Chapter 9

ஊரில் பட்டப்பாவுக்கு நர்மதா இல்லாமல் ஒன்றும் பிடிக்கவில்லை. அவளை ஏமாற்ற வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. பெண்கள் ரொம்பவும் சரீர சுகத்துக்கு ஏங்க மாட்டார்கள். அவர்கள் கவனமெல்லாம் நகை நட்டு, வீடு வாசல் என்றுதான் இருக்கும் என்பது அவன் கணிப்பு. கங்கம்மா இல்லையோ? அத்திம்பேரும், அக்காவும் ஒரு நாள் உள்ளே சேர்ந்து படுத்திருந்து அவன் பார்த்ததில்லை. அவர் காற்றுக்காக வாசல் திண்ணையோ, மொட்டை மாடிக்கோ போய்விடுவார் அவள் இடுப்பில் சாவிகள் குலுங்க கார்வார் பண்ணிக்கொண்டு வீட்டிலே வளைய வருவாள். அறுவடை யாகி நெல் வந்தால் களஞ்சியத்தில் கொட்டிக்கொட்டி மூடு வாள். பணத்தை எண்ணி எண்ணி பீரோவில் வைப்பாள். ஒவ்வொரு பண்டிகைக்கும் பட்டுப்பட்டாக வாங்கிக் கட்டிக் கொள்வாள், வித விதமாக சமைப்பாள். பலகாரங்கள் செய்வாள். அவ்வளவுதான்.

அத்திம்பேர் பக்கத்தில் வந்தால் கூட அவள் எட்ட நின்றே பேசுவாள். இப்படி ஒரு சூழ் நிலை.

வீட்டிலே பஜனை, பாட்டு என்று அமர்க்களப்படும்... அப்படியே அவள் காலம் போய்விட்டது. கணவன் இருந்த தற்கும், இல்லாததற்கும் அதிகமான வித்தியாசம் எதையும் அவள் உணரவில்லை.

நர்மதா ஒவ்வொரு இரவும் அழுவாள். புரண்டு புரண்டு படுப்பாள். பக் த்துவீட்டு பாலுவை ஆவலுடன் பார்ப்பாள். வெறிபிடித்தவள் மாதிரி இவனை இறுக அணைத்துக்கொள்வாள். ஒன்றிரண்டு தடவை என்னை ஏமாத்தறயே . பாவி என்னை ஏமாத்தறயே ஏழைன்னு என் தலையிலே நெருப்பை அள்ளிப் போட்டுட்டுயே நான் வாசல்லே நின்னு சத்தம் போட்டு உன்னை அவமானப்படுத்தறேன்பாரு" என்று ஆங்கார ஹும்காரந்துடன் படுக்கையறையில் அவனை ஒருமையில் ஏசிப் பேசுவாள்.

அவனுக்குப் புரிந்தது; எவ்வளவு பெரிய தப்பு பண்ணி விட்டோம் என்று. அந்தரங்கமாக பாலுவிடம் போய்ச் சொல்லி இதற்கு வைத்தியம் கியித்தியம் செய்து பார்க்கலாம் என்று நினைத்தான். போய்ச் சொல்லவும் செய்தான்.

பூரணி எங்கோ போயிக்கும்போது அவன் பாலுவைத் தேடிபபோனான். வெகு நிதானமாக பாலு மாடியில் நாற்காலியில் சாய்ந்தபடி அறைகுறை நிர்வாணப் படங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

பட்டப்பாவுக்கு வெட்கமாக இருந்தது.

-

''சீச்சீ என்ன ஸார் இது? கண்டதுகளைப் போய்ப்பார்க் கிறீங்க'

அவன், 'ஓஹ்ஹோ" என்று சிரித்துவிட்டு, "கண்டதா? இதுகான் வாழ்க்கை. உங்கப்பா, உங்க தாத்தா,முப்பாட்டன் எல்லாரும் ரசித்த விஷயம். அவாள்ளாம் கோயிலுக்கு சுவாமி பாக்கவா போனா. இந்த மாதிரி சிற்பங்களைப் பார்க்க்கப்போனா. இப்ப ரொம்ப சௌகர்யமர் "போட்டோ"வா வந்திருக்கு வா உட்கார்ந்து நீயும் பாறேன்'

இதையெல்லாம் பார்க்கறதிலே என்ன புண்ணியம் சார்?

"புண்ணியமாவது பாவமாவது? இன்னும் ரசனையோடு வாழ்க்கையைச் சுவைக்கலாம்'

''எனக்கு ஓண்ணும் தோணலை சார் என் பிறவியே வேறே. இதிலெல்லாம் எனக்கு நாட்டமே இல்லை"

"புரியறது"

"என்ன சார்?"

"உன்னைப்பத்தி புரியறது பாவம்! அந்த அழகானப் பொண்ணை இப்படி ஏமாத்தி இருக்க வாண்டாம் முட்டாள்."

"மருந்து கிருந்து இருக்கா சார்? சாப்பிட்டு பார்க்கிறேன்"

"அதான் போடறானே. முத்து பஸ்பம், தங்கபஸ்பம்னு டிரை பண்ணு "

"பொறவியே இப்படி .."

"அப்ப அவ கழுத்துலே ஏன் சுருக்கு கயிர் மாதிரி போட்டே",

அவன் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். முகம் பூரா வும் வியர்த்து விட்டது. மழ மழ வென்று பெண்மையான முகம்.

"மருந்து சாப்பிட்டா சரியாயிடும்னு சொல்றேளா?"

"எனக்குத் தெரியாது அப்பா. டிரை பண்ணுன்னேன். இந்த மாதிரி விஷயங்கள்ளே மனசைச் செலுத்திப்பாரு. கோயில் குளம், புராணம், இதிகாசம்னு போயிண்டிருக்காதே. இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போயிடும்"

"அப்ப அவளப்போய் அழைச்சுண்டு வந்துருவா?'

"பேஷா.. அவ இல்லாம நன்னாவே இல்லை. இல்லியா?''

"ஆமாம் சார்... நாளைக்குப் போறேன்''

பட்டப்பா அயல் நாட்டு "சென்ட்" மணம் கமழ நர்ம தாவைத்தேடி வந்தான். இதற்குள் இங்கே நர்மதாவின் வீட்டில் ஒரு பிரளயமே வந்தது. சாயிராம் தினம் வர ஆரம்பித்தான். ஜாதி மல்லிகையிலிருந்து புடவை ரவிக்கை என்று வாங்கி வந்தான்.

நர்மதா அவளையும் அறியாமல் மாலை நேரங்களில் அவன் வருகையை எதிர்பார்த்தாள். அழகு படுத்திக்கொண்டாள். அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

"ஒரு விதத்தில் நான் நன்றாக ஏமாந்தவள். இனி நான் என் உணர்ச்சிகளை ஏமாற்ற விரும்பவில்லை.

சாயிராம் உயர் வகுப்புக்கு இரண்டு சினிமா டிக்கட்டுகள் வாங்கி வந்தான். "கிளம்பு கிளம்பு போகலாம்"

"அம்மா வர்ற நேரம்"

"அவபாட்டுக்கு வந்துட்டுப்போறா. நான் என்ன அசலா அன்னியமா? ஒண்ணும் சொல்லமாட்டா சீக்கிரம் கிளம்பு "

நர்மதாவுக்கு பயமாக இருந்தது. ஏதோ அசட்டுத் துணிச்சலில் உள்ளே போய் உடை மாற்றிக்கொண்டாள். அவள் வாசல் பக்கம் வரவும் நர்மதாவின் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

தெருக்கோடியில் போய் நின்றுகொண்டிருந்தான் சாயிராம்.

"எங்கேடி கிளம்பரே?"

"சினிமாவுக்கு"

"யாரோட...?"

அவள் பேசாமல் தெருவில் நிற்கும் அவனைச் சுட்டிக் காட்டினாள்.

"உன் சின்னபுத்தி,அல்பபுத்தி உன்னை விட்டுப்போகலையே. இப்ப நீ கல்யாணம் ஆவை. அவனுக்குத் துரோகம் பண்ணப் படாதுடி"

“ நான் யாருக்கும் ஒரு துரோகமும் பண்ணவில்லை...அவர் தான் எனக்குத் துரோகம் பண்ணியிருக்கார்'

'சொல்லுவேடி சொல்லுவே. நம்ப கெட்ட கேட்டுக்கு பணமும் காசுமா கிடைச்சான் பார். சொல்லுவே "

நர்மதா சீறினாள். "பணம், பணம் காசு, காசு! நீ சாகச்சே எல்லாத்தையும் எடுத்துண்ட போகப்போறே... இந்தா இப்பவே எடுத்துக்கோ" என்றபடி கழுத்திலிருந்த சங்கிலி, வளை யல்கள் எல்லாவற்றையும் கழட்டிப்போட்டாள்.

''என்னடீ இது ..?" என்று மாய்ந்துபோனாள் வெங்குலட்சுமி.

"நீ பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சியே... மாசா மாசம் குளிக்கிறியான்னு வேறே கேட்டுத் தொணப்பறையே. அந்த மனுஷன் ஆம்பிள்ளையே இல்லை. எனக்கு இந்த ஐன்மத் துலே குழந்தை பிறக்கவே பிறக்காது”

முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் நர்மதா.

தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்தன. இனி நர்மதா சினிமாவுக்கு வரமாட்டாள் என்று நினைத்தபடி சாயிராம் கிளம்பினான்.

வெங்குலட்சுமி வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள்

கங்கம்மா எப்படி ஏமாற்றி விட்டாள் பார்த்தாயா? பணத்தையும், பவிஷையும் காட்டி!

இதைப்பற்றி யாரிடம்போய் விவாதம் பண்ணமுடியும்?

வெளியே சொல்லச் சொல்ல நர்மதாவுக்குத்தானே கெடுதலாக முடியும்?

இந்தப் பெண்ணை இனிமேல் இங்கே வைத்திருக்கக்கூடாது. இன்னும் கொஞ்சநாளில் சந்தி சிரிக்க அடித்து விடுவாள். ல்லை ஒரு முழம் கயிற்றில், பாழும் கிணற்றில், மூட்டைப் பூச்சி மருந்தில் தன்னை மாய்த்துக் கொள்வாள். அவளை அங்கேயே அனுப்பிவிட வேண்டும்.

அம்மாவும் பொண்ணும் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

''என்னவோ நடந்துபோச்சு. அதுக்காக நம்ப கெட்டுப் போறதா என்ன? நான் கூட சின்னவயசுலே வீணாப்போனவ தான்...அப்புறமா புருஷனைப்பத்தி நெனச்சிருப்பேனா''

நர்மதா பேசாமல் இருந்தாள். நாலு பெற்றவள் புரு ஷன் செத்துப்போனபிறகு புருஷனை நெனச்சுண்டு இருந்தேனா என்கிறாள்.

பட்டப்பா வந்தவுடன் உடனே கிளம்பிவிட வேண்டும் என்று நர்மதா நினைத்தாள். அவன் வெங்குலட்சுமியின் கண் களில் படுவதை இவள் விரும்ப வில்லை. ஆகவே, அவன் வந் துவிட்டுப் போன மறுநாளே நர்மதா 'நான் ஊருக்குப் போறேன்" என்று மொண்ணையாக அம்மாவிடம் சொன்னாள்.

"அங்கேதானே போறே?".

"பின்னே எங்கே போவேன்? எவனோடும் போயிடமாட்டேன். உனக்கு இருக்கிற நம்பிக்கையெல்லாம் எனகும் இருக்கு. நம்ப பெண்கள் நம்பற எல்லா தர்மங்களையும் நானும் நம்பறேன். இங்கே இருக்கப்பிடிக்கலை எளக்கு”

"சரி..."

பஸ் ஸ்டாண்ட் வரை வெங்குலட்சுமி வந்தாள். பிழியப் பிழிய அழுதாள். வழி நெடுக, "ஏமாந்துட்டேண்டி" என்று மன்னிப்பு கேட்பதுபோல பேசினாள். நர்மதாவுக்குப் பாவ மாக இருந்தது. நினைவுதெரிந்த நாளாய் அம்மா யார் வீட்டிலோ அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். அவளை சுகமாக வைத்துக்கொள்ள வேண்டும். என்று அண்ணா நினைக்கவில்லை.

"நீ ஏனம்மா இந்த வயசிலே வேலைக்குப்போகவேண்டும்? பேசாம நான் போடற கஞ்சியோ கூழோ சாப்பிட்டுட்டு ரேன்” என்று உரிமையாகப்பிள்ளை ஒருநாள் சொன்னதில்லை. அவனும், அவன் மனைவியும் சினிமாவுக்கு, டிராமாவுக்குப் போவதென்ன வருவதென்ன என்று இருந்தார்கள். மாசக் கடைசியில் அம்மாவிடமே சில்லறை கேட்பான் பிள்ளை.

நர்மதா வந்திருந்தநாட்களில் அவளிடம் ஐந்து பத்தென்று கேட்டுக்கொண்டேயிருந்தான்.

பஸ் கிளம்ப ஆரம்பித்தது.

"போயிட்டு வரேன் . "

'சரி' என்று தலையசைத்தாள் கிழவி. கன்னங்களில் கோடாகக் கண்ணீர் வழிந்தது. அவசரமாகப் பூ விற்றவளி டம் இரண்டு முழங்கள் பூ வாங்கி அவளிடம் கொடுத்தாள்.

அம்மா தூரத்தில் புள்ளியாக மறைந்துபோனாள். தன்னை மறந்து சிறிதுநேரம் நர்மதா வெளியே பார்த்துக் கொண்டி ருந்தாள்.

அன்று வந்திருந்த பட்டப்பாவை அவ்வளவு தூரம் விரட்டி மிக்கவேண்டாம் என்று அவளுக்குத்தோன்றியது. அவனிடம் அந்தக்குறை ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இவளிடம் உயிராக இருக்கிறான்.

பஸ் ஏதோ ஊரில் நின்றது. அவளுக்கு பஸ்ஸின் உள்ளே திரும்பியவுடன் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

பாலு ஏறிக்கொண்டிருந்தான். அவனும் அதிர்ச்சி யடைந்தான்.

"கோபம் தீர்ந்து வறாப்லே இருக்கு'' என்றான் அவன் பக்கமாக நின்றுகொண்டு. அவனுக்கு உட்கார இடம் டைக்கவில்லை. முன்னாடி ஒருகிராமத்தான் தூங்கிவழிந்தான்

"கோபமா? யார் சொன்னது?"

"பட்டப்பாதான். அவரமாகச் சாப்பாடு போட்டு வீரட்டிட்டான்னான். பாவம்!'"

நர்மதாவின் பக்கத்தில் இருந்த பெண் இறங்குவதற்கு எழுந்தாள்.

"உட்காரலாமா?" என்று கேட்டான் பாலு.

''உம்" என்று நகர்ந்து உட்கார்ந்தாள் அவள்.

"எங்கே போயிட்டு வரேள்?''

"உன் பூரணி அக்காவை ஊர்லே கொண்டுபோய் வீட்டுட்டு வரேன்"

"ஏன் உடம்பு சரியில்லையா?'

"அவ ரொம்ப மாறிப்போயிட்டா. எப்பப்பாத்தாலும் படுக்கைதான். கங்கம்மாவும் இந்த சமயத்திலே பொறந் தாத்துலே இருக்கட்டும்பா... அனுப்பேன்னு சிபாரிசு பண்ணவே அழைச்சுண்டு போனேன்.

வண்டியின் ஆட்டத்தில் இருவரும் நெருங்கவே ஆரம்பித் தார்கள். நர்மதாவின் மேலிருந்து லேசானமணம் கமழ்ந்தது. புடவைத்தலைப்பு அவன்மேல் உராசியது. இன்னொரு ஆளும் இருக்கிற இடத்தில் உட்கார வரவே, மூன்று பேர்கள் உட்காருகிற சீட் ஆனதால் பாலு மேலும் நெருங்கி உட்கார்ந்தான். அவள் உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பையும் உணர்ந்தான்.

இருவரும் இறங்கி ஏதோ ஓர்ஊரில் ஹோட்டலில் காப்பி சாப்பிட்டார்கள். அவள் பஸ்ஸில் ஏற அவன் கீழே நின்று அவளைப் பார்த்தபடி சிகரெட் பிடித்தான்.

மனசிலே ஏகப்பட்ட உளைச்சல். இப்படியே இரண்டு பேரும் எங்கேயாவது போய்விடலாமா? இந்த நிமிஷத்திலே நினைக்கிறதும், வாழ்கிறதும்தான் நிஜம். மற்றதெல்லாம் பொய். நர்மதாவும் புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பஸ்ஸில் ஓட்டுநர் வந்து உட்கார்ந்ததும் பாலு உள்ளே வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

"ஊருக்குப்போய் ரொம்ப நாள் இல்லே போல இருக்கே? 'போர்' அடிச்சுதா?

பட்டப்பாவை விட்டுட்டு இருக்க முடியலே இல்லே.."

அவன் ஆழம் பார்க்கிறான் என்பது இவளுக்குப்புரிந்தது.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லே. அங்கே இருக்கப் பிடிக்கலே. பூரணி அக்கா மாதிரி எனக்கு யாரும் பேச்சுத் துணைக்குக் கூட இல்லை..."

"முன்னே கல்யாணத்துக்கு முன்னே யார் இருந்தார்கள்? "

"சாயிராம்னு ஒருத்தர் வருவார். இப்ப அவர் வந்தா எங்கம்மாவுக்குப் பிடிக்கலை"

வெளியே வெயில் குறைந்து வந்தது. விளக்கேற்றுகிற நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தார்கள்.

வீட்டுக்குள் அவள் வந்ததும், "என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? நீ வரப்போறேன்னு பட்டப்பா சொல்லலையே" என்று கேட்டாள் கங்கம்மா.

பாலுவைப் பார்த்து, "நீயும் இப்பத்தான் வரியா? ராத்திரி இங்கேயே சாப்பிட்டுடு...'' என்றாள்.