காட்சி-1
ஆச்சிமுத்து : இந்தா புள்ளே சேப்பாயி! அட ஒன்னத் தாம் புள்ளே !
செவப்பாயி : இந்தாய்யா ஒனக்கு எதுனாச்சும் இருக்கு தா நானு எம்புட்டு வெரசா போயிகிட்டு இருக்குறேன். சும்மா லவுடு ஸ்பீக்கர் மாதிரி அலர்றியே!
ஆச்சி : ஓஹோ! இந்த பட்டணத்து வாத்தியாரு கந்தன் நடத்துறாரே ரவை பளளிக்கூடம் அதுக்குத்தான் இம்புட்டு வேகமா போறியா?
செவப் : பின்னே! ஒன்னை மாதிரி வம்படிச்சு பொளுதை வீணாக்க சொல்றியா?
ஆச்சி : ஊம் . கண்ணு கெட்டப்றம் சூரியனை கும்பிட்டு என்ன பிரயோசனம்?
செவப் : கண்ணு கெட்டிச்சுன்னு ஆரு சொன்னா ஒனக்கு? ஆச்சி : நீ ஒண்ணு! என்னமோ பாடம் எளுதலேன்னு சொல்லி வாத்தியாரு முதுகுபட்டைய எடுத்துப் புடுவேன்னு சின்னபுள்ளையா இருக்கறப்போ சொன்னாரு.... அன்னைக்கு புடிச ஓட்டந்தான்... பள்ளிக்கூடத்து பக்கமே தலைவைக்கிலியே!
செவப் : சரியான பயந்தாங்கொள்ளி... பெத்தவங்களுக்கு ஒத்தவங்க படிச்சவங்க... கோளி முதிச்சு குஞ்சு மொடம் ஆயிடுமா? வாத்தியாரு அடிச்சாக்க நீ . செத்துருவியோ! கொடுத்து வைக்கிணுமே!
ஆச்சி : இன்னமே நானு படிச்சு, தேறி, எங்க உத்தி யோவத்துக்கு போவப் போறேன்? ஏதோ வயவாக் காட்டுக்குப் போயி பயிரு பச்சைய பாத்துகிட்டு காலத்தை தள்ளிப் புலாமுன்னு பாக்குறேன்... அத்தோட சிலேட்டையும் புத்தவத்தையும் சின்ன புள்ளை மாதிரி எடுத்துகிட்டு போயிட்டா பாக்குற நாலு பயலுவ என்னிய பாத்தா சிரிக்க மாட்டான்? செவப் : இப்ப ஒன்னிய தலைல வச்சிகிட்டா கூத்தாடு றாங்க?... இந்த பாரு...படிப்புக்கு மட்டும் வயசு கெடையாது... சாவுற வரைக்கும் படிக்கலாம்... வாத்தியாரு சொன்னாரு. நீ வேணுமுன்னா ஒரு நாளைக்கி வா...பாத்துகிட்டே இரு! இஸ்டம்னா படி... இல்லாங்காட்டி வுடு... ஆச்சி: நம்மை போட்டு வதைக்காதே! இன்னைக்கு ஆடு புலி வெளையாட வாரதா சொல்லிப் புட்டேன்...இன்னொரு நாளு வர்ரேம் புள்ளே...
செவப் : ஒன்னோட பேசினதுலெ இன்னும் நேர மாயிருச்சு...எனக்கு ஒரு பாடம் போச்சுது - நான் வர்ரேன்... (ஓடுகிறான்)

