அன்பை அழிக்கும் துன்பப் பேய்கள்
பரிமளவல்லியின் விடுதிக்கு வந்த பெண்பிள்ளையைக் கண்டு ஆச்சரியங் கொண்ட பரிமளா வந்த அம்மாளை உட்காரச் செய்துத் தானும் உட்கார்ந்தான். அந்த அம்மாளின் வருகை பரிமளாவின் மனத்திற்குப் பலவிதமான சந்தேகங்களையும் கலவரங்களையும் கொடுத்தது. "உண்மையில் இவள் பெண்பிள்ளைதானா! அன்றி ஆண் பிள்ளை பெண் வேடந் தாங்கி வந்திருக்கலாமோ!" என்கிற சந்தேகமும் மனத்திடை எழுந்தது. வந்த பெண்மணியின் முகத்திலோ களையற்று, ஒளி மங்கி விசனமே வடிவமாகச் சோர்ந்து கிடப்பதும் தெற்றென விளங்குகின்றது. "இராக் காலத்தில் இங்கு திடீரென்று வரும் இப்பெண் பிள்ளை யார்? எதற்காக வந்தாள்?" என்று பலமான கேள்விகள் அவளது மனத்திடையே பிறக்க வாரம்பித்தன.
இத்தகைய யோசனைகளோடு அந்த அம்மாளிடம் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்த பரிமளாவை அங்கு வந்த அம்மாள் நோக்கி "அம்மா! உன் மனத்தில் தோன்றியுள்ன எண்ணங்களை உன் முகமே நன்கு எடுத்துக் காட்டுகின்றன. நீ யோசிப்பதுபோல நான் உனக்குத் தீங்கு எதுவும் இழைக்க வரவில்லை என்னுடைய வெட்கக்கேடான நிலைமையில் நான் வெளியில் வரவும், உன் போன்ற உத்தமியான சிறுமிகளைக் கண்டு மகிழவும் பாக்கியமற்றவள். இன்னும் ஓர் முக்கியமான காரணம் பற்றி நான் எனது வெட்கம், துக்கம் இரண்டையும் விட்டு இங்கே வந்திருக்கிறேன். பரிமளா!
நாம் என்று காலா காலத்தில் சாப்பிடவேண்டுமென்று நினைக்கின் றோமோ அன்றுதான் என்றுமில்லாத இடைஞ்சல்கள் ஏற்பட்டு முதலுக்கே மோசமாகி விடுகின்றது.
நான் பகிரங்கமான நாடக மேடையில் உன்னுடைய சங்கீதத் திறமையைக் கண்டு வியந்து ஆனந்த சாகரத்திலாழ்ந்திருக்கிறேன்; இருப்பினும் உன்னுடைய கோகில கானத்தை மீண்டும் நேரில் கேட்க மனம் ஆவல் கொண்டு தவிக்கின்றது ஒரு பாட்டு பாட முடியுமா?" என்று கேட்டாள்.
பரிமளா.- அம்மா! தாங்கள் வந்த காரியம் சங்கீதம் கேட்பதற்குத்தானா! அன்றி வேறு இருக்கின்றதா! அதையே முதலிலறியவில்லையே! தங்களுடைய விருப்பப்படிக்குப் பாடுகிறேன். முதலில் நீங்கள் யார், எங்கிருப்பது, எதற்காக வந்திருக்கிறீர்கள் முதலியனவற்றைத் தெரிந்துகொண்டு பிறகு பாடுகிறேன்.
வந்தவள்.- அம்மா! நீ கேட்பது மிகவும் சரியே! உன்னுடைய கேள்விக்கு நான் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். என் கடமையை நான் செலுத்திய பிறகு உன்னுடைய வாக்கை நீ நிறைவேற்றாது மறுக்கக்கூடும். அதைப்பற்றி நான் இப்போது சொல்ல வேண்டாம். நீ உன்னுடைய இனிமையான கான விருந்தை முதலில் அளித்துவிடு; பிறகு நான் பேசுகிறேன்" என்றாள்.
இதுகேட்ட பரிமளா தன் தாயாரை அவ்விடத்திற்கு வரவழைத்துக்கொண்டு பிறகு பாடத் தொடங்கினாள்.
("எத்தனை ஜென்மங்கள்" என்ற மெட்டு)
(1) அச்சுதன் காமங்கள் உச்சரித்தால் பெரும்
துச்சவினைகளும் தீர்ந்திடுமே-
பச்சைமா மேனியும் மெச்சுகை யாழியும்
பார்த்திடப் பாபங்கள் தீர்ந்திடுமே:
உச்சித பாதங்கள் உச்சிமேற் கொண்டிடில்
உள்ள கரும வினை தீர்ந்திடுமே!
ஒரு சமயம் மனோவியாகூலத்தினால் மெலிந்திருந்த மனிதர்கள் சில காலத்திற்குப் பிறகு பார்த்தால் சந்தோஷப் பெருக்கினால் சிற்றானைக்குட்டி போலக் காணப்படுகின்றார்கள். தேகத்தில் எவ்வளவு பருமன் ஏறி இருக்கின் றதோ அவ்வளவு மனோ மாறுதல்களும் உண்டாய்விடுகின்றன.
(2) ஏழை என்றோரது பாழ்வினை போக்கிடும்
இன்ப நாமம் துயர் தீர்த்திடுமே
ஆழ்கடல் மூழ்கினும் அனுதினம் போற்றிடில்
தாழ்வுறும் தீமைகள் தீர்ந்திடுமே:
(3) அந்தரங்க பக்தி சொந்தமாய்ச் செய்திடில்
முந்தி வினைகளும் தீர்ந்திடுமே:
மந்தகாசன் திவ்ய அந்தமாம் சரிதை
மனனம் செய்தால் துயர் தீர்ந்திடுமே:
(4) குன்றமெடுத்தோனை அன்றலர்முகத்தோனைக்
கோரிடில் கொடுமைகள் தீர்ந்திடுமே
கன்றினோடாடிய காருண்ய மூர்த்தியின்
கழல் பணிந்தால் பிணி தீர்ந்திடுமே
(5) சுத்தசுதாமன்போல் பக்தி செய்தால் நித்ய
சொர்க்கப் பதவியும் கிட்டிடுமே
உத்தம பக்தர்போல் சத்திய நெறியுடன்
உழைத்திடில் கருணை கிட்டிடுமே!
("ஷடானன” என்ற மெட்டு)
1. தாயே கதி! நீயே துணை சேயான் போற்றிச்
செய்யுமுறை கேளாய்-
2. மாயவன்மன மகிழ்ராணியே!
வேயர் போற்றும் தேவி! மேவும் ரங்கனாவி!- தா-
3. பங்கஜாஸனீ! பத்மலோசனீ!
அங்கஜமாதே! அம்புஜபொற்பாதே
மங்களவல்லி! மகிழ்வேதவல்லி!
பொங்கும் அல்லிக்கேணி; புகழ்வாஸினீ-தா-
எந்த இடத்தில் நம்மை பிரீதியாக அழைக்கின்றார்களோ அந்த இடத்திற் குப் போக மனம் தாவுகின்றது. பொறாமைக்காரப் புண்ணியவான்களோ அதற்கெல்லாம் ஒரு கயிறு திரிக்க ஆரம்பிக்கின்றார்கன். ஐயோ! மாயை உலகமே!
அம்மா! நான் சங்கீதத்தின் கரையை அறிந்த கலாவதியல்ல. எனக்கு குருமுகமான பாடமும் இல்லை. ஏதோ அந்த வாணியின் அருள் பிரசாதம் அவர் உண்மை பக்தர்களிடையே சிந்தியபோது ஒரு துளி என்னையறியாது என்மீதும் படிந்திருக்க வேண்டும். அன் னாளின் அனுக்கிரகத்தால் ஏதோ பாடுகிறேன். என்னுடைய சங்கீதத்தின்மீது விருப்பங்கொண்டு கேட்டதால் பாடினேன். இனி நீங்கள் வந்த காரியத்தைச் சொல்லலாமல்லவா?" என்று குயில் போலக் கூறினாள்.
வந்த மனுஷி அந்த தேவகானத்திற்கு ஒப்பான சங்கீதத்தைக் கேட்டு மட்டிலடங்காத மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக "பரிமளா! நானே மகா சண்டாளி! பெரும் பாவி! என்னைப் போல இவ்வுலகத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். என் செவிகளுக்கும் மனத்திற்கும் பேராநந்தத்தை வாரி யளித்த உத்தமச் சிறுமியாகிய உனக்கு நான் எவ்வகையிலும் கைம்மாறு செய்ய கடமைப் பட்டிருக்கிறேன். எனினும் மகர கொடிய பாபத்தைச் செய்துள்ள எனது கைம்மாறை வயதில் சிறுமியாயினும் நன்னெறியோடு ஒழுகும் நீ எதிர்பார்க்கமாட்டாய்! உனது சங்கீதம் எத்தகைய இனிப்புடன் இருக்கிறதோ அதேபோன்று உன்னுடைய கீர்த்தியும் ஒழுக்கமும் பிரகாசிக்கின்றன. குழந்தாய்! இதோ என்னுடைய ஞாபகார்த்தமாக இச்சண்டாளியின் கர்ம வினைகள் அலையும் பொருட்டும் உத்தமர்களின் உள்ளத்தில் என்னுடைய நினைவு இருக்கும் பொருட்டும் இந்த கடிதத்தை வாங்கிக்கொள். காரணம் கேட்காதே! நீ சற்றுமுன் பாடிய பாடலில் அந்த ஆதிமூர்த்தியின் பாதம் போற்றினால், நாம மந்திரம் பஜித்தால், திவ்ய சரிதையைப் பாராயணம் செய்தால் பாபம் தீருமென்ற மார்க்கம் அறிந்தும் அறியாமல் பாபக்கடலில் மூழ்கி பாதகியானேன்! செல்வீ! பரிமளா! நான் இவ்விடம் விட்டுச் சென்ற பிறகு இந்த கடிதத்தை உடைத்துப் பார். நான் சென்றுவருகிறேன்." என்று கடிதத்தைப் பரிமளாவின் கையில் கொடுத்துவிட்டு மறு பேச்சுக்கு எதிர் பார்க்காது ஒரே விசையாக எழுந்துபோய் விட்டாள்
ஒரே பதம் ஒருவர் வாயிலிருந்து வரும்போது அவர்களுக்கு ஒருவிதமான கருத்தையளிக்கின்றது. அதைக் கேட்டபேருக்கு • வேறொரு விதமான கருத்தை உண்டாக்குகின்றது. இரண்டு பேருடைய மனோபாவத்தையும் ஒத்திட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவிற்குமாக ஆய்விடுகின்றது.
கேவலம் சிறுமியாகிய பரிமளவல்லி ஒன்றுமே தோன்றாது- விவரம் தெரியாது - கலவரமடைந்தாள். க்ஷண நோத்திற்குள் அந்த அம்மாள் மறைந்துவிட்டாள். பிறகு பரிமளா அந்தக் கவரை உடைத்தாள். அதில் ஒரு கடிதமும், ஒரு ஒட்டிய கவரும் இருந்தது கண்டு அக் கடிதத்தைப் படிக்க வாரம்பித்தாள்.
“வயதில் சிறுமியாயிருப்பினும் மன உறுதியில் மகிமை பெற்ற மங்கையே! பரிமளவல்லீ! இக் கடிதத்தை நான் எழுது வதற்கு முன்னர், சுமார் எத்தனையோ நாட்கள் - எத்தனையோ இரவுகள் - என் மனம் அலைபாய்ந்து தத்தளித்தது கண்ணீர் ஆறாய் ஓடிற்று. என்னுடைய பாபக் குவியல்களெல்லாம் ஒவ்வொரு கொடிய மிருகம் போன்று என்னுடைய கண் முன்பு தோன்றி என்னைக் கடிப்பதாயும், குத்துவதாயும் என் மீது பாய்வதாயும் என்னைச் சித்திரவதை செய்வதாயும் தோன்றி வதைத்தன. இதனால் எத்தகைய கொடிய பாபத்தைச் செய்திருப்பேன் என்று நீயே அறிந்து கொள்ளலாம். என்னுடைய சகலமான செய்கைகளையும் கடவுள் பார்த்திருக்கிறான் என்கிற எண்ணம் எனக்கு உதயமாவதற்கே என் கன்மா இடங் கொடுக்காது சகடம் போலத் தடுத்தது. என் பாபக் குவியல்களை - பயங்கரத்தை-நீ படிக்கும்போதே உள்ளம் நடுங்குவாய்; அத்தகைய கொடுமையை நானே மனத் துணிந்து செய்திருக்கிறேன்.
பரிமளா அதிகமாக வளர்த்திக் கொண்டு போக என் மனம் இடந்தரவில்லை. என்னுடைய சரித்திரத்தின் சுருக் கத்தை அறிந்து கொள். என்னால் கெட்டு அனியாயமான- நிர் மூலமான, அதோகதியான - பூண்டற்று விட்ட
அதிர்ஷ்டம் என்பது எல்லாவிதத்திலும் அமைவதில்லை. சிலர் தங்களைப் பார்ப்பவர்கள் "அவர்களுக்கென்ன குறைவு சகல போக பாக்கியங்களுடன் இருக்கிறார்கள்" என்று நினைக்கக்கூடிய விதமாக இருக்கின்றார்கள். ஆனால் உண்மையில் அவர்களை ஆராய்ந்து பார்த்தால் முக்கியமான விஷயத்தில் அதிர்ஷ்டம் எங்கோ மறைந்து கிடக்கின்றது. தூரத்து மலை பசப்பு போன்றுதான் உலகம்.
குடும்பங்கள் அநந்தம். என்னுடைய துராசையினாலும், சிற்றின்பப் பித்தினாலும், நான் என்கிற மமதையினாலும் உலகத்தையும் கடவுளையும் பாப புண்ணியத்தையும் அடியோடு மறந்து இறுமாந்திருந்ததனால் எனது ஏழேழு ஜென்மத்திற்கும் இழுக்கு தேடிக் கொண்டேன். என்னால் குடி முழுகிய ஜாபிதாவில் உனது எஜமானராயும், தற்போது தர்ம கர்த்தாவாக விளங்குபவருமான பொன்னுசாமி என்பவரும் ஒருவராவர். பரிமளா! இந்த வரியைப் படிக்கும்போது நீ திடுக்கிடுவாய்! அது இயற்கையே! பொன்னுசாமி என்பவரை அடியோடு பாழாக்கி அவர் குடும்பத்தையும், தர்ம பத்தினியையும், செல்வத்தையும் உயிருடன் உரிஞ்சிய பூதம் நானே யாவேன். பணப் பேராசையினால் அவர் நேர் முகமாகக் கொடுத்த பணம் போதாமல், அவர் பெற்றோரில்லாத சமயம் எனது கையாட்களை விட்டு அவர் வீட்டில் கொள்ளையடிக்கச் செய்தேன். அவர் தன்னுடைய மனைவியின் முகம் பார்க்கா வண்ணம் மாயை வலையை வீசி மறைத்தேன். அவரை விடச் செல்வவந்தர்களின் தொடர்பு கொண்டு அவருக் குத்துரோகம் பலவும் செய்தேன். ரத்தின வியாபாரியின் ரத்தினங்களை ஒரேயடியாகக் கொள்ளையிடும் நோக்கத்தில் அவருக்கு விஷத்தைக் கொடுத்து கொலையும் செய்தேன். ஐயோ!.... இந்த ஆபாஸங்களை -ஊழல்களை எல்லாம் சொல்லி உன் மனத் திற்கு வெறுப்பு உண்டாக்க நான் சம்மதிக்கவில்லை. நான் செய்த அக்ரமங்களெல்லாம் எனக்குச் செய்யும்போது தெரியாவிடினும் பிறகு தெரிவதற்கு ஓர் காலமும் நேர்ந்தது.
அக் காலம் முதல் என் மனமே என்னை இடித்து இம்சை யுறுத்தியது. நான் கண் காணாது மறைந்தேன். நான் கொள்ளையடித்ததுபோல என் வீட்டில் கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்தார்கள். என்னுடைய அருமைக் குழந்தைகளில் ஒன்று மோட்டாரில் நசுங்கி உயிர் நீத்தது.
நாம் ஒரு வஸ்துவிடத்தில் ஆசைகொள்ளும்போது அது நமக்குக் கிடைக்கக் கூடியதா இல்லையா என்பதை யோசித்து கிடைக்கக்கூடியதாயின் அதை அடைவதற்கு வேண்டிய மார்க்கங்களைத் தேடவேண்டும். கிட்டாத பொருளை அடைய விரும்புவது கானல் நீரைக் கண்டு மகிழ்வது போலாகும்.
மற்றொன்று எனது பகைவன் கரத்தால் கொல்லப்பட்டது. மற்றொன்று நான் வேறு ஒருவனை எமனுலகமனுப்புதற்கு வைத்திருந்த விஷங்கலந்த பாலைக் குடித்து இறந்தது. இவ்விதம் என் கதியும் செய்கையும் கடவுள் அதோகதியாகச் செய்த பிறகே எனக்குப் புத்தி பிறந்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? உயிர் துடித்தேன்; தத்தளித்தேன். விரக்தி கொண்டேன். என் கர்மம் தொலையும் பொருட்டு சில வருடங்கள் காசி க்ஷேத்திரத்திலேயே கங்கை நீராடிக் காலத்தைத் துலைத்தேன்.
என் மனம் சமாதானமாகவில்லை. என்னால் கொள்ளை டிக்கப்பட்ட செல்வத்தில் பெரும் பாகமும் பல வழிகளில் தொலைந்த தெனினும் இன்னும் ஒரு லக்ஷ ரூபாயிக்கு என்னிடம் இருப்பது எனக்குப் பெரும் பாரமாக இருந்தது. அதை என்ன செய்யலாம் என்று நினைத்து அதே யோசனையிலிருக் கையில் ஒரு தினம் கனவில் ஒரு விருந்தர் தோன்றி, "மகா கர்ம சண்டாளியாகிய உன் பணத்தை தர்மத்திற்கு வாரி இறைத்தால் உன் பாபம் கொஞ்சம் கழியலாம்." என்று கூறி னார். அன்று முதல் என்ன விதமான தருமம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் இந்த நற்குண நாடகக் கம்பெனியை நடத்துவது அந்த புண்யவான் என்றும் அவருடைய மனம் விரக்தி மார்க்கத்தில் பறந்து விட்டதென் றும், தர்ம ஸ்தாபனங்கள் மலிந்திருப்பதையும், நீயும் கேசவன் என்ற சிறுவனும் நடிப்பதும் முதலிய பல விஷயங்களையும் நான் ஒரு தினம் பத்திரிகையில் படித்தேன்.
இந்த செல்வத்தில் பெரும் பாகமும் அந்த உத்தமராகிய பொன்னுசாமியினுடைய தென்பதை இப் பாவியினுள்ளம் மறக்க முடியாது. அவ்வுத்தமரின் சொத்துக்கள் அவரிடமே சேரட்டும். அவருடைய கரத்தினாலேயே தரும வழியில் வினியோக மாகட்டும். இப் பாவியின் மிகுதி சொத்தும் பூவுடன் சேர்ந்த நாறும் மணம் பெறுவதே போல ஆகட்டும் என்கிற நோக்கங் கொண்டு அதை அவரிடமே சேர்க்க எண்ணி இவ்வூருக்கு வந்தேன்.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போல சிலர் நல்ல ஸ்திதியில் இருக்கும் பிறரைக் கண்டு அம்மாதிரி தாங்களும் ஆகவேண்டு மென்ற அதிக ஆசை கொண்டால் அதிக நஷ்டம் அடைய வேண்டியே வரும் என்பதை முன்னால் அறிவதில்லை.
ஆனால் எனது வெட்கங் கெட்ட முகத்துடன், மான மிழந்த உருவத்துடன் அந்த புண்ணிய மூர்த்தியின் எதிரில் வருவதற்கு மனங் கூசியது. இதை யாரிடம் எவ்வகையில் சேர்ப்பதென்று அறியாது தவித்தேன். தண்ணீராயுருகி னேன். உங்கள் நாடக நடிப்பைக் காண ஆவல் கொண்டு சில நாடகங்களையும் கண்டு களித்தேன். உனக்கு ஒரு வைர பதக்கமும் பரிசளித்தேன். பிறகு உன் மூலமாகவே இதை உன்னி டம் சேர்ப்பதென்று தீர்மானித்துக்கொண்டு என் வீட்டு வேலைக் காரனை யனுப்பி விசாரித்துவரச் செய்தேன். உன்னுடைய உத்தரவு கிடைத்த பிறகே இக் கடிதம் எழுதலானேன்.
பரிமளா! உன்னுடைய எஜமானரிடத்தில் இக் கடிதத்தைக் காட்டு. இதோடு இருக்கும் கவரினுள் மொந்த ரூபாயிக்கும் ஒரு செக்கு என் கை யெழுத்துடன் இருக்கிறது. அதையும் உன் எஜமானரிடம் சேர்த்துவிடு. அவ்வுத்தமரிடத்தில் நான் மன்னிப்பு கேட்பதற்கும் அருகதை யற்ற பாவியாகி விட்டேன். அவர் மனம் போலச் செலவிட்டுக் கொள்ளட்டும். அதில் என் இறந்த புதல்வியின் ஞாபகமாக உனக்கு ஒரு பத்தாயிர ரூபாய்க்குத் தனியாக ஒரு செக்கு வைத்திருக்கிறேன். அதை நீ அங்கீகரிக்க வேண்டுகிறேன். "இத்தகைய பாவியும் உலகத்திலிருக்கின்றாளே" என்று ஆச்சரியப் படுவாய்; இனி என்னை- என் ப்ரேதத்தை - ஒருவரும் கண்ணாலும் காண முடியாது. இது நிச்சயம், பரிமளம் மிகுந்த பரிமளா! இதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன். மன்னிப்பாயாக,
இங்ஙனம்
மகா கொடிய சண்டாளி
கொலைகாரி
பரீக்ஷைக்குப் படிக்கையிலோ அன்றி மும்முரமாக எழுதுகையிலேர சிலர் வந்து “நான் இப்போது வந்ததில் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்; ஆகை யால் இதோ போய்விடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டே வீண் வார்த்தை களைப் பேச ஆரம்பித்து மணி நேரத்தில் நேரத்தைக் கடத்தி எல்லா வேலைகளை யும் பாழாக்கி விடுகின்றார்கள்.
இக் கடிதத்தைப் படித்த பரிமளாவின் உடல் உண்மையி லேயே ஆடிற்று. தலை கிறு கிறுத்தது. அவள் 10 நிமிட நேரம் பதுமை போலானாள். "ஆகா! இதென்ன ஆச்சரியம்! இப்படியும் நடக்குமா!?” என்று அபாரமான வியப்பு கொண்டாள். அக் கடிதத்திற்குள்ளிருந்த மற்றொரு கடிதத்தையும் உடைத்து செக்குகளைப் பார்த்தாள்; கூறவியலாத ஆச்சரியமடைந்தாள். உடனே அக்கடிதத் துடன் அவ்வறையின் மற்றொரு கதவைத் திறந்து கொண்டு ஓடினாள். அங்கு வீற்றிருந்த பொன்னுசாமியினிடம் கடிதத்தை நீட்டி, "பெரியவரே! இதோ இதைப் பாரும். " என்று கூறியவாறு கொடுத்து வியப்பே வடிவமாக நின்றாள்.
அன்றைய தினம் பரிமளவல்லியைப் பார்க்க வருவதாகச் சொல்லியவர்கள் பாராக விருக்குமோ, என்னவோ! எதேனும் தீங்கு செய்பவர்களாக விருப்பார்களோ என்கிற; ஒரே எண்ணத்தினால் அவ்வாறு ஏதேனும் நடக்கும் சமயம் வாய்த்தால் காப்பாற்றும் நோக்கத்துடன் கேசவனும், பொன்னுசாமியும் அவ்வறைக்குப் பக்கத்து அறையில் தயாராக உட்கார்ந்திருந்தார்கள். ஏதேனும் அபாயம் நேரும்போலத் தோன்றினால் உடனே ஒரு மணியை அழுத்தினால் அது பக்கத்தறையில் தங்களுக்குக் கேட்கும்; தாங்கள் ஓடி வருவதாகச் சொல்லித் தீர்மானித்திருந்தபடி ஒன்றும் மணியடிக்காததனாலும், பரிமளா ஆனந்தமாகப் பாடியதாலும் ஆபத்து ஒன்றுமில்லை என்பதாக இருவரும் எண்ணி அவ்வறையில் உட்கார்ந்திருந்த தருணம் பரிமளா கடிதத்தைப் பொன்னுசாமியின் முன்பு நீட்டியதும், பொன்னுசாமி ஆச்சரியப்பட்டு அதை வாங்கிப் படிக்கலானான்.
அந்த கையெழுத்தைப் பார்க்கும்போதே அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டுவிட்டது. இது தனது குலத்தையே ஒழித்த கொடும் பாவியினுடைய கையெழுத்து என்பது தெட்டென விளங்கி விட்டது. உடனே அங்கு வந்தவள் அந்த சண்டாளி தான் என்று நன்கு தெரிந்துகொண்டான். அவ்வாறு தெரிந்துகொண்டதும் அவன் மனத்தில் பழய எண்ணங்கள் ஒன்றன்பின்னே ஒன்று தோன்றின. குணவதியின் சாந்தமான முகம் கண்முன்பு அப்படியே கண்ணீர் வடிய நிற்பதுபோன்றும், உடனே நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதுபோன்றும், அடுத்த நிமிடம் தன்னைக் கெஞ்சுவதுபோ லும், மறு வினாடி சவக்கோலமாகச் சென்றதும் மாறி மாறி சினிமாப் படம்போலத் தெரிந்தன.
சில பணமுள்ள பெரிய மனிதர்கள் "முன்பண மனுப்புவதென்றால் கை வருவதில்லை; வி.பி. யில் அனுப்பினால் உடனே பெற்றுக்கொள்கிறோம்" என் பது; ஆனால் வி. பி. யைத் திருப்பிவிடுகிறது. இது ஒரு கெளரவம்போலும்.
அவ்வாறு தோன்றிய தோற்றத்தினால் தன்னை மறந்து "ஹா!" என்று கதறிக்கொண்டு தன்னிரு கைகளால் கண்களை மூடிக் கொண்டு கண்ணீரை ஓடவிட்டான். அருகிலிருந்த பரிமளாவிற்கும் கேசவனுக்கும் விஷயம் இன்னதென்று விளங்காது இருவரும் தவித்தவாறு, "பெரியவரே! போஷகரே! ஏன் இக்கடிதங் கண்ட தும் முகம் மாறுபட்டதோடு புலம்புகின்றீர்கள்? இக்கடிதத்திற்கும் உமக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது?" என்று கேட்டு அவரையே உற்றுநோக்கியபடி நின்றார்கள்.
சற்று சமாதானமடைந்த பொன்னுசாமி இருவரையும் தன்னிரு கரங்களினாலும் இழுத்துத் தன் பக்கலில் அமர்த்திக்கொண்டே கடிதத்தைப் படித்து முடித்தார். வாய் பேசாது தேம்பித் தேம்பிப் புலம்பினார். "என் கண்மணிகளே! மறைந்து கிடந்த நாற்றக் குப்பை திடீரென்று துர்மணத்துடன் கிளம்பி உங்கள் நாசியில் புகுந்துவிட்
டது. கேசவா! நீயும் அத் துர்மணத்தைப் பார்த்துவிடு. இதோ இக்கடிதத்தைப் படி" என்றான். உடனே கேசவன் கடிதத்தைப் படித்தான். அடங்காத வியப்புடன் "தந்தையே! இதென்னவிது? இதில் எனக்குத் தகவல் ஒன்றும் விளங்கவில்லை; எனினும் உங்களை அதோகதியாக்கிய பாவி ஒரு உயிர் இருப்பதாக அறிகிறேன். அவ்வளவுதான் பரிமளாவும் அறிந்திருப்பாள். விஷயத்தை விளங்கச் சொல்லுங்கள்: உங்கள் மனம் இத்தகைய தத்தளிப்பையடைவ தற்குக் காரணம் யாது? எங்களுக்கு உரைக்கவேண்டும்." என்று கேசவன் கேட்டான். பரிமளாவும் "தந்தையே! இதென்ன! தாங்கள் ஏன் மாறுதல்களை யடையவேண்டும்? அந்த அம்மாளிடத்தில் தங்களுக்குச் சம்மந்தம் இருந்ததாகக் கூறுவது உண்மையாக விருப்பினும் அதுபற்றி கவலையேன் அடையவேண்டும். எங்களிடம் விஷயங்களைத் தெரிவியுங்கள்." என்று கெஞ்சிக் கேட்டாள்.
மிகவும் சொல்பமான துகையை ஒரு நல்ல விஷயத்திற்குச் செலவிடத் தயங்குவது; உடனே நம்மை யறியாதோ அறிந்தோ ஒரு பெருந் தொகை நம் கையைவிட்டுப் போய்விடுகின்றது. இது முன்னர் செய்த தப்புக்குக் கை கண்ட பலன். தெய்வம் நின்று கொல்லும் என்கிற பழமொழி அன்று கொல்லும் என மாறிவிடுகின்றது.
பொன்னுசாமியின் மன நிலைமை மிகவும் கேவலமாகிவிட்டது. பிறகு அதைச் சமாளித்துக்கொண்டு தன்னுடைய ஜீவிய சரிதை முற்றும் ஒன்று விடாது கூறி "என் கண்மணிகளே! என்னுடைய பிறவியின் கேட்டைப் பார்த்தீர்களா? எஜமானனின் பவிஷு நன்றாகத் தெரிந்துவிட்டது. என் சரிதை இவ்விதம் இருக்குமென்று நீங்கள் கனவிலும் கருதி இருக்கமாட்டீர்கள். இந்த பிசாசம் இங்கு வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. என்னுடைய பழைய கதைகளை நினைப்பூட்டுதற்கே இந்த மூதேவி இங்கு வந்தது." என்று நிரம்பவும் விசனித்தார்.
இந்த வாலாற்றைக் கேட்டு இருவரும் கட்டு மீறிய ஆச்சரிய மும் பிரமிப்புமடைந்து "தந்தையே! நீங்கள் சொல்லிய விஷயங்கள் உண்மையில் நடந்தனவா! அல்லது நாவலில் படித்ததைக் கூறுகின்றீர்களா! குணவதியம்மாளின் பெயராலா இந்நாடகக் கம்பெனி நடை பெறுகின்றது. ஆகா! என்ன துக்ககரமான செய்தி! இதைக் கேட்கும் போதே எங்கள் மனம் பதறுகின்றது. இத்தனைத் துன்பங்களை யும் எவ்விதம்தான் அனுபவித்தீர்களோ! நீங்கள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் என்பது இப்போதுதான் தெரிகின்றது. பெரிய வரே! தாங்கள் எத்தனை தப்பிதம் செய்திருந்த போதிலும் அவைகளின் தீமையை உணர்ந்து இப்போது ஓர் துறவிபோல ஆய்விட் டது மிகவும் போற்றத் தக்கதாகும். நாங்கள் இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டதனால் ஏதோ மாறிவிடுவோம் என்று கனவிலும் கருதவேண்டாம். எங்களிருவருக்கும் புத்துயிரளித்துக் காப்பாற் றிய கர்த்தாவாகிய உங்களை நாங்கள் மறந்தோமானால்- உங்களிடம் வித்யாசம் நினைத்தோமானால் - எங்கள் கண்ணவிழ்ந்து திண்டாடுவோம். எந்த காலத்திலும் நாங்கள் தங்களை தெய்வமாகவே கொண்டாடுவோம். இது சத்யம். நீங்கள் வருந்தவோ, வித்யாசமாக சம்சயிக்கவோவேண்டாம். இந்த சம்பவத்தை நீங்கள் இப்போதே மறந்துவிடுங்கள். அந்த அம்மாளும் எவ்வளவோ மனம் வெறுத்து நொந்திருப்பதாக இக்கடிதம் காட்டுகிறது. இனி அதைப்பற்றி நினைக்கவே வேண்டாம். மேலே யாகவேண்டிய காரியத்தைக் கவனி யுங்கள். பொழுதுபோய்விட்டது. படுத்துக்கொள்ளுங்கள்." என்று வெகு உருக்கமாகக் கூறினார்கள்.
சிலர் தங்கள் மனத்திற்குத் திருப்தியுண்டாகும்படி எல்லோரும் நடந்து கொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொள்வது. அதனால் மற்றவர்க்கு எவ்வித கஷ்ட நஷ்டங்களுண்டாகு மென்பதைக் கணமும் கருதுவதில்லை; அவர்கள் மீது
பழி சுமத்துவது. இது என்ன சுபாவமோ.
இதுகேட்ட பொன்னுசாமி "என் செல்வங்களே! உங்களுடைய மேன்மையான புத்தியின் விசேஷத்தினால் இவ்விதம் என் மீது வெறுப்பு கொள்ளவில்லை. எனினும் என் மனமே என்னை வெறுக்காத நிமிடமில்லை. என்னுடைய பாபங்களை நினைத்துப் பார்த்தால் என்னை அன்புடன் ஈன்றெடுத்து, ஆயிரம் பாடுபாட்டு வளர்த்த அன்னை, பிதாவின் அன்பை மதியாது அவர்களைக் கொலை செய்த பெருந்துக்கத்தையும், என்னையே நம்பி இருந்து என் முகம் பார்ப்பதற்கும் ஏங்கிய உத்தமியான குணவதியைக் கொலை செய்த சண்டாளத் தன்மையையும் நினைத்தால் என் அங்கமே நடுநடுங்குகின் றது. இரவுபகல் சதா என்னுடைய இதயத்தில் ஓர் அம்புகுத்துவது போல குத்திக்கொண்டே இருக்கின்றது. எந்த காலத்திலும் நான் செய்திருக்கும் அக்கிரமத்திற்குக் கடவுளினிடம் தக்க தண்டனை படையாமலிருக்க முடியாது. அந்த நாளை எதிர்நோக்கிக்கொண்டுதா னிருக்கிறேன். குணவதியின் திவ்ய முகத்தை நான் ஒருபோதும் நேரில் நோக்கியறியேன். சாந்தமாக ஒரு வார்த்தைகூடப் பதில் பேசியறியேன்.
ஒருவர் நம்மைத் தேடிவந்தாலும், வேறொருவர் கூட இருப்பதால் நமக் குப் பேச முடிவதில்லை. யாதலால் பின்னவரை அவர்கள் நொந்து கொள்கி றோம். ஆனால் தனியாக வருகையில் நாமே வீட்டிலில்லாமலிருக்கும்படியாய் விடுகின்றது. அப்போது யாரைச் சொல்வதுர்
என் கரத்தால் தாலியைக் கட்டிய தோஷத்திற்காக அக்கரத்தினால் அவளை என்னறிவு அழிந்து வேண்டிய வரையில் நையப் புடைத்தேன். அந்த உத்தமியின் அழகிய கரத்தினால் என் காலைப் பிடித்து நலங்கிட்டதற்குப் பதிலாக காலினாலேயே உதைத்தது போதாமல் அந்தப் புண்யவதிபின் உயிர் போகும் தறுவாயிலும் காலினால் உதைத்துத் தள்ளினேன். அந்தோ! அதை நினைத்தால் என் மனம் இப்போதும் நடுங்குகின்றது. அவ்வுத்தமியை ஒருபோதேனும் நான் இன்பமாக அழைத்து ஒரு வார்த்தை பேசாவிடினும் அடித்து உதைத்துத் திட்டியது எனது ஏழேழு ஜன்மாவிற்குந் தாங்கும். அவளுடைய பிணத்தைப் பார்த்தபிறகுதான் எனக்குக் குணம் திரும்பியது. அவளுடைய மணம் எனக்கு வீசியது. அக்கினி பகவானுக்கு இரையாக்கக்கூடிய சவத்தை என்ன செய்வது?
சவத்தை வைத்துக் கொண்டு கத்தினேன்; கதறினேன். பிணத்தின் மேல் விழுந்து புரண்டேன். மூன்று நாள் கண்ணை விழிக்காது கதறினேன். என் மனத்திற்கு முதலில் வேம்பாக இருந்த குணவதி பிணமாகிய பிறகு கரும்பாக இனித்தாள். அதை எண்ணி எண்ணி எங்கினேன். இன்னும் ஏங்கிக் கொண்டே என் பொல்லாத பொழுதைத் தள்ளுகிறேன். கேசவா! பரிமளா! என் செல்வங்களே! தற்போது உங்களிருவரைத்தான் நான் என்னுயிராக மதித்துள்ளேன், என் குற்றத்தை மறந்து விடுங்கள்" என்றான்.
இதைக் கேட்ட இருவரும் கண்ணீர் வடித்தார்கள். பிறகு வெகு நேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்து நித்திரா தேவியின் வச மானார்கள். உதயமானதும் கேசவனும் பொன்னுசாமியும் வீடு போய்ச் சேர்ந்தார்கள், பரிமளாவினுடைய கவலைகளோடு அவள் எஜமானரின் ஜீவிய சரித்திரம் அவள் மனத்தை உருக்கியது. அதையே எண்ணிக் கொண்டு அன்று பூராவும் இன்பமும் துன்ப மும் அடைந்தாள்.
ஏதேனும் போட்டிகள் வைப்பதாயின் சிலர் லஜ்ஜை யின்றி "எனக்குப் பரிசு கொடுப்பதாயிருப்பின் நான் போட்டியில் கலந்துகொள்வேன்; இல்லை யேல் வாமாட்டேன்" என்கிறார்கள். இது பெரிய வேடிக்கை யல்லவா
பின்னும் சில தினங்களாயின. முன்னர் தெரிவித்தது போலப் பரிமளாவும் கேசவனும் கடைசீ தரமாக நடிக்கும் நாடகத்தைப் பொன்னுசாமி தயார் செய்தார். ஊரெங்கும் நோட்டீஸ்கள் பறக்க வாரம்பித்தன.
===========
"நாடகத்தில் நற்சியாதி பெற்று வரும் சிறுவன் கேசவனும், சிறுமி பரிமளவல்லியும் சேர்ந்து நடிக்கும் கடைசி நாடகம் இதுவே யாகும்' நாடகப் பிரியர்கள் பார்க்கத் தவறாதீர்கள். நிகரற்ற வள்ளி நாயசியாயும் சுப்பிரமணிய வேடனாயும் அவ்விரு சிறுவர்களும்; தோன்றி நடிக்கும் கடைசீ தரு ணம் இதுதான். இனிமேல் காணக் கிடைக்காது, இனி மேல் நாடக மேடையில் இரு ரத்தினங்களையும் சேர்ந்து காண முடியாது: அனேக காரணங்களை முன்னிட்டு பரிமளா இனி நாடகம் நடிக்கப் போவதில்லை. நமது வேண்டுகோளுக்கிணங்கி இந்த வள்ளி நாடகம் ஒரே ஸ்பெஷல் நாடகமாக நடிக்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதுகாறும் நாடக உலத்தையே பிரமிக்கச் செய்து எல்லோருக்கும் கர்ணாநந்தமான சங்கீதத்தை அள்ளி இறைத்த சிறுமிக்கு நாம் கடைசீயாக ஏதேனும் கைம்மாறு செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். அக் கடமையாவது, இந்த கடைசீ நாடகத்தில் வசூலாகக் கூடிய தொகையை அச் சிறுமிக்கு நன்கொடையாக அளிப்பதே அச் சிறுமியின் விஷயத்தில் நாம் இந் நன்றியறிதலைக் காட்ட வேண்டுவது முக்கிய மாதலால் நாடகாபிமானிகள் எல்லோரும் தவறாது விஜயம் செய்வார்களென்று எதிர் பார்க்கப்படுகின்றது.
=========
சில தந்திரக் குள்ளாரிகள் எல்லோரிடத்திலும் நயமாகவே நல்லவர்களாகவே பழகிவிடுகிறார்கள். சமயம் நேரும்போது "நான் அப்போதே சொன்னதில் உஷாராயிரு" என்று குறிப்பாகத் தெரிவிக்கவில்லையா ! என் மேல் பிசகில்லை" என்று இரு புறமும் தாளம் போடுகிறார்கள்.
மேற்கண்ட நோட்டீஸ் ஊரெங்கும் ஒட்டப்பட்டும் வீட்டிற்கு வீடு கொடுக்கப்பட்டும் வந்தது. நாடகத் தேதியும் சமீபித்தது. பரிமளாவும் கேசவனும் வெகு பொருத்தமாயும் இனிமையான சங்கீதத்துடனும் நடித்துப் பார்க்கப் போவது இதுவே கடைசி யாகையினால் அனேக ஜனங்கள் திகள் திரளாகக் கூடிவிட்டார்கள். எட்டு மணிக்கே கொட்டகையில் இடம் கிடைக்காது போய் விட் டது, பரிமளாவின் கானத்தைக் கேட்டு மகிழ்வதற்கு ஆயிரக்கணக் கான கூட்டம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சரியாகக் குறித்த நேரத்தில் நமது பரிமளவல்லி
(இந்துஸ்தானி காபி ராகம்; ஏக தாளம்)
1. ஸ்ரீ ரகுநாதா! வாரிஜ பாதா!
தாரக நாமஹரே! நானவர் காலா!— த-
2. இக்ஷ்வாகு வம்சா! லக்ஷ்மீ ப்ராணேசா!
பக்ஷிவாகன நேசா! ஜெய சர்வேசா- ப-
3 அசுர சம்ஹாரா! சசிமுகதீரா!
வசுந்தர பரிபாலா! மங்கள லீலா- வ-
4. ஜானகி ரமணா! ஸரஸிஜ சரணா!
தீனதயாபரணா!திவ்ய கருணா- தீ-
என்கிற பாடலை வெகு இனிமையாக தேனோ, பாகோ, தெவிட்டா வமுதோ என்னும்படியாகப் பாடிக் கொண்டே தினைப்புனம் காக்கும் வள்ளியாகத் தோன்றினாள். இதுபரியந்தம் அமைந்ததை விடப் பன்மடங்கு அதிகரித்த இன்பகரமாக அன்று நாடகம் வெகு மனோகரமாக விருந்தது. கேசவனும் வெகு திறமையாக நடித்தான்.
நாடகம் முடிவடைந்தது, அன்றைய தினம் வசூலான பணத்தை பொன்னுசாமி அந்த நாடக மேடையின் மேலேயே அரியதோர் உபன்யாசம் செய்து அதைப் பரிமளாவுக்குக் கொடுத்து விட்டார். பரிமளாவும் பிரதி வந்தனம் கூறித் தான் இதோடு விலகிக் கொள்வதைப்பற்றி உருக்கமாகப் பேசிப் பின்னர் விடை பெற்றுக் கொண்டாள். நாடகம் கலைவுற்றது. எல்லோரும் வீடு போய்ச் சேர்ந்தார்கள். பரிமளவல்லிக்கு மட்டும் அன்று என்றுமில்லாத துக்கம் அவளை யறியாது பொங்கி விட்டது; வீட்டிற்கு வந்து படுத்துவிட்டாள்.
ஒருவருக்குப் பலர் பலவிதமான தீங்குகளை இழைத்த பிறகு, வேறொருவர் அவர்களுக்கு உதவி செய்யத் தூய சிந்தையுடன் வந்தாலும் அவர்களையும் சந்தேகிக்க நேர்ந்து விடுகின்றது.
மறுதினம் காலையில் அனேகர் பரிமளாவைக் காண்பதற்காக அவன் வீட்டிற்கு வந்து "ஏன் நின்று விட்டீர்கள்?" என்று கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் பரிமளா தன் தாயையே விட்டு ஏதோ தக்க சாக்குப் பதில் கூறி யனுப்பி விட்டாள். சில தினங்கள் வரையில் இந்த தொல்லை இப்படியே அதிகரித்திருந்தது.
நாடகம் நடக்கையில் கேசவன் அதன் காரணம் பற்றி பரிமளாவைச் சந்தித்து வந்தான். நாடகம் நின்றுவிட்ட பிறகு பரிமளாவின் வீட்டிற்கு முன் போல அடிக்கடி செல்வதற்கும் சந்திப்பதற்கும் அஞ்சினான். ஒரு தினம் பரிமளாவின் வீட்டிற்குக் கேசவன் வந்தான்.
அவனைக் கண்ட பரிமளவல்லி அழைத்து உட்காரச் செய்து "ஏது! நான் நாடகத்தை விட்ட உடனேயே என்னை மறந்து வீட்டீர்களே! உங்கள் மனம் இதற்குத் துணிந்ததா!" என்று வெகு விசனத்துடன் கேட்டாள்.
கேசவன்:- பரிமளா! நான் எந்த காலத்திலும் உன்னை மறக்க மாட்டேன் என்பது அந்த கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால் நீறு பூத்த நெருப்பு எப்படியோ அப்படித்தான் இனிமேல் நாம் இருக்கவேண்டி இருக்குமென்று தோன்றுகின்றது. ஏனென்பதை நான் கூற வேண்டாம். மகா புத்தி நுட்பமுடையவளாகிய நீயே தெரிந்து கொள்வாய். பரிமளா! எனக்குப் பேசவும் நாவெழவில்லை. என்னால் உனக்கு யாதொரு தீங்கும் நேரிடக்கூடாதென்பதே என்னுடைய நோக்கமாகும். உனக்கு ஒரு அணுப்பிரமாணமும் வருத்தமோ, வசையோ உண்டு பண்ண நான் சம்மதியேன். அபக்கியாதி என்கிற பெருங் காற்று உன் மீது அடிக்காதிருப்பதை நானும் கவனிக்கக் கடமைப் பட்டுள்ளேன். நாமிருவரும் நாடக பந்தத்திலிருந்து விலகி விட்டது. வெளி ஜனங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருக்க நான் இனிமேல் அடிக்கடி உன்னைச் சந்திப்பதால் உனக்கன்றோ ஓர் விதமான பெயர் உண்டாகும்........
தினம் அதிகாலையிலெழுந்திருந்து ஸ்நானஞ் செய்து பகவானைப் பஜித் தால் மனம் அதிக பரிசுத்தத்தை அடைவதுடன் அன்றைய வேலைகளெல்லாம் வெகு ஒழுங்காக நடைபெறுகின்றன. கும்பகர்ணனின் வசப்பட்டு விட்டால் முதற் கோணல் முழுதும் கோணல் என்றபடியாகின்றது.
பரிமளா:- ஆஹா!....சரியான யோசனை!... இதற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டியவளே யாவேன்.... மனத்தில் பதிந்து கிடக்கும் ஆழ்ந்த அன்பை நினைக்கின்... அந்தோ!.... மனம் பகீரென்கின றதே! நண்பரே!
கேசவன்:- பரிமளா! உலகம் நம்மைப் பிரித்துவிட நினைத்து விட்டது; ஆனால் அன்பு சேச்சே! நான் இந்த துக்ககரமான விஷயத்தைத் தெரிவிப்பதற்காகவோ இங்கு வந்தேன்.... பரிமளா !.. நான் சென்று வருகிறேன்.
பரிமளா - என்ன இது? என்னவோ பேசுகின்றீரே! எனக்குப் புரியவில்லையே! தாங்கள் ஏதோ விஷயத்தை ஒளிப்பது போலப் பேசுகின்றீர்களே! அதென்ன! அதை எனக்குத் தெரிவிக்கலாகாதா! என்னிடம் என்ன வித்யாசம்? விவரத்தைக் கூறும்.
கேசவன்:- பரிமளா! ஒன்றுமில்லை. விசேஷமென்ன விருக்கிறது! கடவுளின் ஆணை எந்தெந்த விதமிருக்கின்றதோ அப்படித் தானே யாவும் நடக்கும்... பரிமளா!... என்னுடைய மனத்தவிப் பிறகு உவமை கூறச் சக்தி யற்றிருக்கிறேன். என்னாலான வரையில் உன்னைச் சந்திக்க வேண்டாமென்றே நினைத்தேன். ஆனால் மனந்தாங்க வில்லை. திடீரென்று நான் வராது நின்று விட்டால் நீ என்ன நினைப்பாயோ என்று எண்ணியே வந்தேன். நீ மகா யூகசாலி யாதலால் எனது நிலைமையைத் தெரிந்து கொண்டாய்! இனி நான் எவ்விதம் ஒளிப்பேன்? நம்மிருவருக்கும் இடையில் ஒரு பெரிய எமன் இருக்கின்றது; இதோ தெரிந்து கொள்." என்று ஒரு கடி தத்தை அவள் கையில் கொடுத்தான். பரிமளா வெகு வியப்புடன் கடிதத்தை வாங்கிப் படிக்கலானாள்.
பாட்டு பாடும்படிச் சிலரைக் கேட்டால் அவர்கள் "எனக்குத் தொண்டை சரியாக இல்லை; அதிக அவசரமாகப் போகவேண்டி யிருக்கிறது" என்று ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி தட்டு கட்டி விடுகிறார்கள். ஆனால் வேறு சிலர் எப்பொழுது சொல்லப் போகிறார்களென்று காத்துக் கொண்டிருந்து உடனே பாடுகிறார்கள்.
"அடேய் கேசவா!
நீ உயிருடன் இப் பூவுலகில் வாழ வேண்டுமாயின் இனி மேல் பரிமளாவின் நினைவை மறந்துவிடு. அவளைச் சந்திப்பதை விட்டு விடு. இந்த கடிதத்தை ஏதோ ஓர் விளையாட்டுக் கடிதமாகவோ, வம்புக் கடிதமாகவோ நினைக்காதே! இக் கடிதத்தில் கண்டபடிக்கு நீ நடக்காவிடின் இக் கடிதமே உனக்குக் காலன் என்பதை மறக்காதே ! இனி நீ அவளைச் சக்தித்தால் உனக்குப் பேராபத்து விளையும், அவ்வாபத்தில் சிக்கிவிட்டால் எமனு கில் சென்றுதான் மீட்சி யடையவேண்டும். ஜாக்ரதை! இக் கடிதம்தான் உனக்கு எச்சரிக்கை யாகும். உஷாராக விரு.
இங்ஙனம்
............
அதைப் படித்ததூம் அவள் திடுக்கிட்டாள். “ஹா! இதென்ன பெரும் மோசமாக விருக்கிறதே! ஐயோ! கடவுளே! இதுவும் ஒரு சோதனையா ?' என்று அபாரமான சோகத்திலாழ்ந்தாள்
"பாடு" என்று சொல்லும்போது உடனே மாடாவிடில் சிலருக்குக் கோபம் வந்து விடுகின்றது. தாமதத்திற்குக் காரணம் என்ன, அது சரியான தானா என்பதைக் கூட அவர்கள் கவனிப்பதில்லை.

