மகிழ்ச்சி வெள்ளம்
பவானி அன்று ஸ்ரீதரனைச் சந்திக்க முடியாமல், வீட்டுக்குப் புறப்பட்டாள். அவள் அங்கு வந்திருந்த சிலமணி நேரங்கள் ராதாவுக்கு எவ்வளவோ நிம்மதியையும் இன்பத்தையும் அளித்தன! வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தோல்வியைக் கண்ட பவானி, அந்தத்தோல்வியை உதறித் தள்ளி மிதித்து. வெற்றிப் பாதையில் போவதைக் கண்ட ராதாவின் உள்ளம் பவானியைப் பற்றி உயர்வாக மதிப்பிட்டது.
மாலையில் வீடு திரும்பிய ஸ்ரீதரனிடம் ராதா பவானி வந்து போனதை அறிவித்தாள். "வந்தவளை நான் வரும் வரை இருக்கச் சொல்லக்கூடாதா? முக்கியமான ஒரு விஷயம் பற்றிப் பேச அவர்கள் வீட்டுக்கே நான் செல்ல இருந்தேன்..." என்றார் ஸ்ரீதரன்.
”என்ன அண்ணா" என்று கேட்டாள் ராதா.
”முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பசுமலையில் காச நோய் வைத்தியசாலை-யொன்று கட்டி முடித்து, சமீபத்தில் நமது பிரதம மந்திரி ஆரம்பித்து வைத்தார். அதில் கூடிய விரைவில் பவானி நர்ஸாகப் பணி புரியச் செல்ல வேண்டி இருக்கும் என்று என் நண்பர் ஒருவர் கூறினார்."
”மறுபடியும் பவானி பசுமலைக்குப் போக விரும்புவாளா அண்ணா ? அவள் நெஞ்சில் ஆறாத கனலை மூட்டி விட்ட ஊர் அல்லவா அது?"
ஸ்ரீதரன் சிரித்தார். "ராதா! இங்கே தான் நீ பவானியைத் தவறாக மதிப்பிட்டிருக்கிறாய். நீறு பூத்த நெருப்பு மாதிரி, அவள் தன் துயரங்களைப் பல வருஷங்களுக்கு முன்பே மனத்தின் அடித்தளத்தில் புதைத்து விட்டாள். அதை ஊதி எரியச் செய்ய மாட்டாள் அவள். நடந்து போன துயரங்களைப் பற்றி நினைப்பதும் அதை பற்றியே பேசுவதும் மனத்தை எவ்வளவு தூரம் கெடுத்து விடுகிறது என்பது உனக்குத் தெரியாது. பவானி தன் துயரங்களுக்கு ஓர் உருவம் கொடுக்க முயற்சிக்க வில்லை' ' என்றார். ராதாவுக்குப் பவானியைப் பற்றிய செய்திகள் யாவுமே வியப்பை அளித்தன.
அதன் பிறகு பவானி ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பாக அவளுக்கு அவர்கள் வீட்டில் விருந்தளிக்க வேண்டும் என்று அண்ணனும் தங்கையும் தீர்மானித்தார்கள்.
பவானி, பசுமலைக்குச் செல்ல வேண்டும் என்கிற செய்தியை நாகராஜன் வீட்டில் யாருமே வரவேற்க வில்லை.
சர்க்கார் உத்தரவைப் பவானி நாகராஜனிடம் காண்பித்ததும் அவன் பெரிய குரலில், "கோமதி இங்கே வாயேன். நீயும் மூட்டை முடிச்சுகளைக் கட்டு" என்று அழைத்துக் கூறினான்.
”எதற்கு? எங்கே போவதற்கு என்று சொல்ல வில்லையே? இனிமேல் துரை மிஸஸ் இல்லாமல் வெளியே கிளம்பமாட்டீர்களோ?" என்று கேலி செய்தாள்.
”உன் நாத்தனார் ஊருக்குக் கிளம்புகிறாளாம். அவள் இல்லாமல் நீ இந்த வீட்டில் இருந்தால் தலை சுற்றல், மயக்கம், அஜீரணம் எல்லாம் உனக்கு வந்து விடுமே! அப்பா! உன்னோடும், உன் வியாதிகளோடும் மருந்துப் பட்டியல்களோடும் நான் பட்டபாடு எனக்கல்லவா தெரியும்?" என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தான். ”என்ன அண்ணா இது? என்னால் தான் உலகமே நடக்கிற மாதிரி நீ பேசுகிறாய்?" என்று கேட்டாள் பவானி சிரித்துக் கொண்டே.
"மாமா. அம்மா பசுமலைக்குப் போனாலும், நான் இங்கேதான் இருந்தாக வேண்டும். இந்த ஊரில் விசிறிகளுக்கெல்லாம் காம்புகள் நீளம்' ' என்று கூறியவாறே பாலு தன் முதுகைத் தடவிக் கொண்டான்.
”இது ஒரு நொண்டிச் சாக்கு இவனுக்கு. நீ சென்னையை விட்டுப் போகமாட்டாய் அப்பா. தினம் ஜெயஸ்ரீயை காலேஜ் பஸ்ஸில் ஏற்றிவிட்டுத்தான் நீ காலேஜுக்குப் போகிறாயாமே?....' 'சுமதி சமயம் பார்த்து குட்டை உடைத்து விட்டாள்.
என்ன பேசுவது என்று புரிமாமல் பாலு திகைத்தான். அங்கிருந்த பெரியவர்கள் யாவரும் அர்த்த புஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பவானியின் உள்ளத்திலே மகிழ்ச்சி வெள்ளம் அலைமோதியது.
அச்சமயம் தோட்டக்கார கோபாலன் டாக்டர் ஸ்ரீதரனும் ஜெயஸ்ரீயும் வந்திருப்பதை அறிவித்தான்.
டாக்டரைக் கண்ட பவானி தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினாள்.
”நாகராஜன் நீங்கள் அதிர்ஷ்டசாலி , உங்கள் தங்கைக்கு ஆரம்பத்திலேயே நல்ல சான்ஸ் கிடைத்து விட்டது. பலர் பணிபுரியும் ஓர் ஆஸ்பத்திரியில் ஒருவர் எவ்வளவுதான் திறமையாகச் சேவை செய்தாலும் அவர்களுடைய திறமை வெளிப்பட நாளாகும். ஒரு குடும்பத்தில் இருக்கும் மருமகள் எவ்வளவு தான் குடும்ப நிர்வாகத்தில் திறமைசாலியாக இருந்தாலும், அங்கிருக்கும் மாமியார். நாத்திகள். ஓரகத்திகள் இவர்களை மீறி அவள் திறமை வெளியாகப் பல வருஷங்கள் ஆகும்.
"அதே மருமகள் தனிக்குடித்தனம் நடத்தினால் சில மாதங்களில் அவளுடைய சாமர்த்தியத்தை மாமியாரே மெச்சுவாள். பசுமலை ஆஸ்பத்திரியில் தற்சமயம் அதிகமான நர்ஸ்கள் கிடையாது. அங்கிருப்பவர்களுக்குப் பவானி தலைவியாகப் போகிறாள். என்ன அம்மா பவானி? நீங்கள் ஒன்றுமே பேசவில்லை?” , என்று கேட்டார் ஸ்ரீதரன்.
எப்பொழுதுமே படபடவென்று பேசத் தெரியாத பவானி மிகவும் விநயமாக, ”உங்களுக்கு எல்லாம் தெரியும். நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது?" என்று கூறினாள்,
டாக்டர் ஸ்ரீதரன் அவளையும் மற்றவர்களையும் அடுத்த நாள் தமது வீட்டில் நடக்கும் விருந்துக்கு வரும்படி அழைத்தார். ”ஜெயஸ்ரீ! சுமதியை நீயே கூப்பிட்டு விடு அம்மா!' ' என்றார் ஸ்ரீதரன் வீட்டுக்குக் கிளம்பும் போது.
சுமதி அவசரமாக அவர் எதிரில் வந்து நின்றாள். பிறகு கணீரென்ற குரலில். ”டாக்டர் மாமா! அவள் என்னை அழைக்க இங்கே வரவில்லை" என்றாள்.
அங்கு நின்றிருந்தவர்கள் மனத்தில் பலவித குழப்பங்கள் ஏற்பட்டன. எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீதரனும் அவளை வியப்புடன் பார்த்தார்.
”அவள்.... வந்து... அவள்... பாலுவை பர்ஸனலாக அழைக்க வந்திருக்கிறாள்!" என்று கூறி விட்டு ஓட்டமாக மாடிப்படிகளில் ஏறிச் சென்றுவிட்டாள் சுமதி.
கன்னம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்கள் மருள ஜெயஸ்ரீ தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள் .டாக்டர் ஸ்ரீதரன் ஆசையுடன் தம் மகளை அணைத்தவாறு காருக்குள் சென்று உட்கார்ந்தார்.
அவர் மனம் காதலைப் பற்றி தீவிரமாக நினைக்க ஆரம்பித்தது. இப்படித்தான் ஒரு நாள் ராதாவும் - மூர்த்தியைக் காதலிப்பதாகச் சொன்னாள். அந்தக் காதல் எப்பொழுது. எந்த இடத்தில், எந்தச் சமயத்தில் உதயமாகிறது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடி யாது போலும் என்று நகைத்தார் அவர். 'தகாத இடத் தில் ஒரு ஜோடிக்கு முடிச்சுப்போட்டு வேடிக்கை பார்ப் பதில் பிரும்மாவுக்கு ஆசை. தகுந்த இடத்தில் காதலை வளர்த்துப் பிரித்து வைப்பதில் அவனுக்கு ஓர் ஆனந்தம். காதல் பாதையிலே வெற்றி கண்டவர்கள் அபூர்வம். ரோமியோவும். ஜுலியட்டும். சகுந்தலையும் துஷ்யந்த னும், லைலாவும் கயஸும் அந்தப் பாதையின் கரடுமுரடு களை அனுபவித்து வெற்றியையும் கண்டவர்கள். ராதா முதலில் வெற்றியைக் காணவில்லை. தோல்வியைத்தான் கண்டிருக்கிறாள். ஜெயஸ்ரீ எப்படியோ?' என்று நினைத் துக் கொண்டே காரைச் செலுத்திக் கொண்டு வந்தார்.
பேசாமல் திகைத்துப் போய் அருகில் உட்கார்ந்திருக்கும் தமது மகளைப் பார்த்து, 'அம்மா! ஜெயஸ்ரீ! பாலுவை உனக்குப் பிடித்திருக்கிறதா? அவன் படிப்பு முடிய இன்னும் இரண்டு வருஷங்கள் பாக்கி இருக்கின் றதே. அதன் பிறகு உங்கள் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று இருக்கிறேன்" என்றார்.
ஜெயஸ்ரீ பதில் ஒன்றும் கூறவில்லை. மிகுந்த நாணத் துடன் தன் புடவைத் தலைப்பை முறுக்கியபடி உட்கார்ந் திருந்தாள்.
இப்படித்தான் ஸ்ரீதரனின் மனைவி பத்மா முதலில் அவருடன் பேசவும் தயங்கித் தலை குனிந்து நின்றிருந் தாள் . அவர் மனம் பல வருஷங்களுக்கு முன்பு அவருடன் பழகிய மனைவியை மனக்கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது. அந்த நிகழ்ச்சி, அந்த நாள், யாவுமே அவர் மனத்துள் பதிந்து போன அழியா ஓவியமாகத் திகழ்ந்த து.

