Chapter 3
நர்மதாவுக்குக் கல்யாணம் நடந்ததே ஒரு கனவு மாதிரி இருந்தது."இந்தப் பொண்ணுக்கு எப்பவிடியப்போறதோ" என்று சொல்லிக்கொண்டேதான் நர்மதாவின் தாய் வெங்கு லட்சுமி காலையில் எழுந்திருக்கிற வழக்கம். பழையதுக்கும் எரிச்ச குழம்புக்கும் இப்படியொருவளர்த்தி இருக்க முடியுமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். பத்து குடித்தனங் களுக்கு நடுவில் நர்மதாவை இளவட்டங்கள் கண்களாலேயே கொத்திக் கொண்டிருந்தனர். அதிலே சாயிராம் என்று ஒருத்தன். இவளை எப்படியாவது சினிமாவில் சேர்த்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான்.
நர்மதா? ஒரு டம்ளர் பானை ஜலம் கிடைக்குமா? நர்மதா? சூடாகாப்பி இருந்தா கொடேன்' என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்து உட்காருவான். வெங்குலட்சுமிக்கு பற்றிக்கொண்டு வரும். சந்தனச்சிலைக்கு தைத்துப்போட்ட மாதிரி கைபிதுங்கி வழிய ரவிக் கை போட்டுக் கொண்டு அவ னுக்கு பானை ஜலமும், சூடான காப்பியும் கொண்டு வந்து கொடுப்பாள் நர்மதா. அவன் தயவு அவர்களுக்கு வேண்டி இருந்தது. பெரிய பெரிய புள்ளிகள் அவனுக்கு இநேகம். அவர்களின் வீட்டில் சமைக்க பொரிசு செய்து அனுப்புவான்.
"நீயும் கூட. ப்போயேன் நர்மதா எண்பான் சாயிராம் "
எல்லாங்கிடக்க அவன் எதுக்கு.."
"வரட்டும் மாமி! நாறு பெரிய மலுஷஞான் தெரிஞ்கண்டா நல்லதுதாவேt''
அவ எந்த மனுஷாளையும் தெரிஞ்சுக்க வாண்டாம் "
நர்மதாவுக்கு சினிமா என்றால் உயிர். ஓசிப் பாஸ் கொண்டு வந்து கொடுப்பான் சாயிராம்.
ஒரு தடவை வெங்குலட்சுமி தலையில் மடேர் மடேர் என்று போட்டுக் கொண்டு ஊமை அழுகையாக அழுதாள்.
"பாவிப்பெண்ணே! உடம்பும்,நீயும் செதுக்கின பொம்மை மாதிரி இருக்கியே. அதைப்பாத்துட்டு அவன் இளிச்சிண்டு இளிச்சிண்டு வராண்டி. ஏமாந்துடாதேடி சினிமாவும் வேண் டாம். இனிமே அவன் பாஸ் குடுத்து நீ போனே..."
நர்மதா பயத்துடன் தாயைப் பார்த்தாள்.
'நான் ஒரு முழம் கயித்துலே தொங்கிடுவேன்-" என்று முடித்தாள் வெங்குலட்சுமி.
இதெல்லாம் என்னம்மா அமர்க்களம்? சினிமாவுக்குப் போனால் என்னவாம்?" என்றான் நர்மதாவின் அண்ணா கிச்சாமி.
.
போவேடா! நீ ஒலகத்தாரைப்போல கல்யாணம் கார்த் தீன்னு பண்ணின்டு போறே. இவளுக்கு ஒரு வழி பொறக்க வாண்டாமா?"
தங்கையின் அழகை முதலாக வைத்து கிச்சாமியும், அவன் மனைவியும் தங்கள் சினி மா அபிலாஷைகளை பூர்த்தி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால், சிச்சாமி சாயிராமின் பர்ஸில்சினிமா பார்க்க முடியவில்லையே என்று வருந்தவில்லை. எப்படியோ அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
வெங்குலட்சுமி எங்கேயோ க்ஷேத்ராடனம் கிளம்பிப்போனாள். பத்து நாளைக்கு ஹாய்யா பகவத் தரிசனம் பண்ணிண்டு 'இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வழியைக் காண்பிடர் என்று கடவுளை வேண்டிக்கொள்ளக் கிளம்பிவிட்டாள்.
திரும்பி வரும்போது தான் கங்கம்மாவை ரயிலில் சந்தித் தாள். முதலில் அவள்தானா என்பதே சந்தேகமாக இருந்தது. ஒடிசலாய் இருந்தவள் சதை போட்டிருந்தாள். விதவைக் கோலம் வேறு. பட்டுச்சுங்கடிப் புடவை, நவரத்தினமாலை, புதையப்புதைய தங்க வளையல்கள் என்று அமர்க்களமாக இருந்தாள் கங்கம்மா. "நீங்க எந்த மட்டும்?" என்று கேட் டாள் கங்கம்மா. குரலும் கங்கம்மா குரல்தான்; ஒரு மாதிரி ''கீச் கீச்' சென்று
"நீங்க... கங்கம்மா இல்லே?'
ஆமாம். நீ வெங்குதானே? அப்பவே நெனச்சேன். இந்த மாதிரி பரங்கிப்பழம் போல ஒரு சிவப்பை நான் அப்புறம் யார்கிட்டேயும் பார்க்கலை."
இருவரும் நெருங்கி வந்து உட்கார்ந்தார்கள்.
"சிவப்பாவது மண்ணாவது! எல்லாம் போச்சு. அவர் போனப்பறம் எத்தனையோ திண்டாட்டம். கிச்சாமியைத் தான் உனக்கு தெரியுமே. சரியாப்படிக்காம இப்ப பலகாரம் போட்டு டவுன் ஸ்டால்லே கொண்டுபோய் விக்கறான். அவ னுக்குக் கல்யாணம் ஆயிடுத்து. எம் பொண் நர்மதாவை நீ பாத்திருக்கமாட்டே...'
"பொண் பொறந்துதா?"
பொறந்து, சாறகாலத்துலே எங்கழுத்தை அறுத்துண்டு இருக்கு-'
''சீ..சீ அப்படியெல்லாம் பேசாதே. படிக்க வக்கிறது தானே. வேலைக்குப்போயி சம்பாதிச்சுட்டுப்போறா-''
"படிப்பு ஏறினாத்தானே? கதை புஸ்தகம் தான் படிப்பர் அதுவும் சினிமா கதை புஸ்தகம். நன்னா சினிமா பார்ப்பா"
கங்கம்மா சிரித்துக் கொண்டாள்.
"இப்ப யார்தான் சினிமாவுக்கு போகாம இருக்கா? அதை விடு. நான் உன்மாதிரி இல்லை. வசதியா இருக்கேன். நீதான் ரெண்டாந்தாரமாபணக்காரனுக்குவாழ்க்கைப்படறதைவிட பால்யமா இருக்கிறவனுக்கு மொதல் தாரமா வாழ்க்கைப் பட்டே வறுமை, இல்லாமைன்னு அனுபவிக்கிறே. நான் அப்படியில்லே. அறுபது வயசுக்காரருக்கு மூணாந்தாரமா கமுத்தை நீட்டினேன். ஐஞ்சாறு வருஷம் வாழ்ந்திருப்பேன். வாழ்க்கைனு என்ன அனுபவிச்சேன்? ஒன்னுமே இல்லை. அவர் தெருக்குறட்டிலே படுக்கையும், நான் கூடத்து உள்ளே படுக் நையுமா கழிஞ்சுது. எனக்கு உடம்புக்கு தேவைங்கற ஆசை இல்லை ... நகை நட்டு, பூமி காணிங்கற ஆசைதான் அதிகம், இரண்டு தாரங்களும் கழட்டி வச்சுட்டுப்போன நகைகளை அப்படியே எடுத்து எங்கிட்டே குடுத்தார். எங்கேட்டேர்ந்து ஒண்ணையும் எதிர்ப்பார்க்கலை.'
வெங்குலட்சுமி ஆச்சர்யமாக கங்கம்மாவைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
"வயசுக்காலத்துலே தனக்கு சிச்ருஷை செய்ய பெண் டாட்டின்னு ஒருத்தி இருந்தாத்தான் ஊருக்கும், தர்மத்துக் கும்பயந்து நடப்பான்னு என்னைக்கல்யாணம் பண்ணிண்டா ராம். வாய்க்கு ருசியா சமைச்சுப்போட்டேன். கம்பீரமா அவ்ளோ பெரிய வீட்டுலே மகாராணி இரும்புச்சாவிகள் குலுங்க வளையவந்தேன். நெல்லும், வாழையும், பலாவும், மாவும் கொட்டிக் கிடக்கிற வீட்டிலே நடந்து வளைய வறதே ஒரு பாக்கியமா பட்டுதுடி வெங்கு. நான் என் பொறந்தாத் துலே பாதி நாள் பட்டினியர் இருந்தவ. இப்படி அஷ்டலட் சுமிகள் நர்த்தனமிடும் வீட்டிலே நான் மகாலட்சுமியா இருந் தேன். அவர் நன்னாந்தான் இருந்தார். திடும்னு உடம்புக்கு முடியாமப் போயிடுத்து "கங்கம் மா! உன் மாதிரி ஒரு திட வைராக்கிய சாலியை நான் பார்த்ததில்லை. சரீர சுகம்தான் பிரதானம்-ஏன் அது இயற்கையானதும் கூட என்று நினைக் கிற பால்ய வயசு உனக்கு. அந்த ஆசைகளை பொசிக்கிண்டு றேழு வருஷமா நீ நெறஞ்ச மனசோட எங்கிட்டே ருக்கியே"ன்னு அழுதார். வேண்டிய பணம காசு இருக்கு இஷ்டபடி இருக்கலாம்"ன்னு வேற சொல்லிட்டுப்போனார்.
ரயில் ஏதோ ஒரு ஐங்ஷனில் நின்றது. மேலே பலகையில் படுத்திருந்த பையனை கங்கம்மா எழுப்பினாள். பையன் பூஞ்சை யாகஇருந்தான். "போயி, நாலு பொட்டலமும், காப்பியும் வாங்கிண்டுவாடா..." என்று வெள்ளிக்கூஜாவைக் கொடுத்து அனுப்பினாள். "என் தம்பி... எங்கம்மா அப்பாவுக்கு நான் மூத்தவ. இவன் கடைசி. இவன் பொறக்கறத்துக்கு முன்னா டியே நீ ஊரை விட்டுப்போயிட்டே. "
"படிக்கிறானா?"
"ஏதோ படிச்சான், சிலபேருக்கு எங்கே படிப்பு ஏர்றது, என்னோட துணையா இருக்கான். என் சொத்தையெல்லாம் யார் ஆளப்போறா, அவனுக்குத்தானே?...'
வெங்குலட்சுமி சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
சினிமா பாஸ் கொடுத்து அவளை வளைக்கப்பார்க்கும் சாயிராம். எதிர் வீட்டு காலேஜ் பையன் வீசும் கண் வீச்சு. கல்யாணமான பக்கத்து வீட்டுக்காரர் 'அடியே நர்மதா! இங்க சித்தே வந்துட்டுப்போயேன். மாமி ஒண்டியா அடுப்ப டியிலே கஷ்டப்படறா பாரு. தொட்டில்லே குழந்தை கிடந்து கத்தறது பாரு என்று விடுக்கும் அழைப்பு. அவர் மனைவிக் குத்தெரியாமல் வாங்கி வந்து கொடுக்கும் மல்லிகைப்பந்து.
“ஏதுடி இவ்வளவு பூ?"
அவள் விழித்திருந்தாள்
"பக்கத்து வீட்டு மாமா வாங்கிக்கொடுத்தார்"
"அவர் ஏண்டி உனக்கு பூ வாங்கித்தரனும்? அப்படி யெல்லாம் வாங்கப்படாதுடி. "
"வாங்கிண்டா என்ன? அவர் ஆசையா வாங்கிண்டு வந்து குடுக்கறார். மாமிக்கு சொல்லாதே. என்னைக்கொன்னுபுடு வாங்கறார். நான் ஏன்சொல்லப்போறேன்மாமான்னுட்டேன். நீதான் ஒரு முழம் பூ வாங்கி எனக்கும் மன்னிக்கும் கிள்ளிக் குடுக்கிறியே" தலை நிறைய பூ வைத்துக்கொள்ளும் ஆசையில் இந்தப்பாவிப் பொண் ஏமாந்துட்டு நிக்கப்போ றதே" என்று எத்தனை நாளைக்கு மருக முடியும்?
கங்கம்மா கூடையிலிருந்து பழங்களை எடுத்து வைத்தாள். தம்பி வாங்கி வந்த பொட்டலங்களைப் பிரித்தாள்.
"என்ன வெங்கு! ரயில்லே ஒண்ணும் சாப்பிடமாட்டியா? மடி ஆசாரமெல்லாம் வச்சுண்டு இருக்கியா?"
"சே...சே...அதெல்லாம் ஒண்ணும் இல்லேடி.'
“அப்ப சாப்பிடு..."
இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். மெதுவாக வெங்கு லட்சுமியே பேச ஆரம்பித்தாள்.
நர்மதா ஒருத்திதான் தனக்குப் பாரமாக இருப்பதாகச் சொன்னாள். பெண்ணின் அழகைப்பற்றி வர்ணித்தாள். அவளை கல்யாணம் பண்ணிக்கொடுத்து விட்டால் வேறு எது வும் தனக்குத்தேவையில்லை என்று பேசினாள்.
பட்டப்பா அவசர அவசரமாகத்தின்று விட்டு காப்பியைக் குடித்தான். அழகான பெண் என்று காதில் விழுந்ததும் அக்கர்வையும், வெங்குலட்சுமியையும் மாறி மாறிப் பார்த்தான்.
ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வருவதாகவும் கங்கம்மா சொன்னாள்.
பெண் பார்க்க வந்த அன்றே கங்கம்மா தன் பணப்பெரு மையைப் பறைசாற்றிக்கொண்டாள். தட்டு தட்டாகப் பழமும் புஷ்பமும், உயர்தரமான ரவிக்கைத் துண்டும், எட்டு குடுத்தனங்களும் மூக்கில் விரலை வைத்தார்கள். சட்டென்று திருநீர்மலையில் கல்யாணமும் ஆயிற்று. செலவெல்லாம் கங்கம்மாவினுடையது. பெண் வீட்டார் கைகளை வீசிக் கொண்டு வந்து சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.
சாயிராமும் வந்தான். பட்டுப்புடவையும், ப்ளவுஸும் ஆசீர்வாதம் பண்ணினான். "மாப்பிள்ளை சார்!. நீங்க கொடுத்து வச்சவர் பூஜை பண்ணியிருக்கனும் எங்க நர்ம தாவைக் கல்யாணம் பண்ணிக்க. கொஞ்சம் விட்டுக்கொடுத் திருந்தா அவளைப்பெரிய ஹுரோயின் ஆக்கி இருப்பேன்... ஹும்..." என்று நெடிய மூச்சு விட்டான்.
உண்மையிலேயே அழகியான நர்மதா அந்த அழகைத் தான் ஆராதிக்கப் போகிறான் என்று பகலெல்லாம் கனவில் லயித்திருந்ததில் ஓன்றும் ஆச்சர்யமில்லை. அந்த வயதுக்கே உரிய போக்குதான் அது.

