Chapter 9
சென்னையிலிருந்து முன்பு மகாபலிபுரத்திற்கும், இப்போது பாண்டிச்சேரிக்கும் அழைத்துச் செலுத்தும் கிழக்கு கடற்கரைச் சாலை. பெருநகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பதுங்கிக் கிடந்த தர்பார் கட்டிடம் ஏக்கர் கணக்கில் சுற்றி வளைத்து, இரும்புக் கம்பி இழைகளால் வேலி போடப்பட்ட அதன் வளாகத்தில், அசோக, ஆல, அத்தி போன்ற மரங்கள் அந்த கட்டிடத்தை மறைத்துக் கொண்டிருந்தன. அதற்குள் போவது காடு மலை தாண்டி போவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். இடையிடையே பாறைக் குவியல்கள். மூன்று கிலோ மீட்டரில் முக்கால் வாசியை முடித்து விட்டால், கத்தரித்த ஆடாகவும் மாடாகவும் புலியாகவும் சிங்கமாகவும் பல்வேறு வடிவங்களில் மேக்கப் செய்யப்பட்ட புல் வகையறாக்கள். சிகை அலங்காரம் செய்யப்பட்ட கற்றாழைகள். பல்வேறு வண்ணத்தில் அமைந்த தாமரைகள்.
இதன் மேல் தளத்திற்கு, ஒரு பெருந்தூணில் சுற்றி வளைத்த படிகள் வழியாகத்தான் போகவேண்டும் ஏனோ லிப்ட் வைக்கவில்லை. மேல் தளத்தின் அடிவாரத்தில், பூவாய் விரிந்த விளக்குகள். வானவில் போன்ற மின்சார வரவேற்பு வளைவுகள். நான்கடி உயரத்தில் நவீன மேடை அரைகுறை ஆடைகளோடு ஒரு சில முதியவர்களும், பல நடுத்தர வயதுக்காரர்களும், பெரும்பாலான இளைஞர்களும் மண்டிக் கிடந்தார்கள் இந்த வளாகத்திற்கு முன்னால் மிகப்பெரிய கட்-அவுட். அதில், ஒரு வெள்ளைக்காரரின் மிகப்பெரிய உருவம். ஆங்கிலத்திலான வரவேற்பு வாசகங்கள். தமிழிலும் சில சொற்றொடர்கள்.
"மறுவாழ்வு கொடுக்கும் மணியே வருக! ஓரினச்சேர்க்கையின் உருவே வருக!"
மோகனனின் கார், அந்த வளாகத்திற்குள் வந்தபோது, மேலே கேட்கும் கூச்சலை கேட்ட செல்வா, இப்போது, அய்யோ அய்யோ என்றான். உனக்கு எத்தனை தடவை சொல்றேன்... உனக்கு ஒன்றும் பங்கம் ஏற்படாது. காருக்குள்ளேயே கண்ணாடிகளை இறக்காமல் ஏ.சி.யை போட்டுக்கொண்டு பேசாமல் இரு. நான் பத்து நிமிடத்தில் வந்துடுவேன். தலையை மட்டும்தான் காட்டணும். மற்றதை காட்டுறது நாளைக்குத்தான்' என்று சொல்லிக்கொண்டே, கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான் மோகனன். அப்போது, இன்னொரு கார் வந்து நின்றது. இவனுடைய காரைவிட இரு மடங்கு பெரிய கார். மும்மடங்கு பளபளப்பு. அந்தக் காரிலிருந்து செக்கச் செவேலென்ற ஒரு மனிதர் இறங்கினார். உடனே, அத்தனை பேரும் அவரை மொய்த்துக் கொண்டார்கள். அவர், எதேச்சையாக மோகனனை பார்த்துவிட்டார். கூட்டத்துக்கு உள்ளே ஊடுறுவி, அந்தக் கார் பக்கம் வந்து ஹலோ' என்று கை குலுக்கிவிட்டு, இடது பக்க இருக்கையில் ஒடுங்கிக் கிடந்த செல்வாவை வைத்த கண் வைத்தபடி பார்த்தார். பிறகு, 'யூ புராட் எ பிராப்பர் பாய்... தேங்ஸ் எ லாட்' என்றார்.
மோகனன், அதிர்ந்து போனான். மரகத பச்சை சட்டையை, பொன் வண்ண பேண்டுக்குள் இன் பண்ணி சிவப்பு, டை கட்டி அழகாகத் தோன்றிய அந்த நாற்பது வயது மனிதர், உலக நிறுவனம் ஒன்றின் இயக்குநர். தங்கச் சங்கிலி காதில் தொங்க, மூக்குக் கண்ணாடி மார்பில் பதியத் தோன்றிய அந்த மனிதர், செல்வாவை பார்த்துக் கொண்டே மீண்டும் மோகனனிடம் குசலம் விசாரித்தார். மோகனனுக்குத் தெரிந்த அளவில், இன்று அவர் வருவதாக இல்லை. நாளைக்கு காலையில் பிளைட்டில் வரவேண்டும். இவன்தான், அவரை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டும் என்ற ஏற்பாடு. இவர்தான் எங்கேயோ சினிமாக்காரர்களுக்கு இடையே உதிரியாய் சுற்றிக் கொண்டிருந்த இவனை, ஓரினச் சேர்க்கை மூலம் கரையேற்றியவரோ? கரை படுத்தியவரோ...? இந்த நிலத்தையும், அதன் முகம் போன்ற கட்டிடத்தையும் உலக நிறுவனத்தின் சார்பில் வாங்கிப் போட்டவர். ஓரினச் சேர்க்கைக் காரர்களின் மறுவாழ்வு மையம் என்ற பெயரில் ஏகப்பட்ட பணம் அனுப்புகிறார் ஆனால் நடப்பதோ மறுவாழ்வு அல்ல. மருவாழ்வு. எல்லாம் இவருடைய சம்மத்தோடுதான்.
மோகனன், தவியாய் தவித்தான் பாலுக்கு காவலாயும், பூனைக்குத் தோழனாகவும் இருக்க வேண்டிய நிலைமை. செல்வாவிடம் ஓடி விடு என்று தமிழில் சொல்லலாம் என்றால், இந்த மையத்தின் துணைச் செயலாளர், அந்த உலக நிறுவன இயக்குநருக்கு போட்டுக் கொடுத்துவிடுவான் பழையபடியும் சினிமா உதிரியாக வேண்டும். இதற்குள் அந்த மனிதர், உடனடியாய், புரியாத ஆங்கிலத்தில் பேசினார்.
"லெட்டஸ் கோ மோக்..."
மோகனன், செல்வாவை, கண்டுக்காமல் அதே சமயம் முதுகுக்கு பின்னால் கையை வளைத்து அவனை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, மிஸ்டர் ஜான் ஜோவுடன் இணையாக நடக்கப் போனான். உடனே அவர், பிரிங் தட் பாய்... லெட் இம் ஆல்சோ என்ஜாய்' என்றார். உடனே இவன் அவன் என் மைத்துனன். தங்கையின் உட்பி' என்றான். சோ வாட்' என்றார் அவர். இதற்குள் துணைச் செயலாளர் சத்ருக்கன், குலுங்கிக் குலுங்கி நடந்து, செல்வாவை வெளியே இழுத்து, அந்த வெள்கைக்காரர் முன்னால் நிறுத்தினான். எல்லோரும் மேல் தளத்திற்கு ஏறிக் கொண்டி ருந்தார்கள். கடைசியாக தயங்கி நின்ற செல்வாவிடம் எப்படியாவது இங்கிருந்து ஓடிடு. இவர் என்னுடைய பாஸ்.... இவர் சொல்லை என்னால தட்ட முடியாது. என்று கிசுகிசுத்தான். உடனே செல்வா, வார வழியில் தேக்குத் தோப்புல நரிகளப் பார்த்தேன். நான் எப்படித் தனியா போறது? என்னை கொண்டு போய் விடுறது உன்னுடைய டூட்டி..' என்றான். சரி வா பார்த்துக்குவோம்.' என்று சொல்லிக்கொண்டே செல்வாவையும் இழுத்துக் கொண்டு படியேறினான்.
அந்த வெள்ளைக்காரர் , மேடையேறி, அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, மோகனன் செல்வாவிடம் அதோ அந்த அறைக்குள் போய் பதுங்கிக்கோ. நான் வருவது வரைக்கும் கதவைத் திறக்காதே' என்றான். செல்வா திருப்பிக் கேட்டான்.
"நீ வாறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்."
"எப்படியும் மிட் நைட் ஆயிடும்."
"அய்யோ... சித்தப்பாவுக்கு என்ன சொல்றது? என்னாச்சோ ஏதாச்சோன்னு துடியா துடிச்சிகிட்டு இருக்கப் போறார்."
"உன்னை அப்சர் பண்ணுவதற்காக கிளினிக்கில் வைத்திருக் கதாய், உங்க சித்தப்பாவுக்கு போன் செய்யுறேன். நீ இந்த அறைக்குள்ளேயே இரு. மீண்டும் சத்தியமாய் சொல்லுறேன். அந்த வெள்ளைக்காரன் என்னை வேலைய விட்டுத் துரத்தினாலும், உன்னை இழிவாய் பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன்."
மோகனன், அவசர அவசரமாக மேடைக்குப் போய், மிஸ்டர் ஜான் ஜோவிடம் பேசிக் கொண்டிருந்தான். பிறகு, மேடையை விட்டு படி வழியாக இறங்காமல் அப்படியே கீழே குதித்து சுழல் படிகளில் கீழே இறங்கி, அருகே உள்ள ஹே பாய்ஸ் மறுவாழ்வு மைய அலுவலகத்திற்கு ஓடினான்.
இதற்குள், மோகனன் காட்டிய அறைக்கதவை, செல்வா தொட்டான். தொடப் பொறுக்காமல் அது திறந்தது. உள்ளே ஓரடி வைத்தவன் தனது சித்தியை பார்த்தது போல் பயந்து திடுக்கிட்டான். அந்த அறைக்குள் ஆண்களும் ஆண்களும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து கிடந்தார்கள் ஒவ்வொருவர் வாயிலும், இடுப்புக்குக் கீழேயும் பல்வேறு நபர்களின் உறுப்புக்கள். ஒவ்வொருவரும் ஏழெட்டு பேருக்கு ஈடு கொடுத்தும், ஈடு செய்தும் முழு நிர்வாணக் கோலத்தில் அலங்கோலமாக கிடந்தார்கள். இலை தழைகளோடு பூத்துக் குலுங்க வேண்டிய பூக்கள் காய்ந்து போன காம்புகளாய், கிழிந்து போன இதழ்களாய், சிதறிப் போன மகரந்த தூள்களாய், வண்டுகளே பூக்களாய்... பூக்களே வண்டுகளாய்.... எட்டறக் கலந்து கிடந்தார்கள். (அதாவது எட்டு பேர்) இவர்களின் வலுவான குலுக்கலுக்கும் புரட்டலுக்கும் இடையே மென்மையான 'டிங் டிங்.. இசை.
வெளியே வந்த செல்வாவுக்கு, உறுப்புகளில் ஒன்றுகூட இயங்க வில்லை. நினைத்துப் பார்க்கவே அசிங்கமாய்... அருவெருப்பாய் தெரிந்தது. மிருகங்களுக்குக்கூட பாலியல் உறுப்புக்கள் இலை மறைவு காய்மறைவாய் உள்ளன. பசு மாட்டின் வால், அதன் உறுப்பை மறைக்கிறது. நாய்க்கு அடிவாரத்தில் தான் அதன் உறுப்பு உள்ளது. காகங்கள் உள்ளிட்ட சில பறவைகள் புணர்வதை பார்க்க முடியாது. ஆனால், இவர்களோ மிருகங்களை விடக் கேவலமாய், அசிங்கம் பிடித்த அம்மணமாய், அலங்கோலமாக கிடக்கிறார்கள். செல்வாவிற்கு மீண்டும் குமட்டிக் கொண்டு வந்தது. பத்து நிமிடம் ஒரு தூண் மறைவில் நின்றான். மோகனனைக் காணவில்லை. ஒருவேளை, அவன் வேண்டும் என்றே தன்னை இங்கே கூட்டிக் கொடுத்துவிட்டு போயிருப்பானோ என்ற சந்தேகம். அதுவே கோபமாக, தாபமாக அந்த தூணை இரண்டு கைகளாலும் மாறி மாறி குத்திக் கொண்டிருந்தபோது, மிஸ்டர் ஜான் ஜோ ஓடி வந்தார். அவனை, தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
"டேக் இட் ஈஸி மை எங் மேன் டிட் யூ ஈட்"
"டோன் வாண்ட் ஈட்.. எனக்குப் பசிக்கல. என்னை விட்டா போதும். மோகனன் பயல் எங்கே?” என்று வெள்ளைக்காரருக்கு அரைகுறை ஆங்கிலத்திலும், அவரைச் சூழ்ந்து நின்ற கேய் பையன்களுக்கு தமிழிலும் பேசினான். உடனே, துணைச் செயலாளர் வெள்ளைக்காரரிடமும், இந்தப் பையனிடமும் மாறி மாறிப் பேசினார். வாசகர்களின் வசதிக்காக தமிழாக்கம் செய்யப்படுகிறது.
"இவன் உங்களுக்கு பயன்படக்கூடாது என்பதற்காக, தன்னோட தங்கையை கட்டிக்கப்போறதாய், மோக், அப்போ சொன்னது நினைவிருக்குதா பாஸ்."
"ஏஸ்.... புரசீட்"
"அதாவது, இவனை அவன் மட்டுமே கீப் செய்யணுமுன்னு நினைக்கிறான். ஒரு அறைக்குள்ள தங்கும்படி இவனுக்கு எச்சரிக்கை செய்தான். உங்க பணத்தை வாங்கிக் கிட்டு உங்களுக்கே துரோகம் பண்றான்."
"தட்ஸ் ஆல் ரைட் ஹீ வில் பே பார் இட் (பரவாயில்லை . அதற்கான பலனை அனுபவிப்பான்)"
வெள்ளைக்காரர் உடம்பைச் சொறிந்து கொண்டே, தூணோடு தூணாய் ஒடுங்கிக் கிடந்த செல்வாவை உற்றுப் பார்த்தார். "பயல், கேய் கேம்முக்கு புதுசு. இந்த மாதிரி கன்றிவுட் பாயை விடவே முடியாது. சோதா பயல்களோட சோரம் போனது போதும்."
என்றாலும், மிஸ்டர் ஜான் ஜோ, நாலுந்தெரிந்தவர். கிளப்பின் துணைச் செயலாளரான சத்ருக்கன பொருள்பட பார்த்தார். அவன், அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தான். விட்டுப் பிடிக்க வேண்டிய கிராக்கியாம்.
செல்வாவின் அருகே, அவனுக்குத் தெரியாமல் ஒரு முரடனை நிறுத்திவிட்டு அவர்கள் மேடைக்குப் போய் விட்டார்கள். உடனே ஆடல் பாடல்', அம்மண அமர்க்களங்கள். நமக்கு மறுவாழ்வு அளிக்கும் மிஸ்டர் ஜோ என்று துணைச் செயலாளர் சத்ருக்கன் ஓங்கிக் கத்த, மேடையில் நின்றவர்களும், தளத்தில் கிடந்தவர்களும் "வாழ்க வாழ்கவே” என்றார்கள். பிறகு ஒரு பாடல்
"இருப்பது கொஞ்ச காலம் - அதுவே
கொஞ்சும் காலமாகட்டும்.
இறப்பது நிச்சயம் - அதனால்
இருப்பதைப் பகிர்வோம்.
ஆணென்ன பெண்ணென்ன
அனுபவ இன்பமே முக்கியம்."
இந்தப் பல்லவி, தான் எழுதியது என்றும், அதன் பொருளையும் சத்ருக்கன், ஜோவிடம் விளக்கிக் கொண்டிருந்தான். பல பேர் மேடையில் பாட்டிற்கேற்ப கொஞ்சுக் குலாவினார்கள். இதற்குள் துணைச் செயலாளனின் மோவாய் அசைப்பில் ஒருத்தன் தட்டு நிறைய பிரியாணியோடு செல்வாவிடம் போனான். 'உன்னை எதுவும் செய்ய மாட்டோம். பேசாம சாப்பிடு என்றான். இரண்டு நாள் முழுக்க பட்டினி கிடந்த செல்வா, அந்த தட்டை பாய்ந்து பிடிக்கப் போனான் உடனே தட்டுக்காரன் மொதல்ல வயித்துக்குள்ள கனமான சாப்பாட்ட திணிக்கும் முன்னால, பழரசம், சூப் எதையவாது குடிக்கணும். உனக்கு என்ன வேணும் என்றான். பசி வேகத்தில் செல்வா, 'இரண்டும்' என்றான். உடனே, தட்டுக்காரன் செல்வாவை கவனித்துக் கொண்டிருந்த முரட்டுத் தோற்றக்காரணை பார்த்து கண்ணடிக்க அவன் சூப்போடும், பழரசத்தோடும் வந்தான். செல்வா, மாங்கு மாங்கு என்று குடித்தான். பிரியாணியில் மூன்று கவளங்களை போட்டிருப்பான். மீண்டும் ஜுஸ், சூப் என்றான். கேட்டது கிடைத்தது. கிடைக்கக் கிடைக்க அவன் தலை சுற்றியது.
சிறிது நேரத்திற்குள் செல்வா, இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடைவெளி கொடுக்கும் சுரணையற்ற நிலைக்கு போய்விட்டான். கண் முன்னாலேயே கலர் கலராய் பல்வேறு விதமான படங்கள். யதார்த்தம் - மாந்தரீக இயல்பானது. தலை சுழன்றது. கண்கள் வெட்ட வெளியாயின. அப்படியே தரையில் சாயப் போனவனை, துணைச் செயலாளன் சாய்த்துப் பிடித்து தரையில் குப்புறக் கிடத்தினான். பேண்டை உருவினான். ஜட்டியை கழட்டினான். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சாதனையாளன் போல் மேடைக்குப் போய், மிஸ்டர் ஜான் ஜோவை கூட்டி வந்தான். அவரும் ஜட்டி போடாத பேண்டை கழட்டி தோளில் துண்டு மாதிரி போட்டுக் கொண்டு, கையிலிருந்த கோப்பையை ஒரே மடக்காய் வாயில் கவிழ்த்துவிட்டு ஓடோடி வந்தார். இதற்குள் அத்தனை பேரும் அம்மணமாக ஆங்காங்கே சுருண்டார்கள். உலக நிறுவன இயக்குநர், செல்வா மீது கவிழ்ந்து படுத்தார். பத்து நிமிடம் ஆகியிருக்கும்.
கால நேர வர்த்தமானங்களைத் தாண்டிய முப்பரிமாண நிலை. அரை மணி நேரமோ கால் மணி நேரமோ.. லேசாய் கண் விழித்த செல்வாவிற்கு, பாதி உண்மையாகவும், மீதி கற்பனை போலவும் தோன்றியது. ஆனாலும், தன் மேல் ஒரு சுமையை உணர்ந்தான். உடனே அவனுள் ஒரு வெறி பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வெறி. மிஸ்டர் ஜான் ஜோவை, ஒரே உதறலாய் கீழே தள்ளி, குப்புறப் போட்டு அவர்மீது கவிழ்ந்தான். அவரை ஒரு பெண்ணாக நினைத்துக் கொண்டான். கிராமத்தில் ஆட்டை மரத்தில் கட்டி கிடாயை ஏவி விடுவதும், காளை மாடு பசுவின் மேல் கால் போடுவதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. இதுவரை பசுவாக, ஆடாக கிடந்த இவன், இப்போது கட்டிளங் காளையாய், அசல் மாடாய் ஆகிப் போனான். ஆனாலும், கீழே கிடக்கும் வெள்ளையரை ஒரு பெண்ணாகப் பாவித்துக் கொண்டான்.
கால் மணி நேரத்தில், அவனுள் ஒரு சுகம் தெரிந்தது. இதுவரை அனுபவித்தறியாத சுகம். கன்னி கழியாதவனுக்கு கிடைத்த முதல் தீனி. சுவையான தீனி . சுகமான தீனி. தீனி முடிந்ததும் உடலெங்கும் ஒரு ஆயாசம். ஒரு குற்ற உணர்வு. செல்வா, மிஸ்டர் ஜான் ஜோவிடமிருந்து புரண்டு தரையில் குப்புற விழுந்தான். அவன் மீது மது வெறியிலும், மோக வெறியிலும் பாயப்போன துணைச் செயலாளரை அப்போதுதான் வந்த மோகனன் பிடித்துக் கொண்டான். கீழே கிடந்த மிஸ்டர் ஜான் ஜோ, "மோக்.. நோ. வயலன்ஸ்.. வெரி பேட்ட லெட் தம் என்ஜாய் டோண் பி எ கில் ஜாய் .... (மோகனா, நீ செய்வது தவறு. அவர்கள் மகிழட்டும். மகிழ்ச்சிக்கு கொலைகார-னாகாதே.) என்று தான் நடத்தியதில் திருப்தியும், செல்வா நடத்திக் காட்டிய மகிழ்ச்சியும் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும் என்பதுபோல், கை கால்களை அங்குமிங்குமாய் ஆட்டினார். செல்வாவும், அவனைப் பார்த்து கையை ஆட்டி "ஐ லைக் இட் ஐ லைக் இட்” என்றான்.
இடுப்புக்கு கீழே அம்மணமாய் கிடந்த செல்வாவை, தூக்கி நிறுத்திய மோகனன், எவனோ கழட்டிப் போட்ட பேண்டை எடுத்து அவனை மாட்டச் செய்தான். கழுத்து வரைக்கும் சுருக்கி வைக்கப்பட்ட பனியனையும், பனியன் மேலான சட்டையையும் கீழே இழுத்து விட்டான். அந்தக் கூட்டத்தை அனல் கக்க பார்த்துவிட்டு, செல்வாவுடன் சுழல் படிகளில் இறங்கி, தரை தட்ட நின்றான்.
செல்வாவை, அணைத்தபடியே தனது காருக்குள் ஏற்றினான். அந்தக் கார் நான்கு சக்கர பாய்ச்சலில் கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ... இந்த இரவில் .... இவனை சித்தப்பாவிடம் ஒப்படைக்க முடியாது. காரை ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டும். பெட்ரோல், ரிசர்வக்கு வரும்போது, அதே இடத்தில் நிறுத்த வேண்டும்.
இருட்டு மயமான சாலையில், எதிரே வரும் வாகன ஒளியை வைத்தே ஒரு அனுமானத்தோடு, கார் ஓட்ட வேண்டும். அந்த ஒளியின் பரிமாணத்திற்கு ஏற்ப வண்டியின் எதிர் வாகனத்தின் கன பரிமாணத்தை உணர்ந்து, காயை நகர்த்துவதுபோல் காரை நகர்த்த வேண்டும். பின்னால் வரும் வண்டிகளின் விளக்கு வெளிச்சம், கார் கண்ணாடியில் பிரதிபலிப்பதை அனுமானமாகக் கொண்டு அதற்கேற்ற இடைவெளி கொடுத்து ஓட்ட வேண்டும். லாரிகள் மொய்க்கும் தேசியச் சாலையில் இரவில் கார் ஓட்டுவது என்பதே ஒரு தனிக்கலை. இதில் மோகனன் தேர்ந்தவன் என்றாலும், இப்போது அவன் கார் இரு தடவை விபத்துக்குள்ளாகப் போனது. இவன் வழிவிடவில்லை என்று ஒரு லாரி இவன் காரை அணைப்பது போல் ஓடியது. எதிரே நான் வருகிறேன் என்பது போல் பிரகாசமாக வெளிச்சம் போட்டும். வேக வேகமாய் ஓடிய இவன் காரை மோதப் போவதுபோல் பாவலா செய்து கொண்டே ஒரு லாரி பின் நோக்கிப் போனது. இவனே காரை நிறுத்தலாமா என்று நினைத்தபோது, பின்னிருக்கையில் படுத்துக் கிடந்த செல்வா மயக்கம் தெளிந்தது போல் கத்தினான். அலறியடித்து எழுந்து மோகனனின் சட்டைக் காலரின் பின் பக்கத்தை பிடித்திழுத்தபடியே, "சதிகாரப் பயலே... என்னை - அந்த மிருகக் கூட்டத்துல மாட்ட வச்சிட்டு - எங்கேடா போனே" என்று கத்தினான்.
கார் நின்றது. முன் கதவு திறந்தது. பின் கதவு திறக்கப்பட்டது. மோகனன், செல்வாவை வெளியே இழுத்துப் போட்டான். கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தான். இடுப்பில் காலால் எகிறினான். கீழே விழுந்த செல்வாவை தூக்கி நிறுத்தி, கழுத்தை, கையால் பிடித்தபடியே அந்த அந்தகார இருளில் பேய் போல் கத்தினான்.
"பொறுக்கிப் பயலே.... முட்டாப் பயலே.... நான் ஒன்னை ஒளிஞ்சுக்கோன்னு சொன்னால்... இப்படி பண்ணிட்டியே..... உன்னையே நம்பி இருக்கிற என் சிஸ்டர் என்ன பாடு படப்போகிறாளோ"
"உன் சிஸ்டர் யாருக்குடா வேணும்? நீதாண்டா போக்கிரி... புறம்போக்கு... கூட்டிக் கொடுத்த பயல்... பத்து நிமிஷத்துல சித்தப்பாவுக்கு டெலிபோன் செய்துட்டு வாறதா போக்குக் காட்டிட்டு, ரெண்டு மணி நேரமா என்னடா செய்தே...? தோ பாரு... இதுக்கு மேல கைய நீட்டுன மவனே - ஒன் முதுகிலயும் நான் சவாரி செய்வேன்."
மோகனன், புரிந்து கொண்டான். பயலுக்கு போதை மாத்திரையை கலக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுதான் லேசாக அவனுக்கு மயக்கம் தெளிந்திருக்கிறது. சொல்லிப் பார்ப்போம். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் போறான்... மோகனன், தன்னிலை விளக்கமாக பேசினான்.
"நான் சொல்வதை கேளுடா நாயே போன் செய்வதுக்காக, கேய் அலுவலகத்துக்குப் போனேன். அது அவுட் ஆப் ஆடர். இருபத்தைந்து நிமிஷம் காரை ஓட்டினேன். ஒரு கடையோ, டெலி போன் பூத்தோ கிடைக்கல.. எப்படியோ ஒரு இடத்துல மூடப்போன பூத்துக்காரன் கையில் காலுல விழுந்து ஒன் சித்தப்பனுக்கு போன் பண்ணிட்டு, அப்பதான் வந்தேன். அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சிட்டே... என்னை மாதிரியே நீயும் ஆயிட்டு வாரியேடா... இதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நானே காரணமாயிட்டேனடா.... கூடப் பிறந்த தங்கைக்கே சக்களத்தி ஆக்கிட்டியேடா....”
மோகனன், நரிகள் கத்தும் அந்த நள்ளிரவில், காட்டுப் பூனைக்குப் பயந்து காகங்கள் பறந்த அவற்றில் காலடிகளுக்கு கீழே தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். காரில் தலையை முட்டி மோதினான். செல்வா, அவனை தன் பக்கமாக இழுத்தான். அவன் கண்ணீரை துடைத்தான். உடனே, மோகனன் எந்தவித விகற்பமும் இல்லாமல் தான் செல்வாவை கட்டிப் பிடித்தான். ஆனாலும்…
பற்றிக் கொண்டது.

