Chapter 5

பள்ளிக்கூடம் மாறிவிட்டதா அல்லது, தான் மாறி விட்டோமா என்று யோசித்துக் கொண்டே, சரஸ்வதி, மறுநாள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தாள். ஆசிரியஆசிரியைகள், கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டு நின்றார்கள். இன்னும் 'பிரேயர்' மணி அடிக்கவில்லை. மாரியம்மாளின் ஆறாவது வகுப்பு மாணவ-மாணவிகள் எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி, சரஸ்வதி யிடம் வந்து டீச்சர்...எங்க டீச்சர் இனிமேல் வரவே மாட்டாங்களா என்று சொன்னபோது, சரஸ்வதிக்கு கண்கள் நிறைந்தன. இழப்பின் ஆற்றாமையில் அல்லாடிக் கொண்டிருந்தவள், சீனிவாசன் ஆசிரியரிடம் எதையோ விவாதித்துக் கொண்டு நிற்கும் இளைஞனைப் பார்த் தாள். அவள் மனம் மறக்க நினைத்தாலும், மறக்க முடியாத சண்முகம், எல்லோருடைய ஆடைகளையும் மறைக்கும்படியும், மறக்கும்படியுமான பளிச்சென்ற’ ஆடையில் தோன்றினான். 'அப்பாடா பார்த்து எவ்வளவு நாளாச்சு...ரொம்ப ஸ்டைலாதான் இருக்கார். கிராப்பக் கூட மாத்திக்கிட்டார் போலுக்கு. மதுரையில வைகை ஆறு, ஆசாமிய தளதளன்னு மாத்திட்டு.' சரஸ்வதி, பத்தடி இடைவெளியை, மூன்றே எட்டில் முடித்துவிட்டு, சீனிவாசன் அருகே போய் நின்றாள். அவனைப் பார்க்காதது மாதிரியான 'பாவலா கண்க ளுடன், அவன் வருகை தன்னை ஒன்றும் பாதிக்கவில்லை என்பதுபோல நின்றாள். அவரே பேசட்டுமே..."

அவளை அப்போதுதான் கவனித்த சண்முகம் 'உச்சர் ஒங்களுக்கு வயசு நூறு...' என்றான். சரஸ்வதி குறும்பாகக் கேட்டாள்: ‘'இப்பவா? பிறகா?' 'இப்பன்னுகூட சொல்லலாம். ஏன்னா... ஒங்க குடும்பத்துக்கும், மானேஜர் குடும்பத்துக்கும் இருந்த ஆண்டான்-அடிமை உறவைப் பார்த்தால் ஒங்களுக்கு நூறு வயது வருவது வரைக்கும் அடிமைப் புத்தியில இருந்து மாறமாட்டிங்கன்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா, ஒரு நொடில மாறிக் காட்டிட்டீங்க. ' அவள் அவனைப் பொய்க் கோபத்துடன் பார்த்தாள். பிறகு அப்பா ஒங்கள திருநெல்வேலியில பார்த்தா ராமே' என்றாள். அப்பா என்ற வார்த்தையை ஒங்க மாமனார்' என்று மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண் டாள் சீனிவாசன் துளைத்து எடுத்தார்: "அப்புறம் சொல்லுடே....மாரியம்மாள மாவட்டக் கல்வி அதிகாரிகிட்ட கூட்டிக்கிட்டுப் போனே... அப்புறம்?’’ 'அவர்கிட்ட நடந்த விஷயத்த விளக்கினேன். மாரியம்மாளை ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் கொடுக்கச் சொன்னார். அதே சமயத்தில், சம்பளப் பட்டியலுல, அவள் கையெழுத்து போட்டிருக்கதுனாலே, மானேஜர், மான நஷ்ட வழக்குப் போட்டால், தான் ஜவாப்புல்லன் லும் எச்சரித்தார் 'ஏதேது, இந்த ஆசாமியே தங்கப்பாண்டிக்கு சொல்லிக் கொடுப்பான் போலுக்கு...' 'அவர் மாரியம்மாளோட மனுவ வாங்கிக்கிட்டார். "ஆவன செய்யுறேன்’னு சொன்னார். இதுக்கெல்லாம் அவங்களை எதிர்பார்க்கப்படாது. கோளாறு நம்மகிட்ட தான் இருக்கு.'

சரஸ்வதியால் பேசாமல் இருக்க முடியவில்லை. மனதுள் பயமாகத் தோன்றிய சந்தேகத்தை, வாய்விட்டே கேட்டாள். 'மாரியம்மாளுக்கு ஆறுதல் சொன்னிங்களா? எங்கப்பாவை போகச் சொல்லிட்டு, நீங்க அவளை ஊர்ல கொண்டு விட்டுவிடுறதாய் சொன்னீங்களாம்.' "ஆமாம்...நான்தான் வீட் ல கொண்டுவிட்டேன். அவங்க குடும்ப நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு, இந்தப் பொண்ணு வேலைக்கு வந்த பிறகுதான், அந்த வீட் ல ராத்திரி தீ மூட்டி இருக்காங்க.’’ "மாரியோட பtrவம் மானேஜரை சும்மா விடாது. ’’ 'பாவ புண்ணியத்தைப் பேசிப் பேசியே நாம் அழிஞ்சி போயிட்டோம். பாவம்... அது பாட்டுக்கு பாவம் கிடக்கட்டும். நாம ஏதாவது செய்யனும்...' 'மதுரை டிரெயினிங் ஒங்கள ரொம்பத்தான் மாத்தி யிருக்கு 5 p. 'உண்மைதான். டிரெயினிங்குன்னு பார்த்தா, அது சரியான குப்பை, ஆனால், அங்க பல்வேறு வகையான ஆசிரியர்களை பார்க்க முடிஞ்சுது. நம்ப மானேஜ்மெண்ட் சங்கதியக் கேட்டுட்டு, நம்பளத்தான் குற்றம் சொல் றாங்க. பல இடங்கள்ல இநத மாதிரி அக்கிரமங்கள் நடந்ததை எதிர்த்து, ஆசிரியர்கள் போராடி ஜெயிச்சு கிட்டு வாராங்களாம். ஆசிரியர்களை எம்ப்ளாய்மெண் ட் ஆபீஸ் மூலந்தான் நியமிக்கணுமுன்னு சட்டம் வந்ததே, ஆாம்பப்பள்ளி ஆசிரியர்களோட போராட்டத்தாலத் தான். பெடரேஷன் செகரட்டரியப் பார்த்தேன். நடக்கிற அநியாயத்தெல்லாம் சொன்னேன். எல்லாத் தையும் பொறுமையாக் கேட்டுட்டு, கடை சில ஒங்களத் தாய்யா மொதல்ல உதைக்கணு"முன்னார். சம்பளத்துல கமிஷன் கொடுக்கதுக்கு வெட்கப்படாண்டாமான்னு கேட்டார். 'மதிய உணவு பொய்க்கணக்கு எழுதறது

மானமுள்ள ஆசிரியர் செய்யுற வேலையா'ன்னு கேட்டார். நான் ரெண்டும் இல்லாதவன் மாதிரி தலை யைக் குனிஞ்சேன். சரிசரி... மொதல்ல சங்கத்துல சேருங்க, எல்லாம் சரியாயிடும்’ என்றார்.' இந்தாங்க... உறுப்பினர் பாரம். பில்லப் பண்ணித தாங்க. சீனிவாசன் சலிப்போடு சொன்னார்: "இந்த சங்கம் கிங்கமுன்னு பேசா தீங்க. எல்லாம் அசிங்கம். நான் முன்னால ஒரு சங்கத்துல இருந்தேன். அதன் முக்கியஸ் தரில் ஒருத்தன், கார் பங்களா வாங்கிட்டானாம். இன்னும் கணக்கே கொடுக்கலியாம்.' 'குழந்தை பிறக்கும்போது, கொடி சுற்றித்தான் பிறக்குது. கொடியை அறுத்துட்டு குழந்தய பிரிக்கலியா? இதுமாதிரிதான், நல்லது செய்யும்போது கெட்டது கூடவே வரும். நல்லதைப் பிரித்து காப்பாத் தாண்டாமா? இந்த பெடரேஷனுக்கு ஒரு திட்டவட்டமான பொருளா தாரக் கொள்கை இருக்கு. பழைய சங்கக் காரியதரிசி, எல்லா ஜாதியையும் மதிச்சவரு. இந்த சங்கத்துக் க ரிய தரிசி, எல்லா ஜாதியையும் மிதிக்கவரு. என்ன யாருமே பாரத்த வாங்க மாட்டே ங்கறீங்க? ஒங்கள யாராலும் காப்பாத்த முடியாது சாமி. கடவுளாலயும் முடியாது. தங்கப்பாண்டி பிறக்கல... நீங்கதான் பிறக்க வச் சிருக்கீங்க.' சரஸ்வதிக்கு, அவன் பேசப் பேச, ஏதோ புயாத ஒன்று, புதிரான மாயையை விலக்கிக்கொண்டு, விஸ்வ ரூபத்துடன் நிற்பதுபோல் தோன்றியது. சண்முகத் தையே, விழியசையாது பார்த்த ோது, சீனிவாசன் மன்றாடினார். "கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். இவன் கிட்ட இருக்கிற பிடியை மொதல்ல எடுத்துக்குவோம். ஆனால் நான் கொடுத்திருக்கிற பிடி, அசல் மரணப் பிடி.'

'பிடிபடாமல் ஏன் சார் பேசு நீங்க? 'எப்படிடே சொல்லுதது ?" ஆசிரியை பார்வதி குறுக்கிட்டாள். 'ஒங்க சங்கதி தெரியும் ஸார். அஞ்சு வருஷத்துக்கு முன்னால, ஆக்டிங் ஹெட்மாஸ்டராய் இருக்கையில, மானேஜர் தூண்டு தலால் ஒண்ணுமே படிக்காத மேலத்தெரு’ அருணா சலததுக்கு. எட்டு படிச்சதா பொய் சர்டிபிக்கட் கொடுத்தீங்க. அதத்தான சொல்ல வாlங்க?' அதேதான். ஏதோ பியூன் வேல கிடைக்கப் போகு துன்னான். தங்கப்பாண்டியும் கொடுன்னான். சரி... நம்மளால ஒருவனுக்கு வேல கிடைக்கப் போகுதுன்னா, 'இடுலார் பிச்சை கொடுவார் கெடுப்பார்' என்கிற மாதுரி ஆகக்கூடாதுன்னு கொடுத்தேன்.' ஒண்ணும் படிக்காதவனுக்குக் கொடுக்கலாமா?’’ 'இந்த ஸ்கூல்ல, எட்டு படித்தவனுக்கு மட்டும் என்ன தெரியும? தங்கப்பாண்டிக்கு முழுக்கள் னா என்னன்னா தெரியல சரி...விடு கழுதய சரி...கொடு ததேனா, கொடுத் தேன் அப்புறம் விசாரிச்சுப் பார்த்தால் தங்கப்பாண்டி அவன் கிட்ட நூறு ரூபாய் வாங்கியிருக்கான். எனக்கு பைசா தரல. அப்படிப் பாக்காதடே. சரி..போவட்டும். ஒரு நாள்..."ஒரு நாளைக்காவது மத்தியானச் சாப்பாடு போடாண்டாமா'ன்னு கேட்டேன் அவ்வளவுதான்... தங்கப் பாண்டி யாரையோ விட்டு நான் பொய் சர்டிபிக்கட் கொடுத்ததாய் ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதச் சொல்லி என்கிட்ட விளக்கம் கேட்டான். கதையை எப்படித் திருப்பிட்டான் பாரு? சஸ்பெண்ட் பண்ணுவேன் னான் அவன் காலு கையில விழுந்து ஒரு மன்னிப்பு லட்டர் எழுதிக் கொடுத்தேன். அஞ்சு வருஷத்துக்கு முன்ன எழுதிக் கொடுத்த த இன்னும் அப்படியே வச்சிருக் கான். இவ்வளவுக்கும் தென்காசில பிரிண்டா ன

'டி.ஸி பாரத்தை தந்ததே அவன்தான். நேற்றுகூட, ஒரு "கீறல் பயலுக்கு ஆறு படிச்சதா கொடுத்தான். ஆனால் ரேட்ட கூட்டியிருப்பான். விலைவாசி கூடிட்டுப் பாரு. எல்லாம் தலைவி தி. என்னை மாதுரி சொத்து பத்தோ, சொந்த பந்தமோ இல்லாதவன் கதை ஆப்பசைத்த குரங்கு மாதிரித்தான். செய்தாலும் குற்றம், செய்யாட்டாலும் குற்றம்.' சண்முகம் அமைதியாகப் பதிலளித்தான். 'நான் சொன்ன பெடரேஷன் ஒமக்கு சொத்து மாதிரி; சொந்த பந்தம் மாதிரி.’’ "சரியான ஆளுப்பா நீ. பேச்சில மடக்கிப் போட்டே. இருந்தாலும்...' சரஸ்வதி, பொறுமை இழந்தாள். 'சண்முகம் ஸார், என்கிட்ட ஒரு பாரம் தாங்க. நான் ஒங்களோட சேரத் தயார். ஸாரி...பெடரேஷன் ல சேரத் தயார். நம்ம சீனிவாசன் ஸாருக்கு பையங்களுக்கு மட்டும் ஏ ரெண்டே, ஒன்கிட்ட ஒண்ணப் பிடுங்கப் போறேன்னு' சொல்லத் தெரியும். வேற வழியில்லாமல் செய்கிற தப்பு தப்பாகாதுன்னு அவரு புரியமாட்டாரு. இவ்வளவுக்கும் அவர் மகளை நேற்று புருஷன் வீட்டுக்கு அனுப்ப முடியல. கொடுங்க ஸார் பாரத்த." சண்முகம், சரஸ்வதியிடம் நீட்டிய பாரத்தை, இனிவாசன் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொண்டார். இதற்குள், காரைக் கட்டிடத்தில் இருந்து வந்த ஆசிரியை கனகம், "நான் மானேஜர் ரூமுக்கு தற்செயலாப் போனேன். ஆறு பேர், ஆறு மாதத்துக்கு முன்ன போட்ட ஜி.பி எப். லோன் அப்ளிகேஷன் எல்லாம், அவரோட ரேக்குல கிழிஞ்சி போய்க் கிடக்கு அவங்க என்னடான்னா லோன் இன்னைக்கு வரும், நாளைக்கு வருமுன்னு,

எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க...இந்த லட்சணத்துல நான் வேற லோன் போடப் போனேன்' என்றாள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பதறினார்கள். சண்முகம், சிரித்துக் கொண்டான். அவன் சிரித்ததால், தன்னையறியாமலே தானும் சிரித்த சரஸ்வதி 'ஏன் ஸார், அவங்க சொல்றது ஒங்களுக்கு சிரிப்பா இருக்கா?’’ என்றாள் சண்முகம் மேலும் சிரித்துக்கொண்டே விளக்கினான்: 'நம்ம அடிப்படைச் சம்பளத்துல ஆறு சதவிகிதத்தை மானேஜ்மெண்ட் பிடிச்சு, போஸ்ட் ஆபிஸ்ல போடணும். இதற்கான பாஸ் புக் சட்டப்படி நம்மகிட்ட இருக்கணும். இங்க நடக்கது என்ன? ரெண்டு வருஷமா நம்ம மானேஜர் நம்ம சம்பளத்துல பிடிச்சி, பணத்த போஸ்ட் ஆபீஸ்ல போடல. அதனால விண்ணப் பங்கள அனுப்பல.'" 'இந்த அநியாயத்த கேக்கவே முடியாதா?’’ 'ஏன் முடியாது? அதுக்கு, ஆரம்பந்தான் நாம சங்கத்துல சேருறது. அதோட நாம படுற கஷ்டத்த ஊர்க்காரங்ககிட்ட சொல்லணும். பொதுமக்களை ஈடுபடுத்தாத எந்தப் போராட்டமும் ஜெயிக்காது.' 'ஊருக்காரங்களா? சரியான தின் னிமாடங்கப்பா!' "அப்படிச் சொல்லாதீங்க ஸார். ஜவகர்லால் நேரு, இந்தியாவைப்பற்றி சொன்னது ஞாபகம் இருக்கா? இந்தியா யானை. அது படுத்துக் கிடந்தால் பரமசாது. எழுந்துட்டா எதிரே எதுவும் நிற்க முடியாதுன்னார். இது ஏழைகளுக்குப் பொருந்தும். அவங்கள நாம் எழுப்பி விட்டுட்டோ முன்னால், அப்புறம் நம்மாலகூட உட்கார வைக்க முடியாது." சரஸ்வதி, சண்முகத்தை ஒயிலாகப் பார்த்துக் கொண்டு நீங்க சொன்னதும் சரிதான் சார். நேற்று மாரியோடு சேரிக்குப் போனேன். அந்த ஜனங்களுக்கும்

நாம் அவர்கள நடத்துற விதம் பிடிக்கல ஸார். ஒதுக்கி வச்சிருக்கதுக்கு அவங்களும் உள்ளுர கோபப்பட்டுக்கிட்டு இருக்காங்க. ஊர்ல மொதலாளின்னு" சொல்ற பெரிய மனுஷங்கள சேரில, கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறாங்க. நான் இவ்வளவு நாளும், நாம ஒதுக்கி, ஊர்க் கோடியில வைத்திருக்கதை அவங்க தப்பா நினைக்கல்லன்னு நினைச்சிருந்தேன். செல்லாக் கோபம் பொறுமை என்கிறது மாதிரி, சொத்து பத்து இல்லாம, மேல் ஜாதி நிலத்தை நம்பியிருக்கதுனால, அவங்க கட்டாந்தரை மாதிரி பார்க்கதுக்கு தோணுது. ஆனால் உள்ள பூகம்பம் இருக்கு இப்போ நம்ம சேரிகூட மாறிகிட்டு வருது வேணு முன்னா பாரு.ஸ்ாரி, பாருங்க, சாயங்காலமா சேரிக்குப் போய் மாரியம்மாள் மானேஜர் பறமுண் டன்னு சொன்னத டமாரம் போடப் போறேன். மாரி அவங்ககிட்ட சொல்லலியா?’’ 'சொல்லல...இதுவரைக்கும் அங்கே எட்டிப் பார்க் காமல் இருந்துட்டு...அப்புறம் சொல்றது தப்புன்னு நினைச்சாள்.' 'அதுவும் சரிதான்... பாரத்த வாங்குறீங்களா இல்லியா?' பெரும்பாலான ஆசிரியர்கள், பாரங்களை வாங்கிய போது, காரைக் கட்டிடத்தில் இருந்து திடீரென்று தோன்றிய தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, 'இப்டி மொட்டக் கூட்டம் போட்டா எப்டி? பிரேயர் மணி அடியுங்க' என்றார். சண்முகம், திருப்பிக் கொடுத்தான். 'இது மொட்டக் கூட்டம் இல்ல ஸார், முதல் கூட்டம். எங்கள அதட்டு lங்களே, தங்கப்பாண்டி என்ன தான் மானேஜர் என்றா லும், காலையில் ஒன்பதரை மணியில் இருந்து சாயங்காலம் 4-20 வரைக்கும் ஆசிரியர், ஒங்களோட சபார்டினேட்.

எப்பவாவது அவரை வகுப்புக்குப் போகச் சொல்லி இருக்கீங்களா? கந்தசாமிக் கிழவரோட மெட்ராஸ் போயிருக்காராம். வர ஒரு வாரம் ஆகுமாம். தேதி போடாத ஒரு நாள் விடுப்பு லட்டர எழுதி, ஒங்கட்ட கொடுத்துட்டுப் போயிருப்பாரு. ஒங்களால ஆக்ஷன் எடுக்க முடியுமா? சரி. வந்து நீங்களும் இந்த பாரத்துல கையெழுத்துப் போடுங்க." தங்கச்சாமி, சண்முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே, காரைக் கட்டிடத்திற்குள் ஓடிவிட்டார். நடப்பதையும், பேசப்படுவதையும், 'இடுக்கில் நின்று ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த இந்திரா, அந்தப் பக்க மாக வந்தபோது, ஆசிரியை கனகம், "நீயும் சங்கத்துல உறுப்பினராச் சேரும்மா’’ என்றாள். ‘'எதுக்கும் "அவரு'கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக் கிறேன்' என்றாள் இந்திரா. 'ஒன் புருஷன்கிட்டயா' என்று தெரியாதது மாதிரி கனகம் கேட்டதும், இந்திரா தெரிந்தவள் மாதிரி, காரைக் கட்டிடத்திற்குள் ஒடிவிட்ட ாள். சம வயதில் உள்ள சண்முகத்தைப் பார்க்கும்போது, கொஞ்சம் காம்ப் ளெக்ஸ்ாகும் வேலாயுதம், இப்போது அவன் தலைமையை ஏற்றுக் கொண்டதுபோல் பாரத்தை வாங்கிக் கொண் i- s1 & . பள்ளிப் பிரச்னைகள், தமிழ்த் தாயையும் சற்று காக்க வைத்துவிட்டன. பிரேயர் மணி சற்று தாமதமாக அடிக்கப்பட்டது உண்மைதான். இண்டர்வெல் சமயத்தில், மானேஜர் மனைவி ராசம்மா, அங்கே வந்தாள். மானேஜர் ஊரில் இல்லாத போது, ராஜ்ய பரிபாலனம் செய்வதற்கு, அவள் வருவ துண்டு. அதோடு, இந்திராவிடம் நான் எப்பவோ என்

புருஷன தண்ணி தெளிச்சி விட்டது உண்மைதான் ஒனக்கும், அவருக்கும் ஆயிரம் இருக்கதும் உண்மைதான் ஆனாலும் நான்தாண்டி பட்டத்தரசி' என்று ஒரு வருடத்திற்கு முன்பு, அவளைப் பள்ளிக்கூடத்திலேயே பலர்முன்னிலையில் சொன்னவள், இப்போது சொன்னதை சொல்லாமல் சொல்லவும், தங்கப்பாண்டி இல்லாத சமயத்தில் அடிக்கடி வருவாள். அவளைப் பார்த்ததும், மாராப்புச் சேலைகளை சீராக்கிக் கொண்டு வகுப்புகளைப் பார்த்து நகரும் எழுத்தறிவிப்போர், இ. ப் பே ா து கண் எடுக்காமல் நிற்பதில், அவளுக்கு ஆங்காரம் அதிகமாகியது. மாரி விலகாரம் அவர்களை மாற்றிவிட்டது. சண்முகம் பேசியது. அவர்கள் கோபத்தை சராசரிக்கு மேலே கொண்டு போய்விட்டது. ராசம்மா கத்தினாள். "பிள்ளிய கத்துதுல்ல! போய்ப் பாடம் நடத்துனா என்ன?' என்றாள். எல்லோரும், அவள் அருகே இல்லாதது மாதிரி தங்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆங்காரம் ஆத்திரமாக, ராசம்மா 'நெல்லு காயப் போடணும். அந்த வகுப்ப காலி பண்ணிக் கொடுங்க. வெளில மழை வரப்போகுது' என்றாள் உள்ளே தோன்றிய இடியை அறியாதவளாய். சண்முகம் சிரித்துக்கொண்டே பதிலளித்தான். இது நெல்லுக்கான இடமில்ல, கல்விக்கான இடம்,' ராசம்மா, அதிர்ந்து போனாள். "தெருவில் பார்க்கும் போதெல்லாம், 'அத்தை' என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்த சொல்லாத இந்தப் பையன் என்ன பேச்சு பேசிட் டான்! இந்த சரஸ்வதிகூட குறுஞ்சிரிப்பா சிரிக்கா பாரேன். அவள் சிரிக்கணுமுன்னு இவன் சொல்லியிருக் கான். இவன் இன்னும் சொல்லணுமுன்னு அவள்

சிரிக்காள். வந்தட்டிப்பய மவளுக்குச் சிரிப்பப் பாரு இரப்பாளி பய மவளுக்கு வந்த வாழ்வப் பாரு. முள்ள முள் ளால எடுத்துக் காட்டுறேன் பாருடி!" ராசம்மா, கோபத்தை அடக்கிக் கொண்டு குத்தலாகக் கேட்டாள். 'ஏய் சரசு, நேற்று ஆள் அனுப்பியும் ஏண்டி தண்ணி எடுக்க வரல? தொட்டி காலியாக் கிடக்கு. இன்னைக்கு சீக்கிரமா வந்துடு. கொஞ்சம் பாத்திரத்தை யும் தேய்க்க வேண்டிய திருக்கு! என்ன சொல்லுதது காதுல விழுதா பழையத மறந்துடா தடி. பத்தாவது வயசில இருந்தே என் வீட்டில தண்ணி எடுத்தத மறந்துட.ாதடி .' சரஸ்வதி, சண்முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவன் ‘யாமிருக்கப் பயமேன்' என்பது மாதிரி சிரித்தான். அவ்வளவுதான், எங்கிருந்துதான் அப்படிக் குரல் வந்ததோ, சரியாகக் காது கேளாத தலைமை ஆசிரியரே வெளியே வரும்படிக் கத்தினாள். '"நான் பத்து வயசில தண்ணி எடுத்ததையும் மறக்கல. அப்படி எடுத்தத கேவல மாயும் நினைக்கல. ஒங்கள ஒரு சமயம் கேவலமான நிலையில கையுங் களவுமாகப் பார்த்ததையும் மறக்கல. போறியளா, இன்னும் விவரமா சொல்லணுமா?’’ ராசம்மாவுக்கு முகம் வெளுத்தது. நாக்கு உள் நோக்கிப் போனது. நானே அந்த லிங்கராஜாவ மறந் துட்டேன். இந்த பாவி மொட்ட அத மறக்கலே பாரேன். ராசம்மா, சிறிதுநேரம் பெருவிரலால் தலையில் வட்டம் போடுவதுபோல் சுற்றினாள். நடந்ததை நம்ப முடியவில்லை. நாகப்பாம்பாக வந்தவள் பெட்டிப் பாம்பாக போய்க்கொண்டிருந்தாள். அவள் போவதை, * இடுக்கில் நின்று பார்த்த இந்திராவுக்கு இதமாக"

இருந்தது. குலுங்காமல் நடப்பவள், இப்போது குலுங்கிக் குலுங்கி, சண்முகத்திடம் வந்தாள் 'ஸார், நானும் பெடரேஷன்ல சேருறேன். ஒரு பாரம் கொடுங்க லார், என்ன லார் அப்படிப் பார்க்கறிங்க?" 'ஒண்ணுமில்ல! இந்த அக்காளோட நிலைமையை நினைச்சுப் பார்க்கேன். அழுவுறதா, சிரிக்குறதான்னு தெரியல...' இந்திராவின் குரல் தழுதழுத்தது. சண்முகத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். சொல்லும்பேர்தே விம்மல் வந்தது 'நீ அக்கான்னு சொன்னதால, சொல்லுதேன் தம்பி. என்னோட நிலைமை அப்படி. நான் அதனாலதான்... அதனாலதான் அப்போ... மட்டும் ஒன்னை மாதிரி ஒரு தம்பி இருந்திருந்தால்...' இந்திராவை எதுவும் பேச வேண்டாம் என்று கையால் சைகை செய்துவிட்டு சண்முகம் விழி பிதுங்க அவளைப் பார்த்தான். பாவம் செய்தவள் அல்ல இவள். பாவமாக்கப்பட்ட வள். பத்து வருடங்களுக்கு முன்னால், இந்த ராசம்மா, இப்போது சரஸ்வதியை எப்படிக் கேட்டாளோ, அப்படிக் கேட்டிருக்கலாம். இவள் அவளைப் பழிவாங்க நினைத்திருந்தால் அது இயற்கை. ராசம்மாவை எந்த வழியிலும் வெல்ல முடியாமல், கடைசியில் இந்த வழியில் வெல்லப் பார்த்திருக்கலாம். ஒரு தப்பை நியாயமாக்க, பல தப்புகள் செய்திருக்கலாம். மனித மனமே விசித்திரமானது... ரோஷம் அதிகமாகும் போது அது தன்னைத்தானே தின்று கொள்கிறது. இயல்பிலேயே ரோஷக்காரியான இந்த அக்காள், ராசம்மா விட ம் தன் ரோஷத்தைக் காட்ட, தங்கப்பாண்டியிடம் ரோஷத்தை இழந்ததுபோல, இவளைச் சொல்லிக் குற்ற மில்லை. ஏழ்மையும், இயலாமையும், சோதனையும், இன்னும் சொல்லப்போனால் தன்மானமும் ஒருசேர வந்தால், கண்ணகிகூட கற்பிழந்திருப்பாள்.'

சிந்தனையிலிருந்து மீண்ட சண்முகம், இந்திராவிடம் அவளை மீட்டவன்போல், 'பாரத்தை நீட்டினான். இந்திரா, அதை வாங்கிக்கொண்டு, வேகவேகமாக நடந்து மானேஜர் அறைக்கு முன்னால் ஏதேச்சையாக நின்றுகொண்டு, கண்களைத் துடைத்துக்கொண்டே “பாரம்" தீர்ந்தவள் போல், அந்தப் பாரத்தைப் பார்த்தாள். -----------