Chapter 2

அவளுக்குத் திருநீர்மலையில் கல்யாணம் நடந்தது. முதன் முதலில் பட்டப்பா அவள் கையைப் பிடித்தபோது அது ஒரு பெண்ணின் கையைப்போல மெத்மெத்தென்று மிருதுவாக இருந்தது. ஆண்மகனின் அழுத்தமான பிடியாக இராமல் தோழிப்பெண் ஒருத்தி மிக நளினமானக் கையைப் பிடித்து வருடுவதுபோல இருப்பதை உணர்ந்தாள். பட்டப்பா அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. விளையாட்டுப் பையன் போல எதை எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தான். நர்மதாவுக்கு பிள்ளைவீட்டார் போட்டிருந்த நகை களைப் பார்த்து பூரித்துப்போனாள் அவள் அம்மா.

சிவப்புக்கல் நெக்லஸ், இரட்டைவடம் சங்கிலி, காதில் நவரத்தினத்தோடுகள், கையில் நாலைந்து தங்க வளையல்கள், ஒரே சமயத்தில் ஐந்தாறு பட்டுப்புடவைகள். என்னவோ திடீரென்று அஷ்டலெஷ்மிகளின் சாந்நித்தியம் தன் வீட்டில் ஏற்பட்டு விட்டமாதிரி அந்த அம்மாள் மனம் நெகிழ்ந்து போயிருந்தாள்.

கல்யாணத்தன்று பகலே திருநீர்மலையிலிருந்து எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். திடீரென்று ஓர் அதிஷ்ட தேவதை தன் மீது ஈருணை மழை பொழிந்து தன்னைப் பணக்காரியாக்கி விட்டதை நினைத்து மலைத்துப் போயிருந்தாள் நர்மதா. எல்லாப்பெண்களையும் போல அவள் புக்ககம் புறப்படும்முன் கண்கலங்கினாள்.

அவள் அம்மாவும், மன்னியும், அண்ணாவும் அழுதார்கள். நர்மதாவால் தனக்கு விடிவுகாலம் வந்து விட்டது என் அவள் அம்மா பெரிதும் நம்பினாள்.

வளைந்து வளைந்து போகும் அந்தச்சாலையில் எல்லோரி டமும் விடைபெற்றுக்கொண்டு தன் கணவனுடன் அவள் பஸ்ஸில் புறப்பட்டாள். கொஞ்சம், கொஞ்சமாக திருநீர் மலையின் தோற்றம், கோயில் எல்லாம் பின் தங்கின.

அடுத்து ஒரு ஊரில் பஸ் நின்றபோது பட்டப்பா அவளுக்கு ஆசையாக ஒரு பந்து மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்தான். பான்ட்டா உடைத்து எடுத்து வந்தான். பழம் வேண்டுமா என்று கேட்டான்.

அவள் எதிர்பார்த்தது வேறு. அவனிடம் ஒரு நெருக்கம். ஒரு ஆவலானபார்வை. குறைந்தபட்சம் மேலே ஒட்டியாவது உட்காருவான் என்கிற எதிர்பார்ப்பு. ஊஹும்..

பஸ்ஸின் ஆட்டத்தில் பட்டப்பா தூங்கி வழிந்தான். அந்த சமயங்களில் அவன் தலை லேசாக அவள் தோளின் மீதும், கன்னங்களின் மீதும் சாய்ந்து சாய்ந்து நிமிர்ந்தது. அவள் சிலிர்த்துப்போனாள். அவன் சட்டென்று விழித்தபோது அவளைப்பார்த்து அசடு வழியச் சிரித்தான். ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்ட குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்துத் தலை குனிந்து கொண்டான்.

ஒரு பெண்ணின் இயல்போடு கூடிய ஆண்மகனாக அவன் இருப்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

எதிர் பெஞ்சில் இருந்த அந்த நடுத்தரவயதுத்தம்பதிகள், அவர்களின் பேச்சு, பார்வை பறிமாறல், நெருச்சும், கம்பீர மான அவன் தோற்றம், வலுவான அந்தக்கரங்கள், தீட்சண்மான பார்வை

நர்மதாவின் கழுத்தில் இருந்த அத்தனை நகைகளும், உடலைச்சுற்றிக் கொண்டிருந்த பட்டுப்புடவையும் சுமையாக இருந்தது.

ஆயிற்று, ஊர் வந்தது. ஊருக்குப்பெயர் என்ன வைத்து வாழுகிறது? ஏதோ ஒரு ஊர். தெருவே அவளையும், அவனை யும் வேடிக்கை பார்த்தது. "பட்டப்பா பெண்டாட்டியைப் பாருடி... ராஜாத்தியாட்டம் இருக்கா. இதுக்குப்போய் இப்படி ஒருத்திவந்து வாச்சிருக்குப்பாரு..."அவர்கள் உரக்கப் பேசாவிட்டாலும் 'கிசு கிசு' வென்று பேசிக்கொண்டார்கள்.

பட்டப்பாவின் அக்கா விதவை. பக்கத்து வீட்டுப்பூரணி வாய் கொள்ளாச்சிரிப்புடன் தட்டுநிறைய ஆரத்தி கரைத்து எடுத்துக்கொண்டு வந்தாள். வாசலில் பெரிசாகப் படிக்கோ லம்போட்டு, செம்மண் இட்டிருந்தது. குலையோடு வாழை மரங்கள் சாய்ந்து நின்றன மாவிலைத் தோரணங்கள் அசைந்தன.

"பெண்டாட்டி கையைப் புடிச்சுக்கோ பட்டப்பா.. கிழக்கே பார்த்து நில்லுங்கோ" என்றபடி பூரணி வந்தாள். அவள் மெட்டி குறிங்கியது. தாளமிட்டது. ஆரத்தியைச் சுழற்றிக்கொண்டே நர்மதாவை நிமிர்ந்து பார்த்தாள். சொக்கிப்போனாற்போல ஒரு பார்வை. சந்திரகலை மாதிரி வளைந்த நெற்றி. அதில் படிந்த சுருட்டைக் கூந்தல். எடுப் பான மூக்கு. வைரம் மின்னியது. மூக்குத்தி சில பேருக்கு டம்போடு பிறந்த மாதிரி ரொம்பப் பொருந்திப்போய் விடுகிறது.

கங்கம்மா தம்பியையிம், தம்பி மனைவியையும் ஆசைதீரப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் அரும்பு கட்டிவிட்டது.

“வலது காலை எடுத்து வைச்சு வாம்மா-"

நர்மதர் உள்ளே வந்தாள். கூடத்தில் பளபளவென்று சங்கிலிகள் கோத்த ஊஞ்சல் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. சுவர் நிறைய தஞ்சாவூர் படங்கள். எதிர் பக்கத்து அறையில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. புது மெத்தைகள் சுருட்டி வைத்திருந்தார்கள்.

"உள்ளே வாம்மா... மொதல்லே காப்பி சாப்பிடு...அப்பு றமா வீட்டைச்சுத்தி பாக்கலாம்" என்று பரிவோடு கங்கம்மா நர்மதாவை உபசரித்தாள்.

நுரை ததும்பும் காப்பி கொண்டுவந்து வைத்தாள். பட்டப்பா இவளைக்கவனிக்காமல் என்னவோ பேசிக்கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தான்.

சமையலறையிலிருந்து கம்மென்று பாயசம் மணத்தது. கசகசர் தேங்காய் அரைத்த பாயசம். கூடவே நெய்யும் விட் டிருப்பார்கள் போலிருக்கிறது.

நர்மதா குளிக்கப் புறப்பட்டாள். ஊர் நாட்டுப்புறம் மாதிரி இருந்தாலும், கங்கம்மா தன் வீட்டில் எல்லா வசதிக ளும் செய்திருந்தாள். குளியலறை வசதியாக இருந்தது. அங்கே. அம்மா ஊரில் விடிய நாலு நாழி முன்பே எழுந்தி ருந்து யாரானும் வராளா வராளான்னுபார்த்துண்டு அவசர அவசரமா குளிச்சுட்டு வந்து பழக்கம். ஆசை தீர ஜலமா கொட்டிண்டு குளிக்கணும்னு அங்கே தொட்டியில் தளும்பிய தண்ணீரைப் பார்த்ததும் நினைத்துக் கொண்டாள் நர்மதா. கிணற்றிலிருந்து இரைத்துக் கொட்டினால் உள்ளே தொட்டி யில் குபு குபுவென்று ஜலம் விழும்படி கட்டி இருந்தார்கள்.

பட்டப்பா உள்ளே இருந்து 'பாரின்' சோப்புக்கட்டி ஒன்று எடுத்து வந்தான். ரேழியிலேயே அந்தச் சோப்பு கம் மென்று மணந்தது 'இந்தா' என்று கொடுத்தான். அவளுக்கு லஜ்ஜையாக இருந்தது. விரலகள் அவன் கையை வருடுகிற மாதிரி சோப்பை வாங்கிக்கொண்டாள். "மஞ்சள் பூசிக்கிற வழக்கம் உண்டா" என்று கேட்டான்.

அவள் தலையை ஆட்டியவுடன் உள்ளேயிருந்து ஒரு டப்பா நிறைய கஸ்தூரி மஞ்சள் பொடியை எடுத்துக்கொண்டு வந் தான். "பட்டணத்துலே கந்தசாமி கோயில்கிட்டே வாங்கி னது. தண்ணி போறுமா இல்லை இன்னும் இரண்டு வாளி இரைச்சு ஊத்தட்டுமா" என்று கேட்டான்.

அவளுக்கு உடம்பை என்னவோ செய்தது. தண்ணி வரும் அந்த இடுக்கு வழியாக அவன் அவள் குளிக்கிறதைப் பார்க்க ஆசைப்படறான் போல இருக்கு... என்று நினைத்துக் கொண்டாள்.

"வாண்டாம்...நிறைய தண்ணி இருக்கு-'

அவள் உள்ளேபோய் கொஞ்சம் கொஞ்சமாகக் கதவைச் சாத்தியபடி கதவின் இடைவெளி வழியாக அவனைப் பார்த்தாள்.

உஹும்..ஒரு வேலைக்காரன்-இல்லை ஒரு வேலைக்காரி கேட்கிற மா திரி தண்ணிவேணுமா, மஞ்சள் வேணுமா என்று கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டான்.

வெற்று உடம்பில் சோப்பைக் குழைத்துப் பூசி நுரை வழியும் தன் உடம்பிலே லயித்துப்போனாள். அப்படியொரு நிறம். செந்தாழைபோல ஒரு மஞ்சள் மினுமினுப்பு. வெறும் பழயதுக்கும், எரிச்சக்குழம்புக்குமே இப்படி ஒரு மினுமினுப்பு படர்ந்து கிடந்தது.

தலையைச்சுற்றித் துண்டைக்கட்டிக்கொண்டு, புடவையைச் சுற்றியபடி உள்ளே வந்தாள். கங்கம்மா அவள் கால்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். வாழை மரத்தின் அடித் தண்டுபோல் உறுதியாக, வர்ளிப்பாக இருந்தன. கல்யாணத் தில் இட்டிருந்த நலங்குப்பூச்சு லேசாகக் கலைந்திருந்தது.

” இந்த உள்ள போய்க் கட்டிக்கோ. சுவாமிகிட்டே தட்டில் புதுப்புடவை, ரவிக்கை இருக்கு-”

வெள்ளித்தட்டில் தாமரை வர்ணத்தில் ஜரிகைக்கரை போட்ட புடவை இருந்தது. ரவிக்கை இருந்தது.

நெற்றிக்கு இட்டுக் கொண்டவுடன் திரும்பி சுவாமி படங் களைப்பார்த்தாள். மூக்கில் நத்து சிரிக்க சாரதாம்பிகை நடு நாயகமாய்க் கொலுவிருந்தாள். சந்திரகலை, அக்ஷமாலை, சுவடி ஹே அப்பா! அம்பாளின் கரங்களில் எதுதான் பொருந்த வில்லை. கரும்பு வில்லும், கிளியும், பாசாங்குசமும் எல்லாமே பொருத்தம்தான்.

நெற்றி தரையில்பட விழுந்து நமஸ்கரித்தாள். படத்தில் தொங்கிய சண்பக மாலையைக்கிள்ளி எடுத்து முடிந்த கூந்த லில் தொங்கவிட்டபடி வெளியே வந்தாள்.

துக்க

அந்தத்தெருவின் பெண்கள் ஏதோ தா சாக்கு சாக்குவைத்துக் கொண்டு வந்து வந்து போனார்கள். கங்கம்மாவின்கிட்டே போய் தாழ்ந்தகுரலில் நர்மதாவின் அழகை வர்ணித்தார்கள்.

கூடத்தில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த பட்டப்பாவை ஒருத்தி சீண்டினாள்.

"இன்னிக்கி எங்காத்துல பூக்கற குண்டு மல்லிப் பூவைப் பறிச்சுண்டு வந்து..."

"ஹீ..ஹீ..." என்றான் பட்டப்பா

"வாடி போகலாம். அதுக்கு ஒண்ணும்புரியலை -" என்றாள் இன்னொருத்தி.

"இவனுக்குப் புரிஞ்சர் என்ன புரியாட்டா என்ன? அவ புரியவச்சுட மாட்டா? ஹும் தங்கசிலையாட்டமா அப்படி ஒரு மினு மினுப்புங்கறேன்-”

சாப்பாடு ஆயிற்று. கட்டித்தயிரைஊற்றி கைவழிய சாப்பிட்டு எழுந்தபோது நர்மதாவுக்கு ஊரில்அம்மாவின் நினைவுவந்தது. யார் வீட்டிலோ அடுப்படியில் நாள் பூராவும் வேகு வேகு என்று வெந்து கொண்டிருக்கிறாளே.

பகல் தூக்கத்தில் கனா கூட வந்தது. பட்டப்பா அவளிடம் நெருங்கி வந்து.. அப்பாடா! எப்படி வேர்த்துக்கொட்றது?...