Chapter 18

அத்தனை பேரும் மாமூல் நிலைக்கு திரும்பி விட்டார்கள். செல்வாவை சித்திக்காரி அதிகமாக திட்டுவதில்லை. அவனும், அவள் மௌனத்தைத்தான் தவறாக எடுத்துக் கொண்டான். சித்தப்பாவுக்கும், சித்திக்கும் ஏற்படும் 'சில்லறை தகராறுகள்' வரும்போது, எந்த பயமும் இன்றி, சித்திக்கே வக்காலத்து வாங்கினான். இதில் சித்தப்பாவுக்கு உள்ளூர பெருமைதான். குழந்தைகள் மீண்டும் செல்வாவுடன் ஒட்டிக் கொண்டன. வேன், ஸ்கூட்டர் ஆனது. கவிதா - செல்வா காதல், அந்த தெருவாசிகளுக்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த தெருக்களுக்கும் தெரிந்துவிட்டது. கவிதா, செல்வா வீட்டிற்கு போவதும், செல்வா, கவிதா வீட்டிற்கும் போவதும் வழக்கமாகி விட்டது. ஏற்கெனவே தனது தவறால் தான் மகன் மோகனன் கெட்டழிந்தான் என்ற குற்ற உணர்விலும், கூடவே தன்னோடு சேர்ந்தவளை கவிதா, அம்மா மயமாக்கியதாலும், மூத்த அதிகாரியான, கவிதாவின் தந்தை, லஞ்சம் வாங்குவதை நிறுத்த வில்லையானாலும், அதை குறைத்துக் கொண்டார். அவருள்ளும் ஒரு மாறுதல். கவிதா, மோகனைப்போல் லெஸ்பியன் ஆகாமல், இருப்பதற்கு நல்ல பையனான செல்வாவின் காதலை ஒரு மருந்தாக எடுத்துக் கொண்டார். ஆனாலும், ஒருநாள் –

செல்வா, முகத்தில் ஈயாடவில்லை. மோகனன், அவனுக்கு தனது பம்பாய் ஹோமோ வாழ்க்கை பற்றி விலாவாரியாய் குறிப்பிட்டுவிட்டு, தங்கை எப்படி இருக்கிறாள் என்பதை அறிய துடிப்பதாக அவனது கல்லூரி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினான். இதனால் பழைய நினைவுகள் , விசுவரூபம் எடுத்தன. இந்த கடிதத்தை கவிதாவிடம் காட்டியபோது, அண்ணன் முகவரி கிடைத்ததும், மகிழ்ந்து போனாள். ஆனாலும், செல்வா சோர்ந்து போனான். அந்த சோர்வை மறைக்கக்கூடிய அளவிற்கு அவனுக்கு திட சித்தமும் இருந்தது. ஆனாலும், அந்தக் கடிதம் ஒரு கலக்கு கலக்கிவிட்டது. கவிதாவோடு பேசும் போது, அவள் காதலனாகவே இருக்கிறவன், இரவு நேரத்தில் மட்டும், மோகனனுக்கு காதலனாகவும், காதலியாகவும் ஆகிப்போனான். மீண்டும் குடும்பத்திலும், கவிதாவுக்கும் குழப்பம் வருமோ என்று பயந்தான். வெளிப்படையான பயம் அல்ல. உள்ளூரத் தோன்றிய பயம். மறைக்கக்கூடிய பயம்.

ஆனாலும், அந்தப் பயத்தை அடியோடு ஒழிப்பதற்காக, மீண்டும், டாக்டர் சத்தியாவிடம் முன்னதாக தகவல் சொல்லிவிட்டு சென்றான். அவன் வரவை எதிர்பார்த்தது போல், அந்தம்மா, "வா தம்பி.. வா." என்றாள் உடனே, செல்வா, மோகனன் எழுதிய கடிதத்தையும், அதில் தனது நடவடிக்கைகள் குறித்து, எழுதியதையும், குறிப்பிட்டான். இப்போது அவன், "ஹோமோ பத்திரிகை ஆசிரியனாம் அவன் கடிதம் வந்ததிலிருந்து, எனக்கு என்னவோ போலிருக்கிறது. எல்லாம் தீர்ந்துவிட்டதாக நினைத்த போது, இப்படி சின்ன அளவில் வருகிற தடுமாற்றம், பெரிய அளவில் வந்துவிடக்கூடாதே என்று பயமாக இருக்குது பரீட்சை வேற நெருங்கிடுது” என்றான்.

"உங்களுக்கும் ஹோமோ மூடு இருந்திருக்கு செல்வா. பறவை பறந்து போனாலும், அது இருந்த மரத்தின் கொப்பு ஆடுவது மாதிரி உங்கள் மனம் ஆடுகிறது."

"நோ... நோ... மேடம்"

"அதை நான் சொல்லணும். ஆனாலும், உங்கள் ஆண்பால் சேர்க்கை சிறிது வித்தியாசமானது. ஒரு ஆணைப் பெண்ணாகப் பாவித்து பாலியலில் ஈடுபடும் போக்கு.”

"அப்படில்லாம்..."

"இருக்குது. இனிமேல் இருக்காமல் செய்து விடுகிறேன். நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி படித்திருப்பீங்க. இது ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டாவது வயதில், ஆண் தன்மை, பெண் தன்மைக்குரிய ஹார்மோன்களை சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது. அப்போதுதான் அந்தரங்க உறுப்புகளில் முடி முளைக்கிறது. மகரக்கட்டு எனப்படும் குரல் மாற்றம் ஏற்படுகிறது. பதினோரு சிறுவனோட அல்லது சிறுமியோட முதுகெலும்பைத் தடவினால், அவன் அல்லது அவள் மரக்கட்டை மாதிரி இருப்பார்கள். ஆனால், பன்னிரண்டு வயதில், அதே முதுகெலும்பைத் தொட்டால், அவர்கள் சிலிர்த்துப் போவார்கள்."

"இந்தப் பருவம்தான் ஆணையும் பெண்ணையும் தனித்தனியாய் பிரிக்கும் பருவம். ஆண்களுக்குக்கூட இந்த வயதில் மார்பகம் நெல்லிக்காய் அளவுக்கு பெருக்கும். காரணம், முழுமையான ஆண், முழுமையான பெண் என்று யாரும் கிடையாது. இரண்டு தன்மைகளில் எது மேலோர் குகிறதோ அது, பாலியலையும் அதன் உறுப்பையும் தீர்மா -து. உங்களுக்கு சிறுமிக்குரிய ஹார்மோன் சிறிது கூடுதல் இருக் ம் நமது உடம்பில், கோடிக்கணக்கான செல்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜீன் உள்ளது... உங்களுடைய ஜீனை வைத்து, உங்கள் முப்பட்டானின் ஜீனின் எண்ணிக்கையையும், இயல்பையும் கண்டு பிடித்து விடலாம். இப்போது, இந்த சுரபிகளை கட்டுப்படுத்துவது இந்த ஜீன்கள் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகையால், ஓரினச் சேர்க்கையும் ஒரு வகையில் மரபு வழிப் பிரச்சினை."

"அப்படின்னா... இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாதோ?"

"முடியும். ஜீன் மட்டுமே ஒருவரது கேரக்டரை தீர்மானிப் பதில்லை . சுற்றுப்புறச் சூழல், சமூக அமைப்பு, இளமைக்கால அனுபவங்கள், சேரிடம், சேராயிடம் என்று பல காரணிகள் உள்ளன. ஒரே குடும்பத்தில் படிக்காதவர் நடைமுறை வேறு. படித்தவர் நடைமுறை வேறு. இல்லையா? ஆகையால், உடல் ஜீன்களோடு, நம் உடம்பிலுள்ள கோடிக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றிலும் உள்ள ஜீன்கள், சமூகச் சூழலையும், புதிய அனுபவங்களையும், பதிவு செய்கின்றன. இது உங்களுக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. மனம் அந்த பிரச்சினையை கிளப்பும் போது, நீ பாட்டுக்கு, எதை வேணுமென்றாலும் நினை. எனக்கு அதற்கும் சம்பந்தமில்லை' என்ற அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்."

"என்னை மாதிரி நிறைய பேர் இப்படி இருக்காங்களே மேடம்."

"அப்படி இருப்பதா பேர் பண்ணிக்கிறாங்க. இந்த "பயர்" படம் வந்ததும் வந்தது, சமூகத்துல லெஸ்பியன் பெண்கள் அதிகமாக இருக்கிறது போலவும், மாமூல் பெண்கள் குறைவாய் இருப்பது போலவும் ஒரு மாயை ஏற்படுத்திவிட்டது. இயற்கை ஒரு பிரபஞ்ச இன்டர்நெட் மாதிரி. அதில் எல்லா நிகழ்வுகளும் உள்ளடங்கி உள்ளன. ஒரு ஆல விதை, எப்போது செடியாகி, மரமாகி, விழுதாகி. பல்கிப் பரவவேண்டும் என்பது, அந்த விதையிலேயே கணிப்பொறி திட்டங்களாய் உள்ளன இந்த திட்ட நிகழ்வுகள் நிறைவு பெறுவதற்கு அந்த விதையை விதைப்பதும், விதைத்ததை சுற்றி முள்வேலியைப் போடுவதும், உரமிடுவதும், காடுகளில் தானாகவும், நாடுகளில் நம்மாலும் நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு தவறும்போது, இந்த நிகழ்வுகளுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதேபோல், ஒரு குழந்தைக்குள் இருக்கும், மனிதனை அல்லது மனுஷியை - முழுமையாக வெளிக்கொணர, குடும்பத்தளமும், சமூகத்தளமும் ஒத்து வராதபோது, அந்தக் குழந்தை, பாலியல் திரிபு போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் மனிதனாகிறது. இவனுக்கு அல்லது இவளுக்கு பாலியல் மீறல், பழக்கமாகிறது.

"மனிதனும் சமூகமும் இயற்கையின் விதிகளை மீறும்போது, இயற்கை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் போல் பிரம்படி கொடுக்கிறது. அடிக்கிற கைதான் அணைக்கும்' என்பதுபோல், அதே இயற்கை மருந்துகளையும், வழிமுறைகளையும் காட்டுகிறது. காடுகளில் சாதுவான மிருகங்கள் அதிகமாகவும், கொடிய மிருகங்கள் குறைவாகவும் இருப்பது. இயற்கையின் சமச்சீர் நிலையை பிரதிபலிப்பது. பொதுவாக, அயல் மகரந்த சேர்க்கைதான் தாவரங்களில் ஏற்படுகிறது. ஆனால், வேர்க்கடலையில் அயல் சேர்க்கை ஏற்படாதபடி, அது மொட்டாக கிடக்கிறது சில ஓரினக் சேர்க்கைக்காரர்கள் பெண்களோடும், பாலியல் உறவை வைத்துக் கொள்வதைப் போல், பூவரசு மரத்தில், அயல் மகரந்தச் சேர்க்கையும், சுய மகரந்தச் சேர்க்கையும் நடைபெறுகிறது. இது இயற்கை தனது சமச்சீர் நிலையை பாதிக்காமல் இருப்பதற்கு, ஏற்படுத்திய விதிவிலக்குகளாக இருக்கலாம்."

"நான் எப்படி முழுமையான ஆணாக மாறுவது மேடம்?"

"நீங்கள் மாறி விட்டீர்கள். எஞ்சி இருக்கிற பத்து சதவீதம், எல்லோரிடமும் உண்டு. இது இருப்பதால் ஆபத்தில்லை. ஆனால், அது உங்களுடைய பழைய அனுபவங்களை கிளறுவதால் தடுத்தாக வேண்டும். இதற்காக நான் உங்களுக்கு 'ஸாக்தெராபி' கொடுக்கப்போறேன்."

"அப்படின்னா மேடம்."

"முதலில் கட்டிலில் போய்ப்படுங்கள்"

கட்டிலில் செல்வா, மல்லாக்க கிடந்தான். டாக்டர் அல்லது முனைவர் சாத்தியா, ஸ்டெதாஸ்கோப் மாதிரி ஒரு கருவியை கையில் எடுத்தாள். அதன் முனையிலிருந்த கறுப்புப் பட்டையை செல்வாவின் கையில் சுற்றிக் கட்டினாள். பட்டைக்குள் இருந்து வெளிப்பட்ட இரண்டு ஒயர்களில் ஒன்றை பிளக்கில் செருகினாள். இன்னொன்று இவள் கைக்குள் வட்ட உருளைக்குள் ஊடுருவி இருந்தது.

செல்வாவை முன்பு போல், அரை மயக்க நிலைக்கு செலுத்தியதும், சத்தியா , கேள்வி மேல் கேள்வியாக கேட்டாள். ஒவ்வொரு கேள்விக்கும், அவன் பதிலளிக்கும் போது, அந்த உருளையை இயக்கி சூடு போடுவார்களே, அதுபோல, அவன் உடம்பில் பட்டை வழியாக மின் அதிர்ச்சியை கொடுத்தாள். எந்த நினைவும் இப்படிப்பட்ட அதிர்ச்சியோடு இணைக்கப்படும் போது, அந்த நினைவு வேரறற்றுப் போகிறது.

"செல்வா! இப்போ மோகனன் உன் முன் தோன்றுகிறான். அவன் எதனால் உனக்கு பிடித்தவனாகிறான்"

"அவனின் கிறக்கமாக பார்வை. ஒற்றைக் கண்ணை மேலேற்றி, இன்னொரு கண்ணை தாழ்த்தி பார்க்கும் மோகனப் பார்வை... எம்மா ... எப்படி வலிக்குது...”

"லேசான வலிதான். அப்புறம் செல்வா! அவனிடம் உங்களுக்கு பிடித்தமானது என்னது?"

"அவனது நடனம் ஊழிக்கூத்து மாதிரியான வேக வேகமான இயக்கம். அத்தனை கர்ணங்களையும் அடித்துக் காட்டுவானாம் எப்பாடி தோளுல வலிக்குதே."

"வலி போயிடும் அவனைப் பார்த்தால் நீ எப்படி ஆகிறாய்?"

"அர்த்த நாரீஸ்வரனாய். அவன் எந்த முறைக்கும் சம்மதிப்பான்."

இன்னொரு மின் குத்து. இன்னொரு 'எம்மா '

"செல்வா, வாய்விட்டுச் சொல்லு! மோகனனே! உன்னை மறக்க முடியலியே. மறக்க முடியலியே... இப்படி பல தடவை சொல்லுப் பார்க்கலாம்."

செல்வா, பல தடவை சொன்னான். ஒவ்வொரு தடவையும், மென்மைக்கும் வன்மைக்கும் இடையேயான மின் அதிர்ச்சியில், அவன் கரங்கள், காலோடு சேர்த்து குலுங்கின.

"இன்னொரு தடவைச் சொல்லு..... மோகனனை மறக்க முடியலியே... மனசுக்குள்ளே சொல்லு.."

"சொல்லமாட்டேன் வலிக்குது.. வலிக்குது."

டாக்டர் சத்தியா, செல்வாவை வழக்கப்படி எழுப்பிவிட்டாள் அவன் தூக்கத்தையும் துக்கத்தையும் கலைத்தவன் போல் எழுந்து, அவளை புன்முறுவலாய் பார்த்தான். சத்தியா, இறுதியாகச் சொல்வதுபோல் சொன்னாள்.

“இனிமேல் உனக்கு பிரச்சினை வராது. கவிதாவை, அவள் அண்ணனுக்கு கடிதம் எழுதச் சொல். ஓரினச் சேர்க்கைப் பற்றி ஒரு வரிகூட வரக்கூடாது என்று கண்டிப்புடன் எழுதச் சொல். இனிமேல் எந்தக் கடிதம் வந்தாலும், அவள் மூலம்தான் உனக்கு வரவேண்டும் என்றும் அவளை எழுதச் சொல். அந்தக் கண்டிப்பில் அன்பு கனியவேண்டும். பாசம் பொங்க வேண்டும். காரணம், அவனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி ஆனவன்தான்."

அவனுக்கும் நீங்க சிகிச்சை."

"அது முற்றின கேஸ் என்னால் மட்டுமில்லாமல், யாராலும் முடியாது. அவனாய் நினைத்தால் தான் உண்டு."

"ஒரே ஒரு கேள்வி டாக்டர்! அய்யப்பன் அப்படி பிறக்கலியா? ஆறுமுகம் இப்படி பிறக்கலியா? பிரம்மா என்கிற ஆண், பிள்ளைகளை பெறலியா? விஷ்ணு என்கிற ஆண் வடிவம் பிரம்மாவை பெற்றெடுக்கவில்லையா? இப்படில்லாம் அந்த பசங்க கேட்கிறாங்க. அதுக்கு நாம் என்ன பதில் சொல்றது?"

"சாமர்த்தியசாலி நீ. அவங்க கேட்கிறாங்களோ இல்லையோ, நீ கேட்கிறே. மதங்கள் கடவுளுக்கு எதிரி புராணங்கள் மதங்களுக்கு வைரி. அர்ச்சகர்கள் இந்த மூன்றுக்கும் எதிரி. ஆனாலும், இந்த அய்யப்பன் விவகாரத்தில் ஒரு உள் அர்த்தமும் இருக்கிறது. பரந்தும் விரிந்தும் அண்டங்கோடிகளான நட்சத்திரங்களாய் ஆகி, அவையே ஒரு அணுவாக மாறி, நாடகம் நடத்தும் பிரும்மம் என்பது ஒன்றுதான். அது, ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை; அலியும் இல்லை. அந்த பெரிய ஒன்று, தன்னையே சின்னச் சின்ன ஒன்றுகளாக பெற்றெடுக்கிறது. பிறகு, இந்த சின்ன ஒன்றுகளை ஆண், பெண்ணாக பிரித்து இறப்பாலும் பிறப்பாலும் ஒழுங்குபடுத்துகிறது. பிரும்மத்தின் சிருஷ்டி வினோதம்தான் அய்யப்பன் என்று எடுத்துக்கொள்ளலாம். கொச்சைப்-பட்டவர்கள் தான், அதைக் கொச்சைப்படுத்துவார்கள். எப்படியானாலும் அது புராணம். பொய்களிலே பெரிய பொய் புராணப் பொய்."

செல்வா, அவளை மலைப்போடு பார்த்துவிட்டு, ஒரு கேள்வி கேட்டான்.

"பொதுவாய் சைக்காட்ரிஸ்ட், சைக்காலஸிஸ்ட் என்கிறவங்க பாதிக் கிராக்காத்தான் இருக்கிறாங்க. நீங்க.... விதிவிலக்காய் இருக்கீங்களே."

"நீங்க சொல்கிறவர்கள், தங்கள் உணர்வுகளை தாங்களே பரீட்சித்து பார்ப்பதால், ஏற்படுகிற கோளாறு அது. அதோட மனநோய் என்பது, யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம். என்னைப் பொறுத்த அளவில், நான் அரவிந்தர் ஆசிரமத்தில் தியானப் பயிற்சி பெற்றவள். பிரபஞ்சத்தை ஆராதிக்கும் வள்ளலாரின் அகவலை தினமும் படிப்பவள்."

டாக்டர். சத்தியா, அவனது கேள்வி ஞானத் துடிப்பால் தொடர்ந்தாள்.

"உறுதியான உடம்பில் உறுதியான மனம் இருக்க முடியும். உறுதியான உடலுக்கு யோகாசனம், உடற்பயிற்சி போன்றவைகளை செய்ய வேண்டும். மயிலாப்பூரில், தேசிகாச்சாரியார் என்ற ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் கைநாடி பார்த்தே, ஒவ்வொருவர் உடல் வாகுக்கு ஏற்றபடி, சில யோகாசனப் பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பார். அங்கேயும் நான் பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். உடலை கழுவுவது போல் மனதையும் கழுவ வேண்டும். ஒரு விளக்கின் தீபத்தை பார்த்தல், அது நம் உறுப்புக்கள் ஒவ்வொன்றிலும் பொங்கி ஒளியிடுவதாய் கற்பித்தல் போன்ற பயிற்சிகளை செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் வாக்கிங்காவது போக வேண்டும். முக்கால் மணி நேரம் வேர்வையே குளியலாகும் வகையில் நடக்க வேண்டும். இனிமேல் எந்த பிரச்சினையும் வராது. அப்படி வந்தால், நீங்களும் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வரலாம். ஓகே..."

டாக்டர். சத்தியா, இருக்கையை விட்டு எழுந்ததால், அட்டை மாதிரி ஒட்டிக் கிடந்த செல்வா எழுந்தான். எழுந்தபடியே நடந்தான்.