காணிக்கை

பேராசிரியர் நா. வானமாமலை அவர்களுக்கு

இலக்கியம் என்றால்

என்னதென்ற கேள்விக்கு

பாட்டாளி இலக்கியமே

படைப்பிலக்கியம் என்று

விடையாக நின்றமேதை

விடைபெறாமல் போய்விட்டார்

இந்த நாவலின் முடிவு

இந்திய முடிவாகும் போது

இவரின் இறப்பே

ஒரு பிறப்பாக மலரும்.

- சு. சமுத்திரம்