Chapter 30
பதினாறு முடிந்த ஐந்தாவது நாள் விடியற்காலம் மூன்றரை மணி. முண்டிதமான தலையுடன் பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கிறான் மகராஜன். கூடவே தகப்பனாரும், பண்ணைப் பிள்ளையும், சுப்புப்பிள்ளையும் நிற்கின்றனர்.
பஸ் வந்து நின்றது. இருட்டில் ஒருவர் இறங்கினார்.
மகராஜன் ஏறினான்; சாமான்களும் ஏற்றப்பட்டன. வண்டி புறப்பட்டது.
"போனதும் லெட்டர் போடு!" என்றார் விசுவநாத பிள்ளை.
"என்ன தெரஸர் பிள்ளையா? யாரு போராஹ?" என்றது அந்தப் புதிய குரல்.
"மரைக்காயர்வாள்! ஏது இப்படி!"
"பண்ணையார்வாளெப் பாக்க வந்தேன்; அன்னா, அவுஹளே நிக்காஹளே! நீங்க மூக்கன்கிட்ட வாங்கினிஹளாமில்லா, அந்த நெலத்தை எனக்கு முன்னாலேயே அடமானம் வச்சிருந்தான் - சமுசாரத்தைச் சொல்லிப்புட்டுப் போகலாமுண்ணு வந்தேன். நம்ம வைத்தியர்வாளும் அவுஹ பொஞ்சாதியும் நேத்துத்தான் இஸ்லாத்தைத் தளுவினாஹ! இந்த பஸ்லேதான் நம்ம கடெலே மானேசராயிருக்க கொளும்புக்குப் போராஹ!" என்றார் மரைக்காயர்.
"கோடு இருக்கே, நடத்திப் பார்ப்போமே!" என்றார் சிதம்பரம்பிள்ளை.
(முற்றும்)
'மணிக்கொடி, 01-11-1937

