பழிக்குப் பழி
சுமதியை விட பாலு மூன்று வயசு மூத்தவன் . பெண் குழந்தையாகிய சுமதியின் உள்ளத்தில் நிறைந்திருந்த கருணையும், மென்மையும் அவனிடத்தில் அவ்வளவாக இல்லை. இந்தப் பெண் இத்தனூண்டு இருந்து கொண்டு என் நோட்டிலே ’குரங்கு மூஞ்சி' என்று எழுதிப் படம் வேறு போட்டாளே! இவளை எப்படியாவது பழிவாங்கியே தீரவேண்டும்' என்றெல்லாம் கழுவிக் கொண்டேயிருந்தான். சுமதியும் ஜெயஸ்ரீயும் ஒரே வகுப்பில் இருக்கிறவர்கள், ஜெயரீயின் நோட்டுப் புத்தகங்களை இவள் வாங்கி வருவாள். ஏதாவது ’நோட்ஸ்' எழுதிக் கொண்டு திருப்பித் தந்து விடுவாள். பாலு சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் பழிவாங்க.
அடுத்த நாள் பள்ளிக்கூடம் விட்டதும் சுமதியுடன் ஜெயஸ்ரீ இவர்கள் வீட்டுக்கு வந்தாள். இருவரும் வேடிக்கையாகச் சிரித்துப் பேசிக் கொண்டே அத்தை பவானி கொடுத்த சிற்றுண்டியைச் சாப்பிட்டார்கள்.
பவானி பெண்கள் இருவருக்கும் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டினாள். குதூகலத்துடன் சிரித்துக் கொண்டே..... அவர்கள் வெளியே போனார்கள்,
பாலு அவர்கள் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மெள்ளப் பதுங்கிப் பதுங்கி வெளியே ஹாலுக்கு வந்தான். மேஜை மீது கிடந்த சுமதியின் பள்ளிப் பையைத் திறந்து ஜெயஸ்ரீயின் நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்தான். அழகாக முத்துக்கள் கோத்தது போல் எழுதியிருந்த அவள் பாடங்களில் நான்கைந்து தாள்களைக் கிழித்துப் போட்டான்.
" உம்” என்று ஒரு முறை தொண்டையைக் கனைத்தான். போர்க் களத்திலே பழிக்குப் பழி வாங்கிய வெற்றி வீரபாது சிரிப்பு ஒன்று அவன் தொண்டைக்குள் ளிருந்து வெளிப்பட்டது. பிறகு சுமதியின் நோட்டுப் புத்தகம் ஒன்றில் 'சுமதீ! ’ஸயன்ஸ்' நோட்ஸ் எப்படி எழுதிக் கொள்வாய் பார்க்கலாம்?--பாலு" என்று எழுதி வைத்தான்.
அன்றிரவு அவன் சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரமே தூங்கி விட்டான்.
அடுத்த நாள் காலை பாலுவும் சுமதியும் ஒன்றாகவே காப்பி சாப்பிட்டார்கள். சுமதி எவ்வளவோ பேச முயன்றும் பாலு விறைப்பாகவே நடந்து கொண்டான். இருவரும் கூடத்தில் இருந்த மேஜையருகில் உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை எழுத ஆரம்பித்தார்கள். ஜெயஸ்ரீயின் விஞ்ஞான நோட்டுப் புத்தகம் ஏ ஏடாகக் கிழிந்து கிடந்தது. அவசர அவசரமாக எல்லாப் புத்தகங்களையும் பார்வையிட்டாள். பாலு எழுதிவைத்திருந்த குறிப்பும் அவள் கண்ணில் பட்டது. சுமதிக்கு ஒரே சமயத்தில் கோபமும் பக்கமும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பின. அழுதவாறு, கிழிந்த நோட்டுப் புத்தகத்துடன் அவள் மாடிக்குச் சென்றாள்.
இந்தச் சமயம் பார்த்து அத்தையிடம் போகாமல் அம்மாவிடம் போகிறது. மாமி கோமதி என்ன சொல்லுவாளோ என்று பயந்தான் பாலு. பசுமலையில் பவானியிடம் விசிறிக் காப்பால் பட்ட அடிகள் அவனுக்கு நினைவு வந்தது. யார் கண்ணிலும் படாமல் பள்ளிக் கூடம் போய் விட வேண்டும் என்று அவன் முயன்ற போது கோதி மாடிப் படிகளில் அவசரமாக இறங்கி வந்தாள். அவன் கிழித்துப் போட்ட நோட்டுப் புத்தகத் காதர், கையில் பிடித்துக் கொண்டே, "ஏண்டா பாலு இ து உன் வேலையா?' என்று இரைந்தாள்.
வியாதிக்காரியான தன் மாமிக்குக் குரல் இவ்வளவு கபளீரென்று இருந்து பாலு பார்த்ததில்லை. அவள் அவ்வளவு அவசரமாக மாடிப் படிகளில் இறங்கி வந்த தையும் அவன் கண்டதில்லை; ஆகவே வியப்புடனும் பயத்துடனும், “ஆமாம் மாமி! தெரியாமல் கிழித்து விட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். அவள் மாதிரம் என்னைக் குரங்கு மூஞ்சி என்று படம் போடலாமா?" என்று கேட்டான்.
”அவள் உன் புத்தகத்தில் தானே போட்டாள்? உன்னைப் போல் ஊரார் புத்தகத்தைக் கிழித்துப் போட வில்லையே. சே! சே! பதிமூன்று வயசுப் பையனுக்கு வகையாக இருக்கத் தெரியவில்லையே" என்று இரைந்தாள் கோமதி.
அம்மா இப்படி இரைந்து பாலுவைக் கோபித்துக் கொள்வாள் என்பது சுமதிக்குத் தெரியாது. தெரிந்திருந்தாள் அவனைப் பற்றி அம்மாவிடம் புகார் செய்திருக்க மாட்டாள்.
உள்ளே இருந்த பவானியைப் பார்த்ததும் கோமதிக்கு கோபம் அதிகமாக வந்தது.
”இதோ பார் பவானி! உன் பிள்ளை. டாக்டர் ரீதரனின் பெண் ஜெயஸ்ரீயின் நோட்டுப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டிருக்கிறான். அவர்கள் வீட்டிலிருந்து யாராவது வந்து கேட்டால் நீ என்ன பதில் சொல்லு வாயோ எனக்குத் தெரியாது அம்மா' என்று கூறியவாறு அந்த நோட்டுப் புத்தகத்தை வீசிக் கூடத்தில் எறிந்து விட்டுப் போனாள்.
கீழே கிடந்த நோட்டுப் புத்தகத்தையும், பாலுவையும் மாறி மாறிப் பார்த்தாள் பவானி. அவனுடன் அவளுக்குப் பேசவே பிடிக்கவில்லை. கண்ணியமும் கௌரவமும் வாய்ந்த டாக்டர் வீட்டாருடன் இவனால் விரோதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினாள்.
நெஞ்சிலே நிறைந்திருந்த கவலையும் பயமும் அவளுக்கு ஒரு வித அசட்டுத் தைரியத்தை அளித்தன. கிழிந்த அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு டாக்டர்
ஸ்ரீதரன் வீட்டை நோக்கி நடந்தாள்.
அன்று அதிகாலையிலேயே ஸ்ரீதரன் வெளியே போய் விட்டார். ராதாவும் அன்று மாலை நடக்கவிருந்த டிராமாவுக்கா ஏற்பாடுகள் செய்வதற்காக வெளியே சென்றிருந்தாள்,
வீட்டுக் கூடத்தில் சுவாமிநாதன் மட்டும் உட்கார்ந்திருந்தார். ஜெயஸ்ரீ பள்ளிக்கூடம் போவதற்காகக் கிளம்பி வந்தவள், பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். பிறகு, "வீட்டிலே யாருமே இல்லையே, அத்தை ராதா கூட வெளியே போயிருக்கிறாளே" என்று தெரிவித்தான்.
பவானி ஆசையுடன் அந்தக் குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டாள். வருத்தம் நிறைந்த குரலில் ”ஜெயஸ்ரீ! பாலு ஒரு தவறு செய்து விட்டான். சுமதியோடு சண்டை பிடித்துக் கொண்டு உன் நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து வட்ட்டானம்மா...." என்றாள்.
ஜெயஸ்ரீக்கு வருத்தமாகத்தான் இருந்தது . இருந்தாலும் அந்தப் பெண் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ”பரவாயில்லை. அதனால் என்ன? வேறு யாரிடமாவது வாங்கி எழுதிக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு அவசரமாகப் போய்விட்டாள்.
அப்போது சுவாமிநாதன் வெளியே வந்தார். யாரை பார்க்க வேண்டும்? டாக்டர் வெளியே போயிருக்கிறார். ராதாவும் வீட்டில் இல்லை" என்று கூறியபடி பவானியைக் கவனித்தார் அவர்.
பவானி முதலில் சிறிது தயங்கினாள். அப்புறம் ஜெயஸ்ரீயைப் பார்க்க வந்தேன்" என்றாள்.
”நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள் அம்மா?" என்று சுவாமிநாதன் விசாரிக்கவும் பவானி, விவரங்களைக் கூறினாள்.
சுவாமிநாதன் சிரித்தார். "குழந்தைகள் அப்படித் தான் ஒன்றோடொன்று சண்டை பிடித்துக் கொள்ளும். விரோதத்தை மனசிலே வைத்துக் கொள்ள மட்டும் அவர்களுக்குத் தெரியாது" என்று கூறி விட்டு, 'நாகராஜனுக்கு ஒரு தங்கை இருப்பதாகவே எனக்குத் தெரியாது..." என்று சொல்லிப் பேச்சை முடிக்காமல் நிறுத்தினார் அவர்.
அந்த இளம் பெண் ஒரு விதவை என்பதை அவர் தெரிந்து கொண்டபோது, அவருடைய உள்ளம் வாடி வருந்தியது.

