Chapter 6
இப்படியே பல இரவுகள் போயின. வெறும் நெருக்கம் தான். வேறே ஒண்றும் இல்லை. அத்துடன் அவன் தூங்கி விடுவான். இவள் தனக்குள் வெந்து கொண்டிருந்தாள். பெருமூச்சுகள் கண்ணீர், விரக்தி என்று அவளை வாட்டி எடுத்தது. புதுச்சேலை கட்டுவதில்லை. அதிகமாய் பூ வைத்துக் கொள்வதில்லை. முகத்திலே ஏக்கம் ததும்பி நின்றது.
ஊரிலிருந்து அம்மா கடிதம் போட்டிருந்தாள்.
"நீ குளிச்சிண்டு இருக்கியா? சமத்தா நடந்துக்கிறியா? அங்கம்மாவின் மனசு கோணாமல் நடந்துக்கோ... நான் முடியறச்சே உன்னை வந்து பார்க்கிறேன். உன் அண்ணாவும் மன்னியும் இப்போ சினிமா பார்க்கிறது அதிகமாயிடுத்து. படத்துக்காவது ஒரு நாளைக்குக் கொறஞ்சது இரண்டு போயிண்டிருக்கா"
நர்மதா கொல்லையில் உட்காரும் போதெல்லாம் கங்கம்மா முகம் சிணுங்கினாள். "ஏழுமலைவாசா! இப்படிஎன்னை சோதிக் றீயே. இந்த வீட்டிலே ஒரு குழந்தை விளையாடக்கூடா துன்னு உன் எண்ணமாக்கும்?"
பூரணி மசக்கை என்று சொல்லிக்கொண்டு ஏகப்பட்ட ரகளை பண்ணிக் கொண்டிருந்தாள். கங்கம்மா மாங்காய்த் தொக்கும், மிளகாய்ச் சட்டினியுமாய்ப் பண்ணி நர்மதா விடம் கொடுத்தனுப்புவாள்.
"பாத்துக்கோ! அவளுக்குக் கல்யாணமாகி இரண்டு வரு ஷம்தான் ஆச்சு. அவள் சமத்தைப் பாத்துக்கோ... அவளண் டைகேட்டுத் தெரிஞ்சுக்கோடி புருஷன் கிட்டெ எப்படி நடந் துக்கிறதுன்னு அவன் வேணும்ங்கச்சே நீ வேண்டான்னு இருப்பே. நீ வேணுங்கச்சே அவன் வேண்டாம்னு இருப்பான் போல இருக்கு. ஏறக்கொறைய எங்கதைதான்... பண்ணின
பாவம். என் தலைலே இப்படி விடிஞ்சிருக்கு'
நர்மதா பூரணியிடம் நாத்தனார் பேசுவதைச் சொல்லி அழுதாள்.
"சீ.. சீ... அந்த அம்மாவுக்கு நீ இன்னும் 'உண்டாகலை' யேன்னு இருக்கு. கல்மிஷமில்லாத ஜன்மம். தப்பா எடுத்துக்காதே"
பாலு வழக்கம் போல பகல் சாப்பாட்டுக்கு வரும்போது பூரணி மசக்கை மயக்கத்தில் படுத்திருப்பாள்.
'நீங்களே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடுங்கோ..."
"நீ தயிர் வச்சிருக்கிற இடம், ஊறுகாய் வச்சிருக்கிற ஜாடி, நெய் இதெல்லாம் தேடிண்டு இருக்க வேண்டியிருக்கு ..உன்னாலே முடியலைன்னா எல்லாத்தையும் எடுத்து 'டைனிங்'
டேபிள்ளே வச்சுடறதுதானே?"
"நான் போடட்டுமா பூரணி அக்கா?" என்று நர்மதா கேட்டாள்.
"போடேன்"
பாலு கை கால் அலம்பிக்கொண்டு வந்து உட்கார்ந்தான்.
நர்மதா பரிமாறினாள். அவன் அவளை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்.
"நீ என்ன சோப்பு 'யூஸ்' பண்றே"
நீ என்று சொல்லும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது
கேமி*
''ஃபாரினா?"
"ஆமாம் அவர் வாங்கிண்டு வந்தார். "
"பேஷ்...அப்படித்தான் இருக்கணும். எஞ்ஜாய் யுவர்ஸெல்ப்”
நர்மதா சோகமாகச் சிரித்தாள். மிளகாய் சட்டினி, தொக்குஎல்லாம் பரிமாறினாள்.
"பூரணி அக்காவுக்காக எங்க நாத்தனார் பண்ணி அனுப் பினது. மசக்கையோன்னோ "
இவளுடைய வெகுளித்தனம் ஊரில் சாயிராமுக்குப்பிடித் திருந்தது. இப்போது பாலுவுக்குப்பிடிக்க ஆரம்பித்திருந்தது.
''உனக்கும் கூடிய சீக்கிரம் மசக்கை வரணும்னு ஆசீர் வாதம் பண்ணவா? இல்லை லேட்டா வரணும்னு ஏதாவது ஃபாமிலி ப்ளானிங்லே இறங்கி இருக்கீங்களா?" என்று துணிச் சலாகக் கேட்டான் பாலு.
நர்மதாவுக்கு வாயைவிட்டு வென்று அழவேண்டும் போல இருந்தது. எப்பவுமே ஃபாமிலி ப்ளானிங்தான்னு கத்தவேண்டும் போல இருந்தது. வெட்கமாக இருந்தது. வேதனையாக இருந்தது. சில விஷயங்கள் நெஞ்சுக்குள்ளே அகப்பட்டுக்கொண்டு வெளியே வரமுடியாமல் முரண்டு பண் ணும். இந்த விஷயம் அடி வயிற்றிலேயே புகுந்து கொண்டு கிடந்தது.
பூரணி 'ஹோவ்' என்று கொட்டாவி விட்டாள். விரல் களைச்சொடுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். பெண் களுக்கு மசக்கை வந்து விட்டால் புருஷனைக் கவனிப்பது குறைந்துவிடும். வயிற்றில் வளரும் சிசுவின்மீதே ஞாபகம். ஆணா, பெண்ணா, கருப்பா சிவப்பா? ரொம்ப வலிக்குமா? கத்த வேண்டியிருக்குமா? என்று பல கேள்விகள். ஆராய்ச்சிகளில் நினைவு மோதிக்கொண்டிருக்கும்.
"சாப்பிட்டாச்சா?" என்று கணவனைக் கேட்டாள்.
'ஓ! உன் சிநேகிதி பரிஞ்சு பரிஞ்சு சாதம் போட்டாள்"
'அப்படியாடி? எனக்கும் கையிலே பிசைந்து போடேன்'
நர்மதாவும், பூரணியும் சாப்பிட்டார்கள்"
"ஏண்டி! ஒரு மாதிரியா இருக்கே”
'ஒண்ணுமில்லே”
"எங்கிட்டே மறைக்கிறே. பட்டப்பா உங்கிட்டே ஆசையா இருக்கானோல்லியோ?"
அவள் மௌனமாக இருந்தாள். பாலு படுக்கையில் படுத்தப்படி பேப்பர் படித்துக்கொண்டிருந்தான்.
"சொல்லேண்டி... ரொம்ப இளைச்சுப்போயிட்டே"
* போனாப்போறேன். எப்படியோ இந்த உலகத்திலேருந்து போனாச்சரி...
"சீ...சீ...வாயப்பாரு...எங்கிட்டே செல்லேண்டி "
"ஒரு ஆசையுமில்லை,ஒரு மண்ணுமில்லை. கல்லுக்காவது கசிவுஇருக்கும். ஈரம்இருக்கும். இந்த மனுஷன் ஒண்ணும் பிரயோஜனமில்லை."
பாலு தூங்குவதுபோல இருந்தான்.
" அடடா! காட்டிலே காய்கிற நிலாதான்.. அதான் இந்தப்பொண் வாடி வதங்கிப்போயிருக்கு" என்று நினைக்துக் கொண்டான்.
பூரணி திடுக்கிட்டுபோய் உட்கார்ந்திருந்தாள். கள்தான் பல விதங்களிலும் கோளாறுகள் உள்ளவர்கள் என்று தீர்மானித்து இந்தச்சமூகம் அவர்களையே ஏசிக்கொண் டிருக்கிறதே. ஆண்களின் சரீர அமைப்பிலும் எத்தனையே கோளாறுகள் இருக்கக்கூடும் என்பதை வைத்தியர்கள் தவிர மற்றவர்கள் தெரிந்து கொள்வதுமில்லை. அதைப் பற்றி சந்தேகப்படுவதுகூடஇல்லை.
கொஞ்சநேரம் அங்கே மௌனம் நிலவியது.
"நான் போயிட்டு வரேன்" என்றபடி நர்மதாகிளம்பினாள்
பாலு அரைக் கண்களால் அவளை முழுமையாகப் பார்த் தான். நன்றாகப் பார்த்தான்.
பூரணிக்கு திகைப்பு அடங்கவே சிறிதுநேரம் பிடித்தது. ரொம்பவும் முன்னேறி விட்டோம். விமன்ஸ் லிப்" என் றெல்லாம் வாய் கிழிய பேசும் இந்த நாட்களில்கூட படித்த பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் என்றால் பூம் பூம் மாடு கள் மாதிரி பிள்ளைவீட்டார் கேட்கிற அசட்டுக் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு, பாடத்தெரியாவிட்டாலும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கோ ஒன்றிரண்டு பெண் சுளுக்குத்தான் துணிச்சல் இருக்கிறது. பாடத்தெரியாது என்று சொல்கிறார்கள்.
நர்மதா பட்டப்பாவிடம் என்ன கேள்விகள் கேட்டிருக்கப்போகிறாள்?
நன்றாக மூன்று வேளைகள் சாப்பிட, விதவிதமான துணி சுட்ட நகைகள் பூட்டிக்கொள்ள வசதியான குடும்பம். பையன் வெளித்தோற்றத்தில் பெண்மைகலந்த ஆணாக இருந் தான். ஆண்மை கலந்த பெண்கள் இல்லையா என்ன? அட் டமும் சட்டமுமாய் உயரமாய் எத்தனை பெண்கள் ஆண்களை மிஞ்சிய ஆண் தோற்றத்துடன் இல்லை. அப்படி ஆணும் பெண்களைப்போல இருக்கிறான்.
இனிமேல் இந்தப் பொண்ணுக்கு விடிவு காலம் ஏற்படப் போறதா? எப்படி? இவனை விட்டு விட்டு ஓடிப்போவதா? வாழா வெட்டியாகப் பிறந்த வீட்டுக்குப் போய்விடுவதா? அங்கே என்ன கொட்டி வைத்திருக்கிறது? கழுத்திலே தாலியும், காலிலேமெட்டியும் குலுங்கினால்கூட அந்தப்பெண் வேறு இடத்தில் ஓதுங்கினால் 'சைட்' அடிக்கிற காலம் இது.
ராமராஜ்யமா பாழாய் போகிறது?
பூபாணி குலுங்கி அழுதாள். பல விதங்களில் வெள்ளைக் காரர்கள் தேவலை. உண்டு இல்லை என்று கத்தரித்துக்கொள் வார்கள். இங்கே தர்மம் என்று ஒன்று இருக்கிறது. அதுவும் பெண்களுக்கு என்று பிரத்யேசமாக விதிக்கப்பட்ட ஸ்திரீ தர்மம். இதன் பெயரில் இதன் நிழலில் எண்ணற்ற கொடுமைகள் பெண்களை எதிர் கொள்கின்றன.
பாலு இப்போது நன்றாக விழித்துக் கொண்டான். அவன் சாப்பிட்டு அரையோ முக்கால் மணியோ ஆகியிருந்தாலும் "பாக்டரி" க்குக் கிளம்புமுன் சூடாகக் காப்பி சாப்பிட
வேண்டும்.
பூரணி பொன் நிறத்தில் நுரை தளும்ப காப்பியை ஆற் றியபடி. முத்து முத்தாக வியர்க்கும் வியர்வை நெற்றியுடன் அவனிடம் காப்பி தரும்போது அவன் அவள் அழகில் லயித்துப் போவான். லேசாக 'சென்ட்" கமழும் கை குட்டையால் வியர்வையை ஒற்றி விடுவான். கன்னத்தைக் கிள்ளுவான். இன்னும் இத்யாதி இத்யாதி.
இன்று பூரணி கண்களில் கண்ணீர் பெருக உட்கார்ந்திருந்தாள்.
பாலு எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். உடுத்திக்கொண்டான்
"காப்பி டியர் "
"காண்ட்டீன்லே சாப்பிடுங்கோ. எனக்கு உடம்பு சரியில்லே "
"சிநேகிதியோட பேசிண்டிருக்கச்சே நன்னாத்தானே இருந்தே. கமான்! நீ போடற காப்பிதான் வேணும்”
"என்னாலே முடியாது முடியாது இதென்ன நொள்ளை அதிகாரம்?
பொம்மனாட்டினா புருஷன் அதிகாரம் பண்ணித்தான் தீரணுமா? ”
"காப்பி கேட்டால் அதிகாரமா? ப்ச்... உனக்கு 'மூட் அவுட் நீயும் உன் சிநேகிதியும் பேசின ரகசியம் எனக்கும் கேட்டுது, பட்டப்பா ஈஸ் நாட் பிட் இனப்”
''ஐயோ, ஐயோ! இரைஞ்சு பேசாதீங்கோ. நர்மதா வந்து தொலையப்போறா...பாவம்,"
” என்ன பாவம்? போடா முண்டம். என்று விட்டு வெளியே நடக்கட்டும். இஷ்டமானவனோட இருந்துட்டுப் போறா ...”
''என்ன? என்ன? இஷ்டமானவனோட இவள் இந்த முண் டம் கட்டின தாலியோட இருந்துட்டுப் போகட்டும்.. எத்தனை நாளைக்கு, எத்தனை மாசம், எத்தனை வருஷங்களுக்கு? அப்புறம்?- ”
பூரணியின் கண்களில் ஆத்திரம் கொந்தளித்தது.
விவாக பந்தத்தில் தோற்றுவிட்ட ஒரு பெண்ணின் எதிர் காலம் எத்தனை இருள் சூழ்ந்ததாக இருக்கிறது? அவள் தன் நியாயமான ஆசைகளை கருக்கிக்கொண்டு படித்து வேலைக்குப் போய்ப்பிழைத்துக் கொண்டால், ஒரு வேளை இந்த சமூகம் பாலு சொல்வதைப் போல
ஒத்துக் கொள்ளலாம். இருப்பதை...
"காப்பி நான் போடறேன்" என்று பாலு காஸைப் பற்றவைத்தான். பாலைச்சுட வைத்து இரண்டு தம்ளர்களில் காப்பி எடுத்து வந்தான். கோபப்பட்டு சிவந்துபோயிருந்த மனைவியை பரிவுடன் அணைத்தவாறு காப்பியை அவளிடம் கொடுத்தான். இருவரும் சிரித்தார்கள்.
அன்று அரைநாள் "பாக்டரி” க்கு மட்டம். வாசலில் நிழல் தட்டும் போதெல்லாம் அவன் நர்மதாவை எதிர் பார்த்தான்.

