Chapter 7
அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை. தங்கப்பாண்டி தோல்பையைத் தூக்கிக்கொண்டு தென்காசிக்கோ, திருநெல்வேலிக்கோ போய்விட்டார். சிலரை வீடுகளில் போய் பார்த்தால்தான், அவர்களை செளகரியப்படுத்தி தானும் செளகரியமாக முடியும் என்பதை அனுபவத்தால் அறிந்திருந்த அவர், புதிய அனுபவத்தின் பொருளறிய மாட்டாதவராய் பையில் பொருளோடு போய் விட்டார். கணவன் சொல்லாமலே நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்ட ரா சம்மா, பஞ்சாயத்துக் கிணற்றுப் பக்க மாகப் போகும்போது 'எச்சிக்கல நாயுவளுக்கும், இரப்பாளி பய மக்களுக்கும் வாழ்வு வந்திருக்கத பாரு. வேலையில சேருறதுக்கு கை கால பிடிக்கது அப்புறம் அடுத்துக் கெடுக்கது. வாய்க்கரிசி இல்லாத முண்டைவளும், கலாவியா சுத்திக்கிட்டிருந்த பயலுவளும் வாத்தியாரா வந்தா, ஊரு உருப்பட்டாலதான்' என்று ஒவ்வொரு பேச்சுக்கும் முற்றுப்புள்ளி போலவோ அல்லது 'கமா' போலவோ 'து' என்று சொல்லிக்கொண்டே துப்பிக் கொணடு, அவள் பேசியபோது, கிணற்றில் தண்ணிர் எடுத்துக்கொண்டிருந்த சண்முகத்தின் தாய்மாமா பெண் டாட்டி, அவளை மேற்கொண்டும் பேச விட வில்லை. போகவும் விடவில்லை. "சர்க்கார் கொடுக்கிற கோதும மாவ தின்ன கொளுப்புலயாடி பேசுற? ஊர்ச் சோத்த தின்ன பன்னியே! தைரியம் இருந்தா நேருக்கு நேரா பேசேண்டி! ஏண்டி...ஜாடையில பேசுற" என்று சொல்லிவிட்டு தோண்டிப் பட்டை கயிற்றை அவள் கிணற்றில் இருந்து வெளியே இழுத்தபோது, அது எமனுடைய “பாசக்கயிறு மாதிரி ராசம்மாவுக்கு பட்டது.
வாய்க்கரிசி இல்லாத முண்டன்னா, அது தன் மகளைத் தான் என்பதை எளிதாகப் புரிந்துகொண்ட சரஸ்வதியின் அம்மாக்காரி 'இனிமேல், வாய்க்கு அரிசி இல்லாமல் செத்தாலும் சாவோமே தவிர, ஒன் ஊத்த வாய இனி மேலும் பேசவிட மாட்டோம். என்னதான் நினைச்சு கிட்ட?' என்று கத்த, இப்போது எல்லோரும் கத்தினார் கள். அந்தப் பக்கமாக வந்த சில ஆண்கள் தத்தம் மனைவி களை அடக்காமல், ரசித்துக் கொண்டிருந்தார்கள். நேற்று தன் வகுப்புப் பிள்ளைகளிடமும் எட்டாவது வகுப்புப் பிள்ளைகளிடமும் 'ஒங்களுக்குக் கொடுக்க வேண்டிய கோதுமை ரவை, தென்காசில விற்பனை யாவுது. சட்டப்படி தினமும் ஒங்களுக்குச் சாப்பாடு போடணும். எவனாவது எவளாவது ஒங்க வீட்ல இதச் சொல்லியிருக்கீங்களா?...மகாத்மா காந்தி இந்தமாதிரி அநியாயத்தை பொறுத்துக்கிட்டு இருந்திருப்பாரா? பகத்சிங் இப்படிப் பார்த்துகிட்டு இருந்திருப்பானா?" என்று சன முகம் சொல்லியிருந்தான். அதை தந்திரமாக அவன் சொல்லவில்லை. தானாக வந்தது. ஒரு வேளை எஸ்.ஐ.இ.டி கல்லூரி நிகழ்ச்சிகளைப் பத்திரிகைகளில் படித்ததன் தாக்கமாக இருக்கும். அவன் அப்படிச் சொன்னதை வீட்டுக் கணக்காக எடுத்துக்கொண்ட பிள்ளைகளில் ஒரு சிலர் தங்களை காந்தியாகவும், பலர் பகத்சிங்காகவும் நினைத்துக்கொண்டு, தத்தம் வீடுகளில் நடந்ததைச் .ெ ச ல் லி, நடப்பதற்கு அஸ்திவாரம போட்டார்கள். அன்று-திங்கட்கிழமை வந்தது. ஒலித்த பள்ளிக்கூட மணி, தங்கப்பாண்டிக்கும், ஆசிரியர்களுக்கும் வேறு வேறு மாதிரியாகக் கேட்டது. ரயில் தண்டவாளம் மாதிரி, ஒரடி நீளத்தில் விட்டத்தில் கட்டிய கயிற்றில் தொங்கிக் கொண் டிருந்த இரும்புத்துண்டை, சிலேட்டுக் குச்சி மாதிரி இருந்த ஒரு இரும்பால் எக்கி எக்கித் தாக்கி மணியடித்துக்
கொண்டிருந்த ஒரு பயல்கூட, நெடு நேரமாக அடித்தான். கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தன் வீடே வித்தியாசமாகத் தெரிவதுபோல, ஆண்டுக்கணக்காக பழக்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் எல்லோருககும் வித் தியாசமாகத் தெரிந்ததால், ஒருவரை ஒருவர் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டார்கள். தங்கப் பாண்டி, வகுப்புகளுக்குப் போகும் ஆசிரியர்களைப் புதிதாகப் பார்ப்பதுபோல பார்த்தார். எப்போதும், கலக்குபவர் போல் காணப்படும் அவர், அன்று கலங்கியவர்போல் காணப்பட்டார். ஆரம்பத்தில், சண்முகம், டெப்டி இன்ஸ்பெக்டரிடம் நடந்துகொண்ட விதத்தை அவர் சாதகமாகவே எடுத்துக் கொண்டார். அவன்மீது ஆக்ஷன் எடுத்தபிறகு, அந்த ஆக்ஷனுக்கு டெப்டி-இன்ஸ்பெக்டர் மூலம், மாவட்ட கல்வி அதிகாரி யின் 'கன்கரன்ஸ்' கிடைத்துவிடும் என்றுதான் நினைத் தார். ஆனால் டெப்டி வேறுவிதமாக ரியாக்ஷ னைக் காட்டிவிட்டார். எனக்கு. குழி வெட்டுறாங்க ஸார்' என்று, பஸ் நிலையத்தில் தங்கப்பாண்டி சொன்னபோது, 'ஒங்களுக்கு வெட்டுற குழில நான் விழ முடியுமா?’’ என்று டெப்டி சொல்லிவிட்டார். "சரி, இந்த டெப்டி இல்லாட்டா...அவன் அப்பன்..." என்றுதான் தங்கப்பாண்டி நினைத்தார். அதற்காகத்தான் மாவட்ட தலைநகருக்குப் போயிருந்தார். ஆனால் அங்கே கிடைத்த தகவல் அவரைக் கலக்கிவிட்டது. மாரியம்மாள், தங்கப்பாண்டி தன்னை ஜாதியைச் சொல்லித் திட்டிய துடன், சம்பளத்தையும் மோசடி செய்ததாக எழுதிய மனுவின் நகலை, ஆசிரியர் சங்கம், கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறதாம். கவர்னரின் உத்தரவுப்படி மாவட்ட கல்வி அதிகாரி, நேரடி விசாரணைக்கு வரப்போகிறா ராம். சொந்தத் தம்பியான ராஜலிங்கமே, சொந்தமில்லா தவன்போல நடந்து கொள்கிறானாம். ஒருநாள்
மாவட்ட கல்வி அலுவலகத்திற்கே வந்து, 'அந்த ஸ்கூல இழுத்து மூடுனால்தான், பிள்ளிங்க உருப்பட முடியும்' என்று கல்வி அதிகாரியான தன் நண்பரிடம் சொல்லி விட்டானாம். இதுவரை நல்லது கெட்டதுகளை' சரிக்கட்டிக் கொண்டிருந்த தம்பியுடைய அவர், ஆசிரியப் படைக்கு அஞ்சியது இல்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு. அடே...ராஜலிங்கம்...ஒன்னை இடுப்பில எடுத்தவண்டா...நான்...' "எடுத்தவண்டா' என்று நினைத்தபோது, தான் எடுத்துக்கொண்ட மானேஜ்மெண்டும், அவருக்கு நினைவுக்கு வந்தது. முப்பதாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தவர், முதல்நாள் தம்பியிடம் பத்தாயிரத்தை கொடுத்த பிறகு, ஒரு மாதம் கழித்து ஐயாயிரத்தைக் கொடுத்தார் மீதி பதினையாயிரத்தை எப்பண்ணாச்சி தரப் போlய?’ என்று தம்பி பாசத்தோடு கேட்டபோது, 'இனிமேல் ஒனக்கு எதுக்குத் தரணும்? பொதுச் சொத்து ஏலம் போனது முப்பதாயிரத்துக்கு. அதுல எனக்குப் பாதி... ஒனக்குப் பாதி... சரியாய் போயிட்டு' என்று சொன்னது, பலத்த வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. கடைசியில் மேரிபுஷ்பம் 'நீங்க ஸ்கூல் நடத்து றத பாத்துடுறோம்... வீட்ட விட்டு வெளில போங்க... இல்லன்னா... கழுத்தப்பிடித்து...' என்று சொல்லி விட்டாள். தங்கப்பாண்டி, சுழல் நாற்காலியோடு அங்குமிங்கு மாக ஆடிக்கொண்டார். ஆட்டிக்கொண்டார். ஊர்ல வேற, தோளுல கிடக்கிற துண்டை எடுத்து கையில போட்டுக்கிட்டு பேசுற பயலுவக்கூட தங்கப்பாண்டி, நீயும் கொஞ்சம் பாத்து நடக்கணும்; தினமும் போடாட் டாலும் ஒருநாள் விட்டாவது ஒருநாள் பிள்ளிங்களுக்கு சோறு போடாண்டாமா? அதுங்க ஒன் பிள்ளிய மாதுரி. சாப்புடாம...வயிறு "காஞ்சி கிடக்கிற பிள்ளிய...பாத்து
நடப்பான்னு காலையில உபதேசம் செய்யுறாங்க. முன்வnப் வேற கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீட்டுக்கு வந்து, மொதலாளி, எங்க ஜாதிப் பொண்ண பறமுண் டன்னு தங்கப்பாண்டி சொல்லிட்டாராம். நீங்க கேட்டு’ தாறியளா? நாங்களே கேட்கனுமான்னு சேரிக்காரங்க சொல்லு:தாங்கப்பா. விவேகியான நீ இப்டி நடந்துக்கிட லாமான்னு' கேட்கிறான். யாரு? வரிப்பணத்த ரசீதுல காட்டாம, வாயில காட்டுற இந்த முன்ஸிiப். இந்த சண்முகம் பயல் ஊர்முழுக்க பிரச்சாரம் செய்திருக்கான். தலைமை ஆசிரியர், சமயம் தெரியாமல் உள்ளே வந்தார். தங்கப்பாண்டி சீறி விழுந்தார். 'என்ன லார் நீங்க சரஸ்வதி ஒரு வாரம் கணக்கு எழுதாமல் விட்டி ருக்காள். நீங்க செக் பண்ணாண்டாமா? நீங்க வந்த பிறவுதான் இந்தப் பள்ளிக்கூடம் உருப்படியில்லாமப் போயிட்டுது.' தங்கச்சாமிக்கு இன்றைக்குத்தான் கோபம் வந்தது. ஆகையால் அதிகமாக வந்தது. 'சோறு போடாமல போட்டதா எழுதுனதே பெரிய காரியம். அவள் கிட்ட கேட்டுட்டு, எதையாவது வாங்கிக் கட்டிக்கச் சொல்றி யளா?' ' தலைமை ஆசிரியர் மாதிரி நடந்துக்கமாட்டேங் கிறிய, முன்னால இருந்தவரு ஒவ்வொருவர் கண்ணுலயும் விரலை விட்டு ஆட்டுவாரு. ஒங்க கடமையைக்கூட மறந் துடுறிய. எந்த ஆசிரியராவது ஒங்கள மதிக்காங் 35ςη Ι 2 " " தங்கச்சாமி, தங்கப்பாண்டியின் கண்ணில் விரல் விடுவதுபோல் பேசினார். "நீங்க மதிச்சால்லா, அவங்க மதிக்கதுக்கு ஹெட்மாஸ்டரா...ஒங்ககிட்ட மாரடிக்கத வி...நாலு எரும மாட்ட மேய்க்கலாம். எனக்கா கடமை யைப் பற்றி சொல்றீங்க? அப்படிப் பார்த்தால், ஒங்களைக்
கூட நான் வகுப்புக்குப் போகச் சொல்லணும். ஏதோ என் தலவிதி. அப்போ தாலுகா ஆபீஸ்ல கிளார்க்கா சேர்ந் திருந்தால், இந்நேரம் டெப்டி கலெக்டரா ஆகியிருப்பேன். கொள்ளைக்காரன்கிட்ட மாட்டிக்கிட்டேன். எல்லாம் தலவிதி.' தங்கப்பாண்டி, வெளியே வாசல் காப்போனாய் நின்ற தையல்-ஆசிரியன் பெருமாளை, இந்திராவை கூட்டிக் கொண்டுவர கூரைக் கட்டிடத்திற்கு அனுப் பினார். அரை மணி நேரம் கழித்து இந்திரா வந்தாள். எதிரே கிடக்கும் நாற்காலியிலும், சிலசமயம், அவர் உட்கார்ந்திருக்கும் சுழல் நாற்காலிச் சட்டத்திலும், அவர் சொல்லாமலே உட்காரும் இந்திரா, அவர் முன்னால் வந்து 'எதுக்கு ஸார் கூப்பிட்டீங்க?' என்றாள். தங்கப்பாண்டி அசந்துவிட்டார். பிறகு, தன்னை சமாதானப் படுத்திக்கொண்டே 'நீ ஏன்...கவலப்படுற? இத்தப் பயலுவ எம மாத்திரம்?' என்று சொன்னபோது, இந்திரா நீங்க மட்டும் எம்மாத்திரம்?' என்பது மாதிரி அவரைப் பார்த்தாள். அதை ஏக்கப் பார்வையாக நினைத் துக்கொண்டு, தங்கப்பாண்டி. அவள் தோளைத் தொடுவ தற்காக எழுந்தபோது, இந்திரா வாசல் பக்கமாகப் போய் நின்றுகொண்டாள். பிறகு அமைதியாகப் பேசினாள் 'ஸார் இனிமேல் நான் மானத்தோட வாழனுமுன்னு நினைக்கேன். ஒருத்தருக்கு ஒரு தடவ மானம் போயிட்டாலும், அப்புறம் அவருக்கு மானமே இல்லன்னு ஆயிடாதுன்னு சண்முகம் தம்பி. தெய்வம் மாதிரி தெரிய லச்சிட்டான். பழகுன தோஷத்துல நீங்சளும் திருந்தணுமுன்னு ஆசப்படுறேன். சரி...நான் வாரேன் ஸ்ார்...' இந்திரா போய்விட்டாள். தங்கப்பாண்டி, முண்டமாக விரும்பாதவர்போல், தலையைப் பிடித்துக் கொண்டார். வகுப்புக்களில் கூட்டு எண்களின் பெருக்குத் தொகை,
குறுக்கு எண்களின் பெருக்குத் தொகைக்குச் சமம்...' என்று சரஸ்வதி சொல்வதும், "ஏ... பத்தே... ஒன்னை பிடுங்காமல் விடமாட்டேன்' என்று சீனிவாசன் வகுப்புப் பையன்கள் கத்துவதும், அவர் காதுகளைக் குத்தின. 'அம்பிகாபதி-அமராவதி காதல் தோற்கக் காரண மென்ன" என்று வேலாயுதம் சத்தம் போட்டுச் சொல் வதும் அவருக்கு உறைத்தது. இண்டர்வெல் மணி அடித்தது. கூரைக் கட்டிடத்தை எட்டிப் பார்த்தார் சரஸ்வதியும், சண்முகமும் சிரித்துப் பேசிக்கொண்டிருக் கிறார்கள். இந்திரா, அந்த ஜோடியையும், அவர்கள் பேச்சையும் ரசிப்பதுபோல், உதடு பிரிய, முகம் குழைய நிற்கிறாள். தங்கப்பாண்டி, நேற்று 'டவுனுக்கு’ப் போய்க் கொண்டுவந்திருந்த காகிதத்தை லதர் பேக்கில் இருந்து எடுத்தார். இரு தடவை படித்துக்கொண்டார். பிறகு, தையல் ஆசிரியன் மூலம் சண்முகத்தைக் கூப்பிட்டனுப்பி னார். சண்முகம் வந்தான். சாந்தமாகவே வந்தான் "உட்காருங்க சண்முகம்.' 'பரவாயில்ல... சொல்லுங்க ஸார்.' 'ஒங்ககிட்ட இருக்குற எஸ்.எஸ்.எல்.சி. சர் டிபிக்கட் பொய் சர்டிபிக்கட்டாம். டி.இ ஒ.வுக்கு எவனோ எழுதிப் போட்டிருக்கான். இதை விசாரிக்கும்படி டெப்டி-இன்ஸ் பெக்டர் எனக்கு அனுப்பி இருக்கார், ஒங்க எஸ்.எஸ். எல்.சி. சர்டிபிக்கட்டை கொண்டு வந்து காட்டுறீங்களா? தொந்தரவுக்கு மன்னிக்கணும்.' அந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும், எல்லா ஆசிரியர்களுடைய சர்டிபிக்கேட்டுகளும் தங்கப்பாண்டி யிடம் உள்ளன. வேலையில் சேரும்போதே, அவர்களின 'சர்டிபிக்கேட் பற்களை பிடுங்கி வைத்திருப்பவர் அவர் . வேலையில் சேரும்போது சராசரி இளைஞனுக்குரிய
அப்பாவித்தனத்தில் இருந்த சண்முகம், 'மாமா செக் பண்ணுவதற்காக எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிக்கட்டையும் டி.எஸ் எல் சி. சர்டிபிகேட்டையும் கொடுத்தான். பிறகு அவர் கொடுக்கவில்லை. ஒரு தடவை அவன் கேட்ட போது 'ஒங்ககிட்ட இருந்தான்ன, என்கிட்ட இருந் தான்ன? இன்கிரிமென்ட், அது இதுன்னு ஆயிரம் வரும். உடனேயே டெ ப்டி-இன்ஸ்பெக்டர்கிட்ட காட்டணும். அதுக்குத்தான் வச்சிருக்கேன். மாப்பிள்ளைக்கு நம்பிக்கை இல்ல போலுக்கு. ஏல... பெருமாளு... வீட்ல போயி’’ என்று அவர் சொன்னபோது 'பரவாயில்ல மாமா...' என்று சண்முகம் திருப்பிச் சொல்லிவிட்டான். தங்கப்பாண்டி இப்போது கிண்டலாகப் பேசினார். 'என்ன சண்முகம் ஸார்... சர்டிபிக்கட்டை கொண்டு வாlங்களா? நான் டெப்டி இன்ஸ்பெக்டருக்கு இன்னைக்கே இதை அனுப்பி வைக்கணும்.' சண்முகம், இன்னும் அவரையே பார்த்தான். தங்கப் பாண்டி, மினுக்காகச் சிரித்து, தளுக்காகப் பேசினார். 'இப்போகூட ஒங்களுக்கு சான்ஸ் கொடுக்கேன் என் வம்புக்கு வரமாட்டேன்னு ஒரு வாக்கு கொடுத்திங்கன்னா போதும் சண்முகம், அவர்மீது கண்களை ஊடுருவ விட்டான். 'டவுனில் ஆசிரியர் தலைவர் மொதல்ல ஒங்கள உதைக் கணும்யா என்று சொன்ன வார்த்தை, நெஞ்சில் உதைத்தது. பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் சொன்ன லெனின், அவன் எதிரே நின்று சிரித்தார் மாணவர்களுக்கு அவன் சொல்லிக் கொடுத்த பகத்சிங் முன்னால் வந்து நிறைான். பல்லைக் கடித்துக்கொண்டு கைகளை அடக்கிக்கொண்டான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன்போல், 'நானும் அதைத்தான் சொல்றேன் இப்போகூட ஒங்களுக்கு சான்ஸ் கொடுக்கோம். நீங்க திருந்துறதாய் இருந்தால்...' என்றான்.
'திருந்துறதுன்னா... நான் என்ன திருடனா? 'ஆசிரியர்கள் சம்பளத்துல கமிஷன் பிடிக்க றதும், அப்பாய்மெண்டுக்கு ஐயாயிரம் ரூபாய் வாங்குறதும், சேமிப்பு நிதிப் பணத்தை இரண்டு வருஷமா போஸ்ட் ஆபீஸ்ல போடாமல் இருக்கதும், மாணவர்கள் வயித்துல அடிக்கிறதும் திருடன் செய்யுற காரியமில்ல...திருடன் மனுஷன் , ' தங்கப்பாண்டி விறைப்பாக உட்கார்ந்தார். சரி... ஒங்க எஸ் எஸ்.எல்.சி. சர்டிபிக்கேட்டை எடுத்துட்டு வாரீங்களா... நான் இன்னைக்கே இதை அனுப்பணும்.' 'யார்... யாரை அனுப்பப் போறாங்க என்கிறது. முடிவாகிற காலம் நெருங்கிக்கிட்டு இருக்கு.' தங்கப்பாண்டி எழுத்து நின்று ஆவேசமாகப் பேசினார். இந்தா பாரு... சண்முகம்... என் சர்வீஸும், ஒன் வயசும் ஒண்ணு. ஒன்னை மாதிரி எத்தனை பேர பாத்திருப்பேன். நீ எம்மாத்திரம்? பதினைஞ்சி வருஷத் துக்கு முன்னால, ஒன்னை மாதிரி ஒருவன் சட்டம் பேசி ஊர் ல ஆள் திரட்டினான். ஊாக்காரங்களும் அவன் பேச்சைக் கேட்டு போட்டிப் பள்ளிக்கூடம் ஆரம்பிச் சாங்க. நான் போலீஸை ஊருக்குக் கொண்டு வந்தேன். இருபது இருபத்தைஞ்சு பேர போலீஸ் மூலம் பைண்ட் ஒவர்ல" போட்டேன். வாராவாரம் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ரிப்போர்ட் பண்ணுறதுக்காக நடந்த நடையில, ஒவ்வொருவனும் கடைசியில் என் காலுல வந்து விழுந்தான். நீங்க என்ன செய்தாலும் சரின்னு காலுல விமுத்தாங்க. இது நீ சின்னப் பிள்ளையாய் இருக்கும் போது நடந்த சங்கதி. கேள்விப்பட்டிருப்பே இன் னொண்ணு தெரியுமா? எவன்... ஊர் ஜனங்கள தூண்டி விட்டானோ அவனே அப்புறம் ப ஞ் சா ய த் து த் தலைவராகி, இப்போ மச்சான்... யூனியன் எலெக்ஷன்ல நிக்கப் போறேன். ஒங்க ஆதரவு வேணுமுன்னு’ என் வீட்டுக்கு நடையாய் நடக்கான்.'
சண்முகம் நிதானமாகப் பதிலளித்தான். "தனி மனிதன் நடையைவிட சரித்திரத்தோட நடை தனிநடை ஸ்ார். அது எவரையும் சாராமல் தனக்குத்தானே நடை போடும். அப்படி நடைபோடுவதற்கான பாகையை அமைக்க, அந்த சரித்திரமே தக்க சமயத்தில் தக்க ஆட்கள தேர்ந்தெடுக்கும்; இதை மறந்துடாதீங்க." 'சரி சண்முகம் ஸார்! ஒங்க சரித்திரத்த இந்த சின்னப் பள்ளிக்கூடம் தாங்காது. சர்டிபிக்கட்ட கொண்டு வாlங்களா... ஏதோ இந்த சின்ன இடத்தில சரித்திரம் துவங்குறதாய் நினைப்பு இல்லாம சீக்கிரமாய் கொண்டு வாங்க. சரித்திரம், பொல்லாத சரித்திரம்.' 'ஒங்கள மாதுரி ஆசாமிக்கு சரித்திரம் பொல்லாதது தான் ஸார் . வீட்ல துவங்குற சரித்திரம் உலகத்துல படர்வதும், உலகத்துல துவங்குகிற சரித்திரம் வீட்டில முடியறதும் இயற்கை. இதுக்கு நீங்களோ, நானோ தப்ப முடியாது...' 'யாரு தப்ப முடியாதுங்கறது பாத்துடலாம். சரி... சர்டிபிக்கேட் கொண்டு வரப் போlங்களா இல்லையா?" 'அந்த புகார் மனுவை என்கிட்ட கொடுங்க. சும்மா கொடுங்க. நான் பேப்பர கிழிக்கிற ஆளுல்ல. அதுலயே என் பதிலையும் எழுதிடுவேன்.' தங்கப்பாண்டி, சந்தேகத்துடன்தான் புகார் மனுவை அவனிடம் நீட்டினார். அவன், அதை கிழிக்கப்போனால் தடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கைகளையும் படகோட்டி மாதிரி வைத்துக்கொண்டார். சண்முகம் அவருக்கு எதிரே கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு, மடமடவென்று எழுதினான். என்ன எழுத வேண்டும் என்று ஏற்கெனவே மனதில் வரித்திருந்ததால், வரிக்குவரி யோசிக்காமலே எழுதினான். எழுதிவிட்டு
கையெழுத்தையும், தேதியையும் போட்டுவிட்டு, தங்கப் பாண்டியை நோக்கி, பெருவிரலை வில்லாகவும், ஆள் காட்டி விரலை அம்பாகவும் வைத்து, மனுவை அலட்சிய மாக சுண்டிவிட்டுவிட்டு, வெளியேறிவிட்டான் கூரைக் கட்டிடம் அதிரும்படி ஹிட்லர் கேட்டால்லா, இந்த ஆளு கேக்கதுக்கு' என்ற வார்த்தை, தங்கப்பாண்டிக்கு நன்றாகக் கேட்டது. அவன் எழுதியதைப் பார்த்தார். கொஞ்சம் அசந்துவிட்டார். டெப்டி-இன்ஸ்பெக்டரின் ஆதரவோடு இந்த புகார் மனு வந்திருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும், தன் சர்டி பிக்கேட் மானேஜரிடமே இருப்பதாகவும், இப்போது நம்பிக்கை மோசடி செய்யும் மானேஜர்மீது போலீஸில் புகார் செய்யுவும், சட்டப்படி இதர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட கல்வி அதிகாரி தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்கிடையில் சர் டிபிக்கட்டைப்பற்றி அறிய வேண்டுமானால், தான் படித்த உயர்நிலைப்பள்ளியில் போய் விசாரித்துக் கொள்ளும்படி "பணிவன்புடன் கேட்டுக் கொள்வ தாகவும் அவன் எழுதியிருந்தான். தங்கப்பாண்டி, தன்னம்பிக்கையோடு சிரித்துக்கொண் டார். 'பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாது என்கிறதை நிருபிச்சுட்டான். அனுபவத்துக்கு, அறிவு ஈடாகாது என்பதைக் காட்டிட்டான். டெபுடி-இன்ஸ்பெக்டரையும் சேர்த்து இழுத்திருப்பதால், மேலதிகாரிகள் டிபார்ட் மெண்ட் விவகாரமாய் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் நியாயத்தை விட்டுக் கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிர, டிபார்ட்மெண்டை விட்டுக் கொடுக்கமாட்டார் கள். மாட்டிக்கிட்டான். இசகு பிசகா மாட்டிக் கிட்டான். தங்கப்பாண்டி தையல்-ஆசிரியனைக் கூப்பிட்டு, இடையிலே கார்பன் வைத்த இரண்டு பேப்பர் "லெட் டை" ரெடி பண்ணச் சொன்னார். அந்தப் பையன்
சாவகாசமாக பேப்பரைத் தேடியபோது, "அதோ பேப்பர் இருக்கது தெரியல எருமமாடு. ஒன்னைப்போய் தையல் வாத்தியனாய் போட்டேன் பாரு. சீக்கிரமா ரெடி பண்ணு' என்றார். அவன் 'ரெடி செய்ததும் 'கதவ மூடிட்டு வெளிலயே நில்லு. எவனையும் உள்ளேவிடாதே' என்றார். 'பல தையல்களை ஏற்பாடு செய்யும் அந்த ஆசிரியன், ஒன்றும் புரியாமல் கதவை மூடினான். கூரைக் கட்டிடத்தில் இருந்த ஆசிரியர்களும், காரைக் கட்டிட ஆசிரியர்களும், சண்முகத்தை மொய்த்துக் கொண்டார்கள். அவர்களிடம், அவன் நடந்ததை விளக்கி னான் சீனிவாசன், 'இவனை விடப்படாது.டா. சண்டாளப் பய! காலா காலத்துல சம்பளத்த தராததுனால என் மகளை அனுப்ப முடியாமப் போய் கடைசில, அவளைக் கட்டுன காவாலிப்'பயல் இனிமேல் ஒப்பன் வீட்லயே இருந்துக்க. ஒருவேள்ை ஊர்ல, வேற இன்ட்ரஸ்ட் ஏதா வது இருக்கு'முன்னு பொடி வச்சி எழுதியிருக்கான். என் மகள் நல்லாச் சாப்பிட்டு நாலு நாளு ஆவுது. இந்தப் பயல பொடிப்பொடியாய் ஆக்காமல் விடப்படாது' என்றார். சரஸ்வதி, சண்முகத்தை பயத்தோடும், பரிதாபத்தோடும் பார்த்தாள். என்ன நடக்குமோ...ஏது நடக்குமோ... திடீரென்று ஆறாவது வகுப்பில் சரஸ்வதி அழும் சத்தங் கேட்டது. பிள்ளைகளின் கூச்சலையும் மீறி அவள் கூப்பாடு போட்டாள். அய்யோ, நேத்துதான் எங்கப்பாவை இவ்வளவு நாளும் மரம் வெட்டுனது போதும், இனிமேல் நான் சம்பளம் வாங்குநத நினைக்காமல் வேலைக்குப் போனிங் கன்னா, நான் வேலைக்குப் போகமாட்டே'ன்னு சொன் னேன். சொன்னபடியே ஆயிட்டுதே...ஆயிட்டுதே...'
என்று அரற்றினாள். அவள் கையில் இருந்த காகிதத்தில் கண்ணிர்த் துளிகள் தெறித்துச் சிதறின. சண்முகம் அந்தக் காகிதத்தை வாங்கிப் படித்தான். "ஆசிரியை சரஸ்வதிக்கு, தங்களின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குடும்ப சூழ்நிலையின் காரணமாக, பதவி விலகுவதாக தாங்கள் குறிப்பிட்ட காரணம், நன்கு ஆய்வு செய்யப்பட்டு, தங்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாகிவிட்டது. ஆகை யால் நாளையிலிருந்து தாங்கள் வேலைக்கு வரவேண்டிய தில்லை. உங்களின் சேவைக்கு, பள்ளி நிர்வர்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது' என்று உத்தரவு கூறியது. எல்லா ஆசிரியர்களும் பிரமித்து நின்றார்கள். ஒவ் வொருவரும், தங்களுக்கும் சிறிது நேரத்தில் இதே மாதிரி யான ஒலை வரலாம் என்று தங்கப்பாசண்டியின் அறை யைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். சரஸ்வதி அழுகையை நிறுத்தவில்லை. சண்முகம் அசந்துவிட்டான். அவள் அழுகைக்கு தானும் ஒரு காரணம் என்பதுபோல் உதட்டைக் கடித்துக்கொண்டான். ஒருநிமிட நேரந்தான். சரஸ்வதி, ஆசிரியை கனகத்தின் தோளில் சாய்ந்துகொண் டாள். மயங்கி விழுந்துவிடுவாளோ என்று சொல்லும் அளவிற்கு, அவள் கண்கள் நிலைகுத்தி நிற்பவைபோல வெறித்து நின்றன. கை கால்கள், பக்கவாத நோயாளி மாதிரி ஆடின படித்த படிப்பு. பெற்ற பயிற்சி, வாங்கிய சம்பளம், அனைத்தும் இனிமேல் நீர்மேல் எழுத்தாய் போனதுபோல், அவள் கன்னங்களில் நீர் பெருக்கெடுத்து, மோவாயில் வந்து சங்கமமாயின. இனிமேல் எப்போது வேலை கிடைக்கும் என்று நினைப்பவள் போல் மோவாயை நிமிர்த்தியவள், எப்பவுமே கிடைக்காது என்பதுபோல் தலையை, அங்குமிங்குமாக ஆட்டினாள். சண்முகத்தைப் பார்த்து, 'அ ந் த க் காகிதத்தைக் கொடுங்க. நான் ஆசிரியையா வேலை பார்க்கத் தகுதி
யுள்ளவள் என்கிறதுக்கு அதுதான் எனக்கு சர்டிபிக்கட். அந்தப் பாவி என் சர்டிபிக்கட்ட தரமாட்டான்' என்று கத்திக்கொண்டே, அவள் சண்முகத்திடமிருந்த காகிதத் தைப் பற்றப்போனாள். இதற்குள், சரஸ்வதியின் சித்தி மகன்-எட்டாவது வகுப்பு படிக்கும் ஒரு பையன் பெரியம்மா மகள் அழுவ தற்கான காரணத்தை யூகித்துக்கொண்டு, வெளியே ஒடினான். ஆசிரியர் சீனிவாசனும், கிட்டத்தட்ட ஒப்பாரி வைத்தார். 'வேலையில் சேரும்போதே ராஜினாமா லட்டர் வாங்கி வச்சுக்கிட்டான். நான் கூட மூணு தடவ ராஜினாமா லட்டர் கொடுத்திருக்கேன். மொதல்ல எழுதுன பேப்பர் கசங்கி பழுக்கும்போது ரெண்டாவதா வாங்கிக்குவான். இங்க இருக்கிற எல்லார் கிட்டயுமே ராஜினாமா லட்டர்கள வாங்கி வச்சிருக்கான். யார் யாருக்கெல்லாம் எப்பப்போ ஒல வரப்போவுதோ?' அழுவதற்கு ஆயத்தம் செய்கிறவள் போல் நின்ற ஆசிரியை கனகம் அரற்றினாள். நர்சிங் ஹோமுல சேர்ந்து வயித்துக் கட்டிய ஆபரேஷன் பண்ணணுமுன்னு நினைச்சேன். இந்த எழவெடுப்பான் அதுக்குள்ள வயிததுல அடிப்பான் போலுக்கே.' சண்முகம், சரஸ்வதியின் கரங்கள் இரண்டையும் அனிச்சையாகப் பற்றிக்கொண்டு ஏன் அழகுற? அவன் போயிடுன்னா போவதற்கு நாம் என்ன கிள்ளுக் கீரையா? அழா தம்மா! நாங்க இந்தப் பள்ளிக்கூடத்துல இருக்கது வரைக்கும் நீயும் இருக்கப்போறே!' என்று சொன்ன போது, சரஸ்வதி ஒரளவு நம்பிக்கைப் பட்டவள் போல கண்ணிரைத் துடைத்துக்கொண்டு, இழந்ததாக நினைத்தது இழப்பாக ஆகாது என்று நினைத்தவளாய் அழவும் முடியாமல், அனைவரையும் பார்த்துவிட்டு, பிறகு சண்முகத்தை சோகமாகப் புன்னகைத்துக் கொண்டே பார்த்த போது
ஏட்டளவில் தையல் ஆசிரியனாக வேலை பார்க்கும் பையன், இன்னொரு கடிதத்தைக் கொண்டு வந்து, சண்முகத்திடம் கொடுத்தான். சண்முகம், அவன் கொண்டு வந்த ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு கடிதததை வாங்கிவிட்டு, கடித உறையில் இருந்து கடிதத்தைப் பி ரி த் து எல்லோருக்கும் கேட்கும்படி படித்த ன்: 'நீங்கள், தக்க காரணத்திற்காகக் கேட்கப்பட்ட எஸ் எஸ்.எல்.சி. சர்டிபிக்கட்டை காட்ட மறுத்ததுடன், மேலதிகாரியையும் நிர்வாகியையும், சம்பந்தமில்லாமல், சம்பந்தப்படுத்தியிருப்பதால், உங்கள் சர்டிபிக்கட்டில் வில்லங்கம் இருப்பதால் தான் நீங்கள் அதைக் காட்டாமல் மழுபபுகிறீர்கள் என்று அனுமானிக்கப் படுகிறது. ஆகையால் முழு விசாரணை முடியும் வரை, உங்களைத் தாற்காலிக பதவி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறது. விசாரணை முடிவது வரைக்கும், இந்த ஊரிலேயே இருக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது ' எல்லோரும், அவனால் காக்கப்படுபவர்கள் போல வும், அவனைக் காக்கப் போகிறவர்கள் போலவும் பார்த் தார்கள் சண்முகம் சிரித்துக் கொண்டான். தலையை முன்னும் பின்னுமாக ஆட்டிக் கொண்டான். ' இனிமேல் நாம் பொறுத்தால், நமக்கு இந்த பிள்ளங்களுக்கு மகாத்மா காந்தியைப் பற்றியோ, பகத்சிங்கைப் பற்றியோ சொலலிக் கொடுக்க அருகதை கிடையாது' என்றான். 'வாங்க, அவன் கையக் கால ஒடிக்கலாம். நானே ஒடிக்கேன்' என்றான் வேலாயுதம். 'வாங்க பாத்துப்புடலாம்' என்றார் சீனிவாசன். நானும் வாரேன் என்றார் தலைமை ஆசிரியர்.
பதினாறு ஆசிரியர்களில் ஆசிரிய-மச்சான் கோவிந் தனைத் தவிர, தலைமை ஆசிரியர் உட்பட எல்லோரும், மானேஜர் அறையைப் பார்த்துப் போகப் போனார்கள். கோவிந்தன் ஏதோ பேசப் போனார். வேலாயுதம் அவர் சட்டையைப் பிடித்து உலுக்கியதில், அப்படியே உட்கார்ந்துவிட்டார். அப்போது, சரஸ்வதியின் அப்பா பொன்னையாவும், அவள் அம்மாவும், மானேஜர் அறைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பேசி முடியட்டும் அல்லது முடிக்கட்டும் என்பதுபோல, ஆசிரியர்கள் புறப் பட்ட இடத்திலேயே நின்றார்கள். பொன்னையாவும் அவர் மனைவியும் மாறி மாறி மன்றாடுவது, ஆசிரியர் களுக்கு நன்றாகக் கேட்டது. 'தங்கப்பாண்டி, ஒன் தாத்தா காலத்துல இருந்தே ஒங்க வீட்ல நாயா உழைச்சவன் நான். ஒன்னை இடுப்புல எடுத்தவன். சின்னப் பய மவள் , சின்னத்தனமா நடந்து கிட்டா, நீயே அவள கன்னத்துல ரெண்டு போட்டிருக் கலாம். ஆனால் இப்படிப் பண்ணலாமா ராஜா? நம்பி எழுதிக் கொடுத்த காகிதத்துல, நம்பிக்கை மோசடி பண்ணலாமா? அப்படி பண்ணுறதாய் இருந்தால், நான் எத்தன தடவ பண்ணியிருக்கலாம்? ஒரு தடவ ஒன் வீட்டு பீரோவுல கத்தை கத்தையா ரூபா நோட்டு மின்னிச்சுது. ராத்திரி வேள. ராசம்மா பீரோவ பூட்ட மறந்துட்டுப் போயிட்டா. நான், அவ வாரது வரைக்கும் நாய் மாதுரி காவலுக்கு இருந்தவன். ஒனக்கு பள்ளிக்கூடத்துக்கு எத்தன தடவ சோறு சுமந்துகிட்டு வந்திருப்பேன். என் சோற்றுல மண்ண அள்ளிப் போடலாமா மவராசா? தங்கப்பாண்டி அலட்சியமாகப் பேசினார். 'நீங்களும் கூட்டுக் கள்ளங்க யாரக் கேட்டு மாரியம்மாளை கொண்டுவிடப் போனியரு? என் வீட்டுக்கு தண்ணி எடுக்க வர முடியாத அளவுக்கு ஒம்ம மகள் பெரியவளா ஆயிட்டா என்ன? என் பெண்டாட்டிய எதிர்த்துப் பேசுற அளவுக்கு, நீங்க தயாராகிக்கிட்டீங்க. நான் சொல்லுற
மாப்பிள்ளையை உதறுற அளவுக்கு திமிறு வந்துட்டு என்ன? பே ச | ம போங்க. இது முடிஞ்சிபோன சமாச்சாரம்.' 'தங்கப்பாண்டி! அப்படில்லாம் பேசப்படாது. ஒன் கா லுல வேணுமுன்னாலும்...' ஆசிரியர்களோடு நின்ற சரஸ்வதியால், மேற் கொண்டு நடக்கப்போவதை கற்பனை செய்துகொண்டு அங்கேயே நிற்க முடியவில்லை. மானேஜர் அறையை நோக்கிப் போனாள். வாசலுக்கு வெளியே நின்று கொண்டே கத்தினாள். அப்பா...எவன் காலுலயும் விழாண்டாம். அவன் ஒம்ம காலுல விழப்போற காலம் வந்துட்டு. நீங்க வீட்டுக்குப் போங்க. மொதல்ல வெளிய வாங்க. வாங்கப்பா...வாம்மா..." தங்கப்பாண்டி கொஞ்சம் வார்த்தையை விட்டுட் டார். 'பாத்தியா, அவன் இவன்னு பேசுறத? தேவடியா முண்டைக்கு வாயப் பாத்தியனா' - 'அவன்' என்று சொன்னதுக்காக, மகளை அடிக்கப் புறப்பட்ட பொன்னையாவுக்கு யாரை அடிக்கிறோம் என்று தெரியவில்லை. எத்தனையோ பனைமரங்களை ஒரே ஒரு கோடாரியால், தன்னந் தனியாகச் சாய்த்த அந்த மனிதர், தனக்கு எதுவும் தெரியாமலே, தங்கப் பாண்டியின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, மேஜையில் போட்டார். குப்புறப் புரண்ட தங்கப்பாண்டி தலையை நிமிர்த்தியபோது, அதை முடியோடு சேர்த்துப் பிடித்து மேஜையில் மோதினார். தங்கப்பாண்டி 'அய்யோ... அய்யோ' என்று கத்தினார். மனைவிக்காரி புருஷனைப் பிடித்து இழுத்தாள். தப்பை உணர்ந்தவர்போல், பொன்னையா தங்கப்பாண்டியை விட்டுவிட்டு, தன்னை நம்பாதவர்போல் சிறிது விலகி நின்றுகொண்டு 'யாரப் பாத்துல தேவடியா முண்டன்ன? ஒன் வீட்டு சங்கதிய நான் சொல்லட்டுமாடா? செத்தாலும் சொல்ல
மாட்டேன். ஒரு வீட்ல அந்யோன்யமாய் பழகிட்டு அந்த வீட்ல நடக்கிற விஷயங்கள வெளில சொல்லுத அயோக்யத்தனத்த எப்பவும் செய்யாதவன். என் மவளப் பாத்தா தேவடியா முண்டங்கற? இதவிட நீ... ஒன் அம்மாவச் சொல்லியிருக்கலாம்...’’ என்று இரைந்த போது, ஆசிரிய-ஆசிரியைகளும், அத்தனை பிள்ளைகளும் அங்கே வந்துவிட்டார்கள். சரஸ்வதி, அப்பாவைப் போய்ப் பிடித்துக்கொண்டாள். சண்முகம், சத்தம் போட்டுச் சொன்னது அந்த அமளி யில் லேசாகத்தான் கேட்டது. 'பொன்னையா மாமா, நீங்களும், அத்தையும் மொதல்ல வெளியே போங்க உம் போங்க...' பொன்னையாவும், அவர் மனைவியும் வெளியே போய், மைதானத்தில் நின்றுகொண்டார்கள். சண்முகம் தங்கப்பாண்டியைப் பார்த்து கர்ஜித்தான். 'தங்கப் பாண்டி லார், ஒங்க காலம் முடிஞ்சு எங்க காலம் துவங் கிட்டுது. எங்களோட சர்டிபிக்கட்டுங்களையும் கொடுத் துட்டு, எங்களுக்கு கொடுத்த லட்டரையும் வாபஸ் வாங்கிட்டு, இதர ஊழல் சமாசாரத்துக்கும் நீங்க பிராய சித்தம் செய்யும் முன்னால், ஒங்கள...சீ...ஒனக்கெதுக்கு மரியாதை? ஒன்னை...இந்த அறையை விட்டு வெளில விடப்போறதுல்ல அப்படிப் போவதாய் இருந்தால், எங்கள பிணமாக்கிட்டுத்தான் நீ போக முடியும்...' எல்லா ஆசிரியர்களும், மானேஜர் அறையின் வாசலை மறைத்துக் கொண்டார்கள். நிலைப்படியில் நினறு கொண்டு, குறுக்கும் நெடுக்குமாக வேயப்பட்ட வேலிக் கம்புகள் மாதிரி நின்றார்கள். அந்த மனித வேலி வாசல் முழுவதையும் அடைத்தது. ஒவ்வொருவர் அடிவயிற்றிலும் பற்றிக் கொண்டிருந்த நெருப்பு. நெஞ்சிலே தணலாகி, கண்ணிலே ஒளியாகி, "ஒன்னை விடமாட்டோம்விடமாட்டோம்” என்ற ஒலியாகி, தங்கப்பாண்டியைச்
கட்டது. அவர் கண்களை மூடவைத்தது. காதுகளை நேராக வைத்தது. என்ன நடந்தது என்பதை முழுவதும் யூகிக்க முடியவில்லையானாலும், ஆசிரியர்கள் இப்படி நடக்கவேண்டுமானால், மானேஜர் எப்படியோ நடந் திருப்பார் என்பதை உணர்ந்ததுபோல, பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவியர், வேலியில் படர்ந்த செடி கொடிகள் மாதிரி ஆசிரியர்களை நெருங்கி நின்று கொண்டார்கள். சிலர், தேர்தல் காலத்தில் பாதிப்புக்கு உட்பட்டவர்களாய், 'மானேஜர் ஒழிக... ஆசிரியர்கள் வாழ்க...' என்றுகூட தம்பமுடியாதபடி முழக்க மிட்டார்கள். இன்னும் சில பிள்ளைகள், தத்தம் வீடுகளுக்கு ஒடினார்கள்-பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லி மானேஜரை கொல்லும்படி சொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களாய், சிலர் தங்கப்பாண்டியை ஆஷ் துரையாகவும், சண்முகத்தை வாஞ்சிநாதனாகவும் கற்பனை செய்தனர். 'ஏன்...ஸ்ார்...சட் டுன்னு சுட மாட்டங்கார்...' எவ்வளவு பெரியவனையும் முதலில் ஒரு போடு' போட்டுவிட்டால், அவன் அவுட்டு' என்பதற்கு.விளக்கம் போல் ஏற்கெனவே பொன்னையா கொடுத்த அடியில், அதிர்ந்துபோன தங்கப்பாண்டி , சுழல்நாற்காலியில் அப் படியே உட்கார்ந்திருந்தார். அந்த நாற்காலி இப்போது ஆட வில்லை, அசையவில்லை. தனித்தனியாகக் கிடக்கும் ஆசிரியக் குச்சிகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒடித்து விடலாம் என்று நினைத்தவர், இப்போது அந்தக் குச்சி கள், ஒன்றோடு ஒன்றாகி, தோழமைப் பத்தமென்ற கயிற் றால் ஒடிக்க முடியாத விறகுக்கட்டாக மாறிவிட்டதைப் புரிந்துகொண்டவர் போல் பார்த்தார். தானே தனியொரு குச்சியாகப் போனவர்போல் தவித்தார். உயிரோடயே சமாதியானது போல், அந்த அறையை அங்குமிங்குமாகப் பார்த்தார். ஒருவேளை நமக்குள் பைத்தியம் பிடித்திருக் குமோ? அ த ண | ல தா ன் கண்ணுக்கு இப்படித்
தெரியுதோ?' என்று நினைப்பவர்போல் வழிமறித்து நின்ற வழிகாட்டிகளை நம்பாதது போல் பார்த்தார். இருந்தாலும் அவருக்கு ஒரு நப்பாசை. பங்காளிகள் வரலாம். எவராவது போலீஸுக்குச் சொல்லலாம். அவரது எண்ணத்தை யூகித்தது போல், சண்முகம் மீண்டும் கர்ஜித்தான்: 'பழைய காலமில்ல ஸார்! ஒங்களுக்கு ஆதரவாய் யார் வந்தாலும் சரி, எங்களை வீழ்த்திட்டுத்தான் ஒங்கள மீட்கலாம். நீங்க எங்க கோரிக்கைக்கு இணங்குமுன்னால, ஒங்கள விடப்போற துல்ல. என்ன நடந்தாலும் சரி...எப்படி நடந்தாலும் சரி... ஒங்களுக்கு அதிகாரிங்கன்னா, எங்களுக்கு ஆசிரியர் கூட்டணி இருக்கு ஊர் இருக்கு." புலியைச் சுற்றி வளைத்து வீழ்த்தும் காட்டு நாய் கூட்டம் மாதிரி, ஆசிரியர்கள் வழியடைத்து நின்றார்கள். தாங்கள் சொல்லிக் கொடுத்த வரலாற்றுப் பாடங்களுக் குத் தாங்களே பரீட்சை எழுதத் தீர்மானித்தவர்களாய்த் தோன்றினார்கள். அக்கிரமக்காரனுக்கு, முடிவும் அக் கிரம ரூபத்தில்தான் வரும் என்று ஹிட்லரையும், முசோலினியையும், உதாரணமாகக் காட்டி, மாணவர் களுக்கு பாடம் போதித்தவர்கள், உள்ளூர் பருத்தியின் மூலம் உலகச் சமாச்சாரங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற பேஸிக் பயிற்சியை நினைத்தவர் களாய், அந்த ஆசிரியர்கள் இப்போது உள்ளுர்’ தங்கப் பாண்டியைக் காட்டி, உலகதல விரோதிகளை அடை யாளம் காட்ட விரும்பியவர்கள்போல், அசையாது நின்றார்கள். இந்திரா மட்டும் சிறிது விலகி நின்றான். தங்கப்பாண்டியை அடிக்கப் போன வேலாயுதத்தை சண்முகம் பிடித்துக் கொண்டான். ஊரிலிருந்து, ஆண்களும், பெண்களுமாகத் திரண்டு கொண்டிருந்தார்கள். சண்முகத்திற்காகச் சிலர். சரஸ்வதிக்காகச் சிலர். சாப்பாடு போடவில்லை என்று
சிலர். ராஜலிங்கத்தின் தூண்டுதலால் சிலர். ராசம்மாவின் திமிரால் சிலர். சேரியில் இருந்த சிலர். இப்படிச் சிலர் சிலராய் கூடியவர் பலப்பலராயினர். பலவகையான பேச்சு. பாக்கை வெட்டுவது போன்ற பேச்சு. 'அந்தப் பொண்ணு, அவன் வீட்ல வேலைக்காரி மாதிரி வேலை பார்த்தாள். அவளுக்கா சீட்டக் கிழிக்கது? யாரு, நம்ம சண்முகத்துக்கா ஒலை கொடுத்திருக்கான்? நாம அம்மங்குடை கணக்கை எப்படி ஒழுங்கா எழுது றோம். அதுமாதிரி இந்த தங்கப்பாண்டியும் ஒழுங்கா இருந்திருந்தா, இப்படி நடக்குமா? என்னவோ, அவனுக்கு வால் பிடிக்கியரு...தெனமும் பிள்ளியளுக்கு சாப்பாடு போடணும். இவன் போடுறானா? இவனுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு போடணும். "தர்ம அடி கொடுக் கணும்வே.' உள்ளே சிறை வைக்கப்பட்ட தங்கப்பாண்டியின் உடம்பு, வேர்வையால் குளிர்ந்து கொண்டிருந்தபோது, ஆசிரியர்களின் மேனி கொதித்துக் கொண்டிருந்தது. வெளியே இரைச்சல், பேரிரைச்சல். வீட் டில் இருந்து துள்ளிக் குதித்து வந்த ராசம்ம வை 'வாடி! சீக்கிரம் வா. ஒன் பனங்கா மூஞ்சிய கொத்திப் போட்டு அவிக்கோம்' என்று பெண்களில் ஒருத்தி சவாலிட்டபோது, ராசம்மா பாதி வழி யி லே யே நின்றாள். அநியாயக்காரன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காமல், அவன் ஒவ்வொரு செயலையும் ஏன் என்று கேட்டு, தாங்கள் பார் என்பதையும் கேட்டுக் கொண்டால், அதில் பிறக்கும் கேள்வித்தி, ஆயிரம் வேள்வித் தீயைவிட பிரகாசமாக விளங்கும். மனதிலே கிளம்பும் கேள்விப்பொறி, ஐம்பொறிகளிலும் தாவி, அண்டை அயலாரையும் பற்றி, ஊழித்தீயாக மாறும் என்பது நிரூபணம் ஆகிக் கொண்டிருந்தது.
தங்கப்பாண்டி, தனக்கு முன்னால், ஆசிரிய உருவத் தில், ஒரு பெருந்தீ உருவாகி இருப்பதையும், அந்த தீய்க்கு ஊரே எண்ணெயாகி இருப்பதையும், அந்த தீயை ஊடுருவ முடியாது என்பதையும் புரிந்தவர்போல், நாற்காலியில் உட்கார்ந்தபடி மேஜையில், குப்புறத் தலைவைத்து விழிபிதுங்கப் பார்த்தார். அவர் விரித்துப் போட்டிருந்த கைகள், ஆசிரியர்களின் கால்களை நோக்கி, மேஜை விளிம்பில் தொங்கின. பள்ளிக்கூடத்திற்கு சற்று தொலைவில் உள்ள ஒரு 'தனி' வீட்டில் வசிக்கும் சலவைத் தொழிலாளி ஒருவர், நான்கைந்து முரட்டுத் துணிகளைத் தேய்ப்பதற்காக நிலக்கரியில், கொஞ்சம் சீம எண்ணெய் ஊற்றி நெருப் பிட்டார். நிலக்கரி, கண்ணிர் விடுவதுபோல் புகைந்த போது, அவரும் தன் கண்களைக் கசக்கிக் கொண்டே ஊதினார். கண்ணிராய் கசிந்த நிலக்கரி, இப்போது நெருப்புத் துண்டங்களாய் மாறிவிட்டதால் அவை அணையாது என்பதை அறிந்துகொண்டு அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்து, இஸ்திரிப் பெட்டியில் போட்டு விட்டு, வெளியே கேட்ட சத்தத்தின் சாரத்தை அறிய மைதானத்திற்கு விரைந்தார்.

