Chapter 11
இந்த வெற்றி ஸ்ரீமான் வி.பி. அவர்களை 1/27 கண்ணாயிரம் பிள்ளை தெரு மாடியாகிய கல்கத்தா இருட்டறையின் வாசலுக்கே கொண்டுவந்துவிட்டது.
பூட்டில் கையை வைத்தார். இரண்டு பூட்டு!
உடம்பு ஜில்லிட்டது. வீட்டுக்காரப் பயல் எதிர்ப் பூட்டுப் போட்டுவிட்டானா?
'சட்! என்ன அசட்டுத்தனம். நேற்றுச் சாவியைத் தொலைத்த விபரீதத்தினால்தானே இந்த இரட்டைப் பூட்டு?'
"வெறும் கயிற்றரவு!" என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று படுத்தார்.
வெற்றி நிம்மதியிலே அசதி தாலாட்ட, தம்மை மறந்தார்.

