காட்சி-5

(முத்துக்காளையின் வீட்டில்)

செங் : ஏண்டி! ஒனக்கு அம்புட்டு ஆய்ப் போச்சுதா? இந்த வெடுவெட்டிப்பய மொட்டையனத்தான் கட்டிக்கு வேன்னா சொல்றே! அது இந்தக் கட்டை இருக்குற வரைக்கும் நடக்காது...சொல்லேன்யா! வாயில என்ன கொளுக்கட்டையா? ஒன்னோட வேற பெரிய ரோதனையாப் போச்சுது... முத் : ஆமாம் புள்ளே சிங்காரி ஒங்கம்மா சொல்லிப் புட்டாள்ள! பொறவு பேச்சென்ன? அவ சொல் றாப்ல நடந்துக்க!

சிங் : என்னப்பா நீங்க! சின்னப் புள்ளேலேருந்து “அவந்தான்டி ஒம்மச்சான்னு" நீங்க அம்புட்டுப் பேருந்தானெ சேந்துசொன்னீங்க...இப்பப் போயி மனசை மாத்திக்கச் சொல்றீங்க. இது நியாயமா? என்னால அம்மா சொல்லுறதைக் கேக்க முடியாது ... முடியாது... என்ன ஆனாலும் சரி!

செங் : நியாய அநியாயத்தைப் பேசற அளவுக்கு ஒனக்கு வயது பத்தாது...பெரியவங்க சொல்றதைக் கேளு ஒன் நல்லதுக்குத்தான் சொல்றேன் ...(அந்தச் சமயம் பன்னாரி வர அவரைப் பார்த்து) வாங்க தம்பி! நீங்க வயசுல சின்னவரா இருந்தாலும் வெவரந் தெரிஞ்சவரு! இவளுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லுங்க தம்பி! பெண் புத்தி, பின் புத்தின்னு தெரியாம ஒளறிக்கிட்டு இருக்குறா! கருவேப்ல கொத்து மாதரி ஒரே பொணணுங்க!

பன் : ஒங்க சொந்த விஷயங்கள்ள கலந்துக்கற அளவுக்கு என்னை மதிக்கறதைப் பத்தி நான் பெருமைப் படறேன்...கொஞ்சம் கவனமாக் கேளுங்க ..

செங் : சொல்லுங்க தம்பி!

பன் : நீங்க சொல்றதுக்கு முன்னாலே எனக்கு எல்லாம் தெரியும். ஒங்க பொண்ணு மாமரத்துக் கேணில விளுந்து தற்கொலை செஞ்சுக்க பாத்திச்சு! நல்ல காலமா நாட்டாமை தடுத்துச் சமாதானம் செஞ்சுப்புட்டாரு...

முத் : அடப்பாவி பய புள்ளே !

பன் : நானும் மொட்டையனங்கறவரைப் பத்தி விசாரிச்சேன். அவங்கப்பா வுட்டுப்புட்டுப் போன ஒரு ஏக்கர் நெலத்தை பத்து ஏக்கரா பெருக்கி யிருக்காரு... வயது வந்தோர் கல்வித் திட்டதல சேந்து படிச்சு புதிய புதய மொறைகளை விவசாயத்ல பயன் படுத்துறாரு! தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பச்சத்து பத்தி அனுபவபூர்வமா பல பேருக்குச் சொல்றாரு! போதுமா?

முத் : எந்தப் பயிருக்கு எதை வூடுபயிரா போடலாம்னு வேற தெரிஞ்சு வச்சிருக்கான்... பல பல வகையில் பாத்தா அவன் நல்லவந்தான் புள்ளே. தந்தங்கச்சு கல்யாணத்துக்கப்-புரந்தான் தங்கல்யாணம்னு வேற சொன்னான். அதையும் நல்ல எடத்ல கட்டிக் குடுத்துப்புட்டான்... நல்ல குடும்பப் பொறுப்புள்ள பயதான்...

பன் : ஜன நாயக நாட்ல அவங்கவங்க விரும்பினவங்களைக் கல்யாணம் செய்துக்க உரிமை இல்லேன்னாக்க என்ன ப்ரயோஜனம் தோல்வியினாலயும் வெறுப்புனாலயும் தற்கொலை பண்ணிக்கிட்டா யாருக்கு நஷ்டம்? நாட்டுக்குத்தானெ! இளைஞர் களோட சதவீதம் கொறையாதா?

செங் : நாட்டுக்கு எப்பிடிங்க தம்பி நஷ்டம்?

பன் : பெண்ணு கோ ஆணுக்கோ அரசாங்கம் செலவு பண்ணின பணம் போனதுதானே! பொதுவா கிராமாந்தரப் பக்கந்தான் தற்கொலைங்க அதிகமா நடக்கறதாச் சொல்றாங்க! மனசுல தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளந்துப் புட்டா இது மாதிரி தற்கொலைங்களைக் கொஞ்ச கொஞ்சமா நிறுத்தலாம். கல்வி ஒண்ணுதான் இதைச் செய்ய முடியும்....

முத் : ஏந்தம்பி எல்லாரும் முதியோர் கல்வின்னு சொல்றாங்க நீங்க என்னமோ வயது வந்தோர் சல்வின்னு சொல்றீங்களே!

பன் : 15 வயசுலேருந்து 35 வயதுள்ளவங்களுக்குள்ள திட்டந்தானெ இது!

முத் : இப்பப் புரியுதுய்யா ! நல்லாவே புரியுது!

செங் : அது என்னமோ தம்பி! எங்க வூட்ல ஒரு பையனாவே வளந்துப்புட்டே! 'நீ வந்தப்புரந்தான் எங்க வூரே களை கட்டுச்சு! வயசுல சின்னவனா இருந்தாலும் ஒனக்கு மூளை சாஸ்தி! ஒன்னோட இந்த முதியோர் கல்வித் திட்டத்துக்கு எங்களோட தோட்டத்து வூட்டையே கொடுத்துப்புடறோம்.

(நாட்டாயை வருகிறார்).

நாட் : நான் வர்ரது பூஜைவேளை கரடி மாதிரி இருக்குமோ?

செங் : ஐயய்யே! எங்க தெய்வம் நீங்க...இல்லேன்னா இந்தத் துக்குரி ஊர் செணத்தல்லே நாற அடிச் சிருப்பா ...

காட் : புள்ளைய கோவிச்சுக்காதீங்க! சீக்கிரமா கல்யாணத்துக்குத் தேதிய வச்சுப்புடுங்க...

பன் : கல்யாணப் பத்திரிகையை அவசியம் அனுப்புங்க... நான் வர மொயற்சி பண்றேன்...

முத் : உசுருக்குக் தொனை கல்விதான்னு சொல்லி எங்க கண்ணைத் தொறந்த நீங்க ஊருக்குப் போறேன்னு சொல்றீங்களே!

பன் : முதியோர் கல்வியோட அர்த்தத்த புரிஞ்சு கிட்டீங்க! இந்த வகுப்புக்களைத் தொடர்ந்து நடத்த என்னோட சினேகிதங்க வருவாங்க...மத்த கிராமங்களுக்கும் நாம் போக வேண்டாமா?

செங் : அவசியம் போகணும் தம்பி! என்னை மாதிரி இருக்ற அரை வேக்காடுங்களை-யெல்லாம் சரிசெய்ய வேண்டாமா? போய்ட்டு வாங்க! ஆனாக்க எங்களை மறந்துப்புடாதீங்க! (கண்களில் நீர் பல்க.)

பன் : அடடே! அழுவாதீங்க! பழகினவங்கனை மறக்க முடியுமா?

யாவரும் : (கண்ணில் வரும் நீரைத் துடைத்துக்கொண்டே)

போய்ட்டு வாங்க! நீங்க நல்ல இருக்கணும்!

பன் : நாட்டாமைய்யா! எனக்காகக் கொடுத்த பரிசுப் பொருளுங்களை கிராமத்து ஜனங்களுக்கே கொடுத்துப் புடறேன்! நாம இந்தியர்களாகவும் இருக்கணும்! இந்தியப் பொருள்களையே வாங்கணும்! கல்வி கூட இந்திய மயமாக்கப் படணும்! அதுக்கு நாம பாடுபடணும்...ஒங்க எல்லாருடைய ஒத்துழைப்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி வணக்கம். போய்ட்டு வர்றேன்...

யாவரும் : வாங்க! வணக்கம்!