Chapter 2
உலகிலேயே மக்கள் தொகையின் அடர்த்தி அதிக மாக உள்ள இடம் எது என்ற கேள்விக்கு எந்த நகரத்தின் பெயரையாவது விடையாகச் சொல்பவர்களை இந்த கிட்டாம்பட்டியில் உள்ள இந்து உயர்தர ஆரம்பப் பாடசாலைக்குக் கூட்டிவர வேண்டும். மண்ணடர்த்தி இல்லாத மண் சுவர்களுக்கு மத்தியில் இருக்கும் வகுப் புக்களை வந்து அவர்கள் பார்க்கட்டும். யார் யார் எங் கெங்கே இருக்கிறார்கள் கான்பதை வகுத்துப் பார்க்க முடியாத அளவிற்கும் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ மாணவியர் முண்டியடித்து உட்கார்த்திருந்தார்கள்.
சிறு வயதிலேயே பிள்ளைகள் ஒருவரோடொருவர் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்தில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கலாம்.
இரண்டு கிழட்டு மாடுகள் சேர்ந்தாற்போல் படுத்தி ருப்பது மாதிரி தோன்றும் அந்தக் கட்டிடம் இரண்டு பிரிவுகளாக, தனித்தனி கட்டிடங்களாக உள்ளன. அந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள இடுக்கில் பழைய பாத்திரங் களும், கிழிசல் குவியல்களும் போடப்பட்டிருந்தன .ந்த இடுக்கிற்கு, சொல்லக்கூடாத, ஒரு சரித்திரமும் உண்டு. ஒரு கட்டிடம் யானைமார்க்' ஒடு போட்டது. இன் னொன்றின் மேல் ஒலைப் பாய்தார் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. அப்பப்போ சில செங்கற்கள் விழுந் தாலும், இதுவரை யிருக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை.
உருப்படியாகக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் "நான்கடி’ வாணம் வெட்டப்பட்டு காரை, சுண்ணாம்பு, கருங்கல் முதலியவற்றோடு துவக்கப்பட்ட கட்டிடந்தான் இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு ஊரில்" கிறிஸ்தவ மிஷின் பள்ளிக்கூடம் ஒன்று துவக்கப்பட்டதும் தெக்கூர் காரர்களான இ ந் த ப் பகுதி மக்கள், தாங்களாகவே பணங் கொடுத்து. சுடலை மாடனை கட்டிடம் கட்ட ச் சொன்னார்கள். அதற்கு முன்பு, நான்கு திண்ணையில்தான் வகுப்புகள் நடந்தன. மாடன், கட்டிடத்திற்கு கால் போட்டபோது, அவரது தந்தை இசக்கி, "எனக்கு ஊருக்குப் பக்கத்திலேயே ஒரு சமாதி கட்ட ஒனும்' என்றார். அந்தக் காலத்தில், வசதியுள்ள வயதானவர்களுக்கு உயிரோடு இருக்கும்போதே, குழி வெட்டப்பட்டு சுற்றிலும் சுவரெழுப்பி நினைவுச் சின்னம் எழுப்பி வந்தார்கள். தந்தைக்கேற்ற மகனான சுடலைமாடன், பள்ளிக்கூடம் கட்ட வைத்திருந்த கருங் கல்லையும், காரையையும் எடுத்து, அப்பனுக்குச் சமாதி கட்டிவிட்டார் பள்ளிக்கூடத்தை வெறும் மண்ணை வைத்து எப்படியோ, ஒப்பேத்தி விட்டார். இப்படி எடுத்த எடுப்பிலேயே சமாதி தானம்' செய்த பெருமை, அந்தக் கட்டிடத்திற்கு உண்டு இன்னும் பெரிய அளவில் இதே மாதிரியான தானத்தை வழங்குவதற்கும் அது தயாராக இருப்பதுபோல் தோன்றுகிறது. எப்படியோ, மண்ணாய் போனவர் காரைக் கட்டிடத்திலும், மாணவ மாணவியராய் போனவர்கள், இந்தக் கிழட்டுக் கட்டிடத் திலும் இருக்கிறார்கள்.
ஆறாவது வகுப்பும், ஐந்தாவது வகுப்பும், அவற்றின் 'பி செக்ஷன்களும கூரைக் கட்டிடத்தில் பாதியிட த்தை ஆக்ரமித்திருந்தன. ஆறாவது வகுப்பின் இரண்டு செக்ஷன்களும், ஒரே செக்ஷனாக்கப்பட்டிருந்தது. காரணம், ஏ. செக்ஷனின் ஆசிரியர் கோவிந்தன், தங்கப் பாண்டியனின் மச்சான். ராசம்மாவின் அண்ணன். அடிக்கடி டவுனில் ‘ஏ’ படம் பார்க்கப் போகிறவர். எப்போது வருவார், அப்படியே வந்தாலும், வகுப்புக்கு வருவாரா என்பதைச் சொல்ல முடியாது. இன்றைக்குச் சம்பள தினம். நிச்சயம் வருவார். மானேஜர் அறைக்கா வது வருவார். இந்த செக்ஷன்களை ஹரிஜனப் பெண்ணான மாரியம்மாள் கவனிக்கிறாள். 'பி' செக்ஷன் ஆசிரியை வடிவு 'மெட்டர்னிட்டி' வீவில் போய்விட்ட தால், லீவ் வேகன்சியில் வந்திருப்பவள் சமீபத்தில்தான் அவள் டீச்சர் ட்ரெயினிங்கை முடித் திருந்த ஸ் தான் கற்ற 'பேசிக் டிரெயினிங்படி நிற்பவள்போல், பாடம் நடத்தினாள்.
பருத்தி எங்கே விளையும் என்று ஒரு கேள்வி யைப் போட்டுவிட்டு, அதை மாணவர்கள் வாயி லிருந்து பறிப்பதற்காகக் காத்திருந்தாள் பருத்தி, எந்த மண்ணில் ஏன் விளைகிறது என்று சொல்லி ’பூகோளத்தையும் விளைந்த பருத்தியை எப்படிப் பிரித்து நூற்கிறார்கள் என்று கேட்டு விஞ்ஞானத'தையும், இந்தப் பருத்தியானது பண்டைக் காலத்தில் எப்போது, எங்கெங்கே விளைவிக்கப்பட்டது, என்ன மாதிரி ஆடை களாக அணியப்பட்டது என்பதைச் சொல்லி சரித்திரத் தையும் பாரி மகளிர் கொடுத்த நீலச் சிற்றாடையை, ஒளவையார் எதனுடன் ஒப்பிட்டார் என்று கேட்டு விளக்கி 'தமிழையும் ஒரு ஏக்கரில் எவ்வளவு பருத்தி விளையும் என்று சொல்லி கணக்கையும் பருத்தியின் ஆங்கில வார்த்தையைக் கேட்டு ஆங்கிலத்தையும்' சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அவள் திட்டம். திட்டத்தை அவள் செயல்படுத்த கேள்வியாக்கியபோது, ஒரு சிறுமி 'டீச்சர்...இவன் என் முதுகைக் கடிக்கான்' என்றாள். அந்தச் சிறுமிக்குப் பின்னாலிருந்த பயலோ 'நான் கடிக்கல டீச்சர். முகத்த வேறுபக்கமா வைக்க இடமில்ல டீச்சர். இவளை "கூன்' போட்டு உட்காராண் 1.ாமுன்னு சொல்லுங்க டீச்சர்' என்று டீச்சருக்கே உபதேசம் செய்தான். மாரியம்மாள் தன் பருத்தி ஆடை முந்தானையைச் சரிப்படுத்திக் கொண்டு, பிள்ளைகளை எட்படி எப்படி இடம் மாற்றி உட்கார வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
'ஐந்தாறு வகுப்புகளைத் தாண்டி, ஏழாவது வகுப்பு. ஐந்தாவது வகுப்பு ஆசிரியரான ஐம்பத்தைந்து வயது சீனிவாசன் க ங் ச எழுத்துக்களை பதினெட்டு தடவ எழுதுங்கடா என்று உத்தரவிட்டார். பிள்ளைகள் 'சிலேட்டில் எழுதிக்கொண்டிருந்தார்கள். ஓரிருவர் எழுதி முடித்துவிட்டு, எழுதியதை அவரிடம் காட்டிய போது, அவர் அந்த எழுத்துக்களை அழித்துவிட்டு, 'இன்னொரு தடவ எழுதுங்கடா என்றார். இதனால் வேகமாக எழுதிக் கொண்டிருந்த சில பயல்கள், மெதுவாக எழுதினார்கள். இன்னும் எழுதாமலேயே இருந்தவர்கள், அப்படியே இருந்தார்கள். கேட்டால் 'இப்பத்தான் அழிச்சேன்' என்று சொல்லலாம். பாவம், சீனிவாசன் கவலை சீனிவாசனுக்கு. தங்கப்பாண்டி இன்னைக்கு சம்பளத்துல எவ்வளவு பிடிக்கப் போறானோ? வாயும் வயிறுமாக வந்து, இப்போது பிள்ளையும் கையுமாக உள்ள மகளை நாளைக்கு புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்கணும். அவனுக்கு சென்னையில் வேலை.
காரைக் கட்டிடத்தில் எட்டாவது வகுப்பும், அதன் செக்ஷன்களும், இன்னும் சில வகுப்புகளும் இருந்தன. "ஏ" செக்ஷன் ஆசிரியை இந்திரா, மானேஜர் அறையில் தான் இருப்பாள். தலைமை ஆசிரியர் தங்கச்சாமி தான் அவளுக்கும் சேர்த்து 'அழ’ வேண்டும். வெளியூர்க் காரரான இந்த ஐம்பது வயது ஆசாமியால் இ.க்கு மடக்கு செய்ய முடியாது என்று தான், தங்கப்பாண்டி இவர் தலையில் ஆசிரியர்களை வைத்திருக்கிறார். வாயில்லா ஜீவன்.
பள்ளிக்கூடத்தில், மொத்தம் பதினாறு ஆசிரியர்கள்; பிள்ளைகள் வருகைப் பதிவேட்டின்படி முன்னுாற்றுக்கு மேலே. வருவதோ...வேண்டாம். வெளியில் சொல்லப் படாது.
தலைமை ஆசிரியர் தங்கச்சாமிக்கு, அன்று கடுமை யான கோபம். மானேஜர் சொல்படி, வெற்றிலைக் கட்டை வாங்கி வந்த அவசரத்தில் சாப்பாடு கொண்டுவர மறந்து விட்டார். தங்கப்பாண்டி வீட்டில் பலகாரங்கள் தின்னப்பட்டபோது, இவர், பள்ளிக்கு ஒரு காரியமாக ஓடிவந்துவிட் டு, வந்த வேகத்துலேயே தி ரு ம் பி ப் போனார் . எல்லாவற்றையும் தின்றுவிட்டு, பத்தாதது போல், அவரையே தின்பவர்கள்போல், பிரமுகர்கள் அவரைப் பார்த்தார்கள். ஆகையால் 'நன்றி ஒருவர்க்குதெரியாதவங்கெல்லாம் எழுந்திருங்கடா என்றார், கையில் பிரம்பைத் தயாராக வைத்துக் கொண்டு. மானேஜர் மகனோடு, மொத்தம் பத்துப்பேர் கம்பீரமாக எழுந்தார்கள்! தங்கசாமி தலையை தாழ்த்திக்கொண்டு பிரம்பை மேஜையில் வைத்தார். ஒருவனால் ஒன்பது பேருக்கு லாபம்!
ஆறாவது 'பீரியட்' முடிந்து ஏழாவது பீரியட் துவங்கியது. சில வகுப்புகளுக்கு விளையாட்டு 'பீரியட். ஒரு சில ஆசிரிய-ஆசிரியைகள் மைதானத்தில் பிள்ளை களை மேய்த்துக்கொண்டே, பேசிக்கொண் டு நின்றார்கள்.
தங்கப்பாண்டி வீட்டில், கோதுமை ரவையும், பஜ்ஜியும் செய்த ஆசிரியை பார்வதி, மாரியம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டே கேட்டாள்: ‘'என்ன மாரி, நாளையோட ஒன்னோட வீல் வேகன்ஸி முடியப் போவுதே, என்ன செய்யப்போறே?'
'அதுதான் எனக்குத் தெரியல...'
"மானேஜர்கிட்ட கேட்டுப் பாத்தியா?”
நான் கேட்டா அவரு இன்னொன்ன கேப்பாரு போலுக்கு...' மாரியம்மாள், கண் கலங்க தலை கவிழ்ந் தாள். இருபது வயதிருக்கும். கறுப்புக்கு அழகுண்டு என்பதைக் காட்டுவதற்காகப் பிறந்தவள் போல் தோன்றி னாள். கையில், கண்ணாடி வளையல்கள். காதுகளில் 'எட்டனா கம்மல்கள்.
மைதானத்தில் தனியாக நின்ற ஆசிரியை இந்திரா போய்விட்டாள். முப்பது வயதுக்காரி. அவள், காது கேட்க முடியாத துரத்திற்குப் போய்விட்டாள் என்பதை குதிகாலை நிமிர்த்தி எட்டிப் பார்த்து அனுமானித்துக் கொண்டே நான்காவது வகுப்பு ஆசிரியை கனகம் கிசுகிசுத்தாள். 'ஒனக்கு கொஞ்சங்கூட மூளையில்ல மாரி, இதே பே.:றாளே...இவள் சரியான கள்ளி...மேனேஜர் கிட்ட நீ சொன்னதைச் சொல்லப் போறாள் பாரு. ’’
'சொன்னால் சொல்லட்டும்!'
'நீ என்ன செய்யப் போற?'
'அதுதான் எனக்கும் தெரியலே. தம்பி தறுதலையா சுத்துறான் அப்பாவுக்கு உடம்பு முடியல. அம்மாவால வயல் வேலைக்குப் போக முடியல இந்த ரெண்டு மாசமா நான் அனுப்புன பணத்துல ஏதோ பட்டினி கிடக்காம யாவது இருக்காங்க... என்ன பண்ணுறதுன்னு புரியல...'
"மானேஜர் கிட்ட பக்குவமா கேட்டுப் பாரேன்.' 'பக்குவமான்னா என்ன அர்த்தம்?' '
இதற்குள் ‘க ங் ச' எழுதச் சொன்ன முதிய ஆசிரியர் சீனிவாசனும் சத்தம் போட்டு பாடம் நடததும் வேலா யுதமும் அங்கே வந்ததால், ஆசிரியைகள் பேச்சை முடிக்க முடியாமலும், தொடர முடியாமலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். சீனிவாசன், தன்முகத்தைத் தானே பார்ப்பவர்போல் அண்ணாந்து பார்த்துக்கொண்டேநின்றார். வேலாயுதம் மட்டும் மாரியம்மாளை ஒரு தினுசாக’ப் பார்த்தான். இதற்குள் பொன்னையா மகள் சரஸ்வதியும் அங்கே வந்துவிட்டாள். அவள் இடுப்பு நனைந்திருந்தது. ஆடையை பிழிந்துவிட்டுக் கொண் டாள்.
"என்னம்மா, மானேஜ்மெண்ட் யாருக்குப் போச்சுது?
'தங்கப்பாண்டி மாமாவுக்குத் தான். ஏலத்துல எடுத்தாரு முப்பதாயிரம் ரூபாய் ஏலம். சீ...நினைச்சிப் பார்க்கவே கேவலமா இருக்கு. ஏலம் போட்டாலும் பள்ளிக்கூடத்தயா ஏலம் போடுறது?’’
'இதவிட இவனுவ பொண்டாட்டிவள ஏலம் போடலாம் '
அதுக்குத் தான் நம்ம இந்திரா இருக்காளே! முப்ப தாயிரத்துக்கு ஏலத்துல எடுத்தவன், நம்மள எப்படில்லாம் ஏலம் போடப்போறானோ? இன்னைக்கு சம்பளம் தரப்போறானோ இல்லியோ? அடேயப்பா முப்பதாயிரம ரூபாய்க்கா போச்சுது'
சரஸ்வதி, தான் கண்டுபிடித்ததைச் சொன்னாள். தங்கப்பாண்டி மாமா கவலப்படுறது மாதுரி தெரியல...'
கனகம், அதன் காரணத்தை விளக்கினாள். அவன் ஊரு தாலிய அறுக்கிறவன்; அவன் ஏன் கவலப்படினும்? நாமல்லா கவலப்படனும் இருநூறு பிள்ளிங்களுக்கு பகலுணவு போட றதா பேப்பர்ல காட்டுறான் கொடுக்கிற கோதுமையையும், எண்ணெயையும் வழி யிலயே வித்துப்புடறான். நம்ம சம்பளத்துல வேற கமிஷன் பிடிக்கான். மொத்தத்துல, ஏலத்துல எடுத்தவன் அவன்; கொடுக்கப் போறது நாம்,'
வேலாயுதம், பாடம் நடத்துவதுபோல் சத்தம் போட்டான். 'இன்னைக்கு சம்பளம் கிடைக்காதுன்னு கேள்விப்பட்டேன். இப்போ...நம்ம சண்முகம் இருந்திருந் தால் ரகளை நடக்கும்.'
பார்வதி, இடைமறித்தாள். 'அப்படில்லாம் நடக் காது. ஏன்னா...தங்கப்பாண்டி மகள் ஊமப் பிசாச சண்முகததுக்குக் கொடுக்கப்போறதா ஒரு பேச்சு அடிப்படுத.'
சரஸ்வதி, இப்போது கொஞ்சம் இன்ட்ரஸ்ட்” காட்டினாள்: 'சண்முகம் ஸார் அவள விரும்புறாரா?' என்று வாய்த்தவறாமல் கேட்டபோது, அனுபவஸ்தரான சீனிவாசன் லேசாகச் சிரித்துக் கொண்டார்.
மாரியம்மாள் ஆச்சரியத்தோடு கேட்டாள். 'அப்ப டி ன்னா இந்த ஸ்கூல்ல மிட்டேய் மீல்ஸ் திட்டம் இருக்கா?’’
'மெள்ள பேசும்மா. இந்திராவுக்கு பாம்புக் காது. பேப்பர்ல சோறு பொங்கி, பேப்பர்லயே கஞ்சி காச்சி ஊத்தறாங்க. இந்த அதியாயத்த யாரு கேக்கப் போறாங்களோ"
"ஓ! அதனாலதான் ஏலம் போட்டாங்களா?' '
'ஆயிரந்தான் இருந்தாலும், ஒரு பள்ளிக்கூடத்த ஏலம் போடுறது என்கிறது சரஸ்வதி தேவியையே போடுறது மாதிரி...'
சீனிவாசன் விளக்கினார்: "பணம் பண்ணணுமுன்னு ஒருவனுக்கு ஆசை வந்துட்டா, பெத்த தாயைக்கூட ஏலம் போடு வான். பள்ளிக்கூடம் எம்மாத்திரம்? இப்போ நாட்டோட போக்கே புரியல. மானேஜ்மென்ட் ஏலம்! எம்.பி.பி.எஸ். சீட்டு ஏலம்! மாப்பிள்ளை ஏலம்! இதனால் தான் டாக்டருங்க நோயாளிங்கள ஏலம் போடறாங்க.
அரசியல்வாதிங்க நாட்டை ஏலம் போடறாங்க. எல்லாமே ஏலமயமாயிட்டு. நம்ம நாட்டுப் பாடலுல ஏலேலோ ஐலஸா'ன்னு ஒரு பாட்டுவரும் பாருங்க... அந்தப் பாட்டை எல்லோரும் வேற மாதிரி புரிஞ்சிக் கிட்டது மாதிரி தோணுது. வசதியுள்ள வங்கெல்லாம், வசதியப் பெருக்கிக்க ஏலம் போடுறதுனால, ஏழைங்க தங்களோட வயித்த ஏலம் போட வேண்டிய காலமா போயிட்டுது. இந்தப் பொன்னையா இப்பத்தான் வந்து புலம்பிட்டுப் போறான். நாலு மணிநேரம் விறகு வெட் டுனானாம். மூனுபைசாகூடக் கொடுக்கலியாம். சரஸ்வதி தினமும் மாட்டுத் தண்ணி எடுத்து ஊத்துறாளாம். ஒரு ஏழப் பொண்ணுக்கு வேலை போட்டு கொடுத்ததுக்காக இப்படியா கொத்தடிமையா நடத்துறது? சரஸ்வதி... நான் ஒன்னோட வயசுல பெரியவன். என் மகளவிட வயசில சின்னவள் நீ. நான் சொல்லுததை தப்பா நினைக்க மாட்டியே?’’
'உங்க வாயில தப்பித் தவறி தப்பு வந் தாக்கூட அந்த தப்புகூட தன்னச் சரிக்கட்டிக்கிட்டு நல்லதா வரும். சும்மாச் சொல்லுங்க.'
"எப்படிச் சொல்றதுன்னு புரியல. சரி...எப்படியும் சொல்லித்தான் ஆகணும். ஒப்பன் வேணுமுன்னா விறகு கீறட்டும் ஒம்மா வேணுமுன்னா கோதுமை புடைக் கட்டும ஒன் தம்பி வேணுமுன்னா மாட்டக் கட்டட்டும், ஆனால் நீ தங்கப்பாண்டி வீட்டுக்குப் போகக்கூடாது. ஊர்ல நாலுபேரு நாலு விதமாச் சொல்லு தாங்க. '
'என்ன சார் நீங்க தராதரம் தெரியாம...அவரு எனக்கு அப்பா மாதிரி...'
தராதரம் தெரிஞ்சதாலத்தான் சொல்லுறேன். இன்னொருத்தின்னா சொல்லமாட்டேன். தங்கப் பாண்டிய...நீ அப்பா மாதிரி நினைக்கலாம். அதனாலயே அவன் உன்னை மகள் மாதிரி நினைக்கணுமுன்னு எதிர்பார்க்கக் கூடாது. அப்படியே அவன் நினைச்சாலும் ஊரு நம்பாது. இந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கிற எல்லா வாத்திச்சிகளையும் ஒரு மாதிரி பார்க்கிற ஊர்க்காரனுவ...அவன் வீட்டுக்குப் போற ஒன்னை, வாயில போடாம விட்டு வைப்பாங்களா?
பார்வதி, மானேஜர் வீட்டு வாணலியில் கொதிக்க வைத்த எண்ணெய் மாதிரி கொதித்தாள். 'புறம் பேசற துக்கு ஊர்க்காரனுவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு? எவ்வளவோ அநியாயம் நடக்கு... அதப் பாத்துட்டு இருக்கிற இவங்களுக்கு நல்ல வார்த்தை பேசறதுக்குக் கூட யோக்கியத கிடையாது.
.' நான்தான் சொல்லிட் டேனே காலத்தோட கோளா றுன்னு. கழுதய விடு. ஊர்க்காரங்களுக்கு யோக்கியதை இருக்கோ இல்லியோ, அவுங்க பேசுற வார்த்தைக்கு சரஸ்வதியோட கல்யாணத்த நிறுத்தற சக்தி இருக்கு. அப்படியே அவளுக்குக் கல்யாண ம் நடந்துட்டாலும், அவள் புருஷன் அவளை தள்ளி வைக்கதுக்கு சந்தர்ப்பம் கொடுக்கிற சக்தி அவங்க வாயில இருக்கு நான் சொல்றத அவள் கேட்டாக் கேட்கட்டும்! விட்டா விடட்டும்.'
இதற்குள் இந்திரா அங்கே வந்துவிட்டாள். உடம்பு முழுவதையும் குலுக்காமல், தனி நடையாக நடப்பவள். மாநிறம் என்றாலும், நல்ல முகவெட்டு. சினிமாக்காரர் கள் எப்படி இவளை விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
சீனிவாசன் இப்போது வேறுவிதமான வாய்பாட்டுக்கு வந்தார். நமக்கு நல்ல காலம், மானேஜ்மென்ட் ஆண்டவன் அருளால், தம்ம தங்கப்பாண்டிக்கு வந்துட்டு. ராஜலிங்கத்துக்குப் போயிருந்தா பள்ளிக்கூடத்துல கழுத மேயும். அல்லி ஆட்சிதான் நடக்கும். மேரிபுஷ்பம் அந்த
ரெண்டு வார்தைக்கும் எதிர் அர்த்தமுள்ளவள். தங்கப் பாண்டி வழி வருமா? பாவம், முப்பதாயிரம் ரூபாய்க்கு என்ன பண்ணப்போறானோ? கடவுள்தான் வழி காட்டனும்!'"
சரஸ்வதிக்கு, சற்று நேரத்திற்கு முன்புவரை, தக்க சமயத்தில் வழிகாட்டியவர்போலத் தோன்றிய அந்தக் கிழவர்மீது இப்போது வெறுப்பு ஏற்பட்டது. ஒரே நாக்கு...ஒரே சமயத்துல எப்படில்லாம் பேசுது. இந்தக் கிழவனவிட, அந்த இந்திரா எவ்வளவோ மேலு. இவரு, என்னைப்பற்றி ஊர்ல தப்பா பேசுறதா சொன்னது கூட தப்பாத்தான் இருக்கும்.'
ஹரிஜனப் பெண் மாரியம்மாள் யோசித்தாள். இந்திராவிடம் மன்றாடி வேலையை மேற்கொண்டு தொடர முடியுமா என்று நினைத்தாள். பிறகு தேவடியா கிட்ட யாசகம் கேட்கிறது, தேலடியாளா மாறுறதுக்கு பேஸிக் பயிற்சி பெறுவது மாதிரி' என்று நினைத்துக் கொண்டவள் போல், இந்திராவை அலட்சியமாகப் பார்த் துக்கொண்டு நின்றாள்.
"எப்படியோ ஒரு வழியா முடிஞ்சுது...' என்ற குரலைக் கேட்டதும், எல்லோரும் நிமிர்நது பார்த்தார் கள் தங்கப்பாண்டி வருவது தெரிந்தது. ஊர்க்காரர் ஒரிரு வரின் கேள்விக்கு, அவர்களை லட்சியப்படுத்தாமலே பதிலளித்துக் கொண்டு, காரைக் கட்டிடத்திற்குள் அவர் நுழைந்தபோது, இந்திரா தவிர, மீதி எல்லோரும் அலறி அடிததுக்கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை கள் பக்கமாகப் போனார்கள்.
தங்கப்பாண்டி, தனது நிர்வாக அறைக்குள் வந்து சுழல் நாற்காலியில் உட்கார்ந்து லேசாக ஆடிக் கொண் டார். அந்த அறையின் வாசல்பக்கம் தயாராக இருந்த பதினெட்டு வயதுப் பெருமர்ள், மின்சார விசிறியை தட்டிவிட்டான். மானேஜரின் லதர் பேக்கை பெளவிய மாக வாங்கி, ரேக்கில் வைத்தான். இவன், அந்தப் பள்ளிக் கூடத்தில் பார்ட் டைம்" தையல் ஆசிரியன்; ஒன்பதாம் வகுப்பு பெயில்; சட்டையில் காசா போடத் தெரிந்தவன். 'லதர் பேக்கை' மானேஜர், தன்னிடம் கொடுத்ததில் இருந்து, அந்தப் பைக்குள் பணம் இல்லை என்பதும். ஆசிரியர்களுக்கு பைகள் கணக்காது என்பதையும் கணக்கெடுத்துக் கொண்டான். உடனே ஒடிப்போய் சீனிவாச ஆசிரியரிடம் விண்டுரைக்க நினைத்தவனைப் பார்த்து ஒரு தலவலி மாத்திர வாங்கியாடா' என்றார் தங்கப்பாண்டி.
தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, தங்கப்பாண் டிக்கு எதிரே வந்து நின்று, அவர் கண்களை மறைக்கும்படி, அவர் கண்ணளவிற்குக் குனிந்து, கைகளைத் தூக்கி கும்பிடு போட்டுவிட்டு நின்றார். மானேஜர் உட்காரச் சொல்லவில்லை. தலைமைக்கு உட்காரப் பயம். ஒரு தடவை இப்படி உட்காரப் போனபோது, 'இப்ப என்ன ராமாயணமா நடத்தப் போறோம். அப்படியே நின்று விஷயத்தக் கேட்டுப்புட்டு போகாம...' என்று "கட் அண்ட் ரைட்டாக தங்கப்பாண்டி சொல்லி விட்டார். தலைமை ஆசிரியர் மாணி.ஆகையால் உட்கார வில்லை.
வீட்டில் பரமசாது மாதிரி, பதுங்கி உட்கார்ந்து இருந்த தங்கப்பாண்டி இப்போது சிங்கம் மாதிரி நிமிர்ந்து பார்த்தார். அது என்னமோ தெரியவில்லை...இந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்ததும், அதுவும் இந்த தலைமை ஆசிரியரைப் பார்த்ததும் மானேஜருக்கு ஒரு மிடுக்கு வந்து விடும். போலீஸ்காரர் யூனிபாரத்தை போட்டதும் துள்ளுவாரே அப்படி. பேப்பர் வெயிட்டை எடுத்து, தன் கன்னத்தில் அழுத்திக் கொண்டே, தங்கப்பாண்டி தலைவலி மாத்திரையை எதிர்பார்த்து இருந்தபோது, தலைமை ஆசிரியர் இழுத்தார்:
'சம்பளம் எப்.டி...?
'எல்லாரும் கையெழுத்துப் போட்டுட்டாங்களா?'
'இனுமதான்.'
" மொதல்ல அதைச் செய்யுங்க சார்.'
ஏற்கெனவே ஸ்டாம்ப் வைத்து, எழுதப்பட்டிருந்த சம்பளப் பட்டியலை எடுத்து தலைமை ஆசிரியர் புரட்டிப் பார்த்தபோது, தையல் ஆசிரியப் பையன் பெருமாள், தலைவலி மாத்திரையோடு வந்துவிட்டான். தலைமை ஆசிரியர், அந்த மாத்திரையை வாங்கிக்கொண்டு அவனிடம் சம்பளப் பட்டியல் ரிஜிஸ்டரை நீட்டினார்... வாயால் சொல்லவேண்டிய அவசியமில்லாதபடி அவன் ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்கப் போனபோது, தலைமை ஆசிரியர் தங்கசாமி, பிளாஸ்கில் இருந்த காபியை கண்ணாடி டம்ளருக்குக் கொண்டு வந்துவிட்டு, அதை மாத்திரையோடு மானேஜரிடம் நீட்டினார். தங்கப் பாண்டி முகத்தைச் சுழித்துக்கொண்டு, மாத்திரையையும் காப்பியையும் விழுங்கிவிட்டு, கடிகாரத்தைச் சுற்றிய தங்கச் செயினில் தெரித்த காபி துளிகளை, மேஜையில் கிடந்த டஸ்டரால் துடைத்துக் கொண்டிருந்தபோது, கந்தசாமிக் கிழவர் செருமிக்கொண்டே வந்தார்.
தங்கப்பாண்டி, தலைமை ஆசிரியரைப் பார்த்து 'நோட்ஸ் ஆப் லெசன்ஸை எல்லாம் போய் செக்கப் பண்ணுங்க ளார்' என்றதும், அதன் நோட்டத்தைப் புரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் வெளியேறினார்.
கந்தசாமிக் கிழவர், எதிர் நாற்காலியில் உட்காரப் போனார். தங்கப்பாண்டி, அவரை "சைட் நாற்காலியில் உட்காரச் சொன்னார். முக்கியமான புள்ளிகளும், புள்ளி போட வேண்டிய முக்கிய ஆசாமிகளும் உட்காரும் நாற்காலி அது.
கிழவர் செறுமிக்கொண்டே பேசினார். 'எனக்கு இன்னும் மனசு கேக்க மாட்டக்குப்பா... நீயும் மானேஜ் மெண்டை தரமுடியாதுன்னு ஒத்தக் காலுலயே நினுை ருக்கணும். நான் பாட்டுக்கு ஒனக்காவ... கரடி மாதிரி கத்துறேன். இந்த மணியமோ, கர்ணமோ ஒப்புக்காவ கூட சப்போர்ட் பண்ணல பாரு... எத்தன தடவ ஒன் கிட்ட கோதும மாவ வாங்கியிருக்காங்க. அவங்க பொண்ணுங்களுக்கும் வேல போட்டு வேற கொடுத் திருக்கே. ஒரு நன்றி இல்ல பாரு... இந்தமாதிரி ஆளுங் களுக்குத்தான் நீ உதவுவ...'
"நீரு என்ன கேட்டு, நான் என்ன செய்யல...? நேத்துகூட அத்தகிட்ட மூனுபடி கோதும மாவு...'
"நான் அதச் சொல்லலடே... என் தங்கச்சி மவனுக்கு ஒரு வேல போட்டு கொடுடான்னு கரடியா கத்துறேன். ஆறு மாசமா என் தங்கச்சி வீட்டுக்கு நடையா நடக்கா. நீ நினைச்சா முடியாதா? சவத்துப் பயலுக்கு வாத்தியார் வேல கிடச்சிட்டா என் மவள கட்டி வச்சிருவோமில்ல
"கொஞ்சம் பொறும். இப்போதைக்கு வேல எதுவும் காலியா இல்ல. மூணு வாத்திச்சிங்க கல்யாணம் ஆக ம இருக்காளுவ. எவளாவது ஒருத்திக்குக் கல்யாணம் ஆவட்டும். காரியத்த முடிச்சிடலாம்.'
"எவளுக்குக் கல்யாணம் முடிஞ்சுது? இந்த பறப்பய மொவள வேலையில சேர்த்த...'
தங்கப்பாண்டிக்குக் கோபம் வந்தது. கந்தசாமிக் கிழவரை, மானசிகமாக வாசலுக்கு வெளியே கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். மானசிகமாகத்தான்! என்ன
பண்றது? கெஜட்டட் ஆபீஸரா இருக்கிற தம்பி ராஜலிங்கம் இனிமேல் உதவுவது சந்தேகந்தான். பள்ளிக் கூடத்துல எதாவது பிரச்னை வந்தால் இந்தக் கிழவன் தேவை. இவனோட கொழுந்தியா பகன் இன்னொரு மாவட்டத்தில் கல்வி அதிகாரியாய் இருக்கான்.
கந்தசாமிக் கிழவர், 'என்னடே பேசமாட்டக்கே. அவனும் மெட்ராஸ்ல வேல பாத்துட்டு, வேல பிடிக்க லேன்னு வந்துட்டான். ஒரு வருஷமா ஊரச் சுத்துறான். நீ ஒரு வேல போட்டுக் கொடுத்தால், என் மகளை ஒப்ப டைச்சிடுவேன். ஒனக்கு என்னடான்னா, அந்த பறப்பய மவள், உசத்தியாப் போயிட்டு...' என்றார்.
தங்கப்பாண்டி , சற்று காரமாகவே பதிலளித்தார். 'விஷயம் தெரியாமப் பேசப்படாது மாமா! என்னோட சரிக்கு சமமா உட்கார்ந்திட்டால் ஒமக்கு விஷயம் தெரிஞ்சதா ஆயிடாது.' "
"சரி. தெரியாதவனுக்குத்தான் சொல்லிக் கொடேன்.'
'அப்படிக் கேளும்... இப்போ சர்க்கார்ல ஒரு ரூல் போட்டிருக்காங்க. அதன்படி ஒரு பள்ளிக்கூடத்துல, ஒரு வேல காலியிருந்தால், முதல்ல ஹரிஜனங்கள்ல ஒருத்தருக்கு அந்த வேலய கொடுக்கணும். வேற யாருக்கும் கொடுக்கக் கூடாது. ரெண்டாவதா வேலை வந்தால் பேக்வேர்ட் -. அதாவது நம்மள மாதுரி பிற்பட்ட ஜாதியச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுக்கணும். மூணாவதா வேல வந்தால், எந்தச் சாதிய சேர்ந்தவருக்கும் தகுதிப்படி வேல கொடுக் கலாம்.'"
'இழவுல இவ்வளவு சிக்கல் இருக்கா?'
'கரெக்டா சொல்லிட்டீங்க... இது கிட்டத்தட்ட இழவு மாதிரிதான். இருந்தாலும், சர்க்கார் கோலத்துல பாஞ்சால், நாங்க குதிருக்குள்ள பாயிறவங்க.'
'புரியும்படியாச் சொல்லு.'
'அதாவது, முதல் வேலய ஹரிஜனத்துக்குக் கொடுக் கணுமுன்னு சட்டம் சொல்லுது. இதுக்காக என்ன பண்ணுறோம் தெரியுமா? யாரையாவது ஒரு ஆசிரியரை ரெண்டுமாசம் லீவுல போகச் சொல்லுறது. இருபத்தோறு நாளைக்கு மேல ஒருத்தர் வீவுல போனாலே, இன்னொரு வாத்தியார போடலாமுன்னு ரூல் இருக்கு. லிவுல போற. வாத்தியாருக்குப் பதிலா ஹரிஜன வாத்தியாரப் போடு வோம். லீவுல போன வாத்தியார் டுட்டில சேர்ந்ததும் ஒரு ஹரிஜன ஆசாமியோட வேல ரத்தாயிடும். அப்புறம் யாருக்காவது கல்யாணம் நடந்தோ இல் ல கருமாந்திரம் நடந்தோ ஒரு வேகன்ஸி வருதுன்னு வச்சுக்குவோம், அதுல பிற்படுத்தப்பட்ட ஜாதில இருந்து ஒருவர போட்டு டலாம். இப்ப எல்லாருமே இப்பிடி வீவ் வேகன்ளtல ஹரிஜன போட்டுட்டு, பெர்மனன்ட் வேகன்ஸில, வேண்டிய ஆளப் போடுறாங்க. கவர்மெண்ட் எங்கள ஒண்ணும் ஆட்ட முடியாது. சர்க்காருக்கும் இது தெரியும். அவங்க அடிக்கது மாதிரி அடிக்கிறாங்க... நாங்க அழுகிறது மாதிரி அழுகிறோம்... அவ்வளவுதான்.'
கந்தசாமிக் கிழவர் கிட்டத்தட்ட எம்பி எம்பிக் குதித்துப் பேசினார். 'தங்கப்பாண்டி... நீ எலெக்ஷன்ல நிற்க வேண்டிய ஆளுப்பா. இந்த பரட்டத்தலைக்குள்ள எவ்வளவு பெரிய மூளப்பா? நான் சரியான கூமுட்டை... இது தெரியாம ஒன்னத் தப்பா நினைச்சுட்டேன். சரி... இந்தப் பறப்பய மவளுக்கு வேல எப்ப முடியுது?’’
'இன்னையோட சரி.'
'அப்போ நம்ம பயலுக்கு?’’
"கொஞ்சம் பொறும். இந்த சரஸ்வதிப் பொண் னுக்கு ஒரு மாப்பிள்ள பார்த்திருக்கேன். மாப்பிள்ளைக்கி செங்கல்பட்டு ஜில்லாவுல வேலை. அநேகமாக குதிரும் .
அவளுக்குக் கல்யாணம் செய்து, புருஷனோட அனுப்பி வச்சிடலாம். அந்த இடத்துக்கு நம்ம பயலைப் போட்டுடலாம். **
'ஆண்டவன் புண்ணியத்துல நீதான் அந்தப் பொண்ண கரையேத்தணும். பாவம் ஏழப் பொண்ணு. கல்யாணம் இந்த வைகாசில முடிஞ்சிடுமா?’’
அநேகமா பழந்தான். அப்புறம் ஒம்ம பயல் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல பதிஞ்சிருக்கானா?"
'அப்படித்தான் சொன்னான்.'"
"அப்படின்னா கவல இல்ல. இருந்தாலும் ஒரு சிக்கல். அவன் பேரு விஸ்ட்ல இல்லாட்டா கஷ்டம்.'
'இல்லாட்டா ஒண்ணும் பண்ண முடியாதோ?’’
"பண்ணலாம். எம்ப்ளாய்மெண்ட். லிஸ்ட்படி வந்த வங்க சரியில்லன்னு, லிஸ்ட திருபபி அனுப்பலாம். இப்படி ரெண்டு மூணு தடவ புதுசு புதுசா லிஸ்ட் வாங்கி, நம்ம பயல உள்ள தள்ளிடலாம். ஆனால் கொஞ்சம் செலவாகும்.'
'ஏண்டே மூடி மூடிப் பேசுற ஒன் ரேட்டுத்தான் எவ்வளவு?'
'இந்த சர்க்காரே சுத்த மோசம் மாமா. கிறிஸ்டியன் பள்ளிக்கூடம் மைனாரிட்டிங்க நடத்துற ஸ்கூலாம். அத னால அதுக்கு எம்ப்ளாய்மெண்ட் ஆபீசுக்கு போக வேண் டாமாம் அவங்களே யார வேணும்னாலும் போட்டுக்க லாமாம். ஆனால் நான் போகணுமாம் இதனால என்ன ஆகுது தெரியுமா? அவங்க இஷ்டப்படி யார வேணும் னாலும் போட்டுக்கிடலாம். அதுக்கு பத்தாயிரம் ரூபாய் வாங்குறாங்க. நான் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் சரிகட்ட, தாயா அலையுறேன். இவ்வளவுக்கும் ஐயாயிரந்தான் வாங்குறேன்.'
கந்தசாமிக் கிழவரும், தங்கப்பாண்டியும் சம்பந்தப் பட்ட விவகாரத்தைப் பேசிவிட்டு, சம்பந்தமில்லாத விவ காரங்களைப் பேசப்போனபோது, மணி நாலரை. நான்கு இருபதுக்கு மணியடித்து, பிள்ளைகள் போய்விட்டார்கள். ஆசிரிய-ஆசிரியைகள் காத்து இருந்தார்கள். ஒரு சில ஆசிரியர்கள் இடுக்கில் நின்றபடியே உள்ளே, எட்டிப் பார்த்தார்கள். சிலர் தண்ணிர் குடிக்க வருகிற சாக்கில் அந்தப் பக்கமாக வந்து, தலையைக் காட்டினார்கள். இந்திரா வாசல் பக்கமாக வந்து, தங்கப்பாண்டி யை விநோதமாகப் பார்த்தாள். உடனே அவர் 'சரி மாமா, மீதி விஷயத்தை நாளைக்குப் பேசிக்கிடலாம்' என்று சொல்லிவிட்டு நாற்காலியை விட்டு எழுந்தாலும், கிழவர் எழவில்லை. ஆகையால் தங்கப்பாண்டியே வெளியே வந்தார்.
இடுக்குக்குள் நின்றுகொண்டிருந்த ஆசிரியர்களைப் பார்த்து நேராகப் போனார். அவர்கள் சிலிர்த்து நின்றார் கள் தங்களைக் கூப்பிடாமல், அவரே வந்ததன் ஆபத் தைப் புரிந்துகொண்டார்கள்.
தங்கப்பாண்டி, அவர்களை சிங்கம்போலப் பார்த்து விட்டு கம்பீரமாகப் பேசினார்: 'இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கங்க. அடுத்தவாரம் தந்துடுறேன்.'
சொல்லிவிட் டு திரும்பப்போன தங்கப்பாண்டியின் காதுகளில் விழும்படி, சீனிவாசன் பெளவியமாகக் கேட் டார்:
'நாளைக்கி என் மகள அனுப்பணும். மாரியம்மாள் வேற நாளைக்கி ஊருக்குப் போவணும். இல்லன்னா ஒங்ககிட்ட இருந்தா என்ன எங்ககிட்ட இருந்தா என்ன? பாதிப் பணத்தையாவது...'
தங்கப்பாண்டி, அவர்களை தன் தம்பி ராஜலிங்கத் தின் கூறுகளாக நினைத்துக்கொண்டு, கூர்மையாகப் பேசினார்: "ஒரு வாரம் பொறுத்துக்கப்படாதா?
ஊரவிட்டு ஒடியா போறேன்? ஒங்களுக்கெல்லாம் ராஜ லிங்கம்தான் லாயக்கு. கசக்கிப் பிழிஞ்சி எடுத்திருப்பான். ஏதோ ஒரே குடும்பமா இருந்து தொலைச்சிட்டமேன்னு, முப்பதாயிரம் ரூபாய் ஏலத்துல எடுத்திருக்கேன். அவசரத்துக்கு உங்க பணத்தை கொடுத்திட்டேன் ஒரு வாரம் பொறுக்கப்படாதா? நியாயமாப் பாத்தால், இந்த மாசம் ஒங்களுக்கு சம்பளமே கொடுக்கப்படாது. ஏன்னா, என்னோட சேர்த்து, நீங்களும் ராஜலிங்கத்துகிட்ட சிக்காம இருக்கதுக்கு முப்பதாயிரம் ரூபாய் செலவளிச் சிருக்கேன். இந்தக் காலத்துல நல்லது செய்தாக்கூட கெட்டதாத்தான் முடியுது. சரி ஒரு வாரம் பொறுத்துக் கங்க. சீனிவாசன் ஸார், என் பசங்களுக்கு ஸ்பெஷல் கோச்சிங் கொடுத்திட்டுப் போங்க.'
தங்கப்பாண்டி போய்விட்டார். இந்திரா இருந்ததால் எதுவும் பேச முடியாமல் அங்கே இருந்த ஆசிரியா கள் அத்தனை பேரும் விக்கித்து நின்றார்கள். இறுதியில் ஒவ்வொருவராக நகர்வது தெரியாமலே நகர்ந்தார்கள்.
சீனிவாசன் மட்டும், அடைபட்டுக் கிடந்த நான் காவது வகுப்பு மாணவர்களிடம் வந்தார். 'வீட்டுக்கு எந்த முகத்தோடு போவது? உண்பதற்கே நெல் இல்லை, விற்பதற்கு ஏது? மருமகப் பிள்ளையோ கறார் பேர் வழி. நாளைக்கு எப்படியும் மகளை அனுப்பியாக வேண்டும். சென்னைக்கு டிக்கட் முப்பது ரூபாய். கூடப் போகும் மனைவிக்கு முப்பது. அவள் திரும்பி வர முப்பது. செலவுக்கு ஐம்பது. பேரனுக்கு கால் பவுன் மோதிரம் போட இருநூறு மொத்தம்...'
சீனிவாசன் சுக்கு நூறாக உடைந்து போய், வீட்டை விட, வகுப்பறையே தேவலை என்பதுபோல் பையன் களிடம் போனார். இந்தப் பிள்ளைகளுக்கு அபிஷியல்’ ஆசிரியர் தங்கப்பாண்டி. அவர் வகுப்புக்கு வநததே கிடையாது. ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு வாரம் முழுவதும் சாயங்காலம் குறைந்தது ஒரு மணி நேரமாவது இவர்க்ச்ளுக்கு ஸ்பெஷல் கோச்சிங்' நடத்த வேண்டும். இதே போல் இவர் மச்சான், கோவிந்தன் வகுப்புக்கும். சில ஆசிரியர்கள் ஆசிரியப் பணி அல்லாத தங்கப்பாண்டியின் காரியங்களுக்கு அனுப்பப்படும்போதும், அவர்கள் வகுப்பு களுக்கும் கோச்சிங் எடுக்க வேண்டும்.
சீனிவாசன், ஒரு கழித்தல் கணக்கைப் போட்டுவிட்டு வகுப்பதிரக் கேட்டார்.
'சைபருக்கு ஒன்பது போகுமாடா?'
'போகாது ஸார்...' '
போகாட்டா என்ன பண்ணனும்?'
'இரண்டாவது ஸ்தானத்துல கடன் கேட்கணும்.'
'எப்படிக் கேட்கணும்? புண்ணாக்குக் கழுதைகளா! சொல்லிக் கொடுத்தது மறந்துபோச்சா? சொல்லுங்கடா. எப்படிச் சொல்லணும் ஒ...இரண்டாவது...'
பிள்ளைகள் திருப்பிச் சொன்னார்கள்: ஏ...இரண் டாவது ஸ்தானத்துல இருக்கிற இரண்டே! ஒரு பத்தை கடன் தா...ஒரு பத்தை கட ன் தா...'
'என்ன தா...?
'ஒரு பத்தைக் கடன் தா...ஒரு பத்தைக் கடன் தா...' சீனிவாசனுக்கு திடீரென்று கோபம் வந்தது.
'ஏ கடன்காரப் பசங்களா! இனிமேல் கடன் தா, கடன்தான்னு சொல்லப்படாது. நான் சொல்றது மாதிரி சொல்லணும். நல்லா கவனிங்க. ஏ. இரண்டாவது ஸ்தானத்துல இருக்கிற இரண்டே...ஒன்கிட்ட இருந்து, ஒரு பத்தைப் பறிக்கப் போறேன். எதைப் பறிக்கப் போறேன்? சொல்லுங்கடா...'
சிறுவர்-சிறுமியர் உற்சாகமாகக் கத்தினார்கள். 'ஒரு பத்தைப் பறிக்கப் போறேன்...ஒரு பத்தைப் பறிக்கப் போறேன்...'

