உங்களுடன் - ஒரு கதையாடல்...
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், பெரும்பாலும் இருபது ஆண்டுகளாக பழமை உடையவை. இதுவரை இந்தக் கதைகள் நிற்கின்றன. இனிமேல் நிற்குமா என்பதை காலந்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனாலும், அந்தக்காலத்தில், வைகை ஆற்றுக்கு எதிராக நல்ல படைப்புக்கள் எதிர்நீச்சல் போட்டதாக அறிகிறோம். ஆனால், இந்தக்காலத்தில், சில இலக்கிய தலிவான்கள் உருவாக்கும் குட்டைக்குள் எதிர்நீச்சல் போட வேண்டிய அவல நிலை இலக்கியத்திற்கு ஏற்பட்டுள்ளது. என்றாலும், இந்த குட்டையும், இவற்றை அரிக்கும் இலக்கிய கொசுக்களும், மக்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்படும் என்று நம்புகிறேன். எடுத்துக்காட்டாக அமற் கல்கியை தூற்றியவர்களே இன்று அவருக்கு பல்லக்கு தூக்கும் காலக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கதையின் பின்னணி அனுபவங்களை பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தத் தொகுப்பின் முதல் கதையான தாணடி சதையாடி, ஒரு அன்பு பிரபாகத்தில் நீச்சல் அடிக்கிறது. இந்த அன்பு, பாசம் இருக்கிறதே, இவை மகத்தான மாறுவேடதாரிகள்... எங்கள் ஊர்ப் பக்கம், தன் மகனை படிக்க வைத்த ஒரு பெரியவர், அவனால் கல்லூரியில் இழிவுப்படுத்த பட்டதும், ஆண்டுக்கணக்கில், அவன் முகத்தை ஏறேடுத்துப் பார்க்கவே மறுத்தார். வெறுத்தார். ஆனால், அதே மகன் அகாலமாய் மரணம் அடைந்தபோது, சடலம் புதைக்கப்பட்ட மறுநாள் யாருக்கும் தெரியாமல், கடுகாட்டிற்கு ஓடி புதைக்குழியை தோண்டி பெற்ற மகனை பார்ப்பதற்கு முயற்சித்தார். ஆக, அன்பு ஒரு வெறுப்பு முகமுடியைப் போட்டுக்கொள்ள முடியுமே தவிர, அந்த அன்பால் தனது முகத்தை மாற்றிக்கொள்ள முடியாது. இந்தத்தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் முதலாவது கதை.
'நாமற்க்கும் குடியல்லோம்' எழுதப்பட்ட காலத்தில் மணமுடிக்க நிச்சயிக்கப்பட்ட மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன்பு பேசிக்கொள்வதும், சந்தித்துக் கொள்வதும் வழக்கமில்லை. ஆனால், இன்றோ தொலைபேசியில் பேசுவது மட்டுமல்ல, இருவரும், பல இடங்களுக்கு தனியாகவே செல்கிறார்கள். அன்றைய காலத்தில் நான் எதிர்நோக்கிய, இன்றைய காலத்துப் பெண் இதில் வரும் வேதா
உண்மையில் விபவள் - இப்படி அப்பாவியாக இருக்க முடியுமா என்ற ஒரு எண்ணம் ஏற்படலாம். ஆனால் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு, முன்பு மூதாட்டிகளாக இருந்தவர்கள், கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தார்கள். அதே சமயம், லஞ்ச லவண்யங்கள் காலத்தால் மாறுவேடம் போட்டாலும், சுயங்கள் அப்படியே இருக்கின்றன என்பதை காட்டுக்கிற கதை.
கட்டாயம் இல்லாத காதல் - நான் வசிக்கும் பகுதியில் நடந்தது. மனைவியான அக்காள் மகள், தன்னை நிராகரிக்கப்பட்ட ஒரு இளைஞனும், கணவனால் வஞ்சிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் ஈடுபாடு கொள்கிறார்கள். ஆனால், இருவருமே தெனாலிராமன் பூனைகளாய் போனதால், இவர்களுடைய இணைப்பும் நடைபெறவில்லை. இருவருக்குமே, சட்டம், தங்களை பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம். சட்டம் ஒன்றும் அப்படி பிடித்துக் கொள்ளாது என்று எனது அருமைத்தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான வழக்கறிஞர். செந்தில்நாதன் என்னிடம் தெரிவித்த போது, நான் ஆலோசனை கூற முடியாத அளவிற்கு, அந்தப் பெண் எங்கோ போய்விட்டாள். ஆகையால், எதிர்காலத்தில் அல்லாடும் இப்படிப்பட்ட இளம் தலைமுறையினருக்கு இந்தச் சிறுகதை வழிகாட்டும் என்று நம்புகிறேன்.
கா... கா... கா..... - இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒருவரைப் பற்றிய பதிவு. நல்ல மனிதர். மனதில் ஏதோ ஒரு பயப்பிராந்தி இருந்ததால் காக்காத்தனங்களில், ஈடுப்பட்டிருக்கலாம் என்று இப்போது எனது அனுபவம் கூறுகிறது. ஆனால், அப்போதோ அவரை கிண்டல் செய்ய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கதை. நல்ல வேளையாக, கதையில் நான் கொடுத்த தண்டனை அவருக்கு நேரவில்லை என்பது எனக்கு ஒரு ஆறுதல்.
சுதந்தர மாடன் சிறுகதை, நாடு முன்னேறி உள்ள அளவிற்கு நாட்டு மக்கள் முன்னேற வில்லை என்பதை தெரிவிக்கும் கதை இப்படிப்பட்ட , பல சிறுவர்களை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். இது, தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற மூன்று அமைப்புகளுக்கும் இப்போதும் பொருந்தும்.
இட ஒதுக்கீடு - அல்லும் பகலும் உழைக்கும் ஒரு அரக வாகன டிரைவரை, அதிகாரிகள் எப்படி இழிவாக நடத்துகிறார்கள் என்பதை சித்தரிக்கிறது. அதேடிரைவர், சட்டம் பேசினால், இந்த அதிகாரிகளின் நிலைமை என்னவாகும் என்பதை கதை எடுத்து கூறுகிறது. இந்த மாதிரியான டிரைவர்களை மையப்படுத்தி, ஐந்தாறு சிறுகதைகளை பல்வேறு பார்வையில் எழுதியிருக்கிறேன். பல அதிகாரிகள் பந்தாக்களை விடமுடியாமல், டிரைவர்களை பந்தாடும்போது, அவர்களது கள்ள பயணம் வெளிப்பட்டு பந்தா பறி போய் விடுகிறது.
டிராக்டர் தரிசனம், அந்தக் காலத்து விவசாயப் புதுமை. கல்கி பத்திரிகை, இதைப் பற்றி எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க, எழுதப்பட்ட கதை. ஆனாலும், கதையில் பாதி பக்கங்களை கரையான் தின்றுவிட்டது. ஆகையால், மீதியை நான் ஒப்பேத்தி இருக்கிறேன். பழைய கவை இந்த ஒப்பேத்தலில் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும் , கவை குறைவுதானே தவிர சுவையற்றது அல்ல.
வினை - விதை - எதிர்கால முதியவர்களுக்கு ஒரு படிப்பினை. இந்தக் கதையே, அதை தானாகக் கூறுகிறது. பிஞ்சுப் பிராயத்தில், எந்த தாக்கத்தையும், தாத்பரியம் இல்லாமல் உள்வாங்கிக்கொள்ளும் சிறுவர் சிறுமியர்களிடம் பெற்றவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், அதற்கு அன்பே அடிப்படையாக இருந்தாலும், அந்த அன்பு, பாராமுகத்தில் கொண்டு போய்விடும் என்ற அனுபவப் பகிர்வே இந்தக் கதை. இதனால், பெற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தவிர்க்க முடியாது ஏற்பட்டுவிடும் என்பதை சுட்டிக்காட்டும் சிறுகதை.
தலைப்புக் கதையான தராசு, முதல் தலைமுறை அலுவலர்களிடமிருந்து பெற்றோரும், உற்றோரும், மனைவியும், மக்களும் சம்திங்காக' எதிர்பார்ப்பது உண்டு. ஒரு அலுவலர் தன்னளவில் நேர்மையாக இருந்தால் மட்டும் போதாது. எளிமை இல்லாமல், நேர்மை இல்லை என்பதை குடும்பத்தினருக்கும் உணர்த்தி, அவர்களை அப்படி வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும். என்னளவில் வெற்றி பெற்ற இந்த அனுபவத்தை ஒரு சிறுகதையாக்கி உலாவிட்டிருக்கிறேன்.
பாவலாக்கள் மூலமாகவே நமது அரசாங்கம் நடைபெற்று வருகிறது என்பதை மத்திய அரசு அலுவலர் என்ற முறையில் கண்கூடாக பார்த்திருக்கிறேன். இந்த அனுபவ பின்னணியே, இந்தக் கதை. இது, இந்தத் தொகுப்பின் வாசிப்பில் ஒரு கலகலப்பு ஏற்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டது.
ஒரு எழுத்தாளன், தான் படித்தறிந்த ஒரு தகவலை வைத்தும், கதை பண்ண முடியும் என்பதற்கு ஒன்றுக்குள் இரண்டு ஒரு எடுத்துக்காட்டு. ஒரே மாதிரியான மனோநிலையில் உள்ளவர்கள், ஒத்துபோக முடியாது என்ற மனோதத் துவத்தை படித்தறிந்து எழுதிய கதை.
ஒரு காதல் கடிதம் - உண்மையிலேயே நடந்தது. அந்த கடிதத்தை படித்துவிட்டு, அந்த இளைஞன் துடித்த துடிப்பும், பதறிய பதற்றமும் என் கண்களை சில சமயம் குத்துகின்றன. உண்மையான காதலர்களுக்கு இந்தக் கதையின் தாக்கம் புரியும்.
ஒரே பகலுக்குள் - எனது அலுவலக தலைவர் ஒருவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து எழுதப்பட்ட கதை. இதில் வரும் வாழைப்பழ வாங்கல் உண்மையிலயே நடந்தது. ஆனாலும், அவரது அடாவடித்தனத்திற்குத் தண்டனை கிடைக்கவில்லை. நான் தான் மென்மையாக கொடுத்திருக்கிறேன். ஆனாலும், இப்படிப் பட்டவர்களுக்கு இத்தகைய கர்வ பங்கங்கள் ஏற்படுவதுண்டு.
சண்டைக் குமிழிகள் பாணி சண்டைகள், இன்று பெரும்பாலும் கிராமங்களில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அருகி வருகின்றன. இந்தக் கதையை மண் வாசனைக்காக மட்டும் எழுதவில்லை. அடித்தள மக்கள் எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்தில் அதை மறந்து விடுகிறார்கள். இந்தச் சண்டைகள் இவர்களுக்கு , தத்தம் மனோபாரங்களை இறக்கி வைக்கும் கமைதாங்கிகளாகவே உள்ளன. இவர்களுக்கு, சண்டைக் காலத்தில் மட்டும், எதிர்தரப்பினர்கமை தாங்கிகள். அது முடிந்ததும் ஒருவருக்கொருவர் தாங்கி கொள்வார்கள்.
இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை கொடுத்திருக்கும் முதுபெரும் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள், எனது எழுத்துலக வழிகாட்டி. அந்தக் காலத்தில், குமுதத்தில், எனது கதைகள் பெரும்பாலும் வாரம்தோறும் வருவதற்கு காரணமாக இருந்தவர். வீட்டைக் கட்டிப் பார்', 'வாழ்க்கை ஒரு சமுத்திரம்' ஆகிய குமுதக் கட்டுரைகள் இன்று கூட பேசப்படுகின்றன என்றால், அதற்கு ஜ.ரா.சுந்தரேசன் அவர்களே காரணம். அந்த அளவிற்கு உட்தலைப்புகளோடு, வெளியிட்டார்.
எந்தவித குமுத பந்தாவும் இல்லாமல் என்னிடம், அன்று முதல் இன்றுவரை, இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் பெருந் தோழர். அனுமானுக்கு தன் பலம் தெரியாததுபோல் இவருக்கும் தனது இலக்கிய பலம் தெரியவில்லை . இவரது பாத்திரங்களான அப்புசாமியும், சீதாய் பாட்டியும் இன்றைய இலக்கிய தரகர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், அவை இந்த இருட்டடிப்பை கிழித்துக் கொண்டு வீறுமிக்க வெளிச்சமாய் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வகை இலக்கியத்தில், தனித்துவம் மிக்க படைப்பாளி ஜ.ரா. சுந்தரேசன் அவர்கள். இவரது முன்னுரை எனக்கு ஒரு இலக்கியக் கௌரவம்.
பெரியவர் திருநாவுக்கரசு அவர்களிடம், அவரது அருமை மகன் ராமு அவர்கள் மூலம் இந்த பழைய சிறுகதைகளை வெளியிட வேண்டும் என்று 'தூது விட்டேன். அவரும், உடனடியாக சம்மதித்தார். நவீனக் கதைகளே, வேலையில்லாத் திண்டாடத்தில் தவிக்கும் போது, இந்தப் பழங்கதைகளை பொருட் செலவைப் பற்றி கவலைப்படாது வெளியிட அவர் முன்வந்தமைக்கு, ஆயிரம் நன்றிகள் சொன்னாலும், அவை போதா.
இறுதியாக -
எப்போதும் எழுதும் வாசகப் பெருமக்கள், எனது அந்தக்கால சிறுகதைத் தொகுப்புகளில் எப்படியோ விடுபட்டுப்போன பழங்கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு, காலத்திற்கு அடக்கமா அல்லது பொருத்தமா என்பது குறித்து ஒரு வரி எழுதினால் நன்றியுடையேன்.

