அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்

தோற்றம் :

15 - 9 - 1909

தந்தை:

நடராசன்

தாய் :

பங்காரு அம்மாள்

பிறந்த ஊர்

சின்ன காஞ்சிபுரம்

வாழ்க்கைத்துணை

இராணி அம்மையார்

புனை பெயர்

செளமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன்

1929 - 34

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு

11 - 2 - 34

முதல் சிறுகதை 'கொக்கரகோ' ஆனந்த விகடனில் வெளிவந்தது.

1-2-36

சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு.

1936

சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல்.

11 - 4 - 37

நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல்

1937 -

விடுதலை, குடி அரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி

9 - 12 - 37

முதற் கவிதை, காங்கிரஸ் ஊழல் விடுதலையில்

26 - 9 - 38

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம் சாட்டி நான்கு மாத வெறுங்காவல்

13-1-39

தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை

18-1 - 39

தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல்.

10 - 2 - 39

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்

/td>

6- 1 - 40

பம்பாயில் பெரியார் – அம்பேத்கார் உரையாடல் : மொழிபெயர்ப்பு

2 - 6 - 40

காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு

7- 3 - 42

திராவிடநாடு கிழமை இதழ் தொடக்கம்.

14 - 3 - 43

சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்.

5 - 6 - 43

'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல்.

19 - 8 - 44

சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு - அண்ணாதுரை தீர்மானம் - நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல்.

15-12- 45

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் - அண்ணா நடித்தல்

மே 1946

கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு

29 - 7 - 46

நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல்

25-4-47

'வேலைக்காரி' நாடகம்.

1- 6 - 47

நீதிதேவன் மயக்கம்' நாடகம்.

15 - 8 - 47

ஆகஸ்டு பதினைந்து விழா நாளே' என விளக்கம் தருதல்

28-9-47

தந்தை பெரியார் 69வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை - இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்'.

14 -1 - 48

நல்ல தம்பி' திரையிடல்.

18 - 6 - 49

தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல்.

10 - 8-49

மாலைமணி' - நாளிதழ் ஆசிரியர்.

17 - 9 - 49

தி.மு.க. தோற்றம்

18 - 9 - 49

திராவிட நாடு' இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல். எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதலை.

12 - 1 - 50

நாடெங்கும் பொங்கல் விழா - உழவர் விழா எடுக்க அறிக்கை விடல்.

1950

திருச்சிச் சிறையில் இலட்சிய வரலாறு' எழுதுதல்.

1951

'ஆரியமாயை' நூலுக்குத் தடை

17-9-51

திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல்.

16-12-1951

தி.மு.க. முதல் மாநில மாநாடு.

1-8-52

சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர்

15 - 6 - 53

நம்நாடு' நாளிதழ் தொடக்கம்

13- 7 - 53

மும்முனைப் போராட்டம் - மூன்று

2- 2 - 56

இணைப்புக்காகப் பொது வேலை நிறுத்தம்

29 - 4 - 57

தமிழ்நாடு சட்டமன்றத் தி. மு. கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.

9 - 6 – 57

ஓம் லேண்டு ' (Homeland) ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல்

2 - 3 - 58

தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.

24 - 4 – 59

அண்ணாவின் தம்பியர் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல்.

1-8-60

இந்தி எதிர்ப்பு மாநாடு - செங்கையில் அண்ணா தலைமை உரை

1962

சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை

26 - 2 - 62

சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா , நாடாளுமன்ற மேலவை உறுப்பினராதல்

2 - 8 – 62

விலைவாசி உயர்வுக் போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.

17 - 11 - 63

கட்டாய இந்தி - 17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல், 16 -11 - 63 அன்றே கைதாகி, ஆறுமாதம் - சிறைத்தண்டனை ஏற்றல்.

1 - 3 - 67

தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல்.

14 - 4 - 67

தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல்

10-1 – 68

இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல்

8 - 9 - 68

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல்

4-1-69

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு.

2- 2 - 69

புகழ் உடம்பெய்தல்