Chapter 8
கங்கம்மா விதவிதமாகப் பலகாரங்கள் செய்து நர்மதா வையும் பட்டப்பாவையும் ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
"மசக்கைன்னு பொறந்தாத்துத்குப்போவா. மனே போறே. திரும்பி வரச்சேயாவது.
நீ வெறுமனே போறே. திரும்பி வரச்சேயாவது.... "
நர்மதாவுக்கு கேட்டுக்கேட்டு இந்த வார்தைகள் அலுப்பைத் தந்தன. பூரணியும் இதைக்கேட்டு மனம் சலித்து நின்றாள்.
திடீரென்று வந்து நிற்கும் பெண்ணையும், மாப்பிள்ளை யையும் பார்த்து வெங்குலட்சுமி பூரித்தாள். "நன்னாப்பெருத் துட்டேடி. புதுசிலே அப்படித்தான் இருக்கும்... அவன் தான். அப்படியே இருக்கான். அவனுக்கும் சேர்ந்து நீ பெருத்துட்டே"
நர்மதா எப்போதும்போலத்தான் இருந்தாள். மகளின் சோர்வைக்கூட அவள் கவனிக்கவில்லை.
அண்ணாவுக்குப் பணக்காரத் தங்கை வந்திருக்கிறாள். அவள் செலவில் நிறைய சினிமா பார்க்கலாம் என்று நினைத் தான். பட்டப்பா உடனே கிளம்பிவிட்டான். அங்கே இங்கே கடன் வாங்கி மாப்பிள்ளைக்கு விருந்து வைத்தாள் வெங்குலட்சுமி.
நர்மதா வந்திருப்பது எப்படியோ சாயிராமுக்குத்தெரிந்து விட்டது.
"என்ன சமர்ச்சாரம்?" என்று கேட்டபடி உள்ளே வந்து உட்கார்ந்தான்.
"சொல்லுங்கோ"
"நீதான் சொல்லணும். புதுாச கல்யாணம் பண்ணிண்டு புருஷனோட இருந்துட்டு வந்திருக்கே. புதுப்புது அனுபவங்கள்"
'இந்த அனுபவங்களை அயலானோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் .... சே... என்ன கேவல் மான புத்தி..."
"என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கறே? பெரிய பணக் காரியாயிட்டே. அப்படியே தகதகன்னு ஜொலிக்கறே. முன்னே மாத்திரம் என்ன? கொத்திண்டு போற லட்சணம். அடிச்சான் ப்ரைஸ்..."
"நீங்க வெளியே போங்க" என்று சுட்டு விரலை உயர்த்தி அவனுக்கு வாசலைக் காண்பித்து விடலாம். ஆனால், எதுக்கு இந்த அல்பனோட வியவகாரம்? என்று பேசாமல் இருந்தாள்.
"என்ன, வந்ததும் வராததுமா உன்புருஷன் கிளம்பிட்டார்?"
"அவருக்கு ஊரிலே எத்தனையோ ஜோலி..."
"உன்னை விட்டுட்டு"
நர்மதாவுக்கு அதற்கு மேல் கேட்கப்பிடிக்கவில்லை.
"அம்மா' கடைத்தெருவுக்குப் போகணும்னியே"
''அப்ப நான் வரேன்” என்றபடி சாயிராம் எழுந்தான் "உன்னை மறக்கலேடி நான்" என்று கருவிக்கொண்டு போகிற மாதிரி அவளை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே வெளி யேறினான்.
வெங்குலட்சுமி அவள் சமைக்கிற வீட்டுக்குக் கிளம்பிச் சென்றாள்.
"இந்த உடம்பைப் பார்க்க எத்தனைபேருக்கு ஆசை? இங்கே சாயிராம். அங்கே பாலு. நடுவிலே தாலிகட்டிய கணவன் ஒன்றுக்கும் உதவாதவன்... ஆண்கள் மீதே பழி தீர்த்துக் கொள்ளலாமா? அவர்களை அணு அணுவாக வதைக் கலாமா? ஆசை காட்டி ஏமாற்றலாமா?" மனம் ரொம்பவும் விகாரப்பட்டுப் போயிற்று.
சாயிராமோ. பாலுவோ யாரோடாவது சிநேகிதமாக இருந்து ஒரு பிள்ளையைப் பெற்று கங்கம்மாவிடம் "இந்தாங்கோ உங்க மருமான்...” என்று மடியிலே போட்டு விடலாமா? 'இந்தாம்மா உன் பேரன்" என்று அம்மாவின் மடியில் போடலாமா? தம்பி பிள்ளைன்னு அந்த அம்மாள் சீராட்டிட்டு சாகட்டுமே பெண் ஒழுங்காகப் பெத்தது என்று இந்த அம்மா சீராட்டிப் பாராட்டட்டுமே.
அவள் பாரதம் படித்திருக்கிறாள். “இப்படியும் உண்டா? எப்படி இதை ஒத்துக்கொண்டார்கள்? என்று நினைத்துப் பார்த்திருக்கிறாள். அந்தப்பெண்களுக்கு ஏற்பட்ட துர்பாக் கியத்துக்கு விடிவு மோட்சம் இருந்தது. அவர்களையும் ஏசுகி றவர்கள் ஏசினார்கள். போற்றினவர்கள் போற்றினார்கள்.
இன்னும் கொஞ்ச நாழி மனசை இப்படி அலையவிட்டால் தானே போய் வலுவில் சாயிராமிடம் சரண் அடைந்து விடு வோம் என்று அவளுக்குத்தோன்றியது. அம்மாவுக்குத்தெரிந் தால் கன்னம் கன்னம் என்று அறைந்து கொள்வாள். 'அடி தட்டுவாணிச் சிறுக்கி! உனக்குப் பழைய புத்தி போகலைடி. பணக்காரனா, சாயிராமவிட சின்னவனா புருஷன் கிடைச்சும் உன் ஈனபுத்தி போகலையே .." என்று மோதிக்கொள்வாள்.
"தேடினியே அழகான மாப்பிள்ளையை. பிணத்தைக் கொண்டுபோய் உடைப்பிலே போடு அதுக்கு மேல் என்ன சொல்லமுடியும்?
நர்மதா வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய் எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள்.
நேராக அம்பாள் சன்னிதிக்குப் போனாள். எந்தக்கஷ்ட மும். குறையும் அம்மாவிடம் சொன்னால் தீர்ந்து போகும். பளு குறைந்துவிடும். என்கிற நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்கிறதில்லையா? வெறும் அம்மாக்களே குழந்தைகளுக்குப் பக்க பலமாக இருக்கிறபோது ஜகன் மாதாவாக உலகத் துக்குத் தாயாக இருக்கிறவள் எப்படிப்பட்ட காருன்ய மூர்த்தியாக இருக்க வேண்டும்?
சன்னதியில் கூட்டமில்லை. ஒற்றை முல்லை சரம் கழுத் தில் துவள, தங்கப்பொட்டு மின்ன, அரக்குப் பாவாடை கட்டிக்கொண்டு பரம சாந்தமாக அவள் நின்று கொண் டிருந்தாள்.
விளக்குக்கு எண்ணெய் விட்டாள். திரியைத் தூண்டி விட்டாள்.
இரண்டு மூன்று சின்னப்பையன்கள் பிள்ளையார் சன்ன தியில் யாரோ உடைக்கிற சிதர்க்காயைப் பொறுக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். குருக்கள் தூணில் சாய்ந்தபடி யாரோடோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
பெரிய மனுஷாளாத்துப் பையன் ஒருத்தன் வேறு ஜாதிப் பெண்ணோட சிநேகமாக இருக்கிற சமாச்சாரமாக இருக்கவே, குருக்கள் உம் போட்டு அக்கறையாகக் கேட்டுக் கொண்டி ருந்தார். நடு நடுவில் "நமக்கேன்யா வம்புன்னு வேறே பேசிக்கொண்டிருந்தார்.
நர்மதா விளக்குச் சுடரில் அம்பாளைத் தீர்கமாகப்பார்த்தாள்.
"அடியே அம்மா! உன்னை எத்தனை தரம் சுத்திச் சுத்தி வந்திருக்கேன். எத்தனை பூ வாங்கிப் போட்டிருக்கேன். நல்ல ஆம்படையானா வருவான் னு இதோ உனக்குப் பூஜை பண்றாரே இந்த குருக்கள் மாமா எத்தனை தரம் சொல்லி யிருக்கா? இவர் சொன்னதும் பொய், நீயும் பொய்*
யாரோ ஒரு பக்தர் பாடிக்கொண்டே வந்தார்.
வந்தெனது முன் நின்று-மந்தாரமுமாக
வல்வினையை மாற்றுவாயே...
ஆரமணி வாளினுறை தாரைகள் போல நிறை
ஆதி கடவூரின் வாழ்வே...
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாணி அபிராமியே..
பூர்விகல்யாணி குழைந்து குழைந்து தென்றலாக வீசியது. அம்பிகை மந்தகாச முகத்துடன் பக்தரைப் பார்த்தாள். நர்மதாவுக்கும் அவளுடைய சிரிப்பு புரிந்தது.
அவர் நகர்ந்தவுடன் மறுபடியும் இவள், "சிரிக்காதே! எதுக்கும் சிரிப்புதான். துன்பம், இன்பம், வாழ்வு, தாழ்வு எதுக்கும் சிரிப்புதான். இப்ப உன்னால நான் பாவம் பண்ணி டுவேனோன்னு பயந்து செத்துண்டிருக்கேன் ஒவ்வொரு நாளும் வெந்து தணியறேன். ஆம்பளைன்னா தேவடியா வீட்டைத்தேடிண்டு போயிடுவான். அதுக்கொரு நியாயம் சொல்லுவான். அவன் மேலே ஒண்ணும் ஒட்டறதில்லையாமே சாஸ்திரம் சொல்றதாம், பொம்மனாட்டி நெருப்பு மாதிரி இருக்கணும்னு... நெருப்பா இருந்தாத்தானே சட்டுன்னு எரிஞ்சும் போயிடலாம்.
நெஞ்சுக்குழி விம்ம விம்ம மனசுக்குள் மனசுக்குள் அறற்றியவள் விம்மி அழுதாள்.
"அழறயா என்ன?”
இந்த ஊருக்கு வந்ததிலிருந்து யாருடைய நினைவு மளசைப் போட்டு உலுப்பறதோ அந்த சாயிராம் சிரித்துக்கொண்டே எதிரில் நின்றான்.
'இல்லியே. கண்ணிலே என்னவோ விழுந்துட்டாப்பல இருக்கு"
சொல்லிக்கொண்டே தூணில் தூணில் இருந்த குங்குமத்தை எடுத்து இட்டுக்கொண்டபடி வெளியே வந்தாள்.
சுவாமி சன்னதியை அதற்குள் பூட்டி விட்டார்கள். வரும்படி இருந்தால் சுவாமி சற்று நல்ல காற்றை சுவாசிக்க திறந்து வைப்பது வழக்கம். இல்லையெனில் அவரைக் கம்பிக் கதவுக்கு அப்பால் தள்ளி விடுவது.
அப்புறம் சுற்றுக் கோவில்களில் விளக்கே இல்லை. நல்லெண்ணெய் இருபது விற்கிறபோது யார் தீபம் போடப் போறா... ஒண்ணும் தெரியலை. பிள்ளையாரா, தணாக்ஷிணாமூர்த் தியா, துர்க்கையா? எல்லாம் ப்ரும்மம்தான்... என்று ஒரு கிழம் சொல்லக்கொண்டு போயிற்று.
"கொஞ்சம் உட்காருவோமே.." அங்கேயிருந்த கல்லில் உட்கார்ந்தான். அவளும் எதிரில் உட்கார்ந்தாள். இந்த மூக்கும், கண்களும், உதடுகளும் எப்படி இவ்வளவு அளவோடு இவளுக்கு வாய்ச்சுது... என்று அதிசயித்தான் சாயிராம்.
ஆத்துக்காரர் இல்லாம விட்டுட்டுப் போயிட்டான்னு. அம்பாள்கிட்டே சொல்லிண்டு அழுதையாக்கும். எங்கிங்டே மறைக்கிறே...அவன் ஒரு ரசனை கெட்ட ஜன்மம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?"
அவள் கீழேகிடந்த குச்சியால் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
"அதானே கோபம்?"
"ஊஹும்...
"பின்னே”
'அவர் எங்க இருந்தா என்ன?""
சாயிராமுக்கு சுவாரஸ்யம் தட்டியது.
"என்ன அப்படிச்சொல்றே. பணக்காரன். கனகாபிஷேகம் பண்ணியிருக்கான். கழுத்திலே, கையிலே, காதுலே பள பளன்னு போட்டுண்டு சாஷாத் அந்த அம்பாளாட்டமா ஜொலிக்கிறே..."
'ஐயோ! என்னைப்போய் அவளோட ஒப்பிடாதீங்கோ... நான் பாவம் பண்ணிய மனுஷ ஜன்மம். வெளியிலே பவித் ரமர் இருக்சிறாப்போல இருந்துண்டு மனசால கெட்டுண்டு இருக்கேன்”
"அப்போ அவனைப் புடிக்கிலையா உனக்கு. ஏத் தவன் இல்லைதான். உனக்கு உனக்குப் புடிச்சவனா என்னை மாதிரி இருந்தா இப்படி தங்கமா இழைச்சுக்க முடியுமா? நல்ல புடவையா வேணா வாங்கித்தருவேன். நகை நட்டு, ஏ அப்பா! இந்த விலையிலே என்னாலே வாங்கிப்போட முடியுமா?"
நர்மதாவின் கண்கள் கலங்கியிருந்தது.
"நகையும் நட்டும்" என்று முணு முணுத்தாள். அதற்கு மேல் குருக்கள் வரும் சத்தம் கேட்டது. இருவரும் வெளியே வந்து விட்டார்கள்.
கோவில் வாசல்படியில் பூக்காரி இரண்டு முழத்தை வைத்துக்கொண்டு, "வாங்கிக்குடேன் சாமி' என்றாள்.
வாங்கினான். அவளும் பேசாமல் வாங்கி வைத்துக் கொண்டாள்.
இருவரும் வெவ்வேறாகப் பிரிந்து நடந்தார்கள்.

