Chapter 9
"இந்தாருங்கள் 20 ரூபாய் இருக்கிறது. கேட்ட விலையைக் கொடுத்து விடுங்கள்" என்று சிரித்துக் கொண்டே நீட்டினார்.
"புஸ்தகம் அதோ இருக்கிறதே?"
சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டார்.
பிறகு சமாளித்துக் கொண்டு, "என்ன மாப்பிள்ளை! அந்தப் புஸ்தகம் கிடைக்காதது. விலையைக் கொடுத்துவிடுங்கள். நான் எழுதும் புஸ்தகம் அவ்வளவு முக்கியம். அது இல்லாவிட்டால் நடக்காது உங்களுக்குத் தெரியாததா?"
"அது திருட்டுத்தனம். என்னால் முடியாது."
"நான் புஸ்தகத்தைக் கொடுக்க முடியாது. உம்மால் இயன்றதைப் பாரும்."
"என்ன இது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கிறது! புஸ்தகத்தைக் கொடுமென்றால்..."
"அதைக் கொடுக்க முடியாது... இதோ ரூபா இருக்கிறது. எடுத்துக்கொண்டு போம். நான் அண்ணாச்சியிடம் பேசிக்கொள்ளுகிறேன்."
"அண்ணாச்சியாவது, ஆட்டுக்குட்டியாவது? புஸ்தகத்தைக் கொடும் என்றால்..."

