Chapter 5

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவளை கங்கம்மா கனிவுடன் பார்த்தாள். தம்பியின் மனைவி. தனக்கு அப்புறம் இந்த வீட்டை நிர்வகிக்கப்போகும் எஜமானி. முத்து முத் தாகக் குழந்தைகள் பெற்று, தன்னை அத்தை" என்று அழைக்க வைக்கும் பெண். அவளை உள்ளம் நலுங்காமல் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைபட்டாள். பரிவுடன் சிரித்தபடி, “நர்மதா! மொதல்லெ வாசல்லே ஒரு கை ஜலம் தெளித்து கோலம் போட்டுடு. நீதான் இந்த வீட்டு கிருஹ லட்சுமி. அப்படியொரு சம்பிரதாயம் இருக்கு... இந்தா...” என்று வாளியில் ஜலம் கொண்டு வந்து வைத்தாள்.

நர்மதா கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டுப் பார் த்தாள். கண் இரப்பைகள் சிவந்து கிடந்தன. பேசாமல் வாளி ஜலத்துடன் வாசலுக்குப் போய் ஜலம் தெளித்து, இழை இழையாகக் கோலம் போட ஆரம்பித்தாள்.

அப்போது பக்கத்து வீட்டு வாசற்கதவு திறந்தது. பாலு பாக்டரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். இவளைப்பார்த்துச் சிரித்தபடி அதுக்குள்ளே எழுந்தாச்சா? பூரணி இன்னும் எழுந்திருக்கலை என்று சொல்லிக் கொண்டே அவளைத் தாண்டி நடந்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். நெடிய உருவம். கப்பீரமான உருவம். ஓர் ஆணின் ஆளுமை முழுமையாகத் தெரியும் தோற்றம். இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தவள் உள்ளே திரும்பி பட்டப் பாவின் தோற்றத்தையும் நினைத்துப் பார்த்தாள்.

நர்மதா கொல்லைப்பக்கம் போனாள். தோட்டம்பூராவும் எலுமிச்சை, நார்த்தை, மற்றும் மலர்ச்செடிகள் நிரம்பிக் கிடந்தன. கம்மென்று மணம் வீசிக்கொண்டிருந்தது. கிணற் றில் பாறை இடுக்குகள் வழியாக நீர் குபு குபுவென்று கசிந்து கொண்டிருந்தது.

முகம் கழுவினாள். சில்லென்று நீரை வாரி வாரி முக மெங்கும் வழிய விட்டு முதல்நாள் ஏற்பட்ட மன உளச்சலை தீர்த்துக்கொள்ள முயன்றாள். உள்ளே வந்தாள்.

கங்கம்மா சுடச்சுட காப்பி கலந்து எடுத்து வந்தாள் "இன்னும் பால், சர்க்கரை ஏதாவது வேணுமாச்சொல்லு',

"சரியா இருக்கு. நான் இவ்வளவு பெரிய டம்ளரிலே காப்பி சாப்பிடறதில்லை. ரொம்பப்பெரிய டம்ளர்”

"நன்னா சாப்பிடணும். அரை வயித்துக்குச் சாப்பிடறதை இனிமே விட்டுடு. உனக்கு இங்கே ஒரு குறைச்சலும் இல்லை. வீட்டிலே சகல சாமானும் கொட்டி வச்சிருக்கு- சமையல் பண்றேன். நீ கடந்து சஷடப்படாதே. கூட மாட நானே சை பண்ணு போறும். என்ன சமைக்கலாம்?' என்று சொல்லிக் கொண்டே கூடை நிறைய காய்கறிகளை எடுத்து வந்து வைத்தாள்.

கறிகாய், சமையல் என்று எதிலும் பற்று இல்லாமல், 'உங்க இஷ்டம் போல பண்ணுங்க. எனக்கு எல்லாமே பிடிக்கும். பிடிக்கிறதும் பிடிக்காததும் மனசைப்பொறுத்த விஷயம்" என்று ஏதோ பேசினாள்.

"அப்படியில்லைடி நர்மதா! எனக்கு இருக்கிறது ஓரே தம்பி. அவனும் நீயும் சந்தோஷமர் இருக்கிறதுதான் எனக்கு முக்கியம். அவன் கொஞ்சம் அசடு. இந்தக்காலத்து பிள்ளை கள் மாதிரி இருக்க மாட்டான். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் பொறுத்துண்டு போகணும்."

நர்மதா குனிந்தபடி கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் முன்னே பின்னே என்றால், புரியமாட்டேன் கிறது. அழகின் பரவலாய், ஒரு ஆடவனை மயக்கும் சக்தி இந்த கண்களுக்கு, அதரங்களுக்கு இருக்கிறது. அவள் படுக் கையில் சாய்ந்து கிடந்தபோதும், ஒருக்களித்து இருந்த போதும் அவன் விலகி விலகி ஒதுங்கிப்போகக்கூடிய அசடனா கவா இருக்கிறான்? ஐயோ கடவுளே! இந்ந அசடை எப்படி சமர்த்தனாக்குவது?”

கங்கம்மா ஏதேதோ ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டி ருந்தாள். பெரிய அளவில் வெங்கடாஜலபதியின் படம் மாட்டியிருந்தது. மிக சாந்நித்தியமாக இருந்தது அவர் தோற்றம். வெள்ளிக்குத்து விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி இருந்தாள்.

"இந்தப் படம் என் புருஷன் திருப்பதியிலேருந்து வாங் கிண்டுவந்து கொடுத்தார். அவருக்கு ஒரு புள்ளை வேணும்னு ரொம்ப அசை. ஆனா. என்னவோ அவருக்கு சபல புத்தியே இல்லை. நான் ஆசை ஆசையாய் கர்த்திருந்த நாட்களில் அவர் ஏகாதேசி, அமாவாசை என்று சொல்லிண்டு வாசல் திண்ணைக்குப் போயிண்டிருந்தார். நான் அலுப்போடு இருந் தப்ப அவர் ஆசையோடிருந்தார், என்னவோ பொறக்கலை. பொறி இருந்தாத்தான் பிள்ளை பிறக்கும். எத்தனை வயசானா லும் விடாது. எப்படியோ உன் வயத்துலே நாலு பொறந் தாச்சரி.

நீ பிரசவத்துக்கு. உங்க வீட்டுக்குப்போக வேண்டாம். நான் செய்யறேண்டி "

நர்மதா வேதனையுடன் கங்கம்மாவைப் பார்த்தாள். அவள் கண்களை மூடிக்கொண்டு மிகுந்த பரவசத்துடன் சுவாமியின் எதிரில் நின்றிருந்தாள். பகவானே! எப்படியும் நீ இந்த பொண்ணுக்கு நாலைஞ்சு குழந்தைகள் அனுக்ரகம் பண்ணனும் என்று கேட்கிற தோரணையில் இருந்தாள்.

ஆஹா! இந்த நம்பிக்கைதான் மனிதனை எப்படியெல்லாம் நடக்க வைக்கிறது? சிந்திக்க வைக்கிறது? செயல்பட வைக் கிறது? மனித சக்திக்கே நம்பிக்கைதான் மூலகாரணமாக இருக்கிறது?

நேற்றிரவில் கணவன் கொடுத்தகடிதத்தை இடுப்பில் சொருகி யிருந்த இடத்தில் தேடினாள் நர்மதர். பத்திரமாக இருந்தது. உறுத்திக் கொண்டேயிருந்தது. உடனே படித்துவிட வேண் டும் என்று மனசைத் துடிக்க வைத்துக்கொண்டு புடவையின் மடிப்பில் ஒளிந்து கொண்டிருந்தது.

ஏதோ பூச்சி ஊர்வது போல் ஒரு சமயம் வேதனையைத் தந்தது. "கடுதாசி யாவது ஒண்ணாவது! தாலி கட்டிய பொண்டாட்டி கிட்டே வாயைத்திறந்து பேசாம கடுதாசி என்ன வேண்டிக்கிடக்கு? எந்த அந்தரங்கமும் அவர்களிடையே அந்தரங்கமாக இருக்க முடியாதே! மனம், வாக்கு, காயத்தால் பிணைக்கப்பட்டவர் களிடையே கடுதாசியாவது இன்னொண்ணாவது?

கறி காயை நறுக்கி வைத்துவிட்டு தயிர்கடைய ஆரம்பித் தாள். வெண்ணெய் திரண்டு பொங்கிவந்தது. அதைவழித்து வெள்ளிக்கிண்ணத்தில் போட்டு சுவாமி கிட்டெ கொண்டு வந்து வைத்தாள் கங்கம்மா.

"சமத்தா எல்லாக் காரியமும் செய்யறே. உங்கம்மா நன்னா காரியம் செய்வா, நன்னா சமைப்பா. ஊறுகாய் போடுவா"

திரும்பத் திரும்ப சமையலும், சாப்பாடும் பற்றியபேச்சு அவலுக்கு அலுப்பைத்தந்தது. எழுந்து வெளியே வந்தாள். பட்டப்பா குளித்துவிட்டுவந்தான். பளிச்சென்று நெற்றியில் சந்தனப் பொட்டுடன் சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணினான்.

"நீ குளிக்கலை"

"இல்லை "

"என்னடா இப்போ குளிக்க அவசரம்?" என்று சொல்லி சுங்கம்மா நர்மதாவுக்குப் பரிந்து பேசினாள்.

நர்மதா குளிக்கப்புறப்பட்டாள். குளியளறைக்கதவைச் சாத்திக்கொண்டு இடுப்பில் இருந்த கடிதத்தை எடுத்தாள். மேலே இரண்டு குருவிகள் சல்லாபம் புரிந்து கொண்டிருந்தன பெண்குருவி நொடிக் கொருதரம் தன் உடம்பைக் கோதிக் கோதி அழகுபடுத்திக்கொண்டு தலையைச் சாய்த்து ஆண் குருவியை 'கீச் கீச்" என்று அழைத்தது. ஆண் குருவி வேக மாக கூடு கட்ட வைக்கோலைத் தூக்கிக்கொண்டு பறந்து வந்தது.

"கீச் கீச்" என்று பெண் குருவி கத்தியது. கூடு கட்டு வதற்காக வைக்கும் புல்லும், வைக்கோலும் கீழே உதிர்ந்து கொண்டிருந்தன. அழகா இருக்கே நீங்க கூடு கட்டற லட்சணம். இந்த லட்சணத்தில் காதல் வேறே" என்று அது "கீச் கீச்" என்று கத்தியது.

ஆண் குருவுயும் பலத்த சத்தத்துடன் "காச் காச்” என்று கத்தித்து.

"ரொம்பத்தான் துள்ளர்தே. உட்காந்த இடத்துலே என்ன அதிகாரம் வேண்டி இருக்கு. காதலியாச்சேன்னு பார்க்கிறேன். இல்லைனா தொலைச்சுப்புடுவேன்.'

பிறகு இரண்டும் சல்லாபிக்க ஆரம்பித்தன.

நர்மதா வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

பெண் குருவியே ரொம்பதுணிச்சலாக நடந்து கொண்டது. அதுவே வலுவில் போய் ஆண் குருவியைச் சீண்டியது. பிறகு இரண்டும் பறந்து போயின.

நர்மதா கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள நர்மதா,

உன்னைப் பார்க்கும்போது மனசில் ஏற்படுகிற பரவசம் அப்படியே தேங்கித் தடைபோட்டதுபோல் நின்றுவிடுகிறது. பிறவியிலேயே ஆண்மையற்ற என்னைப்பற்றி யாருக்கும் தெரியாது. ஆசைகளைத் தேக்கி வைத்திருக்கும் உன்னை, கோழையாக்கி ஏமாற்றிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. உனக்கு விருப்பமில்லாவிட்டால் என்னை விட்டுப்போய்விடு.

பட்டப்பா

நர்மதா சிலையாக நிள்றாள். மரமாகிப்போனாள். கண்கள் வரண்டு போயின ஆண்மையற்றவன்... ஏன்தான் இந்த ஆண்கள் எதிலுமே இப்படி மெத்தனமாக இருக்கிறார்களோ? பெண்களை குரூரமாக வதைக்கிறார்களோ?

இனிமேல் என்ன செய்யவேண்டும்? புருஷன் உதவாக்கரை என்று இரைந்து சொல்லிக்கொண்டு வாசல்லே இறங்கி நடந்துவிட முடியுமர்? சமையல்காரியின் பெண்ணாகிய தனக்கு கோர்ட்டும், கொத்தளமும் ஏற முடியுமா? இனிமேல் நான் என்ன செய்ய வேண்டும்?

"நர்மதா! பூரணி வந்திருக்கா பார். குளிச்சாச்சோ இல்லையோ?" என்று கங்கம்மா குரல் கொடுத்தாள்.

அன்று அவள் அவசரமாகக் குளித்தாள். சோப்பு தேய்த் துக்கொள்ளவில்லை. வாசனை என்ன வேண்டிக்கிடக்கு?

புடவையை அரைகுறையாகச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவளை பட்டப்பா ஆவலுடன் பார்த்தான், மனைவி என் கிற முறையில் அவளை சுவாதினமாகப் பார்த்துச் சுவைக்க அவன் காத்திருப்பதுபோல ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.

பூரணி வழக்கம்போல பூச்சரம் கொண்டு வந்திருந்தாள்.

குளியல் என்ன வெண்ணீரிலேயா, பச்சைத்தண்ணியா?'

"நெருப்பிலே'

"சீ பைத்தியம்! உளர்றியே'

"ஆமாம் இப்படி உள்ளே வாங்க"

இருவரும் உள்ளே போனார்கள்.

"ராத்திரி ரொம்ப நாழி முழிச்சிண்டு இருந்தாப்பலே இருக்கே"

"நீ பார்த்தியா என்ன? எங்களையா கவனிச்சிண்டு இருந்தே" என்று கேட்டாள் பூரணி.

ஆமாம்... மத்தவங்களை கவனிச்சுதானே ஆகணும்? இங்கதான் ஒண்ணும் இல்லியே"

"என்னடி சொல்றே"

நர்மதா மிக ரகசியமாகப் பட்டப்பாவின் அலட்சியத் தைப்பற்றி கூறினாள்.

"போடி- மொதல்லே சில ஆண்கள் வெட்கப்படற மாதிரி இருக்கும். நீதான் சரிகட்டணும். மெதுவாக கிட்ட நெருங்கி உம் புருஷனைத் தொட்டுப்பாரு.."

''அவரே என்னைத்தொட்டு அணைச்சுக்கிட்டாரு"

"அப்புறம்?"

"அப்புறம் ஒண்ணுமில்லே. உங்க வீட்டு மாடியைப் பார்த்து உட்காந்து இருந்தேன். அவர் தூங்கிட்டார். நீங்களும், உங்க அவரும் கட்டில்லே ரொம்ப நெருக்கமா...

சீ சீ, மறந்துபோய் ஜன்னலை சாத்தாம இருந்துட்டேன் போல இருக்கு. ராத்திரி முழிப்பு வரும்போதெல்லாம் உன் ஞாபகம் தான் எனக்கு. பட்டப்பா ஒருமாதிரிபையன் ஆச்சே. பொம்பளை மாதிரி இருப்பானே...ன்னு நெனச்சுகிட்டேன் என்றாள் பூரணி.

என்ன காரணமேர் நர்மதா பூரணியிடம் பட்டப்பா கொடுத்த கடிதத்தைக்காட்டவில்லை. ஒரு மனுஷன் ஆண் மையற்றவனாக இருப்பதுபற்றி அவள் நடுத்தெருவில் நின்று கூச்சல்போட முடியுமா? வீட்டுக்குள்ளேதான் இரைந்து கத்தி ரகளை பண்ணமுடியுமா?

கடவுளே! இப்படியும் நடக்குமா? எங்கேயோ யாத்திரை போய்விட்டு வந்த அம்மா வரனைத் தேடிப் பிடித்துக்கொண் வந்தாள்.

அவளுக்கு அந்த சாயிராமின் பேரில் சந்தேகம். இவளைச் சுற்றி சுற்றி வருகிறானே. என்னிக்காவது தன் தலையில் கல்லைப் போட்டுவிட்டு இவளை இழுத்துக்கொண்டு நாலு மாசம் வைத்திருந்து நடுத்தெருவில் நிறுத்திவிட்டுப் போய்விடுவானே என்று அம்மா மடியில் நெருப்பைக்கட்டிக் கொண்டிருந்தாள். வறுமைச் சேற்றில் மலர்ந்த தாமரைப் சாப்பிட்டே பளபளவென்று வளர்ந்து போல பழையது நின்றாள் நர்மதா.

கங்கம்மா இரட்டை வடம் சங்கிலியும், நாலு வளையல் களும், முத்துத்தோடும் எடுத்து வந்து நிச்சயதார்த்தம் நடத் தினாள். வெங்குலட்சுமி நகைகளின் மதிப்பில் மயங்கிப்போ யிருந்தாள். எப்படியாவது சாயிராமின் பார்வையிலிருந்து தப்பி நர்மதா கல்யாணமாகிப் போனால் போதும் என்கிற நிலை.

முதலில் அம்மாவின் பேரில் வந்த ஆத்திரம் படிப்படியா கத்தணிந்தது.