Chapter 10
பட்டப்பாவுக்குக் கல்யாணமாகி ஏழெட்டு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பூரணி உண்டாகி மசக்கையாகப் பிறந்த வீட்டுக்குப்போய் இருக்கிறாள். நர்மதா மட்டும் மரம் மாதிரி நிற்பது கங்கம்மாவுக்கு வேதனையை அளித்தது.
அன்று பொல்லென்று பொழுதுவிடியும்போதே நர்மதா கொல்லையில் கிணற்றங்கரையில் கல்லில் உட்கார்ந்திருந்தாள். கங்கம்மாவுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
"உக்காந்தாச்சா?"
அவள் பேசாமள் இருந்தாள்.
''ஊருக்குப் போயிட்டு வந்தியே, எங்கேயர்வது நல்ல டாக்டரிடம் காட்டி ஏதாவதுவழி கேட்டுண்டு வரதுதானே?"
பாலுவின் தலை அந்தக் காலை நேரத்தில் பக்கத்து வீட்டு வேலி வழியாக எட்டிப்பார்த்தது. அர்த்தத்தோடு புன்ன கைத்தான். அவள் மேலும் பேசாமல் இருக்கவே கங்கம்மா பக்கெட்டை நக்கென்று வைத்தாள். ஆத்திரத்துடன் தண்ணீரை வாரி வாரி முகத்தில் அடித்துக் கொண்டாள்.
"பாக்கறதுக்கு உடம்புதான் தளதளன்னுநன்னா இருக்கு. அத்தனையும் மலட்டுச்சதை.."
பாலு வேலிக்கு மேல் தலையைத் தூக்கிப் பார்த்தான். பாவமாக இருந்தது. கண்களால் ஏதோ ஜர்டை செய்தான் "வாயைத் திறந்து ஏதாவது சொல்லு" என்று அதற்கு அர்த்தமாக இருக்கலாம்.
கங்கம்மா உள்ளே போய்விட்டாள். நர்மதாவின் கண்கள் கலங்கியிருந்தன.
வேலியோரமாக வந்து நின்ற பாலு, "உங்க தம்பியைக் கேளுன்னு சொல்லேன், பயந்து சாகறியே” என்று இவடித்தான்.
அப்போதும் நர்மதர் பேசாமல் இருக்கவே, "பெர்ம்மனாட்டிகளுக்கு இருக்கிற நெஞ்சாழம் எங்களுக்குக் கிடையாது. நல்ல ஜன்மங்கள்!” என்று சொல்லிவிட்டுப்போனான்.
நர்மதா வேதனைப்பட்டாள். பூரணியிடம் அந்தரங்கமர்க நம்பிக்கையுடன் இந்த ரகசியத்தைச் சொல்லிக்கொண்டது வினையாகப்போயிற்றே என்று நினைத்தாள். அதனால்தான், பாலு பஸ்ஸில் மிக உரிமையோடு பக்கத்தில் நெருக்கமாக ட்காரும் அளவுக்கு துணிச்சலும் பெற்றான் என்பதும் தெரிந்து போயிற்று. தன்னுடைய கணவனும் அவனிடம் போய் தன் குறையை, இயலாமையைச் சொல்லியிருக்கிறான் என்று இவளுக்குத்தெரியாது.
படுக்கை உள் அலமாரி பூராவும் பஸ்பங்களும், லேகியங் ளும் அடுக்கி வைத்திருந்தது. பட்டப்பா காலையில், பகலில் இரவில் என்று எதையாவது (மருந்து) சாப்பிட்டுக் கொண்டி ருந்தான். வாதாம்பருப்பை அரைத்து பாலில் கரைத்துக் குடித்தான். உடம்பு தள தளன்னு ஆயிற்று
அன்றும் அதிகாலையில் ஒரு வைத்தியரைப் பார்க்கப் ாேவதாகச் சொல்லிவிட்டு வெளியே போயிருந்தான், இணற்றங்கரை பாரிஜாதம் பொல்லென்று பூத்துக் கொட்டி யிருந்தது. ராத்திரி முழுக்கப் பெய்த மழையால் மழை நீர் சொட்டிக்கொண்டிருந்தது.
டம்ளரில் காப்பி கொண்டுவந்து நர்மதாவுக்குச் சற்று தொலைவில் வைத்தாள் கங்கம்மா.
"சொல்றேன்னு கோவிச்சுக்காதே. இந்த நாள்ளே கல்யாணம் ஆன சுருக்கில் குழந்தை பிறந்துடணும். இல்லைன்னு ஆனா அப்புறமா பிறக்கறதேயில்லை.
அதான் எனக்கு வேதனையா இருக்கு. உன் வயித்துலே ஒண்ணு பிறந்து பாத்துட்டேன்னா போறும்.
அவளுடைய ஆசை நியாயமானது என்று அவளுக்குப் பட்டது.காப்பியை எடுத்துக்குடித்தாள். பக்கத்து வீட்டில் கிணற்றடியிலேயே பாலு குளித்துக் கொண்டிருந்தான். பாட்டு வேறே கேட்டது. திரும்பிப் பார்த்தாள். சுரணை சுரணையாய் அந்தக் கைகளும், ரோமம் அடர்ந்த மார்பும், நீண்டகால்களும் நர்மதாவுக்கு ஏதோஒரு வேகம் ஏற்பட்டது.
'இந்த மாதிரி ஜோடி சேர்ந்திருந்தா தேவலை'
இப்படியே மூணு நாளும் கங்கம்மா ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள். அப்புறம் ஒய்ந்து விடுவாள். இந்த கெடுவுக்கு மேல் இனிமேல் குளிக்கமாட்டாள் என்று நினைப்போ என்னவோ.
குளித்த அன்று தலை கொள்ளாத ஜாதி மல்லிகையும், அலங்காரமுமாகத்திகழ்ந்தாள் அவள். "ஸ்வாமிக்குப்பால் நைவேத்யம் பண்ணிட்டு அவன் பிரசாதமாக உள்ளே எடுத் துண்டு போ. சரியா நடந்துக்கோ.”
கொஞ்சம் கூட தம்பியின் மேல் சந்தேகம் வரவில்லை அவளுக்கு. எல்லா பழி பாவங்களும் பெண்களைச்சார்ந்தவை என்கிற குருட்டு நம்பிக்கையாகவும் இருக்கலாம்.
பாலு வேலைக்குப் போகாத நாட்களில் இவர்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்தான்.
"பூரணி இல்லாம ரொம்ப இளைச்சுட்டே” என்று கங்கம்மா அவனுக்கு உபசாரம் செய்தாள்.
''உன் பொண்டாட்டியோட இவளும் போட்டிபோடணும்னு பார்க்கிறேன். இவளானால் மாசம் தவறாம கொல்லை யில் போய் உட்காந்துடறாள்.
"கொஞ்சநாள் போட்டமே. இப்ப என்ன அவசரம்? கொஞ்சம் ப்ரீயா இருந்துட்டுப்போறா” என்றான் பாலு அழுத்தமான சிரிப்புடன்.
'போகலாம்தான். ஆனாக்க எனக்கு எனக்கு வயசாயிண்டு வரதேப்பா. அடிக்கடி தலையைச் சுத்தறது. படபடப்பா வேறே இருக்கு. எதுவுமே காலத்துலேபூக்கணும்,காய்க்கணும். கொல்லையிலே பாரிஜாத மரத்தைப் பார்த்தியோ? ஒரு தூத்தல், வர்ஷிக்க வேண்டியதுதான். பூவாப் பூத்துக்கொட் டறது. என் கதை வேறே. கிழவனைக்கட்டிண்டு...என்னத் தைக்கண்டேன். இவா இப்படியில்லையே.
பாலுவிக்கு அவள் பேரில் இரக்கமாக இருந்தது. "பகவான் தான் வழி காட்டணும்” என்று பரமார்த்தமாக, சாதுவாகச் சொல்லிக்கொண்டே கிளம்பினான்.
அன்றைக்கு என்னவோ விசேஷம். போளி பண்ணியிருந் தாள் கங்கம்மா. சமையலறைக்குள் போனவள், "அடடே! அந்தப் பையனுக்கு நாலு குடுத்திருக்கலாமே! மறந்து போச்சே, நீ போய்க்குடுத்துட்டு வாயேன்" என்றபடி தட்டில் எடுத்து வந்தாள்.
"நான் போகலை..."
"போனா என்னடி? உன் கூடப்பொறந்தவன் மாதிரி"
நர்மதா பாலுவின் வீட்டுக்குள் போனாள்.
அவன் அவளை எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டுப் பார்த்து "என்ன கொண்டு வந்திருக்கே?"
"போளி.. அக்காதான் அனுப்பினா'
மேஜை மீது வைத்தாள்.
“நான் போயிட்டு வரேன்" பூரணி அக்கா எப்போ வருவா?" என்று கேட்டாள்.
"மசக்கை, மயக்கம் எல்லாம் தெளிந்தப்புறம்தான். என்னை நாலஞ்சுமாசமா பட்டினி போட்டுட்டா...
மத்தியானம்கூட எங்க வீட்லே சாப்பிட்டீங்க. பட்டினியா?'
நான் அந்தப் பட்டினியைச் சொல்லலே. வேறே பட்டினி!"
நர்மதாவுக்குப் புரிந்தது.
"போளிக்கு நெய் போட்டுண்டா நன்னா இருக்கும். சமையல் உள்ளே இருக்கு''
நர்மதா போனாள். அலமாரியிலிருந்து நெய் புட்டியை எடுக்கும்போது பாலுவின் கரம் அவள் தோளைப்பற்றி அழைத்தது.
''வேண்டாங்க"
" என்னது”
"வேண்டாங்க. உங்களைப் பார்க்கச்சே யெல்லாம் மனசாலே பாவம் பண்ணிண்டு இருக்கேன்'
"அதுதான் பெரிய்யதப்பு"
கைகளின் அழுத்தம் அதிகமாகியது. இருவரும் பேர்ளி, நெய் என்கிற விஷயங்களை மறந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். நர்மதா கனவில் நடப்பது போல அவனுடன் படுக்கை அறைக்குள் சென்றாள். அவளுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு பலிஷ்டனான ஆணின் ஸ்பரிசத்தால் கொழுந்து விட்டுஎரிய ஆரம்பித்தது. பாலு அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை தீர்க் கமாகப் பார்த்தான்.
" நர்மதா! ஏன் இப்படி ஏமாந்தே?"
"எனக்கு என்ன தெரியும்? இதையெல்லாம் கல்யாணத் துக்கு முன்னே எப்படி தெரிந்து கொள்ளமுடியும்?"
அவள் அழுதாள். கண்களின் மை கரைந்து கன்னத்தில் கோடாக இறங்கியது.
'இப்ப ஒண்ணும் முழுகிப்போகலை. நீயும், நானும்..."
'அதெல்லாம் பாவம்க... பரம சாதுவாக, ஒண்ணு தெரியாத மனுஷனை நான் ஏமாத்த விரும்பலே"
"நீ எப்படியும் யார்கிட்டேயாவது ஏமாறத்தான் போறே"
பாலுவின் கரங்கள் அவளை வலுவாகப்பற்றிக் கொண்டி குந்தன. மங்கிய விளக்கொளியில் அவள் தேவதையாகத் திகழ்ந்தாள். சினிமாவில் தொட்டுப்பார்த்த அவன், பஸ்ஸில் நெருங்கி உட்கார்ந்த அவன், இப்போது வெகுசுவாதீனமாக அவளை நெருங்கிக்கொண்டிருந்தான்.
அப்போது பட்டப்பா உள்ளே மனைவியைத் தேடிக் கொண்டு வந்தான்.
இருவருக்கும் நெருப்பில் சுட்டுக்கொண்டமாதிரி இருந்தது.
"நீ இங்கயர் இருக்கே?"
"அக்கா பேர்ளி குடுத்துட்டு வரச்சொன்னா"
அவள் பயந்தாள். நாக்கு உலர்ந்து விட்டது.
"ஒண்ணுமில்லை பட்டப்பா! பூரணி கிட்டேருந்து கடுதாசி வந்திருக்கு. அதைத் தேடிண்டு இருந்தோம்."
நர்மதா போய்விட்டாள். இரவு கங்கம்மா, "சுவாமி பாலை எடுத்துண்டு போ... குருவாயூரப்பனுக்கு தொட்டில் வாங்கிவைக்கறேன்னு வேண்டிருக்கேன்" என்றாள்.
பகவானின் நைதேத்யமான பாலை எடுக்க அவள் கூசினாள்.
"அப்பனே! நீயும் சேர்ந்துதானே என்னை ஏமாத்தி இருக்கே"
உள்ளே பட்டப்பாவின் முகம் வாடிக்கிடந்தது.
"இந்தாங்க பால் சாப்பிடுங்கோ"
'நீ'
"நான் சாப்பிடக்கூடாது. இனிமே அதைத் தொடக் கூட எனக்கு அருகதை இல்லை"
அவன் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தான்.
''எனக்கு உன் மேலே கோபமே இல்லை. நீ ப்ரீயர் இருந் திருக்கலாம். எத்தனை நாளைக்குதான் உன்னையே நீ எரிச்சுக்க முடியும். காமம் தீ போன்றது. அது அணு அணுவாக உன்னைத் தின்று விடுமே "
அவள் மிகுந்த வியப்புடன் அவனைப்பார்த்தாள். ஆண்களிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பெண்கள் கற்புள்ள வர்களாய், தங்கள் உணர்ச்சிகளை அழித்துக்கொண்டு சன்னி யாசிகளாய், பவித்ரமாய், கண்ணகியாய் இருக்க வேண்டும் என்கிற நியாயம் கற்பிக்கப்பட்டு செயல் முறையில் பல ஓட்டை உடைசலோடு செயல்பட்டு வரும் இந்த நாட்களிலே இப்படி ஒரு மனுஷனா?
"நான் பலவீனப்பட்டுப்போனேன். என்னை ஒரு மயக்க நிலை ஆட்கொண்டிருந்தது. நான் ஒரு தப்பும் பண்ணலை. அவருடைய ஸ்பரிசம் ஒன்றைத்தான் அனுபவித்தேன்"
பட்டப்பா ஆதுரத்துடன் அவளைப்பற்றி தன் அருகில் அமர்த்திக்கொண்டான்.
"இப்ப ஒண்ணு சொல்றேன் கேப்பியா?"
"உம் சொல்லுங்கோ"
"நீ இங்கே இருக்கச்சே பாலுவோட சிநேகமா இருக்கலாம். ஊருக்குப்போனா சாயிராமோடு சிநேகமா இருக்கலாம். நான் உன்னை ஏமாத்தினதுக்கு இதுதான் பரிஹாரம். இதனாலே பிரளயமோ. பூகம்பமோ, ஊழிக்காற்றோ வந்துடாது. எல்லாம் அனுபவிக்கிறவாளே இப்படி அப்படி இருக்கிறதா கேள்விப்படறேன் நீ வந்து.."
அவள் அன்று முதன் முதலாகக் கணவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவன் கைகளைப்பற்றி வருடினாள். 'இத்தனை மருந்து சாப்பிடறேளே. குணம் தெரியறதா?" என்று கேட்டாள்.
அவன் சலிப்புடன் "ஊஹும்” என்று தலையை ஆட்டினான்.
"அதனால என்ன? நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் குழந்தையா இருந்துட்டுப் போறோம். உங்கக்கா நச்சரிப்புதான் தாங்கலை"
"நீ குழந்தை பெத்துக்கலைன்னா அவ எனக்கு வேறே பொண்டாட்டி கட்டி வைக்கப்பார்ப்பா.
ஆனா, உனக்கு வேறே புருஷன்கிறதை இந்த சமூகம் ஒத்துக்காது"
மனைவி தனக்குள் தான் தீய்ந்து கருகி வருகிறாள் என்பதும், அதற்குத் தானே தான் காரணம் என்பதும் பட்டப்பாவுக்குப் புரிந்தது.
வெகுநேரம்வரை இருவரும் பேசாமல் இருந்தார்கள். பிறகு தூங்கிப்போனார்கள்.

