காட்சி-2
(மானூர் நாட்டாமைக்காரர் வீட்டில் முதியோர் கல்வி வகுப்பு நடைபெறுகிறது கந்தன் வாத்தியார் பாடம் நடத்துகிறார்)
நேரம் இரவு 7.10
கந்தன் : இந்தப் பூச்சியோட பேரு என்ன? சொல்லுங் கம்மா காளி! |
காளி : புகையான்...
கந் : சரியா சொல்லிப்புட்டீங்களே!....
காளி : என்னங்க நாங்க எங்க வயல்ல பாத்துகிட்டே இருக்குறோமே.....
கந் : இதை பாத்து எழுதுங்க... (புகையான் என்று எழுதிய அட்டையைக் காட்டுகிறார்)
காளி : பு...கை...யா...ன்
கந் : அம்புட்டு தாங்க...
காளி : நானு வூட்டுலேயே எளுதிப் பாத்தேங்க... மவங் கூட எளுதிக் காட்டுறான்... ஐயா...கைய வலிக்குது கொஞ்ச நேரங்களிச்சு எளுதறேங்க
கந் : ஒங்களை யாரு என்ன சொல்லப் போவுறாங்க.... ஏம்மா மணிமேகலை...
மணிமேகலை : என்ன வாத்தியாரய்யா?
கந் : நேத்தே கடியாரம் பாத்து மணி சொல்ல கத்து கொடுத்தேன்...எங்கெ...இப்ப மணி சொல்லுங்க பாக்கலாம்...(ஆறு ஐம்பது அட்டையைக் காட்டுகிறார்)
மணி : வந்துங்கய்யா...சின்ன முள்ளு ஆறுக்கும் ஏளுக்கும் நடுவாந்தரத்லெ இருக்குது...பெரிய முள்ளுபத்துல இருக்குது... ஆ... நீங்க சொன்னது நெனப்ல இருக்குது... ரெண்டு நம்பருக்கு நடுவாந்தரமா சின்ன முள்ளு இருந்தா முந்துன நம்பருதான் மணி பெரிய முள்ளு எதிலெ நிக்குதோ அத்தோட அஞ்சால பெருக்கோணம்...மணிங்கய்யா.... ஆறு அம்பதுங்கய்யா...
கந் : அம்புட்டுதான்... அம்புட்டேதான் ...
மணி : எம் மாமியாவூட்லெ...எனக்கு நேரம் பாக்கத் தெரியாதுங்கற விசியத்த வச்சுகிட்டு புலி ஆட்டை பாக்கறாப்லவே பாத்துகிட்டிருப்பாங்க...சொல்லி மட்டும் குடுக்க மாட்டாங்க...கூடப் பொறந்த பொறப்பு மாதிரி சொன்னீங்க... கோடிக் கும்புடு...
காளி : அது சரி...கம்பங்கொல்லையாரு சம்சாரம் செவப் பாயிய இன்னங் காங்கிலேயே
மணி : நீ முன்ன போ. நாம் பின்னால வாரேன்னு சொல்லிச்சு... தாக்கலும் சொல்லலியே...
காளி : நீ ஒரு பக்கட்டு... அது பொம்பளைக்கு பொம்பளை - ஆம்பளைக்கி ஆம்பிளை... தகிரியம் ரொம்ப ரொம்ப சாஸ்தி...(செவப்பாயி வருவதைப் பார்த்து) அடடே! வா புள்ளே! ஒன்னிய பத்தி தான் பேச்சு - நூறுவயசு...
செவப் : ஐயா! வாத்தியாரய்யா! வர்ர வளீல இந்த அசட்டு ஆச்சிமுத்து கிட்ட பேசி கிட்டிருக்கும்படி யாயிருச்சு ..கோவிக்காதிங்கய்யா.... நீங்க அனுமதி கொடுத்தீங்கனாக்க காளியம்மா கிட்டே பேசறேன்.....
கந் : நீங்க என்ன செவாந்தெரியாதவங்களா... உங்களுக்கு போயி நாஞ் சொல்லுறதா? நாலு சொல்லிக் கொடுக்கமட்டும் வரல்லீங்க...ஒங்களைப் போல இருக்கற வங்க கிட்டேருந்து நானும் தெரிஞ்சுகிடத் தான் வந்தேங்க...
காளி : என்னது? என்னது? எங்க கிட்டேருந்து நீங்க தெரிஞ்சுகிதுவா... நல்லா சொன்னீங்க...
கந் : நெசமாலுந்தான்... ஒங்க கிட்ட போயி பொய்யி என்னத்துக்குங்க?
செவப் : ஐயா இந்த வகுப்புக்கு வர்ரப்போ வூட்ல இருக்குற மாதிரிதான் தோணுதுங்கய்யா...ஒங்க பளாட அன்பு இருக்குதுங்களே அது காங்க பெங்களை இம்புட்டு தொலவு வரவளைக்கிதுங்க.....
கந் : இந்த பாருங்கம்மா செவப்பாயி நல்லா கவனிச்சுடுங்க... கல்விக்கு அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை , பிரியம் ரொம்ப ரொம்ப முக்கியம்...
நீங்க இந்த முதியோர் கல்வில ஒங்க வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் வேணு மிங்கறதைத் தான் படிக் கிறீங்க ..இந்த விசயத்தல வெறுப்புக்கு காரணமே
இங்லீங்க...
மணி : வாத்யாருய்யா...முன்ன வந்து வூட்டுக்காரரு வந்த ஒடனே வாயிக்கு வந்தபடியெல்லாம் திட்டு வாரு... அடிப்பாரு...விதியேன்னு அளுவேன்... ஆனாக்க இப்ப..நீங்க சொல்லிக்குடுத்தாபல யோசனை பண்ணினேன் ..குடிக்கிறது தப்புன்னு நீங்க சொன்ன கதைங்களையெல்லாம் சொல்லு வேன்...புத்தியில படற மாதிரி சொன்னேன்... கொஞ்சம் கொறஞ்சிருக்குது ..அத்தோட மட்டும் இல்லீக ..சைகலு கத்துகிட்டு சந்தைக்கி போயிட் வர்ராரு. நீங்க நல்லா கேளுங்க சொல்றேன். காட்டு மிருகங் களை வேட்டையாடுன ஒருத்தரு ரொம்ப நாளு கழிச்சு புத்தி தெளிஞ்சு படிச்சு ராமாயணமே எழுதினாரு .. அவர் பேரு வால்மீகி...மாடு மேசீசு கிட்டிருந்த பையன் நெறய படிச்சு பெரிய பெரிய சமாசாரங்களை சொல்லியிருக்காரு... அவர் பேரு திருமூலர்னு பேரு... இன்னும் காளிதாசர்... சொல்லிகிட்டே போகலாம்.
செவப் : அதனாலெ ஒரு வெடா மொயற்சியோட படிச்சா மேதையாயிப் புடலாம்னு சொல்லுங்க... மொயல ஆம செயிச்ச கத மாதிரி இல்லீங்களா?
கர் : ஆமாம்! அதுல என்ன சந்தேகம் விடாமுயற்சிதான் வேணும்...மனசு வச்சுப்புட்டா ஏன் முடியாது? எல்லாம் முடியும்...
மணி : புட்டுவச்சுப் புட்டீங்க... செல பேருக்கு ஒடம்பு வளைய மாட்டேங்குது நொண்டிச் சாக்கு எதுனாச்சும் சொல்லி வம்படிக்கறாங்க ..ஊரு கதைபேசறாங்க... இங்க எம்புட்டு நல்லாபொழுது போவுது தெரியுங்களா?....
கந் : மனுசாளுங்கவோட சொபாவமே அதுதான்... நல்ல படியா நயமா பேசி... அவங்க சுகதுக்கத்து லெ அக்கறை காட்டி பேசி அழைச்சுகிட்டு வர்ரதுலெ தான் சாமர்த்தியம்...இப்ப ஆரம்பத்து லெ இங்க எல்லாரும் தானாக்கவா வந்தாங்க....
செவப் : நாங்கூட மொகல்ல பயந்தேங்க ஆனா ஆவன்னால தான் தொடங்கப் போறீங்கன்னு நெனச்சேன்... ஆனா இங்க ரொம்ப சுருக்கமா தேவையானத சொல்றீங்க.... அறஞ்செய விரும்பு .. நாய் வீட்டைக் காக்கும்... இதெல்லாந்தான் ஒங்களுக்குத் தெரியுமே...ஸிங்க பாஸ்பேட்டை 2 சதவிகிதம் எடுத்து 98 சதவிகிதம்
தண்ணீல கலந்து எலிங்களை ஒழிக்கணும்... எலச்சுருட்டுப் புழு வந்தாக்க என்ன செய்ய வேணும்...இதுங்க போன்ற விஷயங்களைப் படிச்சு தெரிஞ்சுக்க தானெ இந்த முதியோர் கல்வித் திட்டமே...
கங்:
காளி : நான் கை தெளிப்பானை கண்டேனா வெசைத் தெளிப்பான கண்டேனா... மணிச்சத்து, தழைசி சத்து, சாம்பல் சத்து இதுங்களை எப்படி கலந்து போடறதுங்கறத நீங்க இந்த பள்ளிக்கோடத்ல சொன்ன பெறகு தானெ ஒரு மாதிரியா வெளங் குச்சு ....
மணி : நீங்க சொன்ன மாதிரி படிச்சுப்புட்டா சீக்கிரமா எளுத்துங்க புரியுது...
கந் : எப்படி சொல்லுங்க பார்க்கலாம்.....
மணி : காகா பாத்திருக்கோம்...படத்துக்குக் கீழே எழுதியிருக்குது... அப்புரம் ''பூ'... தெரியுது... அதாவது ரெண்டெழுத்து மூனெளுத்து வார்த்தை சேக்கறது அந்த வார்த்தைங்களும் நமக்கு பளக்கப் பட்டாப்ல இருந்தாக்க கத்துக் கிடலாம்... சரிதானுங்களா ஐயா?
கந் : ரொம்ப சரி...ஏம்மா செவப்பாயி! அந்த மாதிரி நீங்களா தெரிஞ்சுகிட்ட விசயஞ் சொல்லுங்க....
செவப் : தக்காளி பழம், ஆனைக்கொம்பன் ஈ, பொன்னி, கோ ரெண்டு பயத்தங்காய்...
காளி : ஐயா முன்ன ஒரு நாளு பயிருக்கு பாதுகாப்பு இல்லீன்னா பாழுன்னு ஒரு பெரியவரு சொன்னா ருன்னு சொன்னீங்களே...எம்மவன் விதியேன்னு படிச்சுகிட்டிருந்தான் ... முதுகிலெரெண்டு வச்சேன். அந்த சரியான சமாச்சாரம் ஞாவுகத்துக்கு வரல்லே... ஆனாக்க பைய பைய வந்துப்புடும்...
மணி : ஆமாங் காளியக்கா...எனக்கது தெரியும்... திருக்குறள்- "ஏரினும் நன்றாம் எருவிடுதல்”....
செவப் : கட்டபின் நீரிலும் நன்று அதன் காப்பு... எப்பிடி....
கந் : எப்படியோ இந்தக் கவ்வித் திட்டத்தோட சாரம் - - சத்த புரிஞ்சு கிட்டீங்க... அந்த வரைக்கும் எனக்கு ஜெயிப்புதான்... (காட்சி முடிவு)

