புதையல் கண்டெடுத்த நிதிகள்

வனவாசம் செய்வது போலச் சென்ற கேசவனின் தாயாகிய கோமதியின் மனத் துயரம் இன்ன தென்று விவரிக்க வியலாத விதம் தினே தினே பெருகிக் கொண்டே சென்று அதன் பயனாக அவளை மிக்க துன்பத்திற் கிலக்காகும்படியாகச் செய்து விட்டது. அவள் தனது இரு பெண்களையும் வைத்துக் கொண்டு படும் பாதையை விவரிக்கவே இயலாது, தன் மனக் குறையை முறையிடுவதற்கு ஓர் தக்க துணை இன்றி பரிதபிக்கின்றாள். கோமதிக்கு ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிமிடமும் அவளை யறியாத திகிலும் பயமும் சதா மனத்தில் தோன்றி வருத்திக் கொண்டே இருக்கின்றது. எந்த நிமிடத்தில் தனக்கு எந்த விதமான ஆபத்து நேருமோ என்ற பீதி அவள் மனத்தில் அதிகரிக்க அதிகரிக்க அவள் பலம் குன்றி விட்டது, வேர்ப்புழு ஓர் செடியின் வேரைத் துளைக்க வாரம்பித்ததும் அச் செடி எப்படி பட்டுப் போய் பாழாகி விடுகிறதோ அது போல திகிலும் பீதியும் மன வருத்தமும் ஒன்று கூடி வேர் பூச்சியைப் போலக் கோமதியின் உயிரை வாட்டத் தொடங்கின. அதனால் அவள் அன்னமும் கொள்ளாது மெலிவுற்று தேக பலம் குன்றி வியாதியின் வசமானாள்.

'வேலை செய்வதற்குச் சீவனில்லை, மானமிழப்பதற்கும் மனமில்லை' என்கிற நோக்கத்தை யறிந்த தோட்டக்காரர்கள் பின்னும் அதிகமான கொடுமைகளைச் செய்வதோடு அடிக்கவும் தலைப்பட்டார்கள். எத்தனைத் துன்பங்களைச் செய்த போதிலும் தன்னையவர்கள் அடித்த போதிலும் கோமதி வாய் திறந்து ஏதும் பேசுவதையே விட்டு விட்டாள். அடியைப் படும் போதெல்லாம் "ஐயோ! அம்மா!" என்று கத்தாமல் கடவுளின் திருநாமங்களையே உச்சரித்துக் கண்ணீர் வடிப்பாள். பலஹீனம் அதிகரித்ததனாலும், மனோ வேதனையினாலும், புத்திர சோகத்தினாலும் அவள் வேலை செய்ய மாட்டாது விழுந்து விட்டாள். அந்நிலைமையிலும் அவளைக் கஷ்டப் படுத்தியே வந்தார்கள்.

எந்த விஷயத்தைப் பற்றி யோசித்தாலும் சில தினத்தில் குழப்பமும் பெரும் சந்தேகமுமே உண்டாகி வேலையில் மூளையைச் செல்லவிடாது தடுக்கின்றது. அதே காரியம் பிறகு ஒரு தினம் திடீரென்று முடிந்து விடுகின்றது. எல்லாம் வேளையின் பயன்.

இவ்வித வேதனைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருக்கும் கோமதியின் காலம் அத் தீவில் சில வருஷங்கள் சென்றன. அவளுடைய பெண்கள் இருவரும் பெரியவர்களானார்கள். கோமதி படுக்கையிலேயே படுத்து விடும் நிலைமைக்கு வந்து விட்டாள். அன்னிலைமையில் அப் பெண்கள் தாயின் வேலையைச் செய்து பொருள் தேடித் தாயைக் காப்பாற்றி வந்தார்கள். கோமதியின் மூத்த மகள் பக்குவமான பாவையாக இருப்பதால் அவளையும் முன் கூறிய சனியன் பிடித்து ஆட்டத் தொடங்கியது. இந்த வேதனையைச் சகிக்கக் கூடாத அச்சிறுமி வருந்துகையில் ஒரு தினம் ஒரு கிராதகன் அப் பெண்ணை

வழிமறித்துக் கடுமையான வார்த்தைகளால் பேசி இம்சிக்க எத்தனிக்கையில் அப்பெண் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு தைரியமாயும் வீரமாயும் கையிலிருந்த தோட்ட வேலை செய்யும் சிறிய இரும்பு ஆயுதம் ஒன்றினால் அந்த துராத்மாவின் மண்டையில் ஓங்கி யடித்ததோடு அவனை நகா விடாது காலிலும் நன்றாகக் குத்திவிட்டு அவ்விடம் விட்டு ஓட்டமாக ஓடித் தன் வீட்டை படைந்தாள்.

அப்போது மாலை 6 மணி சுமாருக்கு இருக்கலாம். சூரியன் அஸ்தமித்து விட்டான். எங்கும் சிறு இருள் சூழ வாரம்பித்தது. பக்ஷி ஜாதிகளெல்லாம் தம் தம் கூடுகளில் அடைந்து கொள்ள ஆநந்தமாய்ப் பாடிக் கொண்டும், கொக்கரித்துக் கொண்டும் ஓடுகின்றன. மந்த மாருதம் அந்தமாக வீசுகின்றது. இன்னிலைமையில் அச் சிறுமி தனது கற்பைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அத் துட்டனை ஓங்கி அடித்து விட்டு அவன் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்த வளவில் "அடேய் பாதகா! நான் ஒரு கொலை செய்யவும் அஞ்சேன். என் கற்பை இழக்க முன் வருவேன் என நினைக்காதே" என்று கூறியவாறு ஓடி வீட்டிற்குள் புகுந்தாள்.

'அன்யோன்யமான சினேகத்திற்கு ஆபத்தே வராது' என்கிறார்கள் சிலர். 'அத்தகையோரிடத்தில்தான் பேராபத்து நேரிட்டு சினேகம் சிதறி விடுகின்றது.' என்கிறார்கள் மற்றும் சிலர். இரண்டில் எந்த வித அனுபவம் யாருக்கு இருக்கிறதோ! அதையவர்கள் கூறுவதுதான் உண்மை.

கோமதிக்கு இருமல் நோய் கண்டுவிட்டதால் இரைப்பும் மூச்சுத் திணறலும் வதைக்கின்றன. அச் சமயத்தில் பாலா வென்கிற அம்மாதாசி பெருமூச்சு விட்டுப் பதறிய வண்ணம் அங்கு ஓடி வந்து தன் தாயின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு "அம்மா! நான் கூறப்போகும் விஷயத்தைக் கேட்டுக் கலங்காதே; மனம் சிதறாதே! என் மீது வெகு நாட்களாகக் கறம் வைத்திருந்த கங்காதரனை நீ அறியாய். அவன் இன்று என்னைப் பலாத்கரித்து என்னைக் கெடுக்க முயன்றான். நான் எனது கற்பைக் காத்துக் கொள்ளும் பொருட்டு என் கையிலிருந்த ஆயுதத்தினால் அவன் தலையிலும் காலிலும் அடித்துக் கீழே தள்ளி விட்டுவந்து விட்டேன். அவன் மண்டையில் ரத்தம் வெள்ளமாக வந்து விட்டது. நான் அவ்விடத்தில் நிற்காது ஒடி வந்துவிட்டேன்.; நான் செய்து விட்ட குற்றத்தை யாரேனும் பார்த்திருந்தால் எனக்குப் பேராபத்து சம்பவிக்கப் போகின்றது. அந்த ஆபத்துக்களை நான் திருணமாய் மதிக்கின்றேன். அந்த ஆசாமியின் உயிர் நீங்கி இருக்குமாயின் நான் தூக்கு மேடை ஏறவும் தயாராக விருக்கிறேன். என் கற்பை நான் அற்பமாக எண்ணமாட்டேன். அம்மா! என் செய்கை கடினமானதுதான்; எனினும் அதை விடக் கொடிய செய்கையைச் செய்யவந்த கள்ளனுக்கு இதுவே தக்க சிக்ஷை என்று என் மனச்சாட்சி கூறியதால் நான் செய்தேன். என் தாயே! இதனால் எனக்கு எந்த நேரம் எத்தகைய ஆபத்து வந்தாலும் வரும். நீ கலங்காதே; கவலைப்படாதே" என்று கூறினாள்.

அவசரத்தில் சில பண்டங்கள் ஒன்றுக்கொன்று தெரியாமல் சிலர் உப்பு போடுவதற்குச் சர்க்கரையும் பாயசத்திற்கு மிளகாய்ப் பொடியும் போட்டு சமைத்து விட்டு நாசமடித்து விடுகிறார்கள்.

இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கேட்ட கோமதிக்கு ஒரு புறம் ஆச்சரியமும், ஒரு புறம் துக்கமும் தொண்டையை அடைத்துக் கொண்டது. அந்த விஷயங்களில் முக்கியமாகத் தான் எதைக் கவனித்துப் பேசுவது என்பதையே அறியாது தியங்கினாள். பின்னர் பாலாவை நோக்கி, "பாலா! உன் மனோ தீரத்திற்கும் வீரத்தனமான செய்கைக்கும் மெச்சினேன். இன்னிலைமையில் உன்னை யாரேனும் வந்து கண்டு பிடித்து விடுவார்களோ! அப்படிக் கண்டு பிடித்துக் கைதியாக்கி விட்டால் நான் என்ன செய்வேன். என்னுடைய நிலைமையோ மிக்க கேவலமாகி விட்டது. நாளைக்கு நாள் பேசவும் கூடவில்லை. அத்தகைய பலஹீனமாகிக் கொண்டே வருகிறது. இது சமயம் நான் எவ்வாறு உன்னையும் பிரிந்து உயிர் வாழ்வேன்? அதற்குத்தான் நான் வருந்துகிறேன்." என்றாள்.

பாலா:- அம்மா! நீ என்ன கோழையாகப் பேசுகிறாய் + என்னுடைய விதியின் படிக்குத்தான் யாவும் முடியும். என்னைக் கண்டுதானா நீ உலகத்தில் உயிர் வாழுகிறாய்! நம்மைக் காப்பதற்குக் கடவுள் ஒருவரில்லையா! அவரை மறந்து விட்டாயா! அவரை மறந்து விட்டால் பிறகு நாம் வாழுவதெங்ஙனம்? அம்மா! உன்னுடைய தேக நிலைமையைப் பார்த்தால் நீ கட்டாயம் பிழைப்பாய் என்று கூறுவதற்கு இடமில்லை. இந்த விஷயத்தைக் குறித்து நீயும் நானும் மனோ தைரியமா யிருக்க வேண்டியது நமது கடமை யாகிவிட்டது.. உலகத்தில் சகலமான பிராணிகளையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் ஆகிய எல்லாவற்றையும் செய்யும் கர்த்தா எவனோ அவனது தாள் தொழுது போற்றுவது-தான் நாம் செய்யக் கூடிய வேலையாகும்.

அவசரத்தில் கடையில் ரூபாயை மாற்றிக் கொண்டு சில்லரை சரியாக விருக்கின்றதா என்பதையும் பார்க்காமல் ஒடி வருவதும் பிறகு கணக்குக் குறைவது கண்டு கடைக்காரனைக் கேட்டால் 'நான் அப்போதே சரியாகக் கொடுத்து விட்டேன். நீ அவசரத்தில் எங்கு போட்டு விட்டாயோ!' என்று அவன் கூறிவிட நஷ்டத்தை அடைய நேருகின்றது.

இம்மைக்கும், மறுமைக்கும், மற்றெதற்கும் சாதன மனிக்கக் கூடியது அந்த தாரக நாமந்தான் என்று அன்று ஒரு புத்தகத்தில் படிக்க வில்லையா! எனக்குற்ற குற்றத்திற்குத் தண்டனை விதிக்கவோ, தூக்கு மரத்தில் தொங்கச் செய்யவோ கடவுள் திருவுள்ளப்படியேதான் நடக்கும். இவைகளுக்காக நீ சித்தம் சிதறாதே! வருந்தாதே! சதா கவலை கொள்ளாதே! உன் விஷயத்திவ் நான் கவலைப் பட்டும் ஆவதொன்றுமில்லை. கர்மாவின் வழியே காரியம் நடக்கும். ஆதலால் எல்லாவற்றிற்கும் தைரியமாக இருக்க வேண்டும். என்னுடைய செய்கையை ஒருவரும் கவனிக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன். ஆயினும் சொல்வதற்கில்லை. அப்படி ஏதேனும் சம்பவம் நேர்ந்தால் நீ கதறாதே; பதறாதே!" என்று பல விதமான தேறுதல்களைக் கூறினாள்.

கோமதிக்கு மனத்திற்குள் எத்தனையோ விசனம் அழுத்தியதெனினும் பாலாவின் பொன்னுரைகளைக் கேட்டுத் தன் கவனத் தைக் கடவுள் பேரில் செலுத்தித் தியானிக்கலானாள். பாலா தினந் தோறும் தன் வேலை முடிந்ததும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலிய படங்களை வைத்துப் பூஜை செய்து பாடுகிற வழக்கம். அதே போல அன்றும் தன்னுடைய மாறுதலைக் காட்டிக் கொள்ளலாகா தென்கிற நோக்கத்துடன் படத்தருகில் பாட உட்கார்ந்தாள். அவள் சகோதரியாகிய நீலாவும் சேர்ந்து இருவரும்,

("கோரீபஜிந்துனு" என்ற மெட்டு)

வாரீஜ லோசனா! பாப விமோசனா ! மார ஜனக கோபாலா—வா

தாரக நாமா! பாரினில் எம்மை சீருடன் காக்கும் பிதாவே

நந்த குமாரனே! நவநீத சோரனே! பந்த மகற்றி யருள்வாயே

செங்கண் மாலா! மங்கை லோலா! பங்கய மலர் பொற்தாளா-

பார்த்தன் தேரோட்டிய நாதா-

அவசரத்தில் குலம், கோத்திரம், வம்சாவளிகள், குணம், பணம் முதலிய எவையும் தீர விசாரியாது சம்மந்தத்தைச் செய்த பிறகு அதிலுள்ள ஊழலைக் கண்டு கலங்கும்படியாகி விடுகின்றது.

("சத்யவதே" என்ற மெட்டு)

1. பாண்டவநேய சகாயா! மாயா!

ஆண்டருள் செய்திடுவாய் அன்பர் தூயா- பா

2. தேவாதி தேவா! ஸ்ரீ வாஸு தேவா! பாவன நாம ஸ்ரீ பரந்தாமா!

சேவடி தந்தின்பம் சேர்க்திடச் செய்வாய்

3, பார்த்தனுக்குரைத்த பண்புள்ள கீதையில்

"மார்கழி மதி யான்" என்று இயம்பிய

மாதவனே பஜனைக் கிரங்கிவோய்

4. உன்னரும் மக்கட்கு உணர்ச்சி யளித்திட

இன்னமும் தாமதம் ஏற்குமோ கண்ணா!

பன்னக சயனா! பரிவுடன் வா வா-

5. தேசம் செழித்திட கேசவ நின் திரு

மாசற்ற நோக்கருள்வாய் மனோல்லாசா!

பூசுரர் போற்றிடும் புவனப் பிரகாசா !

என்கிற இரண்டு பாடல்களையும் பாடினார்கள். கோமதி இச்சங்கீத ஆனந்தத்தினால் மிக்க மகிழ்ச்சி யடைந்தாள். பிறகு பாலா "எந்த சமயத்தில் யார் வருவார்களோ!" என்கிற பெரும் குழப்பத்துடனேயே ஒவ்வோர் நிமிடமும் எதிர் பார்த்தாள். மனம் அலைந்து கொண்டே இருந்தது. இரவும் சமீபித்தது. அன்றிரவு நித்திரை என்பதே கொள்ளவில்லை, ஏதேதோ பலவிதமான எண்ணத்துடன் தத்தளித்தாள். ஒருவரும் வரவில்லை. ஒரு விஷயமும் தெரியவில்லை. ஆகையினால் இந்த சம்பவம் அறியாதவாறே மறைந்து விட்டதாகத் தாயும் மகளும் எண்ணினார்கள்.

உதயமாயிற்று. பாலா வழக்கம் போல வேலைக்குச் செல்லும் நேரம் சமீபித்தது. வேலைக்குச் சென்ற விடத்தில் என்ன விஷயம் காதில் விழுமோ! எவ்விதமான செய்தி எட்டுமோ! என்கிற பெரும் பீதியோடும் கலக்கத்தோடும் அவள் சென்றாள். தன் மனத்திலுள்ள எண்ணங்களினால் முகத்தில் ஏதேனும் மாறுதல் தெரிந்து விடப் போகிறதே என்கிற கவலையினால் தன்னால் கூடியவரையில் ஒரு சிறு மாறுதலையும் காட்டிக் கொள்ளாது தன் வேலையைச் செய்யப் புகுந்தாள்.

அவசரத்தில் பார்க்காமல் காய் கறிகளை வாங்கி வந்து விடுகின்றது, பிறகு அதிலுள்ள சொத்தல், புழுத்தல், முத்தல், விரை முதலியவற்றைக் கண்டு வருந்துவது.

முதல் நாள் தன்னால் அடியுண்டவன் அன்று வேலைக்கு வராமையைக் கண்டு மனத்திற்குள்ளேயே எண்ணறியாத கலக்கமும் விசனமும் உண்டாகியது. இவ் விஷயத்தைப் பிறரைக் கேட்கவும் அஞ்சினாள். அப்படியே தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு வந்தாள். மகளைப் பார்த்த உடன் கோமதி "அம்மா! உன்னுடைய செய்கை அப்படியே மறைந்து விட்டதா! ஏதேனும் விசேஷ முண்டா?" என்று கேட்டாள்.

இதுகேட்ட பாலா "அம்மா! இது பரியந்தம் ஒருவித தகவலும் தெரியவில்லை. எவ்விதமான பேச்சும் பிறக்க வில்லை. அந்த ஆசாமியையே காணவில்லை. காரணம் என்னவோ கடவுளுக்குத் தான் தெரியும். நானும் இது விஷயமாக யாருடனும் எதுவும் பேசவோ, கேட்கவோ இல்லை.' இனி போகப் போகத்தான் தெரியும்" என்றாள். பிறகு ஒருவித விசேஷமுமின்றி அமைதியாக அவ்விரவு கழிந்தது,

மறுதினம் உதயமாயிற்று. பாலா வேலைக்குப் புறப்படு முன்னர் ஓர் கிழவி அங்கு வந்து ஒரு கடிதத்தைக் கொடுத்து "அம்மா! இக் கடிதத்தைத் தம்மிடம் கொடுக்கும்படியாக கங்காதரன் கூறினார்." என்று கொடுத்துவிட்டு உடனே சென்றாள். இதைக் கேட்ட தும் பாலாவுக்குக் குலை நடுக்கம் எடுத்துக் கொண்டது, தனக்கு ஏதோ ஆபத்து உதயமாகி விட்டதாகவே அவள் மனத்தில் தீர்மானமாகத் தெரிந்து விட்டது. அக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கவும் நடுங்கினாள். அவளால் கூடுமான தைரியம் செய்து கொண்டு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள்.

அவசரத்தில் குழந்தையை தடார் புடார் என்று புடைத்து விட்டு அந்த உதை தாங்காது குழந்தை ஜ்வரத்துடன் படுத்த பிறகு வருந்திப் பயன் யாது?

"பாலம்மாளுக்கு :

இக் கடிதம் கண்ட தக்ஷணம் இதிலுள்ள விலாசத்திற்கு உடனே வர வேண்டியது. அங்ஙனம் தவறினால் பேராபத்து நேருவது நிச்சயம். போலீஸ் பக்ஷிகள் வட்டமிட்டுக் கொண்டிருப்பதை மறக்க வேண்டாம். உடனே வரவும்.

கங்காதரன்."

அக் கடிதத்தைப் படித்ததும், அவளுடைய திகிலும், குழப்பமும் முன்னிலும் நூறு மடங்கு அதிகரித்து விட்டன. அவளுடைய தலை சுழலுகின்றது. தான் செய்துவிட்ட காரியத்தின் பலனாகிய சூரியன் தன் கண்ணெதிரில் பிரகாசிப்பதாக நினைத்து விட்டாள். அவளுடைய பரம சங்கடமான நிலைமையோடு தன் தாயாரருகில் வந்து கண்ணீர் பெருகியவாறு கடிதத்திலுள்ள விஷயத்தைத் தெரிவித்தாள்.

இது கேட்ட கோமதி மிக்க விசனத்தை யடைந்து, "ஹா! பாலா! என்னமோ பெரிய ஆபத்து வந்து விட்டதாகவே என் மனமும் கூறுகின்றதே! என்ன செய்வேன்? எவ்விதமாக முடியுமென்று எனக்குத் தெரியவில்லையே! ஐயோ! என்ன செய்வேன்! கண்ணே! நீ தயங்காதே ! இக் கடிதத்தை தீயிட்டுப் பொசுக்கிவிட்டுப் பேசாமலிருந்துவிடு. விஷயமே அறியாதவள்போல நீ உன் வேலைக்குச் சென்றுவிடு, இவ்விதம் செய்தால் என்ன?" என்று வெகு அன்போடு கேட்டாள்.

பாலா:- அம்மா! என்ன இது இவ்விதம் பேசுகின்றாய்! கடவுளுக்குப் பொதுவாக நான் நடந்து கொள்ள வேண்டாமா! ஏன் பயப்படுகின்றாய் பயப்படாதே! என் விஷயத்தில் அந்த மனிதனும் பெரும் குற்றவாளி; என் கற்பைக் காத்துக் கொள்ள நான் செய்தது சரி எனினும் அதுவும் அவனுக்குக் குற்றமாகத் தோன்றலாம். வருவது வழியில் தங்கி விடாது. நான் இன்று பயந்து கொண்டு போகாது வீட்டிற்குள்ளேயே புகுந்து கொண்டிருப்பின் என்னை நாளை போலீஸ் காரர்கள் வந்து வாரண்டுடன் அழைத்துச் சென்றால் அப்போது என்ன செய்வது? அது மட்டும் சரியானதா! ஆகையினால் நீ சற்றும் கவலைப்படாதே!

அவசரத்தின் வேகத்தினால் முக்கியமான சாமானை வைத்து விட்டு மறந்து செல்வதால் அங்கு சென்ற பிறகு மீண்டும் ஒடி வந்து அதை[ எடுத்துச் செல்ல நேருகின்றது.

அம்மா! உயிருடன் என்னருமை கேசவனை இழந்தோம். மூத்த அண்ணனையும் பிரிந்தோம். அவ்விருவர்களை இழந்த உனக்கு என்னைப்பற்றிக் கவலை ஏன்? என் விதி முடிவின்படி என்னையும் நடத்து. இதற்கெல்லாம் ஏன் வருத்தப்படுகிறாய்? நான் கட்டாயம் சென்று வருகிறேன். எதற்கும் பயப்படவேண்டாம். விதியை வெல்ல எவராலுமாகாது; தைரியமாக இரு. நான் சென்று வருகிறேன்." என்று கூறித் தைரியம் சொல்விவிட்டு அவ்விடம் விட்டு வெகு துணிகரமாயும் பரபரப்புடனும் கடிதத்தில் கண்டுள்ள விலாசத்திற்குச் சென்றாள்.

அங்கு கடிதம் கொண்டு கொடுத்த கிழவியே வாசலிலிருந்தாள். "வாருங்கள். " என்று மரியாதையாகவே அழைத்துக் கொண்டு சென்று உள்ளே படுத்திருக்கும் ஆசாமியிடத்தில் பாலாவின் வருசையைத் தெரிவித்தாள். உடனே அவன் "இங்கே யனுப்பிவிட்டு வெளிக்கதவைத் தாளிடு" என்று உத்தரவு செய்தான். இவ்வார்த்தைகள் நமது பெண்மணியின் செவியில் விழுந்ததும் அவள் குலை ஈடுங்கியது. "ஹா! ஏதோ மோசம் வந்துவிட்டதே!” என்று வயிற்றில் இடி இடித்தது. அவ்வறையின் கதவருகிலேயே பாலா நின்று "கதவை ஏன் தாளிடவேண்டும்? நான் இவ்விடத்திலேயே நின்று பேசுகிறேன். என்னை வரவழைத்த காரணம் யாது? அதை இப்படியே கூறலாம்." என்று முடுக்காகவே கேட்டாள்.

கங்காதரன்.- அம்மா! என் தாயே! பாலா! இதோ இப்படி என்னருகில் வா! உன் திருமுகத்தை என் கண் முன்பு தாராளமாகக் காட்டு. உன் முகத்தில் பயக்குறியும் கவலைத் தோற்றமும் ஜ்வலிக்கின்றது. அப்படியெல்லாம் கவலைப்படாதே! நீ குற்றமற்ற குணவதி, பழியற்ற பாம சிரேஷ்டை. கற்பைக்காத்த காரிகை. என்னுடைய தீய வினையை எனக்கறிவித்த தெய்வப்பெண்; என் கண்ணே! பாலா!" என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே மெல்ல படுக்கையை விட்டு எழுந்து நடக்கமாட்டாது தத்தித்திணறி நடந்துகொண்டே பாலா அருகில் வந்து அவள் காத்தைப்பற்ற முயன்றான்.

தூங்குகின்றவர்களைப் பார்த்தால் விழித்திருப்பவர்களுக்குத் தூக்கம் தானாக வந்துவிடுகிறதாம். விழித்தவர்களை தூங்குகின்றவர்கள் பார்த்தா லன்றோ! அவ்வாறு பார்த்தாலும் விழிக்கமாட்டேனென்கிறதாம்.

இச்செய்கையை அறிந்த பாலா "ஐயா! இதற்குத்தானா என்னை அவ்வளவு பிகுவுடன் அழைத்தீர்; உம்முடைய மோச எண்ணம் இன்னும் மனத்தைவிட்டு அகலவில்லை போலும். சேச்சே! என் கரத்தைப் பற்ற வரும் வெட்கம் கெட்டவரே! விலகும் தூர! என்னுடைய கரம் இவ்வல்ப மதியினருக்கு இலகுவில் கிடைக்கு மென்று நினைக்க வேண்டாம். நான் சென்று வருகிறேன். இதுகா றும் சொல்லிய வார்த்தை என்ன! 'கண்ணே! பெண்ணே!' என்கிற குலாவல் என்ன? உமக்கு மூளை கலங்கி விட்டதாகத்தான் தோன்றுகின்றது. என்னைச் சுற்றி போலீஸ் பக்ஷிகள் வட்டமிடுவதாக மிரட்டினீரே! உம்முடைய போலீஸ் பக்ஷிகளே என்னைக் கொத்தித் தின்னட்டும். நான் அத்தகைய பக்ஷிகளுக்கு இரையாகிறேன். ஆனால் காமாந்தகாரமான பெருங்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் உம்முடைய களங்கமான கரத்திற்கு நான் அகப்படமாட்டேன். சத்தியம்." என்று கூறி வெளியே செல்ல முயன்றாள்.

இதற்குள் அம்மனிதன் "கண்மணி! நீ கூறுவதன் உண்மையை நான் அறிந்தேன். உன்னுடைய பாரமார்த்தீகத்தைக் கண்டு நான் உள்ளம் பூரிக்கின்றேன். மகா பாவி, சண்டாளன், கொடிய பாதகனாகிய நான் உன் கரத்தைத் தீண்டுதற்கு அருகதை இல்லை. இது சத்தியமே! உண்மையே! என்னிலைமை என்னையே வெட்கித் தலைகுனியச் செய்கின்றது, எனக்கு புத்தி கற்பித்த உத்தமியே! பயப்படாதே; என்னருகில் வா!....வா! ...வா!... என் கண்ணே! .....என் கரத்திற்கு விருந்தளி....வா.... அருகில் வா. இப்பாவியின் உதிரத்தில்தான் நீ பிறந்தாய்! ....ஐயோ!...... எனது நாவால் கூறவும் வெட்கமாக விருக்கிறது... உன்னைப் பெற்ற தந்தையே உன் மீது பித்தங்கொண்டு சித்தம் சிதறியதை எண்ண என் ஜென்மம் கூசுகின்றதே! என் செல்வியே! என் பாலாம்பிகையே! என் கண்ணே! வா; என்னருகில் வா! உன் தந்தையை இனி உதாசீனம் செய்யாதே!" என்று கூறிக்கொண்டே பாலாவின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

நவரஸங்களும் பொருந்தி நடிக்கும் காடகங்களைப் பார்த்தால் பிரம்மாகத்தமாக இருக்கிறது. நடிகர்களின் திறமையும் ரூபலாவண்ய அமைப்பும் ஒன்று கூடிவிட்டால் வெகு அற்புதமாக நாடகம் அமைந்துவிடுகின்றது.

இந்த அதியத்புதமான வார்த்தைகளைக் கேட்ட பாலாவின் நிலைமை திடுக்கிட்டு வியப்பே வடிவமாகிவிட்டது. அந்த மனிதனை ஏற இறங்கப் பலமுறை பார்த்தாள். தன் கையைத் திமிறிக் கொண்டாள். அந்த வார்த்தையை நம்பாது தவிக்கின்றாள். அவளுடைய அப்போதிய நிலைமையை ஊகித்தறிவதே வெகு பிரயாசையாகிவிட்டது. அவள் வெகு தைரியத்துடன் "ஐயா! இதென்ன ஆச்சரியம்! நீர் சொல்வதெல்லாம் எனக்கு வியப்பாயும் வேடிக்கையாயும் இருக்கிறதே! நீரா என் தந்தை! உமது உதிரத்திலா நான் பிறந்தேன்?....... இத்தகைய வார்த்தைகளால் பசப்பின், தந்தையென்று தளுக்குக் காட்டிச் சிந்தையின் எண்ணத்தை முடித்துக் கொள்ளலாமென்கிற தீர்மானமே! அங்ஙனம் ஏன் இருத்தல் கூடாது? திடீரென்று உம்மை நான் தந்தை என்று நம்புதல் எப்படி சாத்யமாகும். இந்தக் கட்டுக்கதையை நான் ஒருபோதும் ஒப்ப முடியாது," என்றாள்.

கங்காதரன்.- -என் கண்ணே! உன் மனோ உறுதியையும் தைரியமான மொழிகளையும் காணக் காண எனக்குண்டாகும் மகிழ்ச்சிக்கோர் எல்லை இல்லை. நீ சொல்வது முற்றும் உண்மையே! நீ நம்புவது சாத்யமற்றதேயாகும். காமப் பார்வையோடும், காம எண்ணத்தோடும் நோக்கிய பாவி நான்தான். ஆயினும் பின்னர் எனது அவ்வெண்ணங்கள் தீக்கிரையாயின, நான் தற்போது அந்த களங்கத்தினின்று களையப்பெற்றுள்ளேன். உன்னை ஈன்ற தந்தையாக விருக்கிறேன்.

பிறர் வீட்டில் புசிப்பதற்கு சகஜமாக யாருக்கும் சங்கோஜம் உண்டாவது இயல்பு. பிறவியிலேயே சங்கோஜம் உள்ளவர்கள் அன்னியர் வீட்டில் புசிக்க நேர்ந்தால் கேட்கவேண்டாம்; அன்று அவர்கள் பட்டினி என்றுதான் நினைக்கவேண்டும்.

என் கண்ணே! பாலா! கோமதி சுகமா! நீலா சுகமா! கேசவனும் மருதப்பாவும் சுகமா! என் விதி என்னை எவ்வெவ்விதம் ஆட்டியது என்பதை நீ கேட்டால் நகைப்பாய்; பெற்ற மகளைப் பெண்டாள எண்ணியத் துரோகியின் மற்றைய செய்கைகளைப்பற்றி நான் கூறவேண்டுவதில்லை. என்னைப்போன்ற கசடன் உலகத்தில் இருக்கமாட்டான் என்பது சத்தியம். என் செல்வமே! உன் திரு முகத்தை நான் காமப் பார்வையினால்தான் முதல் முதல் நோக்கினேன். குழந்தைப் பருவத்தில் என் விதி என்னை ஓர் தாசிக்கு அடிமையாக்கியதால் அவள் முகமன்னியில் மற்றைய முகம் பார்த்த தில்லை. உங்களைப் பெற்ற பாசமும் அக்காலைமுதல் இக்காலைவரை மறைந்திருந்தது. படுபாவி நான் சொல்வதை நீ நம்பாமல் விழிப்பதை உன் முகங் காட்டுகின்றது. பெற்ற மகளைப் பெண்டாள நினைத்த சண்டாளனைக் கண்டாலும் பாதகமே; இதை உன் இதயம் உனக்கு எடுத்துக் கூறுகின்றது. என்னையும் குத்திக் காட்டுகின்றது. என் கண்ணே! பாலா!

என்னை நீ ஒரு நாளாயினும் நேரில் நன்றாகப் பார்த்ததில்லையாதலால் என்னுருவமே உனக்குத் தெரியவில்லை. உன் அன்னை என்னைப் பார்த்தால் தெரிந்துகொள்வாள்: ஹா!...... அந்த உத்தமியின் முகத்தில் எவ்விதம் நான் வெட்கமின்றி விழிப்பேன்?.... ஐயோர் என் முகத்தைக் காணவும் அவள் மனங் கூசுவாளே! கண்மணீ! பாலா! உன் தாயை நான் கடைசீமுறை விட்டுச் செல்கையில் நான்கு மாதம் கர்ப்பவதியாகவிருந்தாளே! என்ன சிசு பிறந்தது. அது உயிருடன் இருக்கிறதா! உன் மூத்த அண்ணன் எங்கே இருக்கிறான்?” என்று ஏதேதோ பேசுவதைக்கேட்ட பாலா வின் மனம் இன்னதென்று விவரம் அறியாது தத்தளித்தது.

பழங்காலத்து விஷயங்களை நினைத்துக்கொண்டு படுத்திருப்பது ஒருவித ஆநந்தம். நிகழ்காலத்தை நினைப்பது ஓர் சந்தோஷம். வருங்காலத்து நிகழ்ச்சிகளை எண்ணி மனோதர்மமாகக் கோட்டை கட்டுவது எல்லாவற்றையும்விட இன்பக்கனவாகின்றது.

தான் என்ன விதமான பதில் சொல்வதென்று யோசித்தாள். பிறகு அம்மனிதனை நோக்கி "ஐயா! உம்முடைய முந்திய செய்கையின் அம்பே என் இதயத்தைத் துளைத்துப் பதிந்துவிட்டதால் தாங்கள் இப்போது சொல்வது எதுவும் என் மனத்தில் பதியவில்லை, நம்பிக்கையும் கொடுக்கவில்லை. நீர் என் பிதாவா, அல்லவா என்பதை நானே நிர்ணயிக்கவும் என்னால் முடியாது. உமது வார்த்தையைக் கொண்டு தீர்மானிக்கவும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆதலால் வீணான கால தாமதம் செய்ய வேண்டாம். நீர் என்னோடு என் தாயின் முன்பு வந்த.பிறகு என் தாய் தீர்மானிக்கின்றபடி நான் நடக்கத் தயாராக விருக்கிறேன். தயவு செய்து நீர் இப்போதே வாரும்" என்று வெகு முடுக்காயும் மனத்தில் பதியும்படியாயும் கூறினாள்.

அம்மனிதன் அதற்கு இசைந்தான்; எனினும் அவனுடைய மனத்தில் ஒரு புறம் அபாரமான வெட்கம் வந்து மூடிவிட்டது. "என் செல்வீ! உன் கையின் ஆயுதத்தினால் என் மண்டையில் நீ தைரியமாய் அடித்ததனால் என் தலையிலிருந்த துர்ச் செய்கைக்கு உதவியான திமிர் படைத்த ரத்தம் பெரும் பாகமும் கொட்டிவிட் டது, பிறகு எனக்கு ஓர் பிரகாசமான புத்தியும், பழைய பாசமும், அறிவும் தோன்றின. அதனால் நான் இழந்த மக்கள் மனைவியை மீண்டும் அடைந்தேன். கண்ணே! உன் வார்த்தைக்கு மறு பேச்சில்லை. நான் அப்படியே வருகிறேன். உன் தாயார் என்னைக் கண்டு வெறுக்காமலிருப்பாளா! கட்டாயம் வெறுப்பாள்... அவ்வுத்தமியின் நற்குணங்கள் அறிந்து அனுபவிக்கப் பாவி நான் பாக்யம் செய்யவில்லை. அவள் என்னை: எட்டி உதைத்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கிளம்பு; போகலாம்.' என்றான்.

உடனே ஓர் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அதில் பாலாவும் கங்காதரனும் ஏறிக் கொண்டார்கள். வண்டியும் கிளம்பியது. பாலாவுக்கு மட்டும் மனத்திற்குள்ளேயே பயந்தான். தன் வீடு சேருகிற பரியந்தம் வாய் திறவாது மவுனமாகவே சென்றான். வண்டியும் பாலாவின் வீட்டை யடைந்தது. பாலா இறங்கி அவனையும் அழைத்துக் கொண்டு நேரே தன் தாயிருந்தவிடத்திற்குச் சென்று "அம்மா! இந்த விசித்திரமான விஷயத்தில் நீ தான் தீர்ப்பு அளிக்க வேண்டும். இதனால் மன அதிர்ச்சி அடையாதே. இதோ வரும் இம் மனிதர் யார் என்று கவனித்துப் பார்." என்று கூறிக் கங்காதரனைக் காட்டினாள்.

உதயமானதும் குழந்தை தன் மழலைச் சொற்களுடன் வந்து எழுப்பும் ஆனந்தத்திற்கு நிகர் வேறெதுவுமே இல்லை எனலாம். அதன் முகத்தில் விழித்தவாறு, அதன் புன்சிரிப்பை நோக்கியவாறு எழுத்து அக்குழந்தையை முத்தமிட்டுப் பின் வெளியில் வந்தால் பண்ணிய பாவமும் தீரும்.

எதிர்பாராத இவ் வார்த்தைகளைக் கேட்ட கோமதி மெல்ல எழுந்து உட்கார்ந்து வந்த மனிதனை உற்றுக் கவளித்தாள். அதற்குள் அம் மனிதன் "ஹா!....கோமதி! சண்டாளன் என்னை உனக்குத் தெரியவில்லையா!" என்று கூறிக்கொண்டே கோமதியின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கோவென்று கதறினான். கோமதிக்கு அவனை தூரவிருந்து பார்க்கையிலேயே தன் புருஷனின் ஜாடையாக விருப்பதைக் கண்டு ப்ரமித்தவளவில் இவ்விதம் அவனே கூறிக் கொண்டு அருகில் வந்ததும் உண்மையில் கோமதிக்கு ஒன்றுமே தோன்றாது மன அதிர்ச்சியினால் மெளனமானாள்.

ஐந்து நிமிடநேரம் எவ்விதமான சந்தடியுமின்றி மூச்சுப் பேச்சற்று அவ்விடம் நிசப்தமாக விருந்தது. பிறகு கோமதி சற்று தெளிவுற்று, "தங்கள் நினைவில் இவ்வனாதைப் பரதேசிகள் இப் பூவுலகில் இருக்கிறார்கள் என்பது உதயமாயிற்றா! அன்றி இதுவும் வேஷந்தானா! இதென்ன முகத்தில் தழும்புகள் இருக்கின்றனவே!.... வேசி மோகமும்...குடியின் கோரமும் தங்களை விட்டதா! என்ன ஆச்சரியம்.... பெற்ற மகளையா பெண்டாள நினைத்தீர்கள். ஐயோ! கலிகாலக் கொடுமையே!" என்று கூறி முடிப்பதற்குள் பாலா "அம்மா! இவரா என் பிதா! உண்மையில் என் பிதா தானா! இத்தகைய காமுகனாயும் குடியனாயுமுள்ள இவர் உதிரத்திலா நான் ஜெனித்தேன்!" என்று வியப்பே வடிவமாக நின்றாள்.

ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தால் அதை உடனே தடங்கலின்றி செய்தால் அக்காரியம் சீர்பெறும்; அதற்கு ஆரம்பத்திலேயே ஆயிரம் தடங்கல் களும் "நீதான் செய்; நீதான் செய்". என்கிற போட்டியும் ஏற்பட்டுவிட் டால் காரியம் எங்ஙனம் நடைபெறும்?

கங்காதரன்:- என்னுடைய கெடுமதியின் கொடுமையினால் நான் செய்த தீங்கிற்கு என்னை நீங்கள் என்ன சொன்ன போதிலும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக விருக்கிறேன். என்னுடைய பிழைப்பின் கேட்டிற்கு இதுமட்டுமல்ல; இன்னும் எதை வேண்டுமானாலும் கூறுவதற்கு இடமுண்டு. கோமதி! என்னைப் பிடித்து ஆட்டிய இரண்டு பைசாசங்களும் முன்பே என்னை விட்டு ஒழிந்தன. ஆனால் என்னுள் அவிவேகமாக நிறைந்து கிடந்த சிற்றின்பப் பேய் மட்டும் என்னரிய புதல்வியின் கை வாளினால் ஒழிந்தது. இனி நான் ஓர் புனிதன்தான். எனக்குற்ற இச் சம்பவத்தினால் புத்துயிர் பெற்றவனானேன்...

கோமதீ!...என் கண்ணே! பாலா!.... செல்வி!. நீலா!.... நான் இக் கதியை அடைந்ததற்குக் காரணமும் அந்த துராத்மா வேசியின் உறவேயாம். என்னை நல்வழிப் படச் செய்ததும் அவ்வேசி உறவேயாம். மகா கொடிய பாதகத்தில், காள கோடி சர்ப்பத்தின் மத்தியில் நான் இருப்பதை யறியாது பேராநந்த சுக-போகத்திலிருப்பதாக மனமகிழ்ந்து அக்கினி சாக்ஷியாக மணந்த மனைவி-யையும் நான் பெற்ற மக்களையும் துறந்தேன். அவ்வேசியுடன் ஊரை விட்டுச் சென்றேன்.அவள் இழுத்துச் சென்ற விட மெல்லாம் நாய் போல லோல் பட்டேன். சில வருடங்கள் அம் மாதிரியாகக் கழிந்தன. அந்த வேசிக் கழுதை மற்றும் பலருடன் நட்பு கொண்டு என்னை அலக்ஷியம் செய்து விலக்கினாள், நான் அவள்பால் வைத்திருந்த ப்ரியத்தினால் வேலைக்காரனைப்போல வேனும் வீட்டிலேயே இருப்பதாகத் தீர்மானித்தேன். அந்த வேசியினுடைய மற்ற சினேகிதர்களுக்குள் பலத்த சண்டை ஏற்பட்டது.

ஒரு தினம் காலையில் அவ்வேசி குத்தப் பட்டுக் கொலையுண்டு கிடந்தாள். இதைப் பார்த்து நான் நடுக்கலுற்றேன் அதே சமயம் அவளுடைய சினேகிதன் அங்கு வந்து தான் ஏதுமறியாதவன் போல அந்த கோரக் கொலையைக் கண்டு திடுக்கிட்டு "அடேய் எங்களுடன் அவள் சினேகமாக விருக்கிறாள் என்கிற ஆத்திரத்தினால் நீதான் இக் கொலையைச் செய்து விட்டாய்! உன்னையின்றி வேறு யாரும் இக் காரியம் செய்யமாட்டார்கள். இப்போதே உன்னை. போலீஸாரிடம் பிடித்துத் தருகிறேன்" என்றான்.

எங்கேனும் செல்வதற்குப் புறப்படுகையில்தான் சிலருக்கு சண்டையும், சச்சரவும், ஆக்‌ஷேபனை சமாதானங்களும், கோப தாபங்களும் உண்டாகி விடுகின்றன. இந்த தடபுடிலில் சென்றவிடத்தில் காரியமும் மிஞ்சிவிடுகின்றது. கண்காட்சியாயின் பாதி கடந்துவிடுகின்றது.

இது கேட்ட எனக்குப் பெருத்த அதிர்ச்சியும் ஆவேசமும் உண்டாகி விட்டது. அவனுக்கும் எனக்கும் பலத்த சச்சரவும் சண்டையும் நடந்தது. நான் அவனை அடித்துப் போட்டுவிட்டு அந்த நிமிடமே அவ்விடத்தை விட்டு ஓடோடியும் வந்து விட்டேன். குற்றமோ கொலைக் குற்றம். என்னை எப்படியும் போலீஸார் கண்டு பிடித்து விடுவார்களே என்கிற ஓர் யோசனையினால் நான் என் முகம் அடையாளம் தெரியாமலிருக்கும் பொருட்டு நெருப்பினால் முகத்தைச் சுட்டு இவ் வடுக்களுண்டாக்கிக் கொண்டேன். நான் வெகு தூரம் சென்று ஓர் ஊரில் தங்கினேன். அங்கு ஓர் கங்காணி சில பிரயாணிகளை அழைத்துக் கொண்டு இத் தீவுக்கு வருவதற்குத் தயாராக விருந்ததைக் கண்டு நானும் என் பெயரை கங்காதரன் என்று மாற்றிக்கொண்டு அக் குற்றத்திற்குப் பாத்திரமாகாது தப்பித்துக் கொள்ள இங்கு வந்தேன். இங்கு நான் வந்து ஒரு மாத காலந்தானாகிறது" என்று கூறி முடிப்பதற்குள் கோமதி "ஐயோ! மோசம் வந்து விட்டதா! பாழும் குடியும், வேசியும் மகா கொடிது விஷம் என்பதை அறிந்தும் அதிலிறங்கி பெரும் பாபத்திற்கு ஆளாகியதோடு கொலைக் குற்றமும் சாற்றப்பட்டீரா!.... ஐயோ! கொலையாளி என்.ற பெயருடனா இங்கு ஒளிந்து வருகிறீர் ?" என்று கூறிச் செயலற்று விட்டாள்.

கங்காதரனுக்கோ இன்னதென்று தெரியாதவிதமான துக்கம் தொண்டையை அடைக்கின்றது. கோமதியின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு, "என் கோமதீ ! உண்மையில் நான் ஒருவித குற்றமும் செய்தவனன்று. நான் கடைசீப் பாகமாகிய கொலையில் சம்மந்தப் பட்டவனேயன்று, கடவுள் மீது ஆணையாக நான் கொலை யாளியல்ல. என்மீது வீணான பழிவந்து தாக்கிவிடப் போகின்றதே என்கிற எண்ணத்தினால் நான் இந்த பக்கம் வந்துவிட்டேன். நேரே உங்களிடம் செல்லவும் எண்ணினேன்.

சில நாடகங்களுக்குச் சென்றால் அக்காடகத்தைப்பற்றிய கதை முழுதும் கடப்பதில்லை; நாடகத்திற்கு முக்கிய லக்ஷணமான நடிக்குக் திறமையோ முழு தும் பூஜயம் போட்டா போட்டி பாட்டுக் கச்சேரியாகவே முடிந்துவிடுகின் ற்து. இதற்கு நாடகம் என்ற பெயர் எதனாலே?

நீங்கள் எங்கே இருக்கி றீர்கள், என்ன செய்கிறீர்கள் என்ற தகவல் ஒன்றுமே தெரிய வில்லை. அது சமயம் விகாரித்தறிவதற்கும் நேரமில்லை. நிலைமையோ பகைவரின் கத்தி முனையில் இருந்ததால் நான் அது காலை ஊரைவிட்டு வெளி யேறுவது தான் உசிதம் என்று தோன்றியதால் நான் உடனே இங்கு வந்து வேலைக்கு ஒத்துக் கொண்டேன். ஒரு மாதமாக நான் இங்கு வேலை செய்தும் நீங்கள் இங்கிருப்பதை நான் அறியவில்லை. ஆனால் நான் கொலைக் குற்றம் என்ற ஒரு பெரிய பட்டத்தோடு வந்திருப்பினும் என்னை இதுகாறும் அழுத்திக் கொண்டிருந்த சிற்றின்பப்பித்து என்னை விட்டு அகலாதிருந்ததால் நான் பெற்ற சிறுமி என்கிற வித்யாசமும் தெரியாமல் காமத்துக்குக் கண்ணில்லை என்கிற பழமொழிப்படிக்கு என்னைச் செய்துவிட்டது.

பார்ப்பதற்கு வெகு சிறியவளாக விருந்தபோதிலும் என்னிடம் அவள் பேசிய பேச்சும், காட்டிய வீரமும், செய்த சூரச் செய்கையும் என்னையே திடுக்கிடச் செய்தது. மகா கொடிய காமுகனாகிய என்னுள்ளத்திலேயே இவ்வீர நங்கையின் செய்கை மிக்க மகிழ்ச்சியையும் என்னையறியாத ஓர் உணர்ச்சியையும் கொடுத்தது. நான் அந்த காயத்துடன் வீட்டிற்குச் சென்றேன். கைமருந்து களையே போட்டுக் கட்டு கட்டிக்கொண்டேன். அன்று அதிக நோய் தெரியவில்லை; எனினும் ரத்தம் பெரும்பாகமாகச் சென்றதால் களைப்பு மேலிட்டுவிட்டது. கால் நடக்கக்கூடவில்லை. என்னையறியாத மயக்கம் வந்துவிட்டதால் படுத்துவிட்டேன்.

இரவு முற்றும் அவ்வீரப் பெண்மணியின் உருவமும், அவள் சொல்லிய மொழிகளும், அவள் காட்டிய தீரச்செயலும் என் கண் முன்பு தோன்றி நாடகமாடிக்கொண்டே இருந்தன. இந்த சிற்றின்பப் பேயை ஒட்டுதற்கே அச்சிற்றிடை மாதரசி தோன்றினாள் என்று என் மனத்தில் பட்டுவிட்டது. அத்தகைய நாரீமணி யார்? அவனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற மனவெழுச்சியும் உண்டாகியது. உடனே நான் அதை எவ்விதமாயினும் அறிவதென்கிற தீர்மானங்கொண்டேன். இரவு தொலையப் போகின்றதா! என்று எதிர் பார்த்து அதைத் தொலைத்தேன்.

நாம் யாரிடத்தில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதில் யாதொரு குணமுமில்லை என்று நினைக்கின்றோமோ அவர்களாலேயே அக்காரியத்திற்கு உதவி சற்றும் எதிர்பாராவிதமாகக் கிடைத்துவிடுகின்றது.

நேற்று பொழுது விடிந்தது. எனக்கு இக்காயங்களின் வலி அதிகமாய்விட்டது. கூடியவரையில் பொறுத்தும் நடக்கக்கூட வில்லை. பிறகு இரவு வரையில் பொறுத்தேன். தடுக்கி விழுந்து அடி பட்டதாகவும் லீவு வேண்டுமென்றும் எஜமானுக்கு எழுதியனுப்பினேன். நான் எழுதியது உண்மையாயல்லவா! என்று பார்ப்பதற்கு ஓர் கங்காணி வந்தான் அவன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனிடத்தில் பேசும்போது வார்த்தைப் பராக்கில் பாலா விஷயத்தைப்பற்றிக் கேட்டேன். அவன் உங்கள் சகலமான வரலாற்றையும் கூறினான்.

அந்தோ! அதைக் கேட்டதுமே, என்னாவி துடித்தது. என் பழைய கதைகள் முற்றும் நினைவிற்கு வந்தன. என்னுடைய தீச் செயல்கள் கண் முன்பு தாண்டவமாடின. எல்லாவற்றையும் விடப் பெற்ற மகளையே பெண்டாள நினைத்த பெரும் பாதகமே ஆயிரக் கணக்கான அம்புகள் போல என் அங்கம் முற்றும் குத்தியது. என்னுடைய சகலமான நாடிகளும் அடங்கிவிட்டன. அப்போது தான் சிற்றின்பத்தின் கேடும், "காமம் செத்த நாயையும் பெற்ற பெண்ணையும் விடாது" என்கிற பழமொழியும் என் இதயத்தில் தைத்தன. என் மாறுதலை அவர் அறியாதவாறு சமாளித்துக் கொண்டு பின்னும் சற்று பேசிவிட்டு அவரை யனுப்பிவிட்டேன்.

எனினும் நான் கேட்ட விஷயங்கள் மெய்தானா என்பதை அறியும் பொருட்டு ஒரு வண்டியமர்த்திக் கொண்டு மெல்ல இரவு இவ்விடம் வந்தேன். நேரில் பார்க்கும் எண்ணத்துடன் நான் வந்த சமயம் பாலா ஏதோ சங்கீதம் கர்ணாமிருதமாகப் பாடிக் கொண்டிருந்தாள். நீ படுக்கையில் கேவலமான நிலைமையில் கிடந்ததை வெளிப் புறத்துப் பலகணி வழியாகக் கண்டேன்.

வெறுமனே பிச்சை கேட்டால் போடுகிறவர்கள் சிலரே. ஆனால் பாட்டு பாடியோ, ஏதாவது வேடிக்கை செய்தோ கேட்டால் அநேகர் தங்களை யறி யாது கொடுத்து விடுகின்றார்கள்.

நீ என்னை மணந்த உத்தமி கோமதி என்பதை அறிந்ததும் உள்ளே வர நினைத்தேன். ஆனால் என் மனச்சாக்ஷி என்னைத் தடுத்தது. உடனே நான் வீடு திரும்பி இரவு முற்றும் யோசனை செய்தேன். எந்த விதமாக உன்னைக் காண்பது என்று புலப்படாது தத்தளித்தேன். பிறகு இந்த யோசனை தான் சரி என்று பட்டதும் காலையில் கடிதமனுப்பினேன். கடிதத்தைக் கண்டு எங்கே அலக்ஷியமாய் வராதிருந்துவிடப் போகிறாளோ! என்று போலீஸ் பயங்காட்டி எழுதினேன்; பிறகு உங்களை அடைந்தேன்.

கோமதீ! உனது பொன்னுரைகளை ஆதியில் கேளாது அனாதரித்ததற்குக் கடைசீப் பலனாக கொலைக் குற்றத்தையும், பெற்ற பெண்ணைப் பெண்டான நினைத்த பரம பாதகத்தையும் அடைந்தேன். கடவுள் எனக்கு அறிவு கொடுத்திருந்தும் என் மதி யழிந்தது; மான மழிந்தது, மாண்பு குலைந்தது, மதிப்பு மடிந்தது, மகிழ்ச்சி ஒழிந்தது. எல்லாம் அழிந்த கட்டையானேன். என் வாழ் நாள் முற்றும் நரகக் குழிக்கு நாற்றங்காலாகிவிட்டேன். பாழ் நாளாகக் கழித்தேன்.... பாலா!.... இனியேனும் என்மீது நம்பிக்கை பிறந்ததா! என்னைப் பிதாவென்று ஏற்றுக் கொள்வாயா?" என்று கெஞ்சிக் கேட்டான்.

இது கேட்ட பாலா ஒருவிதமான நகைப்புடன் "இந்த பூமியில் ஒரு உயிர் ஜெனித்த வளவிலேயே அதற்குத் தாய் என்றும் தந்தை என்றும் இரு பொருள்கள் முன்பே இருக்க வேண்டும் என்பது கடமையல்லவா! அக் கடமையின்படிக்கு என் தாயை இது காறும் தெரிந்துகூட எனக்குத் தாய் தந்தையர் சாக்ஷாத் அம்பிகையும் பரமேச்வானும்தான் என்று நான் நினைத்திருக்கிறேன். அவனன்றி தாய் தந்தையர்கள் வேறில்லை என்பதே என் துணிபு. உம்முடைய உதரத்தில் ஜெனித்ததை யறியா முன்னர் கவலையற்றிருந்தேன். அதை யறிந்ததும் என்னைப் பெருங் கவலை வந்து சுற்றிக் கொண்டது.

அச்சாபீஸில் வேலையில்லாது தூங்குகையில் வேலை கொடுப்பவர்களுக்கு அசௌகரிய மேற்பட்டுவிடுகின்றது. அவர்கள் வேலை கொடுக்கும் சமயத்தில் அச்சாபீஸில் வேலைகள் அதிகமாக வந்து சேர்கின்றன. இருவரும் சரிப்படுத்திக் கொண்டு வேலை அரிதமாக நடக்கையில் பேபர் பஞ்சம் வந்துவிடுகின்றது.

இத்தகைய உதிரத்தில் என்னை என் ஜெனிக்கச் செய்தாய் கடவுளே என்று நான் வருந்துகிறேன். எனினும் பூத உடல் படைத்த தந்தையாகக் கடவுள் உம்மை நியமித்திருப்பதால் நீர் என் தந்தை என்று நம்புகிறேன். உம்மையும் உமது செய்கையையும் கண்டவர்கள் என்னைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்.......... இத்தகைய மனிதனின் - கொலைகாரனின்-பெண்ணாம் என்ற பட்டமல்லவோ எனக்கு வரும்!.... நான் ஏதோ செய்த தீரச் செய்கைக்கு ஏற்ற தந்தையாக எனக்கில்லையே என்ற வருத்தம் உண்மையில் என் மனத்தைப் பிளக்கின்றது. என்ன செய்வது? பூர்வ ஜென்ம சுகிர்தம்." என்றாள்.

கோமதி:- பாலாம்பாள்! நீ சின்னத்தனமாகப் பேசுகின்றாய்! உன்னுடைய மனத்தில் ஆயிரம் எண்ணங்கள் உதிப்பினும் உன்னுடைய பிதா அவர் என்பதை மறக்க முடியாது. அவர் மனம் ஏற்கெனவே புண்பட்டுத் தவிக்கும் சமயம் நீயும் இவ்விதமான சுடு சரத்தை விடாதே! அது தருமமன்று. அவ்வெண்ணத்தை மாற்றிக் கொள். உன்னுடைய தூய எண்ணத்தினாலும் செய்கையினாலும் அவருடைய மாசை ஒழித்து விடக் கூடும். அவ்வழியில் உன் எண்ணத்தைச் செலுத்து. இதுகாறும் அவர் எவ்விதம் இருந்த போதிலும் இப்போது அவர் நல்லறிவு பெற்று தன்னையே தான் நொந்து கொள்ளும் நிலைமைக்கு வந்து விட்டார். ஆதலால் இனி நாம் நமது கடமையில் தவறாது நடக்க வேண்டும். அவருடைய குற்றத்திலிருந்து மீட்கும் வழியை நாம் கட்டாயம் செய்து அவரைக் காக்க வேண்டும். அதற்கான வழியில் நாம் உழைப்பதே கடவுளின் முக உல்லாசமாகும். இனி துடுக்காகப் பேசாதே!

எந்த புத்தகம் கைவசமில்லையோ அதைக் கேட்போர் பலர். அதை சீக்கிரம் அச்சிடுவோமென்று ஆரம்பித்தாலும் முடிவதற்குள் பல தடைகள் குறுக்கிடுகின்றன. அதிக காலதாமதமானால் முன் கேட்டவர்களின் மனம் மாறி விடுகின்றது.

கங்காதரன்:- கோமதி! குழந்தையைக் கடிந்து கொள்ளாதே. மகா கொடிய பாதகன் நான் காமுகனாய் என் செல்வியையே என் வாயினால் கண்டபடி உளறிய நாவைத் துண்டிக்கவும் அவள் மனம் விரும்பலாம். அதற்காக நான் கோபிக்கவில்லை. கோபிக்கவும் எனக்கு முகமிருக்கின்றதா ! இல்லை; இல்லை. பாலா! உனக்குத் தந்தை என்று கூறிக்கொள்ள எவ்விதமும் நான் அருகதையல்லன் என்பதை என்னுள்ளம் அறிகின்றது. கண்ணே! நீ கவலைப்படாதே! நான் இழந்த புதையலை உன்னால் கண்டெடுத்தேன். பெரும் நிதியை அடைந்தேன். நான் உன்னால் பெரும் பாபத்தினின்றும் விடுதலை யடைந்தேன். புத்துயிர் பெற்றேன். இனிமேல் நான் புதிய மனிதன். அதை மட்டும் சத்தியமாக நம்பு." என்றான்.

பிறகு கேசவன், மூத்த குமாரன் முதலியோரைப் பற்றித் தெரிந்து கொண்டு விசனித்தான். பிரிந்த கால வர்த்தமானங்களைக் குறித்து பேசிக் கொண்டே இருக்கையில் இவர்களிருக்கும் அறைக் கதவு இடிக்கப்பட்டது. யாரென்று பாலா கேட்டாள். உடனே, வெகு அட்டகாசமாயும் அதிகார தொனியுடனும் ஒரு குரல் "போலீஸ்! கதவைத் திறவுங்கள்!....என்றதைக் கேட்ட உடனே அந் நால்வரும் இன்னதென்று விவரிக்க வியலாத நடுக்கலும் அபார மான குழப்பமும் அடைந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த படியே தம்பித்துவிட்டார்கள்.

தேகபாதைகளையும் மனோபாதைகளையும் நிவர்த்திக்க மருந்துண்டு. ஆனால் எப்பொழுதும் சோம்பேறித்தனத்திற்கு அடிமையாயுள்ளவர்களைத் திருத்த மருந்து எது? அவர்கள் முடிவில் அடையும் அதோகதிதான்.

சுகம் துக்கம் இரண்டையும் ஆராய்ந்து பார்த்தால் அதிக சுகம் வேண்டு மென்று ஆசைப்படுவோருக்கே அதிக தூக்கம் கப்பிக் கொள்கின்றது. ஆகை யால் எதிலும் மிதமான ஆசைவைத்து விரலுக்குத் தக்க வீக்கம் என்கிற படி தன் சக்திக்குட்பட்ட சுகத்தையே விரும்பின் கடவுள் அதிக துக்கத்தைக் கொடுக்கமாட்டார்.