நவகாளி யாத்திரை

"வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பலகணி வழியாகப் பார்த்தால், அந்தப் பலகணியின் அளவு தான் வெளியே தெரியும் என்பது கிடையாது, சின் னப் பலகணியின் வழியே வெகு தூரம் பார்க்கலாம்.

அதுபோலவே "சாவி" இரண்டு தினங்களே காந்தியுடன் இருந்த போதிலும் பலகணி வழியாகப் பார்ப்பது போலப் பார்த்து மகாத்மாவின் நவகாளி யாத்திரை முழுவதையுமே கண்ணோட்ட மிட்டு எழுதியிருக்கிறார். வெகு ரசமாகவும், எழுதி யிருக்கிறார்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச் சுவை கட்டுரைகள் அல்ல; வெறும் பிர யாணக் கட்டுரைகள் அல்ல ; சரித்திரத்தில் இடம் பெறவேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மிகக் கட்டுரைகள் ; இலக்கியம் என்று சொல்வ தற்குரிய ரசமான கட்டுரைகள்."

ரா. கிருஷ்ணமூர்த்தி,

* கல்கி "