Chapter 11
இப்போது கங்கம்மாவின் மனசில் நிராசை நிரம்பி விட்டது. பூரணி பிரசவித்து அழகான ஆண் குழந்தையோடு கணவனிடம் வந்து சேர்ந்தாள். பெருமை முகத்தில் கொப் பளிக்க அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு அடிக்கடி நர்மதாவைத்தேடி வருவாள். குழந்தையும் நர்மதாவிடம் ஒட்டிக்கொண்டது.
வழக்கம்போல் அந்த மாசத்தில் நர்மதா வெளியில் உட்கார்ந்தவுடன் கங்கம்மா வெடித்துச் சீறினாள்.
"கர்மம்...கர்மம்! என்னிக்கி என்னுடைய ஆசை விடியப் போறது? உக்காந்தாச்சா? உடனொத்தவள் திரும்பவும் குளிக்காம இருக்கா. குழந்தைக்கு ஏழெட்டு மாசம் கூட ஆகலை. பூக்கிறதுதான் பூக்கும். காய்க்கிறதுதான் காய்க்கும். எட்டி பழுத்தா என்ன'ங்கற மாதிரி தள தளன்னு இருத் துட்டா போதுமா? வயத்துலே ஒரு பூச்சி பொட்டு உண்டாகலை.
பட்டப்பா ரொம்பவும் வேதனைப்பட்டான். காரணமில்லாமல் மனைவி ஏச்சு கேட்கிறாளே என்று வருந்தினான்.
அன்று அவனுக்குச் சாப்பாடு போட்டுக்கொண்டே, 'நான் சொல்றேன்னு நெனக்காதே.இவ இனிமே உண்டா வான்னு எனக்கு நம்பிக்கை போயிடுத்து. வேறே நல்ல பொண்ணா பார்க்கிறேன்"
நர்மதா கேட்டுக் கொண்டிருந்தாள்.
"ஆமாண்டா! பொண் அழகிலே கொறச்சலா இருந்தாலும், வயிறு திறந்து இரண்டு பெத்தாப்போறும். நான் தான் இப்படி நின்னுட்டேன். நீயும் இப்படி நிக்கமுடியுமா?"
பட்டப்பா சாதத்தை அளைந்து கொண்டு உட்கார்ந்தி ருந்தான்.
"என்ன சொல்றே? அவ அழகிலே, உடம்பிலே மயங்கிக் கிடக்கிறே. என்ன பிரயோஜனம்? பேர் சொல்ல ஒண்ணு இல்லே ..
நர்மதா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
'அடுத்த வீட்டுக்காரனோட சிநேகமாயிரு. ஊரிலே இருக்கிறவனோட எப்படி வேணா இரு. இல்லைன்னா எங்கக்கர் எனக்கு இரண்டாந்தரம் கட்ட ஆரம்பிப்பான்னு' முழங்கின வீரதீரப்பரதாபன் வாயடைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்.
அவள் ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.
"நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ. உண்மை யைச் சொல்லித்தானே ஆகணும்? எத்தனை நாளைக்கு மறைச்சு வச்சு மன்னாட முடியும்? நான் நன்னாத்தான் இருக்கேன். எனக்குப் பத்து குழந்தைகள் கூடப்பொறக்கும். உங்க தம்பிதான் அதுக்குலாயகில்லை. நான் என்ன பண்ணட்டும்?"
கங்கம்மா அப்படியே நின்றவள் நின்றவள்தான். எப்போதோ சின்ன வயசில் அவள் அம்மா பட்டப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் இந்த பையன் பெரியனாகிக் குழந்தை குட்டி பெத்தால்தான் இவனை ஆம்பளைன்னு ஒத்துக்கமுடியும் என்று சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அம்மா எப்படியோ கண்டுபிடித்திருக்கிறாள். அக்கா இதையெல்லாம் புரிந்துகொள்ளுமுன் பட்டப்பாவும் வளர்ந்து விட்டான்.
பட்டப்பா பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டான். அவன் நன்றியோடு நர்மதாவைப் பார்த்தான். மனம் லேசாகி விட்டதை உணர்ந்தான். மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை எத்தனை லாவகமாக இறக்கி வைத்து விட்டாள்?
கங்கம்மா ஏழுமலையான் படத்தின் முன்பு போய் நின்றாள்•
'இனிமே உனக்கு பாலும் கிடையாது ஒண்ணும் கிடையாது. கொஞ்ச பசும்பாலா, கல்கண்டா, குங்குமப்பூவா சாப்பிட்டிருக்கே? நன்னா என்னை மொட்டை அடிச்சாச்சு. உனக்கு அதுவே வழக்கமாயிடுத்து.'
டம்ளர் பாலை எடுத்து சாக்கடையில் வீசினாள். இளம் மஞ்சள் நிறத்தில் பால் கசிந்து கசிந்து முற்றத்தில் வழுந்தது.
அந்த வீட்டில் மயான அமைதி நிலவியது. கங்கம்மா அடுத்த இரண்டு நாட்கள் ஸ்னானம் செய்யவில்லை. ஜபதபங் கள் இல்லை. சாவிக்கொத்தை ஆணியிலிருந்து இடுப்பில் சொருகிக் கொள்ளவில்லை. பூரணியோடு பேசவில்லை. பாலுவை நிமிர்ந்து பார்க்கவில்லை. "அத்தே" என்று வரும் பூரணியின் குழந்தையை தூரத்தள்ளிவிட்டு பிரமைபிடித்த மாதிரி இருந்தாள். தலைவலி என்று படுத்தாள். ஒரு கையும் காலும், வாயின் ஒரு பக்கமும் கோணலாகி பேசும் சக்தியை இழந்தாள்.
சிறுவயதிலிருந்து தன்னை வளர்த்தவள் பேசும் சக்தியை இழந்து படுக்கையில் கிடந்தபோதுதான் பட்டப்பா தன் தவற்றை முழுமையாக உணர்ந்தான். இவன் தன் சங்கோ சத்தை விட்டு அக்காவிடம் பேசியிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காதே.
விதவிதமாகச் சமைத்துப் பரிமாறியவள், பாலை விழுங்கும் சக்தியையும் இழந்திருந்தாள். மெதுவாக மிகுந்த சிரமத்துடன் பாலை சிறிதளவே சாப்பிட முடிந்தது.
டாக்டர் வந்து பார்த்துவிட்டு, "ஸ்ட்ரோக்' என்று சால்லி மருந்து கொடுத்தார். ஊசி போட்டார். நாள் கணக்கிலும் இருப்பாள், மாசக்கணக்கிலும் இருப்பாள் என்று சொன்னார்.
பாலு அடிக்கடி வர ஆரம்பித்தான். ஆனால் நர்மதாவின் மனதில் மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது. அவனிடம் அதிகம் பேச்சு கொடுக்காமல் இருந்தாள்.
''என்ன? வீட்டுப்பக்கம் வரதேயில்லை. பூரணியால் ஒண் டியாகக் குழந்தையை சமாளிக்க முடியலெ''
''அக்காவை விட்டுட்டு எங்கே வரது?"
"நீ ரொம்ப மாறிப்போயிட்டே. முன்னே மாதிரி இல்லை"
"மாறத்தானே வேண்டும்? ஆரோக்யமா நடமாடிண்டு இருந்த அக்கா இப்படி படுத்தப்புறம் எனக்கு ஒண்ணும் பிடிக்கலை.”
பாலுவுக்குச் சப்பென்று போய்விட்டது. திடீரென்று இந்தப்பெண் ஏனிப்படி மாறவேண்டும்? அவளுடைய சிரிப்பு எங்கே போயிற்று? இவனிடம் சரண் அடைந்து விடுவாள் என்று நினைத்த அவளுடைய வெகுளித்தனம் எப்படிமாறியது
சில நாட்களில் நன்றாக உடுத்திக்கொள்கிறாள் பல நாட்கள் ஏனோதானோ என்று இருக்கிறாள். ஓயாமல் கங்கம் மாவின் பக்கத்தில் உட்கார்ந்து பணிவிடை பண்ணிக்கொண் டிருக்கிறாள். அவனுக்குப் புரியவில்லை.
ஊரிலிருந்து அம்மாவை வரவழைத்தாள் நர்மதா. ரயிலில் தன்னுடன் கொள்ளைப்பேச்சு பேசிய சிநேகிதி வாயடைத்துப் போய் மு நம்கோணி படுக்கையில் கிடப்பதைப் பார்த்தாள். அவ்வளவு பெரிய வீட்டையும், அதில் நிறைந்திருந்த செல்வத் தையும் பார்த்து அதிசயித்தாள்.
"கங்கம்மா]இவ்வளவு பணக்காறியா? பட்டப்பாவுக்குத் தான் இத்தனை சொத்தும் சேரப்போகிறதா? உக்கிராண உள் பூராவும் அரிசி மூட்டைகளும், மற்ற சாமான்களும் நிறைந்திருந்தன.
கொல்லையில் பூவாய்ப் பூத்தது. எலுமிச்சை, நாரத்தை என்று காய்கள் குலுங்கின.
தன் அருகில் உட்கார்ந்திருந்த சிநேகிதியின் கைகளை சுவாதீனமாக இருந்த ஒரு கையினால் பற்றினாள். கண்களிலி ருந்து கண்ணீர் வழிந்தது. நர்மதாவையும் பட்டப்பாவையும் மாறி மாறிப் பார்த்தாள். பார்வையில் மன்னிப்பு கேட்கும் பாவம் தெரிந்தது.
'உனக்கு தெரிஞ்சா பண்ணினே? அதெல்லாம் எனக்குக் கோபம் இல்லே வருத்தப்படாதே" என்றாள் வெங்குலட்சுமி.
நர்மதாவுக்குத்தான் கஷ்டமாக இருந்தது. நாம சொல்லாம இருந்திருந்தா இந்த மனுஷி நன்னா இருந்திருப்பாளே. வாக்குலே சனியன் மாதிரி உளறி வைச்சோம்.
வெகு நாட்களுக்குப் பிறகு அன்றிரவு நர்மதர் படுக்கை அறைக்குள் போனாள். கங்கம்மா நோயாய்ப் படுத்த பிறகு அவள் உள்ளேபோய் படுப்பதில்லை. தாபத்தீயினால் உடலைப் பொசுக்கிக் கொள்வதில்லை.
பூரணி மட்டும் இவளிடம் ரகசியமாகக் கேட்டாள்.
"இப்படியே உங்காலத்தை ஓட்டப்போறியா?"
"பின்னே''
"ரொம்ப கஷ்டம். வாழ்ந்து அனுபவிச்சவாளாலேயே முடியாது".
''முடியத்தான் இல்லே. அதுவும் அந்த மனுஷன் அடிக்கடி ஞாபகப்படுத்தி விடறார்; தன் இயலாமையைச் சொல்லிச் சொல்லி".
''பாவம் பேசாம இருந்திருக்கலாம்"
''உம். இப்படி எத்தனையோ பேர் ஏமாந்திருப்பா. அதுலே நானும் ஒருத்தி. இல்லை ரகசியமர் யாரோடயாவது நேகம் வச்சிண்டிருப்பா"
பூரணி பல்லைக்கடித்தபடி சொன்னாள்.
'அப்படித்தாண்டி செய்யணும். இவன் என்ன பண்ணிப் பிடுவான். "
இருவரும் மாலை மங்குகிற நேரத்தில் கிணற்றங்கரையில் பேசிக்கொண்டிருந்ததை பட்டப்பா கேட்டுக் கொண்டு வந்தான்.
"உண்மைதான். அவள் எப்படி நடந்துக்கொண்டாலும் கேட்பதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கு. அவ பாலு வோட சிநேகமா இருக்கலாம். ஊரிலிருக்கிற சாயிராமோட வும்இருக்கலாம். தப்பே கிடையாது. மனைவி பிரசவத்துக்குப் போயிருந்தால் ஊர்மேயும் ஆண்கள் கூட்டத்தை மன்னிக்கும் சமூகம், இதைக் கேட்டால் அலறித்துடிக்கும்.
நர்மதா வழக்கம்போல பால் டம்ளருடன் உள்ளே வரவில்லை. அந்த நாடகமெல்லாம் ஓய்ந்துபோய் மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது.
படுக்கையை எடுத்துத் தரையில் போட்டுக்கொண்டாள்.
"நர்மதா!"
"உம்...
"உங்கிட்டே ஒண்ணு சொல்லணும். உனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன். நீ இஷ்டபடி இருக்கலாம். இப்ப அக்கா வுக்கும் வாயடைச்சுப்போச்சு"
"என்ன சொல்றேள்?"
கொஞ்ச நாளைக்கு உன் அம்மாவோட ஊருக்குப் போயிட்டுவாயேன் "
“எதுக்கு”
ஒரு மாறுதலுக்கு"
"இங்கே அக்காவை யார் பாத்துப்பா?
"ஒரு ஆளைப்போட்டு நான் கவனிச்சுக்கறேன்"
“நான் போகலை"
"'ஏன்?""
'பிடிக்கலை...அக்காவை விட்டுட்டுப்போறது பாவம்."
"நான் பண்ணியிருக்கிற பாவத்துக்கு முன்னாடி இதெல்லாம் பாவமில்லை. போயிட்டு வாயேன்”
நர்மதா விருட்டென்று எழுந்தாள். கணவனிடம் சென்று அவனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டாள். அவள் இந்தமாதிரி செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
குமுறி அமுதாள்.

