது பார்த்தியா? இத்த நோஞ்சான் பட்டப்பாவுக்கு இப்படி வெண்ணெய்ச் சிலை மாதிரி வழ வழன்னு ஒரு மனைவி கிடைச்சிருக்காளே'

"சரியாச் சாப்பிடுங்கோ. பாயசம் எங்கயோ ஓடறது"

பூரணியின் குரலில் கடுமை ஏறியது. மனைவியின் கடுமை யான குரலையும், முகத்தையும் பார்த்தவாறு பாலு சாப்பிட்டு முடித்தான். இருந்தாலும், அவன் பார்வை அடிக்கடி நர்மதாவின் பக்கமே சென்றது.

நர்மதா வெற்றிலைத்தட்டில் அழகாக இரண்டு "பீடாக்கள்" செய்து எடுத்து வந்து,

"பூரணி அக்கா! உங்களுக்கும், அவருக்கும்..." என்று கொடுத்தாள்.

இதற்குள் வெளியே போயிருந்த பட்டப்பா ஒரு கட்டு மல்லிகைப் பூவோடு வந்து சேர்ந்தான்.

“பூரணி அக்கா! இந்தாங்க. ஜடை தைக்க”

"யாருக்குடா பட்டப்பா"

அவன் நெளிந்து கொண்டே சிரித்தான்.

ஒண்ணும் தெரியாதாக்கும்” என்றான். "உக்கும்... பாலுவும், பூரணியும் கண் சிமிட்டி சிரித்துக்கொண்டார்கள்.

நர்மதா வெட்கத்தால் சிவந்துபோனாள்.

அன்று இரவு எல்லா இரவுகளையும்போல் அல்லாமல் புது மையாக இருந்தது. நிலவு, மலர்கள், சந்தணம் என்று மனசுக்குப் போதையை ஊட்டும் எல்லாமே அந்த அறையில் இருந்தன. ஜன்னல் பக்கமாக வைத்திருந்த கண்ணாடியில் பிறைச்சந்திரன் தெரிந்தது.

அவள் வெகுநேரம் நின்றிருந்தாள். பட்டப்பா ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். நர்மதா மெதுவாக அவன் அருகில் வந்து நின்றாள். பாலை எடுத்து அவனிடம் கொடுத்தாள். பூரணிதான் காலையிலிருந்து "முதலில் பாலைத் தரவேண்டும்" என்று படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறாளே.

பாலை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டான் அவன்.

ஒரு வேளை உடம்பு சரியில்லையோ? "

"உடம்பு சரியில்லையா? களைப்பா இருக்கா" என்று அவன் நெற்றியில் கை வைத்துப்பார்த்தாள் அவள். அந்த ஸ்பரிசம் கொஞ்சமும் அவன் உடலிலோ, உள்ளத்திலோ சிலிர்ப்பை ஏற்படுத்தவில்லை.

நர்மதா அலுப்புடன் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அடுத்த வீட்டு மாடியைப் பார்த்தாள். திறந்த மாடியில் பூரணியும், பாலுவும் உட்கார்ந்திருந்தார்கள். பாலுவின் மடியில் அவள் படுத்துக்கிடந்தாள். அந்த நெருக்கம் தரும் சுகத்தில் அவன் மயங்கிக்கிடந்தான்.

"சே! என்ன வந்தது இந்த மனுஷனுக்கு?”

அவன் திரும்பிப் பார்த்தபோது, நர்மதாவும் அவனைப் பார்த்தாள். இருவர் பார்வைகளும் மோதின. அவன் தன் பூனைக் கண்களால் அவளை ஊடுருவிப் பார்த்தான்.

"சரிதான், கல்யாணத்தன்றே அவள் "உன் ஆத்துக்காரருக்குப் பூனைக்கண்ணுடி, ராத்திரியிலே பார்த்து பயந்துக்கப் போறே.. நீ பார்க்கலைன்னு கேட்டது சரியாகத்தான் இருக்கு. இனிமே கண்களை மாத்தமுடியுமா? எப்படியோ இருந்துட்டுப்போகட்டும். அன்பர் இருந்தாச்சரி."

அவள் சிரித்தபடி அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பால் கிண்ணத்தை அவனிடம் கொடுத்தபடி, "ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க. எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச் சிருக்கு. பெரிசா, அழகாருக்கு. ஒண்டுக் குடித்தனத்துலே இருந்து அலுத்துப்போச்சு" என்று பேச ஆரம்பித்தாள்.

அவள் அவனிடம் எதிர்பார்ப்பதை மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அலுத்துப்போனவளாக “மணி ரொம்ப இருக்குமே... என்று அவனிடம் மிகவும் நெருங்கி உட்கார்ந்தாள்.

அப்போது பட்டப்பா. கண்களில் நீர் ததும்ப அவளை இரக்கத்துடன் பார்த்தான்.

அவளை அப்படியே இறுக அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போலத் தேம்பித் தேம்பி அழுதான்.

"நர்மதா! நீ ஏமாந்துட்டே. எனக்கிருக்கிற பலஹீ னத்தைப்பத்தி உங்கிட்ட சொல்லவே வெக்கமா இருக்கு. பணத்தைப்பாத்து மயங்கி உங்கம்மா உன்னை என் கழுத்தில் சுட்டிட்டாங்க. நீ எங்கேயோ எப்படியோ வாழவேண்டியவ. தைக் காலையிலே எடுத்துப்போய் படி. ராத்திரி ராத்திரி இந்த அறைக்குள்ளே பல ஆசைகளோட வராதே.'

அவள் முன்பாகக் கிடந்த அந்தக் கடிதத்தை அவள் வெறுப்புடன் பார்த்தாள். கணவனும், மனைவியும் முதன் முதலில் சந்திக்கும்போது கடிதம்என்ன வேண்டிக்கிடக்கி கிறது?

மறுபடியும் அவள் அடுத்த வீட்டு மாடியைப்பார்த்தாள்.

பூரணியும், பாலுவும் அறையில் மங்கிய ஒளியில் படுத்தி ருப்பது தெரிந்தது. எத்தனை நெருக்கம்? முடிவற்ற குழப்ப மான சிந்தனைகள் அவளை வாட்டி எடுத்தன. என்ன கடித மாக இருக்கும்? ஒரு வேளை அவன் யாரையாவது காதலித்து இருக்கலாம்.

நீண்டு கொண்டே வந்த இரவு எப்போது தொலைந்தது என்பது தெரியாமல் அவள் தூங்கிவிட்டாள். விழித்தபோது பட்டப்பா அறையில் இல்லை.

முதல்நாள் ஸ்வப்பனபுரியாகக் காட்சிதந்த வீடு இன்று அவள் வரைக்கும் வெறுமையாக இருந்தது.