உவமைகளும் பழமொழிகளும்
இந்த நாவலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உவமைகளும் பழமொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அக அழகை முக அழகு காட்டும்
அடுத்தது காட்டும் பளிங்குபோல்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
ஆசை வெட்கம் அறியாது
ஆய்ந்தோய்ந்து பாராதான் தான் சாகக்கடவன்
ஆயுதத்தைத் செலுத்தியவனைச் சினக்காமல் ஆயுதத்தைச் சினப்பதற் கொப்ப
ஆழம் அறியாமல் ஆற்றில் இறங்குவது போல
இஞ்சி தின்ற குரங்குபோல் இருப்புத் தூணைச் செலெரிக்குமா?
இரைக்காக விண்ணிற் பருந்து வட்டமிடுவது போல்
இறந்த உயிர் மீண்டதுபோல
உடலுக்குள் உயிர்போல
உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்
உள்ளங்கை நெல்லிக்கனிபோல
ஊமை கண்ட கனவுபோல .
ஊர் வாயை மூட உலைமூடி உண்டா ?
எள்ளுக்குள் எண்ணெய் போல
கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே ?
கடல் நீர் முழுவதையும் நண்டு வளையில் அடைப்பதுபோல
கரும்புக்குள் சாறு போல
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப் பூண் கட்டினது போல
கன்றை யிழந்த ஆன்போல
கீரியும் பாம்பும் போல
குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகாதது போல
குருடன் முன் பந்தம் பிடித்தது போல்
குருவியின் தலைமேலே பனங்காயைக் கட்டி வைப்பது போல
கூட்டத்தைப் பிரிந்த மான்போல
கட்டிலடைபட்ட பஞ்சவர்ண கிளியைப்போல
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்
கொள்ளித் தேளுக்கு மணியங் கொடுத்தது போல
கோபம் பாபம் சண்டாளம் சாட்சிக்காரன்
காலில் விழுவதைப் பார்க்கிலும் சண்டைக்காரன்
காலில் விழுவது நலம் சுவரை வைத்துக் கொண்டல்லவோ
சித்திரம் வரைய வேண்டும்
சுழற்காற்றிலகப்பட்ட துரும்பு போல
செவிடன் காதில் இன்னிசை பாடினதுபோல
சென்ம குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது
தலைமயிரை எண்ணினாலும் குற்றங்களை எண்ணமுடியுமா ?
தானே வருகிற செல்வத்தைத் தள்ளிவிடலாமா?
திக்கற்ற பிள்ளைக்குத் தெய்வமே தந்தை
திங்களைக் கண்ட கடல் போல
தீமலைமேலே கற்பூரக் கணையைச் செலுத்தியது போல
நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்து குறுக்கே போட்டது போல
நீர்மேல் எழுதிய எழுத்துப்போல
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
பட்டப்பகல் போல
பதறாத காரியம் சிதறாது
பாம்பைத் தீண்டியவள் போல
புலிவாயிலகப்பட்ட மான்போல
பூனை வாயி லகப்பட்ட கிளிபோல
பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ
பொன்மலையைச் சேர்ந்த காகமும்
பொன்னிறம் ஆவது போல
மலையும் மலையும் தாக்கியது போல்
மாணிக்க ஏனத்தில் வைக்கவேண்டிய தேவாமிருதத்தை
மண் ஏனத்தில் வைக்க விரும்புவது போல
முள்ளிலே சேலை மாட்டிக்கொண்டால் மெள்ள மெள்ள எடுக்க வேண்டும்
விண்ணில் வில் தோன்றி மறைவதுபோல
வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல

