காட்சி-3

(முத்துக்காளையின் வீடு)

செங் : தம்பி பன்னாரி! நீ நல்லா இருக்கணும்...ஒன்னிய சரியாப் புரிஞ்சுக்காம கன்னா பின்னான்னு பேசிப்புட்டேன்...மனசுல வச்சுக்காதே...நீ மன்னிச் சிட்டதா சொன்னாத்தான் மனசு சரியாவும்.

பன் : என்னங்க! நீங்க எவவளவு பெரியவங்க... நீங்க போயி எங்கிட்ட இப்பிடி-யெல்லாம் பேசுறீங்க... கோபம் உள்ள எடத்துல கொணம் இருக்குதுங் களே !

முத் : நாங்கூட நெனக்கலை...இம்புட்டு கொறஞ்ச நாளுக்குள்ள எனக்கு எளுத்துக்கூட்டி படிக்க வருமுன்னு...முன்னையெல்லாம் ரயில்ல போறப்ப எந்தப் பொட்டீல ஏறப்போனாலும் ரிஜர்வ் பொட்டிம்பான்... நீங்க அந்த வார்த்தைங்களை அர்த்தம் ஆவுறாப்ல சொன்னதுக்கப்பரந்தான் ஒரு தெம்பும் துணிச்சலும் வந்துச்சு.. என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவந்தான்!

பன் : இப்ப நீங்க அனுபவத்தில பேசறீங்க... அதனால ஒங்க கிட்ட இப்ப சொன்னாக்க வௌங்கிக்கு வீங்கன்னு நெனைக்கறதோட நீங்களே நாலு பேருக்கும் வௌக்குவீங்க இல்லையா?

செங் : தம்பி! நல்லதை யாரு சொன்னாலும் கேட்டுக் குடணும்னு இப்பல்ல தெரியுது! ஒரு கடுதாசி வந்தா அத்தப் படிக்க மத்தவங்க தயவை தேடணும்... அவுங்க நேரம் பாத்து...போவணும்... கடிதாசியப் படிக்கிற அளவுக்கு வெரசா சொல்லிக் குடுத்துப்-புட்டீங்க தம்பி...ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.

பன் : இப்ப தெரிஞ்சுகிட்டீங்களா? படிப்புக்கு வயசு கெடையாதுன்னு! படிப்பு இருந்தா மத்ததுங்கள்ளாம் தானே வரும். கத்துக்கிடணும்னு ஆசை இருந்தாப் போதும்... கத்துக்கிடலாம்...

முத் : என்னங்க பன்னாரி! நானே மொதல்ல மெரண்டேன்... நம்பளையும் இந்தச் சின்னப் பசங்களை வெரட்றா மாதிரி வெரட்டி ' அ'னா, 'ஆ' வன்னா லேருந்து தான் தொடங்குவீங்கன்னு நெனச்சேன்... இந்தப் பொடியங்கிட்ட போய் படிக்கறதான்னு வெக்கப்படக்கூடச் செய்தேன்....நீங்க எங்க மனக நோகாம எவ்வளவு விஷயங்களை சொல்லிக் குடுக்குறீங்க....

பன் : இந்த மாதிரியெல்லாஞ் சொல்லி எனக்கு மண்ட கனம் வாராப்ல செய்யாதீங்க... எங்களுக்கு குடுத்த பயிற்சியிலே இன்னும் பத்துல ஒரு பங்குகூட நாஞ் சொல்லலியே! எப்பிடியோ முதியோர் கல்வியோட நோக்கத்தை புரிஞ்சுகிட்டீங்க! மகிழ்ச்சி!

செங் : மெய்யாச சொல்றேங்க... மண்வளப் பரிசோதனை யப்பத்தி நீங்க வௌக்கமாச் சொன்னப்பரந்தான் புரிஞ்சுது...

பன் : ஒங்களுக்கெல்லாம் ஜப்பானிய சாகுபடி மொறை தெரியுமில்லியா...

செங் : ஆமாம்... கொஞ்ச காலத்துக்கு முன்னே அதப்பத்தி பிரமாதமாச் சொன்னாங்க... சும்மா சொல்ல லாமா! நல்ல வௌச்சல்

பன் : அப்படிப்பட்ட அந்த ஜப்பான்ல படிக்காதவங்களே கெடையாது! அதனாலதான் அந்த நாடு எல்லா வகையிலேயும் முன்னேறியிருக்குது...

முத் : அதாவது படிப்புச்கும் வருமானத்துக்கும் கனக்ஷன் இருக்குதுங்கிறீங்க! சரிதானுங்களா?

பன் : ஆமாங்க...சரியாச் சொல்லிப்புட்டீங்களே!

முத் : கேக்குறேனேன்னு கோவிக்கப்படாது.......எத்தினியோ மேல் நாடுங்கள்ள கூடத்தான் படிச்சவங்க நெறைய பேர் இருக்காங்க...அங்கயும் கொலை, கொள்ளைன்னு குத்தங்க இருக்கத்தானெ செய்யுது...

பன் : ரொம்ப நல்ல கேள்வி! படிப்புன்னாக்க எழுதப் படிக்கத் தெரியறது மட்டுமில்லே! அடுத்தவங்களுக்கு முடிஞ்ச வரைல நல்லது செய்யறது தான் படிப்போட நோக்கம்! நல்ல பாரம்பரியம் உள்ள நம்ப நாட்ல எல்லாரும் படிச்சவங்களா இருந்துப்புட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆஸ்பத் திரிக்கும் வேலையே பெரும்பாலும் இருக்காது...

எனக்கு இதுல முழு நம்பிக்கை இருக்குது...

செங் : சரிதாங்க தம்பி! முந்தில்லாம் நாஞ் சொல்றதைத் தான் மத்தவங்க கேக்கணும்...கேக்குலீன்னா வாய்ல வந்தபடி திட்றதுன்னு செய்துகிட்டிருந்தேன். ஒரு வாட்டி நாட்டாமை கூட கண்டிச்சாரு .. எனக்கே தெரியுது...படிப்புக்கு ஒரு தனி மருவாதை இருக்கத் தான் செய்யுது...