Chapter 11
செல்வா, லுங்கியில் பேண்டுக்கும் தாவியதும், அவன் எங்கேயோ புறப்படுகிறான் என்று யூகித்துக் கொண்ட அருண், "நானும் வாரேன் அண்ணா " என்றான். “நானும்” என்றாள் சுபேதா. பொதுவாக இந்த மாதிரி மாலை மயக்க நேரத்தில் செல்வா, இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு கடற்கரைக்கு போவான். ஒவ்வொரு கையிலும் ஒவ்வொருவரை பிடித்துக் கொண்டு, அருகே உள்ள கடற்கரைக்கு பொடி நடையாய் நடப்பான். சுபேதாவின் கால் வலித்ததும், அவளை தோளில் போட்டுக் கொள்வான். அண்ணனோடு உட்கார்ந்து குடை ராட்டினம், ஆகாய ராட்டினம் போன்றவற்றில் சுற்றுவதும், வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் நடக்கும் சங்கதிகள். அதோடு பெரிய பெரிய பலூனாய் வாங்கிக் கொடுப்பான். அம்மா, கூட்டிப் போனால், ராட்டினத்தில் ஏற்றாமல், குடை ராட்டினம் போல் தலைமுடி அவிழ்வதையும் பொருட் படுத்தாமல், அவர்கள் தலையில் குட்டுவாள். ரெடியாகுங்க' என்று கூறும் அண்ணன், இப்போது தன்னந்தனியாக புறப்படுவது கண்டு, அருண் குழம்பினான். குழந்தைகள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னார்கள். செல்வாவிற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
"நான் போகிற இடத்துக்கு நீங்க வரப்படாது."
"எந்த இடத்துக்கு அண்ணா "
"எந்த இடமா இருந்தால், ஒனக்கென்னடா? வேணுமுன்னா, ஒங்கம்மாவ பீச்சுக்கு கூட்டிட்டு போகச் சொல்லுங்க."
சித்தப்பா பிள்ளைகளை அலட்சியப் படுத்தியபடியே செல்வா, இரண்டு எட்டு வைத்தபோது, அருண் அவன் முன்னால் போய் நின்று வழி மறியல் செய்தான். சுபேதா அவன் கையைப் பிடித்து இழுத்தாள் செல்வா, அந்த பிள்ளைகளை முரட்டுத் தனமாக கீழே தள்ளினான். தேன் சிந்தும் வார்த்தைகளால் அவர்களிடம் பேசுகிறவன், இப்போது தேனீ போல் கொட்டினான்.
"சனியன்களே... சொன்னா கேட்க மாட்டீங்க? நான் எங்கே தொலைஞ்சா உங்களுக்கென்ன? என்னோட வரப்படாதுன்னா வரப்படாதுதான்."
அருணும் சுபேதாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்தபடி கீழே கிடந்தார்கள். கடந்த ஒரு வருட காலமாக வார்த்தைக்கு வார்த்தை அண்ணா... அண்ணா..' என்று செல்லம் கொஞ்சும் குழந்தைகள், இப்போது "எம்மா... எம்மா...' என்று ஒருமித்துக் கத்தியபடியே தரையில் புரண்டார்கள். அவனோ, அதைப் பற்றி பொருட்படுத்தாமல், நடையை தொடர்ந்தான். எதிர்த் திசையில் என்னமோ ஏதோ என்று ஓடிவந்த சித்தியை முட்டாக் குறையாக உராய்ந்தபடி, வாசலைத் தாண்டினான். தாவித் தாவி, பாய்ந்து பாய்ந்து ஓடினான்.
பூட்டாமல் ஒட்டிக் கிடந்த இரும்புக் கிராதி கதவுகளை, இரண்டாகப் பிளந்து அந்த பிளவிற்குள் பாய்ந்து, மலைப்படிகள் மாதிரியான வீட்டுப் படிகளில் ஏறி, வராண்டாவை தாண்டி, வரவேற்பு அறையில் குதித்து, மோகனனின் அறை வாசலில் பாதி வழி மறித்துக் கிடந்த கதவை, பிய்த்து விடுவதுபோல் ஒருச்சாய்த்து தள்ளியபடியே, உள்ளே பாய்ந்த செல்வா, பிரமித்தபடியே நின்றான். உதடுகள் ஒட்டாமல், விழிகள் கொட்டாமல், அப்படியே நின்றான்.
அந்த அறையின் கிழக்குச் சுவரில் தேர் வேலைப்பாடுகளைப் போன்ற ஆறடி உயர பீரோ பலகைகள். இவற்றை குறுக்காய் இணைக்கும் மூன்றடி அகல கருஞ் சிவப்பு பலகைகள். இவற்றில் மத்தியில் ஒரு செவ்வக வடிவம். ரேடியோ சி.டி., டேப் ஆகிய மூன்றையும் கொண்ட இசைக்கருவி. இந்த குறுக்குச் சட்டத்திற்கு மேலேயும் கீழேயும் பல்வேறு வகையான இசைக் கருவிகள். சி.டியில் ஒரு பாடல். சந்த நயம் கொண்ட வேக வேகமான சொல்லடுக்குகளை கொண்ட ஊழிக்கூத்து பாடல்.
மோகனன், கால் சலங்கையும், கை மணியுமாய் தாமரைப் பூ போல் விரிந்த தார் பாய்த்த எட்டு முழ தும்பை வேட்டியுடன், இடுப்புக்கு மேலே எதுவும் இல்லாத விரிந்த மார்பும், பரந்த தோளுமாய் ஆடிக் கொண்டிருந்தான். சிவபெருமானின் ஊழிக்கூத்தின் அனந்தங்கோடி பிரமாண திரளாய் ஆடினான். ஊழித் தாண்டவம். காலும் கையும் உரசிக் கொள்கின்றன. உச்சியும் பாதமும் ஒட்டிக் கொள்கின்றன. தலை பம்பரமாய் சுழல்கிறது. பிறகு உடலோடு சேர்ந்து அங்குமிங்குமாய் தாவித் தாவி அந்த அறையே ஒரு பிரபஞ்ச கண்ணாடி ஆகிறது. அங்குமிங்குமாய் சுழல்கிறான். ஒரு கை உடுக்கை போல் ஆகிறது. இன்னொரு கையால் அதை அடித்துக் கொள்கிறான். பின்னர் ஒவ்வொரு கையும், ஒவ்வொரு காலோடு பின்னிக் கொள்கின்றன.
அந்த பின்னலிலும் ஒரு மாற்றம். வலது கையும் வலது காலும் பிரிந்து இடது கையும் இடது காலோடும் ஜோடி சேர்கின்றன. இடது காலும் இடது கையும் பிரிந்து வலது கையுடன் இணைகின்றன. ஒற்றைக்கால் உயர்கிறது. மற்றக்கால் துள்ளுகிறது. ஒலி முழக்கமும், உடல் முழக்கமும் ஒன்றிக்கின்றன. தரை தகிக்கிறது. சதங்கை மணிகளில் ஒன்று உருண்டோடுகிறது. கை மணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மோதி கால் சதங்கைகளோடு இணைகின்றன. இசை, சொல்லாகிறது. உடல் வில்லாகிறது. சொற்கள் செல்லரிக்க செல்லரிக்க, வேர்வையில் குளித்த மோகனனின் உடல் மெல்ல மெல்ல நிதானப்படுகிறது. தாங்க முடியாத வேதனையோடு தாவித் தாவி ஆடியவன், இப்போது தரை இறங்கினான்.
செல்வாவை அடுத்து அந்தக் குழந்தைகளையும், அவர்களது தந்தையையும் பார்த்த பிறகு நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்' என்ற தத்துவம் அவனுக்கு பரிட்சயமானது. அதற்கு எதிர்ப்பதமாய் ஆகிப்போன தன்னை நினைத்து, தன்னை படைத்த கடவுளை நினைத்து, தன்னை பெற்ற அம்மாவை நினைத்து, தன்னுள் இருந்த நாட்டியக் கலையை ஒரு வடிகாலாக ஆக்கிக் கொண்டிருந்தான். இப்படி அடிக்கடி ஆடுகிறவன்தான். அது, ஈஸ்வரியை பொன் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, சிவபெருமான் ஆடினாராமே.... ஆனந்தக்கூத்து, அப்படிப்பட்ட நாட்டியம். ஆனால், இன்றைக்கோ அண்டங்கோடி அண்டங்களும், அண்ட சராசரங்களும் சுயம் சுருங்கி ஒரு அணுவுக்குள் அடங்கியது போன்ற ஊழிக்கூத்து.
மோகனனை பயபக்தியோடு பார்த்தபடியே நின்ற செல்வாவை, மோகனன், அப்போதுதான் பார்த்தான். நிதானத்திற்கு வந்து கொண்டிருந்த பாத குலுக்கல்களுக்கு இடையே, கோபம் கோபமாய் கேட்டான்.
"முட்டாள்... மூடா... என் தங்கை வருவது வரைக்கும், இந்தப் பக்கம், நீ, தலை காட்டப்படாதுன்னு ஒனக்கு எத்தன தடவடா சொல்றது...?"
"நான் ஒன்றும் ஒன்னை பார்க்க வரல... கவிதாவுக்கு, நான் முட்டாள் தனமா எழுதுன லவ் லெட்டரை வாங்கிட்டுப் போக வந்தேன். அதை வைத்து, நீ எப்ப வேணு-முன்னாலும் என்னை பிளாக் மெயில் செய்யலாமே...''
"அறிவு கெட்ட ஜென்மமே... அதோ அந்த ரேக்குல இருக்குது பார்.... அதுதான் உன்னோட காதல் லெட்டர். எடுத்துக்கிட்டு ஓடுடா ...”
சதுரமாய் மடிக்கப்பட்ட அந்தக் கடிதத்தை, செல்வா ஓடிப்போய் எடுத்துக் கொண்டான். அவனால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை . அவன் கைப்பட எழுதிய கடிதம்தான் செல்வா, அதை பிரித்து பார்த்து அதை படித்து முடிப்பது வரைக்கும் காத்திருந்த மோகனன், ஒரே தாவாய் தாவி, செல்வாவிடமிருந்த கடிதத்தை பிடுங்கி, சுக்கு நூறாய் கிழித்து அவன் தலை மேலேயே போட்டுவிட்டு கத்தினான்.
"கத்துக்குட்டி பையா! ஒனக்கு எதுக்குடா காதலு? அந்த லெட்டர நான் எப்படிடா வெளில் காட்ட முடியும்? அப்படி காட்டினால், என்னோட சிஸ்டர் எதிர்காலமும் பாதிக்கும் என்கிறது எனக்குத் தெரியாதா? அவளும் இந்த மண்ணாங்கட்டி காதலில் சம்பந்தப்பட்டிருப்பது, இந்த கடிதத்திலேயே தெரியுதடா... நல்லா கேளுடா... என் தலையில் நானே மண் அள்ளி போட்டிக்கிட்டேன். அதேசமயம் என் தங்கை தலையில் மண் அள்ளி போடுற அளவுக்கு நான் மோசமானவன் இல்லடா... திரும்பிப் பாராமல் ஓடுடா..."
"ஒன் தலையில் நீயோ யாரோ அள்ளிப் போட்ட மண்ணு என் தலையிலயும் விழுந்துட்டுதே... விழ வச்சுட்டியே.."
"ஒன் தலையில் விழுந்தது தூசி தாண்டா ..."
"தூசியோ தும்போ அதை என்னால் மறக்க முடியலியே."
மோகனன், மெளனமாய் தலை குனிந்தான். குனிந்த தலையை அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டான். கண் வழி நீரை துடைத்துக் கொண்டான். அப்படியே அசமந்த நிலையில் நின்றான். செல்வா, அவன் தலையை நிமிர்த்தினான். ஆறுதல் சொன்னான்.
"நீ நல்லவன்தான் ஆனால் இவ்வளவு நல்லவனா இருப்பேன்னு நான் நெனக்கல.."
மோகனன், அவனை தள்ளி விட்டபடியே கத்தினான்.
"இந்தா பாரு பையா... இந்த தொடுற வேலைய என்கிட்ட வச்சுக்காத...”
"என்னை இவ்வளவும் செய்த ஒன்னை, தொடுறதுக்கு உரிமை இல்லியா?"
"நான் சொல்றத நல்லா கேளு செல்வா! உனக்கும் என் தங்கைக்கும் இடையில் நான் குறுக்காய் நிற்க விரும்பல..."
"அவளுக்கு ஒன்னோட இந்தப் பழக்கம் தெரியுமா?”
"தெரிஞ்சிருக்கணும். ஒரு தடவை ஹோமோ பயல்களையும், லெஸ்பியன் பெண்களையும் நிற்க வைத்துச் சுடணும்முன்னு என்னை சாடை மாடையாக பார்த்துக்கிட்டே, யார் கூடவே டெலி போன்ல பேசினாள் இப்ப அவள் என்னை திட்டியது முக்கியமில்லை . அவள் தான் முக்கியம் நீ அவளுக்கு..... அவள் உனக்கு எனக்கு பம்பாய் .."
"அப்படின்னா ."
"ஒன்னை, அந்த சொரிப்பயல் வெள்ளையனிடமிருந்து நான் காப்பாற்ற முயற்சி எடுத்ததை, அவனுக்கு எவனோ போட்டு கொடுத்துட்டான். நேற்று நள்ளிரவிலிருந்தே, என் வேலை போயிட்டுது... பதவி போயிட்டுது... ஆயிரக் கணக்கில டாலர் போயிட்டுது... ஆனால், இதுவும் நன்மைக்குத்தான். நேற்றே என் பேர்ல ஒரு லெட்டர் இங்கே கிடந்தது. எங்களுக்குன்னு பம்பாயில் ஒரு சங்கம் இருக்குது.. ஒரு பத்திரிகையும் வெளி வருது.... இப்போ இந்த சங்கத்தை அகில இந்திய சங்கமாய் ஆக்கப் போறோம். இதுக்கு என்னை பொதுச் செயலாளரா போட்டிருக்காங்க. ஒவ்வொரு மாநிலமும் சுற்றலாம். சங்கத்தின் வளர்ச்சிக்காக என்னோட நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கும்.... யார் கண்டா ? நான் ஒருவேளை அகில இந்திய வி.ஐ.பி.யாக்கூட ஆகலாம். இல்லன்னா தெருவோர லோலாயியாகவும் திரியலாம்."
"இங்கே வருவதாய் இருந்தால், குறைந்தது ஐந்து வருஷம் ஆகும். அதுவும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்கிற செய்தி வந்த பிறகுதான் வருவேன். ஒரே ஒருநாள் உங்களுக்குத் தெரியாமலே தலை காட்டிட்டு ஓடிப் போயிடுவேன். சரி... மைடியர் பிரதர் இன் லா.... கவிதாவை கை விட்டுடாதேடா... ரொம்பவும் ரோசக்காரி... எவ்வளவுக்கு எவ்வளவு ரோசம் உண்டோ .... அவ்வளவுக்கு அவ்வளவு பாசம் உள்ளவள். என்னை அவள் உன்கிட்ட திட்டுனது கூட பாசத்தின் வெளிப்பாடுதான். எனக்காக அவள் அழுதுயிருக்கிற கண்ணீர் ஆயுள் முழுதுக்கும் போதும்... சரி கெட் அவுட் ப்ளீஸ்..."
"பாவம்... என்னால நீங்க போறத நெனத்தால்... மனசுக்கு கஷ்டமா இருக்குது ஸார்..."
"யாருடா ஸார்....” "ஸாரி... ஏன் மச்சான்... நீங்க இங்கேயே இருக்கப்படாதா? ஏன் பம்பாய்க்கு ஓடுறே..."
"ஒங்களுக்காக மட்டும் ஓடலடா... டூப்ளிகேட் அம்மாவுக்காக..... ஒரிஜினல் அப்பனுக்காக.... என் பிழைப்புக்காக..... ஓரினச் சேர்க்கைக்காரர்களை உதா-சீனப்படுத்தும் இந்த தமிழ்நாட்டுக்காக... கர்ணனை எப்படி அர்ச்சுனன் தன்னந்தனியா கொல்லலியே... அப்படி, ஒன்னாலயோ கவிதாவாலயோ மட்டும் நான் ஓடலே... அதனால் என்னை தியாகியாய் ஆக்கிவிடாதே..."
செல்வா, மோகனனின் கைகளை பற்றிய படியே ஏதோ ஒரு வாசனையை உணர்ந்தான். அது வந்த மேற்கு திசையை நோக்கினான். சன் மைக்கா மேசையில் செண்பக, ஆரஞ்ச், பைன் ஆப்பிள் வடிவங்களில் ஒரே விதமான மூன்று பொருட்கள் செல்வா, சந்தேகம் கேட்டான்.
"இது வந்து.... அதாவது..."
செல்வாவின் பார்வை அந்த பொருட்கள் மீது போனபோது, மோகனன் பதிலளித்தான்.
"உன் யூகம் சரிதான். இந்த மூன்றும் வெவ்வேறு வாசனையைக் கொடுக்கிற டீலக்ஸ் நிரோத்துகள் புத்தம் புதியவை. இம்போர்ட்டட் சரக்குகள். வேணுமுன்னா தொட்டுப் பார்."
செல்வா, அந்த மூன்றில் மல்லிகை நிறமும், அதே வாசனையையும் கொண்ட உறையை எடுத்தான். மூக்கில் வைத்தான். சுவாசம் சுவாரசியமானது. மூளைக்குள் அந்த வாசனை பதிந்தது. உடல் முழுக்க வாசனை மயம். செண்பகத்தை எடுக்கப் போனான். அதை தடுக்கப் போனான் மோகனன். கையும் கையும் உரசிக் கொள்ள, உடலும் உடலும் மோதிக் கொண்டன. மோகனன் இப்போது ஆளே மாறிவிட்டான். உருவம் மாறாமலேயே குணம் மாறியது. தங்கை மீது வைத்திருந்த பாசம், தணிந்தது. தூக்குத் தண்டனை கைதியின் கடைசி ஆசை போல் துக்கக் குரலில், தன்
ஆசையை வெளிப்படுத்தினான்.
"மைடியர் பிரதர் இன் லா...! உன்கிட்ட இருந்து ஒரு கடைசி பரிசு வேணும். ஆமாம் டியர். இந்த நிரோத்தை போட்டுக்கிறேன். இதனால் உன் வாய்க்கு சேதாரம் வராது. வயிறு வாந்தியாகாது. எனக்காக கடைசி தடவையாய், உன் ஒத்துழைப்பை கேட்கிறேன். சத்தியமாய் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலே இந்த வீட்டில் நான் இருந்தால் நீ ஒன் செருப்பாலேயே என்னை அடி ஒன் லி ஒன் டைம்... இப்படி டெம் டேஷன் வருமுன்னுதான் உன்னை இந்த வீட்டுப் பக்கம் தலை காட்டக் கூடாதுன்கு, நான் உத்தரவு மாதிரி போட்டேன். ஆனாலும், நான் வற்புறுத்தலப்பா... நம்மோட நிரந்தர பிரிவுக்கு பரிசாத்தான் கேட்கிறேன்."
செல்வா, மோகனனையே பார்த்தான். நேற்றிரவு, அவன் தன்மீது காட்டிய பரிவு ஒரு தாட்சண்யமானது. அதோடு, அந்த வெள்ளையன் மேல் புரண்டதில், கிடைக்காத சுகம் ஒன்று கிடைத்ததும் நினைவுக்கு வந்தது.
செல்வா, அந்த செண்பக வாசனை உறையை எடுத்துக் கொண்டான். பிறகு, ரகசிய பேசுவதுபோல் பேசினான்.
"முதலில் நீ - அப்புறம் நான்.... ஆனாலும் வேற மாதிரி..."
அவர்கள் இருந்த அறையின் திறந்த கதவு, ஒரு சின்ன தீண்டலில் வெட்கப்பட்டது போல் வாசலோடு ஒட்டிக் கொண்டது.

