Chapter 4

மானேஜரின் அறையில் பாதிக்கதவு மூடப்பட்டு, tதிப் பாகத்தை தையல் ஆசிரியன் பெருமாள், தன் முதுகை வைத்து மறைத்துக்கொண்டிருந்தான் என்றால், உளளே தங்கப்பாண்டிக்கும் இந்திராவுக்கும் அந்தரங்க மான ஆலோசனை நடப்பதாக அர்த்தப. மானேஜரைப் பார்த்துவிட்டு, ஜி.பி.எப். பணத்துக்கு விண்ணப்பம் கொடுக்கப்போன கனகம், பாதி வாசலை மறைத்த பெருமாளைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டாள். அவளுக்கு உள்ளுற உதறல். நேற்று 'ஏலத்துல பணம் கொடுக்கணுமுன்னா, பேங்க்ல போட்டிருக்கிற பணத்தை எடுத்து கொடுக்கது நம்ப சம்பளத்தானா கிடைச்சுது?" என்று இந்திரா காதுபடச் சொல்லிவிட்டாள். இந்நேரம், அவளோ, தங்கப்பாண்டியின் காதில், வாய்ப்பட சொல் விக்கொண்டிருப்பாள். ஜி.பி.எப். கடன் கிடைச்சது மாதிரிதான்... வயித்துக் கட்டியை ஆபரேஷன் பண்ணுனது மாதிரித்தான். அவள் நினைத்தது உண்மை என்பது மாதிரி உள்ளே உரையாடல் நடந்தது. தங்கப்பாண்டி கோபமாகக் கேட்டார். 'அப்படியா... அந்தத் தார்க்குச்சி சொன் னாள்...?’’ வரவர நான் சொல்றத நீங்க நம்பமாட்டேங் தெரியும். ஒங்க 'ஒய்ப் ஒரு தடவ இங்க வந்து என்னைத் திட்டிட்டுப் போனாள். இப்போ சரஸ்வதிய வீட்டுக் குள்ள கூப்பிடுறாள். ஒங்க புத்தி தெரியாம... உ.ம்... என்னைத் திட்டுன பாவம் அவள சும்மா விடுமா?"

'சரி, அதெல்லாம் பேச இப்ப டயம் இல்ல. அட்புறம் வேற ஏதாவது விஷயம் உண்டா?’’ 'இந்த மாரிக்கு எக்ஸ்டன்ஷன் கொடுக்கிறது தப்புன்னு தோணுது.' ஏன்?" "சீனிவாசன் கூட எப்பப் பார்த்தாலும் கிசுகிசுன்னு பேசிக்கிட்டு இருக்காள். வேலாயுதம் மேல ஒரு கண்ணு போடுறாள். அவனும் பல்லக் காட்டுறான். சீனிவாசனும் சகுனிமாதிரி லீவ் வேகன்ஸி’க்கு ஹரிஜன்... பெர்மனன்ட் வேகன்ஸிக்கு பேக்வேர்ட்... இல்லன்னா பார்வர்டுன் னு அவள் கிட்ட சொல்லுக்குச் சொல்லு சொல்லிக்கிட்டு இருக்கார்.' தங்கப்பாண்டி எதுவுமே பேசவில்லை; லேசாகச் சிரித்துக்கொண்டார். இதற்குள், இரண்டாவது பீரியடுக் கான மணியடித்தது. இந்திரா, வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் கும்பல் கும்பலாக நின்று பேசிக கொண்டிருந்த ஆசிரிய-ஆசிரியைகள், வகுப்புக்களைப் பார்த்து ஓடினார்கள். தார்க்குச்சிமாதிரி ஒல்லியாக இருந்த ஜி பி.எப். ஆசிரியை கனகம் மட்டும், இந்திரா வைப் பார்த்து, 'இந்த சேலை... ஒனக்குன்னே நெய்தது மாதிரி இருக்கும்மா... இன்னும் சேலய... உடம்போட சேர்த்து இறுக்கிக் கட்டினால், ஒனக்கு எடுப்பா இருக்கும். இப்படி... தொளதொள ன்னு சேலைய வைக்காத" என்றாள். அப்படிச் சொல்லிவிட்டதால், தனது ஜி.பி. - ப் காய், பழுத்துவிடும் என்று நினைத்துக்கொண்டாள். இந்திரா முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு, தன் வகுப்புக்குப் போனாள். போனவுடனேயே கண்ணகியை ஏன் கற்புக்கரசின்னு சொல்கிறோம்?' என்று கேள்வி கேட்டதும், பயல்கள் அமுக்கலாகச் சிரித்தார்கள். இரண்டு கட்டிடங்களுக்கும் மத்தியில் இருந்த இடுக்கை’ப் பார்த்து, கண்ணடித்துக் கொண்டார்கள்.

சீனிவாசன், மானேஜர் அறைக்குப் போகப் புறப் பட்டார். அவர் மகள போக வேண்டிய ரயிலுககு இன்னும் நேரமிருக்கு. இப்போ கூட தங்கப்பாண்டிகிட்ட கேட்டுப் பார்க்கலாம். அவர் புறப்படப்போனபோது, எதிரும் புதிருமான உள்ளுர் அரசியல்வாதிகள், மானேஜ ரைப் பார்க்க வந்துவிட்டார்கள். ரயில் போவதற்குமுன்பு, அவர்கள போவார்களா என்பது சந்தேகம், இந்தச் சமயத்தில் இங்கிதம் பார்ப்பது இங்கிதமல்ல... சீனிவாசன், மானேஜர் அறைக்குள் நுழையப் போன போது, பார்ட் டைம் தையல் ஆசிரியப் பையன், தன் உடம்பெல்லாம் பார்ட் பார்ட்டாக ஆட 'அப்புறமா வந்து பாரும். இப்போ எப்டி பார்க்க முடியும்?' என்று நிஜமாகவே அதட்டிப் பேசினான். சீனிவாசன், வகுப்பிற்குள் போகாமலும், அங்கே நிற்காமலும், 'இடுக்கில் வந்து நின்றுகொண்டார். ஒரு தடவை இப்படி இடுக்கில் நின்றபோது, எட்டாவது வகுப்புப் பயல்கள், அவரையும் பார்த்துச் சிரித்தார்கள். அரசியல் வாதிகள் போவதாகத் தெரியவில்லை. தென் காசிக்கு வேட்பாளர் தேர்வுக் குழுக்கள் வருகிறதாம். சர்வ கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் தங்கப்பாண்டி தேர்தல் குழுக்களிடம் போய், இவர் இவரை சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். தங்கப் பாண்டி, தேவடியாள் சிரிப்பு ஒன்றை, உதடு முழுவதும் உலவ விட்டுக்கொண்டிருந்தார். எப்படியோ அரசியல் வாதிகள் போய்விட்டார்கள. சீனிவாசன் மானேஜர் அறைக்குள் நுழைந்தார். 'இப்ப... கொஞ்சம் பிஸி... என்ன விஷயம்?' என்றார் தங்கப்பாண்டி. 'இன்னைக்கு, என் மகள வண்டியேத்தணும்... கொஞ்சம் பணம் இருந்தால்...'

"ஆமா... ஒம்ம் வகுப்புல ஒரு பெஞ்சி உடஞ்சி கிடக்கே... , ன்?' 'அதுவா? நேத்து... முழுக்கள்' என்றால் என்னன்னு ஒரு கேள்வியைப் போட்டேன். பதில் சொல்லாத பயலுவள பெஞ்சி மேலே ஏத்துனேன். அந்தப் பெஞ்சி ஏற்கனவே இத்துப் போனது. சடசடன்னு உடைஞ் சிட்டு...' ‘'வேணுமுன்னே உடைச்சிருப்பாங்க. இனிமேல் எவனையும் பெஞ்சி மேலே ஏத்தாதிங்க தெரியாத கேள்விகள ஏன் கேட்கிறிய...? எனக்கே இதுக்கு பதில் தெரியாது ' 'ஆனால் நிறைய பயலுவ பதில் சொன்னாங்க. ஒங்கள மாதிரி, கொஞ்சம் பேருக்குத்தான் தெரியாது. இப்போ உள்ள சிலபஸ்படி... 'முழுக்கள் ... மிகை எண். குறை எண், கணங்கள் இந்தமாதிரி டெர்ம்ஸ் இக்கு அர்த்தம் தெரிஞ்சாத்தான், மேல்கொண்டு பாடம் நடத்த முடியும்.' 'சரி போகட்டும்; என்ன விஷயம்?" 'அதுதான் சொன்னேமில்லா... என் மகளை... இன் னைக்கி அனுப்பியாகணும். கையில சத்தியமாக் காசு இல்ல...' "'என்ன ஸார் நீங்க? ஒரு அவசரத்துக்கு பணத்த ஒரு வாரம் வச்சிக்கப்படாதா? ஒடியா போகப் போறேன். ஒங்களுக்காக எப்படில்லாம் வளைஞ்சி கொடுக்கேன். இருநூறு பிள்ளிங்களை... முந்நூறுக்கு மேல காட்டுறேன். முப்பது பேருக்குக் கீழே இருந்தால் ஒரு செக்ஷன்தான். நான் இருபத்தஞ்சு பிள்ளிங்களை வச்சிக்கிட்டு, ரெண்டு செக்ஷனா காட்டுறேன். ஒரு வகுப்ப மட்டுமா காட்டு றேன்...? எல்லாம் யாருக்காக? என் பாட்டுக்கு இருக்கிற

பிள்ளிங்களை மட்டும் காட்டினால் ஆறு பேரோட வேல போயிடும். ஓங்களுக்கு உபகாரம் செய்தாலும், உபத்திரந்தான் சாமி... சரி. சரி... போங்க சீனிவாசன் தன்னை சிறுகச் சிறுக நகர்த்தி தலையைத் திரும்பத் திரும்பத் திருப்பி வெளியே வந்தார். அவர் போனதும்,ம ானேஜர் மோவாயை பன்றி ஆட்டுவது மாதிரி ஆ.டிக்கொண்டார். ச ர ஸ் வ தி வந்தாள். கூப்பிட்டிங்களா ஸார்?' 'ஒனக்கென்ன கேடுகாலம்... மாமா ன்னு கூப்பிடு றவள், ஸார்னு சொல்ற? இந்திரா தன்னிடம் சரஸ்வதியைப் பற்றி காலையில் பேசியதில் இருந்து, அவருக்கும் ஒரு "கிக்". சரஸ்வதி எதுவும் பேசவில்லை; மெளனமாக உதட்டைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவளையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், பிறகு 'சரி வீட்ல ஏதோ வேல இருக்காம், அந்த வரச் சொன்னாள் போ. ஒன் வகுப் பயும் சீனிவாசனை சேர்த்துக் கவனிச்சுக்கச் சொல்லு' என்று சொல்லிவிட்டு, அவளைப் பார்ப்பதற்கு, அவர் தலையை நிமிர்த்து முன்னாலேயே, சரஸ்வதி வெளியேறி விட்டாள். வெளியே நின்றுகொண்டிருந்த மாரியம்மாள், உள்ளே வந்தாள். விடுப்பில் போயிருந்த ஆசிரியை வடிவு, இன்று வேலையில் சேர்ந்து விட்டாள். இன்றை யோடு அவளுக்கும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மாரியம்மாளைப் பார் த் த து ம், தங்கப்பாண்டி 'இன்னும் நீ ஊருக்குக் கிளம்பலியா?' என்றார். மாரி திக்கித் திணறிக் கேட்டாள். 'ஸார், நீங்க மனசு வச்சால்...'

நான் மட்டும் மனசு வச்கால் எப்படி? நீயும் மனசு வைககாண்டாமா? ஒனக்கு ஹெல்ப் பண்ணணு முன் னால், னக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் வேண்டாமா? சரி சரி. சாயங்காலமா ரோட்டுப் பக்கமா இருக்கிற வீட்டுக்கு வா, பேச வேண்டியதைப் பேசிக்கலாம. ஏதாவது ஒரு வழி பண்ணப் பாக்கேன்.' அங்கே பேசுறத இங்கேயே பேசலாமே. நீங்க எனக்கு அப்பா, மாதிரி. சொந்த மகள மாதிரி கேக்கேன் . இன்னும் ஒரு மாதம் வேலையில் இருந்தால், வீட்டுப் பிரச்னையை குறைக்கலாம். மெழுகாகக் குழைந்த தங்கப்பாண்டி, இப்போது மின் ரக் கம்பம்மாதிரி நிமிர்ந்து கொண்டார். ரப்பர் மாதிரி இருந்த முகத்தை, இரும்புமாதிரி ஆக்கிக்கொண் டார் அப்பாவாம்... அப்பா... அடேயப்பா. ” லீவ் வேகன்ஸி முடிஞ்சுட்டுதுன்னா, நான் என் னம்மா பண்ண முடியும்? இப்போ யாரும் லீவுல போகல. யாரையும் நான் போகச் சொல்லவும் மாட்டேன். அவங்களா போனால் ஏதாவது செய்யலாம்.' தங்கப்பாண்டி பேச்சை முடிக்கும் முன்னாலயே சரஸ்வதி அங்கே நுழைந்தாள். 'எனக்கு மூணு மாசம் வீவு இருக்கு, மாரிக்காக நான் வேணுமுன்னால் ரெண்டு மாசம் லீவுல போறேன்.' தங்கப்பாண்டி, கோபப் பாண்டியானார். சரஸ்வதி யைப் பார்த்து திரும்பிய திரும்பலில் சுழல் நாற்காலி கிரீச் சிட்டது. அதன் கால்கள் பின்னால் நகர்ந்தன. மேஜை முன்னால் நகர்ந்தது. பல்லைக் கடித்துக்கொண்டே கேட்டார்:

'நீ இன்னும் வீட்டுக்குப் போகலியா? அத்தை ஆளனுப்பி அரைமணி நேரமாவுது, இன்னுமா போகல? ஒஹோ... அம்மா தியாகம் செய்ய வந்திருக்கியளோ? ஒங்களுக்கு ஒரு சிலை வச்சுட வேண்டியதுதான். மூஞ்சை யும் முகரக் கட்டையையும் பாரு. இரும்பு அடிக்கிற இடத்துல ஈய்க்கு என்ன வேலன்னேன். சீக்கிரமா வீட்டுக்குப் போ. மாட்டுக்குப் புண்ணாக்கு கலக்கணு மாம் இன்னுமா நிக்கே?' சரஸ்வதி, அவரைப் பார்த்து ஏதோ சொல்லப் போனாள். முகத்தாட்சண்யமோ, அல்லது தாத்தா காலத்தில் இருந்து கொத்தடிமையாக வேலை பார்த்த தால் ஏற்பட்ட வேர்வையே ரத்தவோட்டமாக மாறி விட்டதாலோ என்னவோ, அவளால் பேச நினைத்தும் பேச முடியவில்லை. மாரியம்மாளை ஒரு தடவையும், தன்னைத்தானே இரு தட வையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு, வெளியேறினாள். மானேஜரின் வீட்டுக்குப் போகாமல் நேராக வகுப்புக்குப் போனாள். தங்கப்பாண்டி, மாரியம்மாளை கம்பீரமாகப் பார்த்துப் பேசினார்: "சரிம்மா, சீக்கிரமா ஊர்ப் போய்ச் சேருங்க. எனக்கும் வேல இருக்கு.' 'என் சம்பளத்த இன்னும் கொடுக்கலியே?' 'எந்தச் சம்பளம்? போன மாதச் சம்பளம்.' 'தெரியாமத்தான் கேக்கேன், சண்டை போடணு முன்னே வந்திருக்கியா?' 'எனக்குச் சணடையில அடிபட்டுத்தான் பழக்கமே தவிர, அடிச்ச்ப் பழக்கமில்ல ஸார். வேலை பார்த்ததுக்கு சம்பளம் கேக்குறேன், அவ்வளவுதான்.'

'ஒன்னோட பெரிய தொணதொணப்பா போயிட்டு. ரெண்டு மாதச் சம்பளத்துல, ஒரு மாதம் உனக்கு, இன் னொரு மாதம் எனக்குன்னு பேசித்தான் ஒன்னை நியமிச்சது. இது தா ன், ஒன்னை கூட்டிக்கிட்டு வந்தானே... ஒன் அக்கா புருஷனோ... அத்த புருஷனோ... ராமசாமி... அவன்கிட்ட பேசி, முடிவு பண்ணுன விவகாரம். போய் அவனைக் கூட்டிக்கிட்டு வா." 'ஸார், தொண்டை கட்டும்படி பாடம் நடத்துனது நான். ராமசாமி இல்ல.' 'இப்போ என்ன செய்யனுங்கற?" 'சட்டப்படி சேர வேண்டிய சம்பளத்த தர ச் சொல்றேன்.' 'சட்டப்படி ஒனக்குத் தரவேண்டியதில்ல நீ கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாச்சு, 'ஸார், நீங்க சம்பளம் தராம நான் போகமாட்டேன். போக முடியாது.' 'என்னடி நினைச்சிக்கிட்டே, பறமுண்ட ஊருக்கு ஒழுங்கா போய்ச் சேரனுமுன்னு நினைக்கியா, இல்ல வழியிலயே யாரையாவது விட்டு தூக்கிட்டுப் போகச் சொல்லணுமா? தப்பு என் மேலத்தாண்டி. முதல் மாதமே சம்பளத்த எடுத்திருக்கணும். முள்ளங்கிபத்த மாதிரி முழுசா தந்தேன் பாரு...நீ ஏன் பேசமாட்டே? ஒன் பறப்புத்திய காட்டிட்டல்லா...' எதிர்பாராத 'அடிப் பேச்சால், மாரியம்மாள் அதிர்ந்துவிட்டாள். உடம்பு முழுவதும், அக்கினிக் குழம்பானதுபோல் எரிந்தது. இவன், இவ்வளவு மட்டமான மனுஷனா? இவன், நான் சம்பளம் கேட்ட துக்காக இப்படிப் பேசல. அவன் மறைமுகமாக் கேட்டத கொடுக்காததுக்காக இப்படிப் பேசுறான். இவனை என்ன செய்யலாம்? என்ன செய்தாலும் தகும். என்ன செய்ய

முடியும்? இந்த ஏழப் பெண்ணால என்ன செய்ய முடியும்? அழலாம். ஆண்டவன் கிட்ட முறையிடலாம்...வேறு யார் கிட்ட முறையிடலாம்? யார் இருக்கா? கடவுளே ...அடி என்று சொன்ன இவன் ஒடம்புல ஒவ்வொரு அடியும் புழுத்துப் போகனும், பற முண்டன்னு கேட்ட இவன யாராவது கைவேறு, கால்வேறா வெட் டிப் போடணும். எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேனும். பக்கத்துல இருக்கிற சேரியில என்னோட ஜனங்களோடு என்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல், இந்தக் கிராமத்துல தனியா வீடுயெடுத்து, தனிச் சா இன்னு காட்டிக்கிட்ட என் புத்திய செருப்பால அடிக்கணும்." மாரியம்மாள், விக்கித்து நின்றாள். விம்மலை அடக்க முடியாமல் அடக்கினாள். சுவரைப் பிடித்துக்கொண் டாள் இன்னொரு கையால் சுக்கு நூறாகப் போவது போல் துடித்த தலையைப் பிடித்துக் கொண்டாள். தங்கப் பாண்டியை எரித்துவிடுபவள் மாதிரி பார்த்தாள். பிறகு எரிக்கப் போகிறவள் போல பார்த்தாள் ஏதோ ஒரு வைராக்கியம் நெஞ்சில் நெருப்பாகி, இமையில் முட்டிய கண்ணிர் எரிமலைக் குழம்பாக வடிய, வெளியே வந்தாள். ‘என்ன ஆச்சு' என்று கேட்டுக் கொண்டு, அவளை எதிர்கொண்டழைப்பவள்போல வந்த சரஸ்வதியின் மார்பில் சாய்ந்தாள். கழுத்தைக் கட்டிக்கொண்டு, விம்மல்கள் வெடிப்புக்களாக, கண்ணிர் வெள்ளமாக, உள்ளத்தில் ஏற்பட்ட கதறல், உதடு வழியாக சன்னமான ஒலமாக, ஒப்பாரியாகக் கேட்டது. எல்லா ஆசிரியஆசிரியைகளும் அவளைச் சுற்றி வந்து நின்று கொண்டார் கள் சரஸ்வதி, அவள் முதுகை ஆதரவாகத் தட்டிவிட்டு, பிறகு அவள் முகத்தை நிமிர்த்தினாள். என்ன நடந்தது என்று எல்லோரும் கண்களாலேயே கேட்டார்கள் . காரைக் கட்டிடத்தில் இருந்த வேலாயுதம் படபடப்போடு வந்தான்.

மாரியம்மாள் விக்கிக்கொண்டே 'நான் பறமுண்ட யாம், ஆளவச்சி தூக்கிட்டுப் போகச் சொல்லுவானாம்' என்று சொன்னபோது, எல்லோரும் சப்த நாடிகளும் அடங்கி, அடங்கியவை ஆக்ரோஷமாக எழுந்ததுபோல் மானேஜர் அறையைப் பார்த்தார்கள். தங்கப்பாண் டி. சாவகாசமாக வெளியே போய்க் கொண்டிருந்தார். தையல் ஆசிரியன், தோல் பையைத் தூக்கிக்கொண்டு, அவர் பின்னால் ஒடிக் கொண்டிருந்தான். மாரியம்மாள், கண்ணிரைத் துடைத்துக்கொண் டாள், சோகத்தால் கீறப்பட்ட முகத்தோடு, 'நான் போறேன்' என்று சொல்லிக் கொண்டு, நான்கடி நட, ந்து விட்டு மீண்டும் திரும்பி வந்து, சரஸ்வதியின் கழுததைக் கட்டிக்கொண்டு, மீண்டும் கேவிக்கேவி அழுதாள். 'எனக்குப் பயமா இருக்கு. வழில...அவன் சொன்னது மாதிரி...சொன்னது மாதிரி...' என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் அவள் பரிதாபமாகப் பார்த்தாள். உடம்பின் எங்கோ ஓரிடத்தில் முளைத்திருந்த வீரம், சரஸ்வதியின் வாய்க்கும் கண்களுக்கும் தாவியது: "நீ கவலப்படாத மாரி. எந்தப் பய வரான்னு பார்த்துப் புடுவோம். மொதல்ல என் வீட்டுக்கு வா. சாயங்காலமா எங்கப்பா மரம் வெட்டிட்டு வருவாரு. அவர...ஒன்ளை ஒன் வீட்லயே கொண்டுவிடச் சொல்றேன். வழில... எவனாவது வந்தாமுன்னா, கோடாரியாலயே விறகக் கீறுறது மாதிரி கீறிப்பிடுவாரு. வா...எங்க வீட்டுக்குப் போகலாம்...' சரஸ்வதி, மாரியை தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள். இந்திராவும் தங்கப்பாண்டியின் ஆசிரிய மச்சான்' கோவிந்தனும், இன்னும் ஒரு ஆசிரியரும், பல்லைக் கடித்துக் கொண்டார்கள். சீனிவாசன், முக்கியப் பிரச்சினைபற்றிக் கேட் டார். 'நேற்றே கையில காசு இல்லன்னு சொன்னியே? பஸ்ஸுக்கு காசு வச்சிருக்கியா?”

மாரியம்மாள் வெறுமையோடு பார்த்தாள். தன் மானத்திற்கும், பிரத்யட்ச நிலைக்குமிடையே தவித்துக் கொண்டு அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள். உடனே, பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களிடம் இருந்த எட்ட ணா, ஒரு ரூபாய் சொத்துக்களைப் பிரித்தார்கள். ஏழரை ரூபாய் தேறியது மாரியம்மாள், கூனிக் குறுகக் கூடாது என்பதற்காக, சீனிவாசன், வசூலித்த பணத்தை சரஸ்வதியிடம் கொடுத்தார். சரஸ்வதியின் அணைப்போடு போறேன், போறேன். ஒங்கள இனிமேல் எந்தக் கா லத் து ல பார்க்கப் போறேனோ என்று அழுதழுது சொல்லிவிட்டு, மாரியம்மாள் விம்மினாள். சீனிவாசன் கண்களைத் துடைத்துக் கொண்டார். தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, காரைக் கட்டிடத்தின் வாசலில் நின்றுகொண்டே, அழப்போவதுபோல் பார்த்தார். கனகம் ஒடிப்போய், மாரியின் கழுத்தைக் கட்டிக்கொண்டே விம்மினாள். இந்திராவிற்குக்கூட கண் கலங்கியது. கண் கலங்கி நின்ற வேலாயுதம், போகப் போகிறவளை, கண்களால் வழி மறிப்பதுபோல் பார்த்தான். அந்தக் கட்டிடமே அவனுக்குச் சமாதியாகத் தெரிந்தது. 'மாரி நீயாவது உயிரோ. போற. இனிமேல் நான்...இங்கே...உயிரில் லாமல் தான் இருப்பேன் மாரி...' மனதில் லேசாக வந்துபார்க்கும் வேலாயுதத்தை, மாரியம்மாளும் தனிப்படுத்தி’ப் பார்த்தாள். தங்கப் பாண்டியின் பேச்சால், இதுவரை, தனக்கும் ஒரு நேசன் இருந்தான் என்பதை தற்காலிகமாக மறந்துபோன பெண், அவனை நினைவுபடுத்திக்கொண்டு பார்த்தாள். ஏதோ ஒன்றை-விடக்கூடாத ஒன்றை-அங்கேவிட்டு விட்டுப் போவதுபோல் துடித்தாள். இருப்பது வரைக்கும் பெரிதாகத் தெரியாத ஒன்று இழக்கப்படும்போது, அவளை இழுத்துப் பிடித்தது. கண்களை கைகளால் மூடிக்கொள்ளச் செய்தது.