Chapter 6

கணவனுக்குத் தெரிந்தும், அவனுடைய அனுமதி யோடும் சோரம் போகிறவள். நான்குபேர் முன்னிலையில், கணவனிடம் மிகப் பெளவியமாக நடந்துகொள்வாள் என்பார்கள். இதுபோல் சகல சங்கதிகளையும் தெரிந்து வைத்திருக்கும் பள்ளிக்கூட டெப்டி இன்ஸ்பெக்டரின் வருகைக்காக, ஒவ்வொரு வகுப்பும் கிட்டத்தட்ட விழாக் கோலம் பூண்டிருந்தது. இந்தத் தடவை, ஆசிரியர்கள் யாரும் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. என்றாலும், ஒரு நிறுவனத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தத்தம் வகுப்புகளில், கரும்பலகையை சுத்த மாகத் துடைத்துவிட்டு, மாணவரின் எண்ணிக்கை, வருகை, வகுப்பு, செக்ஷன் ஆகிய விவரங்களை, கலர் சாக்பீஸ்களால் எழுதிவைத் திருந்தார்கள். பிள்ளைகள் கூட, அன்று தலையில் எண்ணெய் வைத்து, அழுக்கு அதிக மாக இல்லாத ஆ ைட க ேள ா டு இருந்தார்கள். சுண்ணாம்பை, ஐந்தாண்டு காலமாகப் பார்த்தறியாத அழுக்கடைந்த சுவர்களில் சுத்தம் சோறு போடும் கல்வி கண்ணாகும். ஆசானே நடமாடும் தெய்வம்’ என்பன போன்ற வாக்கியங்கள் எப்படியோ கண்ணில் படும்படி

எழுதப்பட்டிருந்தன. கடைசி வாக்கியத்தை தன் வகுப்புச் சுவரில் எழுதிய தங்கப்பாண்டியின் ஆசிரிய-மச்சான் கோவிந்தன், காகிதப் பூக்களை ஒரு சில பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டியிருந்தார். பல வகுப்புகளில் பல புது முகங்கள் வேதப் பள்ளிக்கூடத்தில் இருந்து வந் கிருக்கிறார்கள் இல்லாத மாடக்கண்ணுக்கு, ஜோஸ்ப். ஒடிப்போன உதிரமாடனுக்கு, டேவிட்; பூமாரிக்கு, ரோஸ்மேரி. இப்படிப் பல பெயர் மாறாட்டங்கள்.' டெ ப்டி இன்ஸ்பெக்டர் வேதப் பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, இங்கே உள்ள மாடக்கண்ணு வகை யறாக்கள், அங்கே விரட்டப்பட்டு 'தாஸாகவும் ஜெய சீலியாகவும் மாறுவார்கள். இல்லாத செக்ஷன்களை உருவாக்குவதில், இரண்டு பள்ளிகளும் கூட்டணி வைத் துக்கொண்டன. இதில் இளம் பிள்ளைகள் திருட்டணி யாக பயன்படுத்தப்படுவது வழக்கம். சென்னையில் சாராயத்திற்கு சின்னப் பையன்கள் பயன்படுத்தப்படுவது போல! ஒருவார காலமாக சென்னை, மதுரை என்று எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, தங்கப்பாண்டியும் அன்று தான் ஊருக்குத் திரும்பி வந்தார். மனிதர் எப்போதுமே ஒரே கட்சி... அதாவது ஆளுங்கட்சி. ஜனாதிபதி ஆட்சி நடந்ததால், எப்படி ஆடையணிவது என்று தெரியாமல் குழம்பி, இறுதியில், கதர்வேட்டி, கதர்ச் சட்டையை அணிந்துகொண்டு தோளில் கறுப்பு-சிவப்புத் துண்டை யும் போட்டு டுர் கிளம்பியவர். வீட்டுக்கு வந்து மனைவி மூலமும், மச்சான் மூலமும் நடந்த விஷயங்களைக் கேட்டு விட்டு, நேராக பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டார். பலர் பலவிதமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எம்.பி.பி.எஸ் சீட்டுக்கு இப்பவே ஆள் பிடிக்கப் போனதாக ஒரு பேச்சு. பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதாகவும், அதைத் தீர்ப்பதற்காக கந்தசாமிக் கிழவருடன், அவருடைய கொழுந்தியா மகனைப் பார்க்கப் போன தாகவும் இன்னொரு பேச்சு. எ திரும் புதிருமாக உள்ள இரண்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்- 'அறிமுக

விழாக்களில் கலந்துகொள்ளப் போனதாக வேறொரு பேச்சு. இரண்டு பையன்களுக்கு வேலைக்கு சிபாரிசு செய்வதற்காக ஊரான் பணத்தில் போனதாகப் பேச்சு. இதில் ஏதாவது ஒன்றிற்காகவோ அல்லது எல்லாவற்றிற்கு மாகவோ, அவர் போயிருக்கலாம். ஆசாமி, நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டதில், லேசாகக் குழம்பியிருந்தாலும், கலங்கியவர் மாதிரி தெரிய வில்லை சம்பளம் கிடைக்காததால், ஆசிரியர்கள் வயிற்று வலியில் ஏதோ பேசியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, தலைக்கு ஐம்பது ரூபாய் கமிஷனை எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை, தையல் ஆசிரியப் பையன் மூலமாக அந்தந்த ஆசிரியர்கள் வீட்டிலேயே பட்டுவாடா செய்துவிட்டார். சண்முகத்திற்கு மட்டும் சம்பளம் இல்லை. ஆன்டுடியில் பயிற்சிக்குப் போனவன்; இனி மேல்தான் பேபில் எழுத வேண்டும். சம்பளம் கொடுத்து விட்டதால் ஆசிரியர்கள் சரிபாயிருப்பார்கள் என்று அவர் நினைத்தபோது, சண்முகம் சொன்னபடி சங்கத்தில் சேர்ந்ததால்தான் தங்கபபாண்டி சரியாகி இருக்கான் என்று ஆசிரியர்கள் நினைத்துக்கொண்டார்கள். என்றாலும், எவரை மன்னித்தாலும், சரஸ்வதியை மன்னிக்க அவர் தயாராக இல்லை. அவளுக்கு, குறி போட்டு விட்டவர்போல், கண்களை மூடிக்கொண்டு, தலைகளை ஆட்டிக்கொண்டார். எல்லாவற்றிற்கும் காரணமான சண்முகம்மீது அவருக்கு வருத்தம் ஏற்பட் டதே தவிர, இன்னும் கோபம் வரவில்லை. உள்ளுரில் ஒரளவு வசதியான பையனான அவனுக்கு, எஸ் எஸ்.எல். சியில் தள்ளோ தள்ளென்று தள்ளியும், தேற முடியாமல் போன தன் ஒரே மகள் அகிலாவை, கட்டி வைத்துவிட வேண்டும் என்பது அவர் திட்டம், அதனால்தான், போன வருஷம் அவனை பள்ளியில் நியமித்தபோது, வழக்கமாக வாங்கும் ஐயாயிரத்தை அவர் வாங்கவில்லை. பெண்

ஆசிரியைகளை நியமித்தால் அவர்கள் கல்யாணத்தோடு புருஷன் வீட்டுக்குப் போகும்போது, ஒரு வேகன் ஸி' வரும். அதில் மேற்கொண்டும், ஐயாயிரம் தேறும். ஒவ்வொரு ஆசிரியைக்கும் இப்படித் திருமணமாகும் போது, இவருக்கும். வரதட்சினை மாதிரி பணம் வரும். ஆண்களை நியமித்தால், அவர்கள் கல்யாணம் செய்து விட்டு, தங்கள் மனைவிகளுக்கும் உத்தியோகம் கொடுக்கச் சொல்வார்கள். இதனால் பெண்களை மட்டுமே நியமிக்கும் தங்கப்பாண்டி, தன் ஒரே பெண்ணிற்காக, அந்த ஆணை நியமித்தார். ஐயாயிரம் ரூபாய் கமிஷனை வரதட்சணையில் பததாயிரமாகக் கழித்துககொள்ளலாம் என்று அவர் கழித்துக்கொண்டிருந்தபோது, சண்முகம் இப்படிச் செய்திருக்கிறான். இருந்தாலும் அவன்மீது வெறுப்பு ஏற்படவில்லை. ஒரு மாமனாருக்குரிய பொறுமையைக் கடைபிடித்தார். மகளைக் கட்டியவுடன், அவன் சரியாகிவிடுவான் என்பது அவர் எண்ணம். இப்படிப் பலர் ஆகியிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். 'ஆனால் இந்த சரஸ்வதி இரு... இரு... ஒப்பனமாதிரி ஒன்னையும் மரம் வெட்டப் போக வைக்கேன்." இந்திரா, இன்னும் தன் அறைக்கு வராதது அவருக்கு ஏமாறறமாக இருந்தது. ஒரு வாரமாச்சுது, ஏன் வரல? டெப்டி இன்ஸ்பெக்டர் வாரதுனால வகுப்புல இருப்பாள். இப்போ இருக்கட்டும். சுழல் நாற்காலியைப் போல், சிந்தனையையும் சுற்ற விட்ட தங்கப்பாண்டி, திடீரென்று எழுந்து வெளியே ஒடினார். டெப் டி-இன்ஸ்பெக்டர் வந்துகொண்டிருந் தார். அவரை எதிர்கொண்டழைத்து, சுழல் நாற்காலியில் உட்கார வைத்தார். காபியையோ, கலரையோ அல்லது இரண்டையுமோ குடித்துவிட்டு, இருவரும் ஒவ்வொரு வகுப்பாகப் பார்வையிட்டார்கள். தொட்டால் சுருங்கி"

போல் முகஞ் சுருங்கி, உடம்பு ஒடுங்கியிருந்த மூக்குக் கண்ணாடி-டெப்டி இன்ஸ்பெக்டர், வகுப்பு வகுப்பாக, மாணவர் வருகைப் பதிவேட்டைப் பார்த்தார். ஒவ்வொரு வகுப்பிலும் ஏதேதோ கேள்விகள் கேட்டார். மாணவர்கள் அவற்றிற்குத் தயாராக வைத்திருந்த பதில் களைச் சொன்னபோது அவர் தங்கப்பாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். 'இடுக்கில் இப்போது தயாராகும் மதிய உணவைப் பார்வையிட்டுவிட்டு, மானேஜரும், டெபுடியும் ஆறாவது வகுப்பிற்குள் வந்தார்கள். சரஸ்வதி, நாற்காலியில் இருந்து எழுந்து கை கூப்பினாள். அதற்குப் பதிலாக ஒரு கையை லேசாகத் துரக்கிய டெபுடி இன்ஸ்பெக்டர், அவளை, 'கலாபூர்வமாக'ப் பார்த்தார். மற்ற வகுப்பு களில் நின்றுகொண்டே பார்வையிட்டவர், சரஸ்வதியின் நாற்காலியில் உட்கார்ந்தார். எழுந்திருக்கப் போகாதவர் போல் அழுத்தமாக உட்கார்ந்தார். அவளை இம்ப்ரஸ்' செய்ய வேண்டும்போல் அவருக்குத் தோன்றியது. அதட் டலாகக் கேட்டார்: 'சரி... மதிய உணவுப் பதிவேட்டையும், எல்லா வகுப்பு வருகைப் பதிவேடுகளையும், இருப்புப் பதிவேட் டையும் இங்கேயே கொண்டு வாங்க...செக் பண்ணனும் ' அந்தப் பக்கமாக வந்த தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, திடீரென்று மாயமாக மறைந்து, ஐந்து நிமிடத்தில் சம்பந்தப்பட்ட பதிவேடுகளோடு வந்தார். பிறகு அவற்றை டெப்டியிடம் குனிந்து கொடுத்தார். மதிய உணவுப் பதிவேட்டைப் பார்வையிட்ட டெப்டி, "என்ன இது? ஒரு வ ரமா மதிய உணவு போடலியா?" என்றார் அதடடலாக. பிறகு 'என்ன... ஹெச். எம். ஒங்களத தான்... ஏன் ஒரு வாரமா சோறு போடல?' என்றார் கோபமாக.

தங்கசாமி சரஸ்வதி நீதானம்மா கணக்கு எழுதற! சொலலும்மா' என்றார். அவள் தயக்கமில்லாமல் 'சோறு போடல, அதனால எழுதல' என்றாள். தங்கப் பாண்டி, அனிச்சையாக அடிக்கத் தூக்கிய கையை, கீழே போட்டுக்கொண்டார். டெப்டி-இன் ஸ்பெக்டர், அங்கே இருந்தவர்களை ஒரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, மதிய உணவுப் பதிவேட்டையும், மாணவர்களை வகுப்புக்களில் கனக் கெடுக்கும் வருகைப் பதிவேடுகளையும் ஒப்பிட்டார். சில குறிப்புகளை எடுத்துக்கொண்டார். பிறகு அதட்டினார் 'ஒங்க பேரு என்னம்மா?' "சரஸ்வதி ஸார்.' நீங்கதான் மதிய உணவு பதிவேட்ல எழுதுனவங்க?" "ஆமாம் ஸார்.' 'ஒங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக் காம்மா? வருகைப் பதிவேட்ல, ஆப்ளெண்டான மாணவன், மதிய உணவுப் பதிவேட்ல பிரசண்டாகி இருக்கான் இந்தா பாருங்க, மூணாவது வகுப்பு மூக்கன். இந்த தேதி வரல, சீதேவி வரல, இவங்க மதிய உணவு பதிவேடுப்படி சாப்பிட்டிருக்காங்க. வகுப்புக்கே வராத வங்க எப்படி சாப்பிட முடியும்? கவர் மென்ட், தலைக்கு பத்து பைசா வீதம் கொடுக்கிற பணத்துக்கு கணக்கு எழுதற லட்சணமா இது? மிஸ் அப்ரோபிரியட் பண்ணலாமா? இது கையாடுன குற்றம்... நம்பிக்கை மோசடி, நான் யாரையும் விடப்போறதில்லை. இந்த ரிக்கார்ட்ஸ் எல்லாம் என்கிட்டய இருக்கட்டும்.' தங்கப்பாண்டி குழைந்தார். 'ஏன் டீச்சர், ஒங்க கிட்ட கொடுத்த காரியத்த பொறுப்போட செய் யாண்டாமா? சாப்பிடுறவங்கள சரியா எண்ணிப் பார்க் காண்டாமா? வழக்கமா சோறு போடுவதை சூபர்வைஸ் செய்யுற ஒங்களுக்கு ஏன் இது தெரியல?"

டெபுடி குதித்தார்: 'இதெல்லாம் இர்ரெஸ்பான்ஸி பில், அட்டி ரூட் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிட்டு, ரெண்டு வருஷம் டிரெயினிங் வேற அழுதுருக்கீங்க. இதுகூடத் தெரியல. ஹெச். எம்! இனிமேல் இவங்கள கணக்குப் பாடத்த எடுக்கச் சொல்லாதீங்க. மதிய உணவுத் திட்டத் தையும் வேற பொறுப்பான ஆசிரியர்கிட்ட கொடுங்க. அண்டர்ஸ்டாண்ட்?" 'அண்டாஸ்டாண்ட் ஸார்' என்றார் ஹெச். எம். சரஸ்வதிக்கு ஒன்றுமே ஒடவில்லை. சாப்பாடே போடவில்லை... எப் பாதுமே போடவில்லை' என்று சொன்னால், அப்படின்னா எப்படி பொய்க் கணக்கு எழுதலாம்?... எழுதமாட்டேன்னு சொல்ல வேண்டியது தானேன்னு' அவர் திருப்பிக் கேட்கலாம்... கடைசியில் தங்கப்பாண்டியின் தப்புக்கு, டெப்டி எனக்குத் தண்டனை கொடுத்திருக்கிறார்." டெப்டி-இன் ஸ்பெக்டர் ஏழாவது வகுப்பிற்குள் வந்தார். சண்முகம், தன் பிள்ளைகளுக்கு அன்று மகாத்மா காந்தியைப் பற்றி கதை' சொல்வதாக வாக்களித்திருந் தான். நேற்று சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரைப்பற்றிச் சொன்னான். காந்தி சுதையைச் சொல்ல முடியாமல் செய்த டெப்டி-இன் ஸ்பெக்டரை, பிள்ளைகள் கோட்ஸேவாக நினைத்தார்கள். "த... நீங்கதான்... லெட் தயாரிக்காக டிரெயினிங் போனது?' என்று சண்முகத்தைக் கேட்டார் டெப்டி "ஆமாம் ஸார்.' "சரி, ஒரு கணக்குப் போட்டுக் காட்டுங்க." சண்முகம் பிள்ளைகளைப் பார்த்து ஆனந்தமாக ஆரம்பித்தான்: "ஒருவருக்கு, ஒரு நாளைக்க நூறு கிராம் கோதுமை மாவுன்னா, இருநூறு பேருக்கு எவ்வளவு வரும்?

'இருபாதாயிரம் கிராம்.' "எத்தன கிலோ?' 'இருபது கிலோ.' 'ஒரு நாளைக்கு பதுங்குறது இருபது கிலோன்னா, இருபது நாளைக்கு எவ்வளவு பதுங்கும்?' 'நானூறு கிலோ.' 'ஒரு கிலோ கோதுமை மாவு இரண்டு ரூபாய் என்றால், நானுறு கிலோ எவ்வளவு தேறும்?' சிறிது மவுனம். பிறகு பதில்கள் 'எண்ணுறு ரூபாய்.' 'ஒருவனுக்கு நாலு கிராம் எண்ணைன்னா, இரு நூறு பேருக்கு? "எண்ணுறு கிராம்.' "இருபது நாளைக்கு?' "பதினாறாயிரம் கிராம்.' எத்தன கிலோ? பதினாறு கிலோ.' "ஒரு கிலோ எண்ணைக்கு!' சண்முகத்தைப் பார்த்துத் திமிறிய தங்கப்பாண்டியை, டெப்டி-இன்ஸ்பெக்டர் "தடுத்தா ட்கொண் டு, 'போதும்... நிறுத்துங்க... ஐ...ஸே ஸ்டாப் திஸ் ரப்பீஸ்...' என்று கத்தினார். சண்முகம் அமைதியாகச் சொன்னான்: 'இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு ஸார். ஒருவர்கிட்ட ஐம்பது கிராம் கமிஷன்னா பதினைந்து பேர்கிட்ட எவ்வளவு தேறுமுன்னு கேட்கணும்?' 'கணங்கள் போட்டு கணக்குச் சொல்லிக் கொடுக் காமல், தத்துப் பித்துன்னு உளறுனால் என்னய்யா அர்த்தம்?

'மதிய உணவு போடலன்னு தெரிந்தும், ஒரு ஆசிரியையை மேலதிகாரி அதட்டுறார்னால், இருப்புப் பதிவேட்ல எவ்வளவு கோதுமை மாவு இருக்குன்னு அவருக்குக் கேட்கத் தோணலன்னா, ஸ்டாக்கைப் பார்க் கணுமுன்னு அவருக்குத் தோணலன்னா, அந்த மேலதிகாரி யும் ஒரு ஊழல் பேர்வழின்னு அர்த்தம். இந்தப் பிள்ளை களைப் பார்த்து எத்தன நாளு மத்தியான உணவச் சாப்பீட்டிங்கன்னு கேளுமய்யா! இதோ... இங்க இருக் கிறதுல கால்வாசிப் பேர் வடக்கூர்’ பள்ளிக்கூட மாணவ -ம ணவிங்க. அவங்கள எழுந்திருக்கச் சொல்லட்டுமா? ஒரு வாரத்துக்கு முன்னால், இந்த ஆசிரியர் கோவிந்தன், கோதுமை மாவையும், எண்ணெய் டின்னையும் வண்டியில் ஏற்றிக்கிட்டுப் போய், தென்காசில வித்தாரு. ஆதாரத்தோட நிரூபிக்கிறேன். ஒங்கால ஆக்ஷன் எடுக்க முடியுமா? ஏதோ நாடகம் போடுறிங்க. அதுக்கு நாங்க தானா பாத்திரங்களா ஆகணும்? வந்துட்டார் பெரிசா, எல்லாக் கஷ்டத்தையும் நீக்கப் போறவர் மாதிரி. 'பெரிய அதிகாரியையா அவமானப்படுத்துற? இரு... இரு' என்று சொல்லிக்கொண்டு, தங்கப்பாண்டி, டெப்டி யைக் கைத்தாங்கலாக அனைத்துக்கொண்டே வெளியே போனார். மானேஜர் அறைக்குப் போகாமலும், வேதப்" பள்ளிக்கூடத்திற்குப் போகாமலும் பஸ் நிலையத்தைப் பார்ததுப் போனார்கள். சீனிவாசன், ஒரளவு வேர்த்துப் போயிருந்த சண்முகத் திற்கு, தன் வேட்டி மடிப்பை வைத்து வீசிக்கொண்டே 'எல்லாத்தையும் போட்டு ஒடச்சது சாதான். ஆனால்... வேதப் பள்ளிக்கூட பையங்க வந்திருப்பதை சொல்லி யிருக்கப்படாது. செக்ஷன்களை குளோஸ் பண்ணிட்டா, நம்மள்ல நாலுபேரு குளோஸ் ஆயிடுவாங்க' என்றார். சண்முகம் அவரை, தங்கப்பாண்டியைப் பார்ப்பது மாதிரி பார்த்துப் பேசினான்: 'நாம் வெறும் சம்பளத்துக்

காகப் போராட ப்படாது. ஒரு லட்சியத்துக்காகப் போரா டனும். நீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் சம்பளத் தைப்பற்றிப் பேசணுமே தவிர, சம்பளத்திற்காக நீதியைப் பற்றிப் பேசக்கூடாது. இன்றைய உரிமைப் போராட்டங் களை பொதுமக்கள் அலட்சியப்படுத்துவதற்கு இந்த குழப்படி தான் காரணம். இந்தப் பள்ளிக்கூடத்துல நடக்கிற அநீதியை, சமுதாய அநீதிகளோடு இணைத்து எல்லாவற்றையும் கொளுத்தப் பார்க்கணும். அதுதான் உன்னதமான குறிக்கோள். அந்தக் குறிக்கோளை நோக்கிப் போவதற்கு முன்னால், நம்முடைய பலவீனங் களையும் நாம் உதறனும், தூக்கி எறியனும். பல பள்ளிக்கூடத்துல ஒன்று முதல் ஐந்தாவது வகுப்பு வரைக்கும் இரண்டு ஆசிரியர்கள் இருக்காங்க பல ஒராசிரியர் பள்ளிக்கூடங்கள் இருக்கு. இந்த நிலைமை யிலே, இல்லாத செக்ஷன்களை போட்டுக்கிட்டு, அவற்றில் நம்மை ஆசிரியர்களாகக் காட்டிக்கிட்டால், நமக்கு மனுஷனாய் இருக்கவே யோக்கியதை கிடையாது. அப்புறம் மனுஷங்களை உருவாக்கிற பிள்ளைகளுக்கு, ஆசிரியராய் இருக்க நமக்கு என்ன யோக்கியதை இருக்கு?’’ எல்லோரும் தத்தம் வகுப்புகளுக்குப் போய்விட் டா கள். சரஸ்வதி தன் வகுப்பிலிருந்து அவள் வகுப் புக்குப் புறப்பட்டாள். 'நன்றி சொல்லணும்... மனதத் இறந்து இன்னொன்றையும் சொல்லிடனும். இதுக்கு மேல பொறுக்க முடியாது...' நடந்து வந்தவள், முன் நெற்றி சுருங்க, கண்கள் கோவைப் பழங்களாக, மேஜையில் ஊன்றிய முழங்கை களில், முகத்தை வைத்துக்கொண்டு. எதையோ தொலை நோக்காகப் பார்த்த அவனைக் கலைக்கப் பயந்தாள். அந்த மோனத்தில் தொற்றிக்கொண்டவள் போல், அதற்குப் பயந்தவள்போல், பக்தி செலுத்துபவள் போல், அவள் திரும்பிவிட்டாள்.