காட்சி - 4

(நாட்டாமைக்காரர் வீட்டில்)

நாட் : என்ன பன்னாரி! சத்திய சோதனை எப்பிடி? பன் ! அண்ணல் காந்தியோட அருளும் ஒங்க ஆசியும் இருக்கதாலெ எல்லாம் நல்லபடியாவே போய்க் கிட்டிருக்குங்கய்யா!

நாட் : இந்த வூர்லயே இந்த முத்துக்காளை வூட்டைத்கான் பேய் வீடுன்னு சொல்லு வாங்க... அதுலயும் இந்த செங்கமலம், அந்த முத்துக் சாளைய படுத்தற பாடு! அப்பப்பா! தாங்காது... அவ சொல்றத கேட்டுக் கிட்டு இந்தப் பய தக்கா புக்கான்னு ததிக்கிற குதி இருக்கே. அப்பாடி! அவுங்க வூட்டை சரி பண்ணினா இந்த வூரையே சரி பண்ணின மாதிரி.... அந்தப் புண்ணியம் ஒங்களைத்தான் சேரும்...

பன் : எல்லாம் பெரியவங்களோட நல்லெண்ணந்தார் காரணம். ஐயா ஒங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? ஒங்களுக்குத் தெரியாம இருக்காது... செங்கமலத் தம்மாளே இப்ப கோர்ட்ல இருக்குற தங்களோட கேசையெல்லாம் வாபஸ் வாங்கப் போறாங்க.... புல்டோஸரை வரவழைச்சு மோட்டாங்காட்டு நெலத்தை சரி பண்ணி பயிர் பண்ணப் போறாங் களாம்... ஃபில்ட்டர் பாயிண்ட் வேற போடப் போறாங்களாம்....

நாட் : ஆமாம்! முத்துக்காளைகூட வந்து சொல்லிப் புட்டுப் போனாப்ல... நீங்க வந்து இவ்வளவு செய்தது கூடப் போதாது...அந்தப் பொண்ணு சிங்காரிய அவுங்க படுத்துற-பாடுதான் சொல்லி முடியாது...பொண்ணை வெளீல பழக விடாம வூட்டுக்குள்ளாறயே பூட்டி வச்சிருந்தா நல்லா வளக்கறதா நெனச்சுக், கிட்டிருக்காங்க...அத மாத்தணும்..இது எவ் வளவு பெரிய முட்டாத்தனம்! நாஞ் சொன்னாக்க அவ்வளவு எடுபடாது! எல்லாம் மொரடு...!

பன் : ஆண், பெண் பழக்கத்த பத்தி நம் நாட்ல இருக்கற எண்ணத்த காலத்துக்கு ஏத்தாப்ல மாத்தறது அவ்வளவு சொலயமில்லே! படிச்சதா நெனச்சுகிட்டு இருக்கற செல் பேருங்க கிட்ட கூட இன்னும் இந்தப் பழைய நெனப்புதானெ இருக்குங் கய்யா !

நாட் : தம்பி! என்னைப் பொறுத்த வரைல கிராமங்கள்ள, முக்கியமா இந்தக் கல்யாணம், புள்ளைப்பேறு, புள்ளை வளர்ப்பு, வரவு செலவ, நாலு பேரு கிட்ட எப்பிடிப் பேசறது ஆக இந்த மாதிரி விஷயங்களுக் காவது ஒங்களை மாதிரி ஆளுங்க இங்கெயே தங்கி அவங்களோட கலந்து வாழ்ந்து சொல்லிக் கொடுத்தா ப்ரச்சனைங்க கொறையும்னு நெனைக் கிறேன்...

பன் : நீங்க சொல்றது ரொம்ப சரிங்கய்யா. சட்டமோ, அதிகாரமோ மக்களைத் திருத்தாது...கல்விதான் அதைச் செய்யமுடியும்.