காட்சி-2

செட் அதேதான்.

(நாட்டாமைக்காரர் வீடு முத்துக்காளையின் வீட்டிலிருந்து மூணாவது வீடு... நல்ல மாடிக் கட்டிடம்... வாசலில் கயிற்றுக் கட்டிலில் 50 வயது மதிக்கத்தக்க நாட்டாமை முகத்தில் அமைதி, அடக்கம், எளிமையுடன் மேலே ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு ஒரு பேப்பரைப் படித்துக் கொண்டிருக்கிறார்).

முத் : ஐயா!

நாட் : என்ன முத்துக்காளை! ஏது இவ்வளவு தூரம்... .காரியம் இல்லாம வரமாட்டியே! அடடே பக்கத்ல பன்னாரித்தம்பியா? வாய்யா! வா! உட்காரு...எப்ப வந்தே !

பன் : காலைலதான் வந்தேங்கய்யா! ஒங்களைப் பாத்ததுல ரொம்ப சந்தோஷமுங்க....

முத் : என்னங்க! நாட்டாமை! கோளியும் ஆடுந் திருடுற பசங்களையெல்லாம் வாங்க போங்கன்னுகிட்டு.... மரத்துல கட்டிவச்சு பட்டைய எடுக்கச் சொல்றத வுட்டுப்புட்டு...

நாட் : யாரு எவருன்னு தெரிஞ்சுக்காம இப்பிடியெல்லாம் பேசாதீங்க! ஏதோ நம்ப கிராமத்துக்கு நல்லது செய்ய வந்த ஆளைப்போயி வாய் புளிச்சது மாங்கா புளிச்சதுன்னு பேசக்கூடாது. தம்பி நீங்க ஒண்ணும் மனசுல வச்சுக்காதீங்க...முத்துக் காளைக்கு வெவரம் போதாது...அவரு ஒரு வெகுளி! மனசுல ஒண்ணுமே கெடையாது.

பன் : சமூகப் பணி செய்யுறவங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் எல்லாம் ரொம்ப சாதாரணமுங்க... -- எனக்குக் கோபமோ.. வருத்சமோ கெடையாதுங்க சியாக

... நல்ல வேளை ஒங்க வூட்டுக்காவது கூட்டி யாந்தாரே! அந்தவரைக்கும் நல்லது...

முத் : நாட்டாமே! கேக்குறேனேன்னு தப்பா எடுக்கா தீங்க! இந்த எளவெட்டப் பசங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? சும்மா புத்தகப் புளுங்க. ஒண்ணு சொல்லிப்புட்டு ஒம்பது செஞ்சதா எளுதிக்கு வாங்க.. ஏதோ கேக்கவும் பேசவும் நல்லா இருக்கும்! நடைமொறைக்கு ஒத்து வராப்ல இருக்கும்னு எனக்குத் தெரியலை.... நீங்க சொல்றதுக்குக் கட்டுப் 'படறேன்! அம்புட்டுத்தான்!

நாட் : முத்துக்காளை! கார்த்திய மாசத்து பொரிமாதிரி பொரிஞ்சுகிட்டே போவக் கூடாது... நீங்களுந்தான் மாடு வளக்கிறீங்க.. தொண்டை அடைப்பான் நோயி மாட்டுக்கு வர்ரதை எப்பிடிக் கண்டு பிடிக்கறதுன்னு ஒங்களுக்குத் தெரியுமா? இல்லெ டெல்லி எருமையோட வளப்புப் பத்திதான் தெரியுமா? அட, மொறைதான் தெரியுமா?

மாத்துப்பயிர்.

முத் : இவுருக்கு அதப்பத்தியெல்லாந் தெரியுமுங்களாக்கும் ...நீங்க அதையெல்லாம் நம்புறீங்களாக்கும்...

நாட் : இந்த பாருங்க முத்துக்காளை! இந்தக் கிராமத்ல இத்தினி வூடுங்க இருந்தாலும் ஒங்க வூட்டத்தான் நான் தேர்ந்தெடுத்து ஆபீசருக்கு எழுதியிருந்தேன் அதைப் புரிஞ்சுக்சாம்....காரணம் இல்லாம ஒத்தரு ஒங்கவூட்டுக்கு வருவாரா? எல்லாம் ஒங்க நன்மைக் குத்தான்.