பதிப்புரை
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமானின் நடராஜ தாண்டவத்தைப் பார்த்து சு. சமுத்திரத்திற்கு ஒரு பொறி தட்டிற்று போலும்.
கொடியவனும், அரக்சுனுமான முயலகனைக் காலால் மிதித்து, கையிலே இச்சட்டி ஏந்தி உக்கரத்தோடு நடனமிடும் நடராஜப் பெருமானின் திருக்கோலம், சமுத்திரத்திற்கு ஒரு இவிரவாதக் கதை உருவாகக் காரணமாகிறது.
கொடியவர்களாகவும் கொலை பாதகர்களாகவும் உள்ள ஒரு கட்டுமானக் காண்ட்ராக்ட் நிறுவனத்தன் முறைகேடான செயல்களை எதிர்த்துப் போராட ஒரு இளைஞல் 26 வாறான். தொழிலாளர்களின் உழைப்பால் கொழுத்து வாழும் 'காண்ட்ராக்டர்”களின் கொடுமைகளைத் தட்டிக் கேட்கப் புறப்படும். அந்து இளைஞன், ஈஸ்வர சன்னதியில் சாமியாரால் ஆர்வதிக்கப்பட்டுக் காரியத்தில் இறங்குகிறான்.
பல்வேறு கருத்துக்களால் சிதைந்து கிடக்கும் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, தொழிற் சங்கம் அமைத்து, உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்த முனையும்போது, அவனுக்கும், அவன் காதலிக்கும் காண்ட்ராக்டர்களால் இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு ஈஸ்வர பூஜை செய்துகொண்டிருந்த சாமியாரே கொதித்தெழுகிறார்.
காவியடையைக் களைந்துவிட்டு காக்கியுடை. அணிந்து, புதிய திரிபுரங்களை அழித்து, ஆட்கொள்ளப் புறப்படுகிறார்.
இதில் இடம்பெறும் இன்னொரு நாவலான “கேள்வித் தீ' எனும் குறுநாவலும் ஒரு குருதிப் புனல்தான்.
கல்விக்கூடத்தை தநிர்வகிப்பவன் ஒருவனின் கயமைத்தனத்தையும், பகலுணவுக்கு : வரும் உணவுப் பொருள்களை விற்றுவிட்டு ஆட்டம் போடும் அயோக்கியத்தனத்தையும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரியையும், இவர்களின் கூட்டுச் சதியை தட்டிக் கேட்கும் ஆசிரியர் களை வேலைநீக்கம் செய்யும் அராஜகத்தையும், எதிர்த்துப் போராடும் ஆசிரியர்களின் போராட்டங்களையும் ஆ௫ரியர் சமுத்திரம் அவர்கள் வேசமாகவும் கோபமாகவும் எழுதிக் காட்டுகிறார். படிக்கும் வாசகர்களையும் கொதிக்க வைக்கிறார். புதிய திரிபுரங்களும்' 'கேள்வித் தீவும்” வாசகர்களின் மனதில் ஒரு கோபத் தீயை மூட்டிவிடும் என்பது நிச்சயம்,
கங்கை புத்தக நிலையத்தார்

