Chapter 8
ஒரு வாரமாகிவிட்டது.
புஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
நடராஜன் சட்டைநாத பிள்ளையை நாடிச் சென்றான்.
"மாப்பிள்ளை வாருங்கோ." சட்டைநாத பிள்ளை நடராஜனை எப்பொழுதும் இப்படித்தான் கூப்பிடுவார்; அதுவும் தனியாக இருக்கும் பொழுது.
"அந்தப் புஸ்தகம் வேண்டுமே; நாளாகிவிட்டது."
"அதைத்தான் சொல்ல வந்தேன். புஸ்தகத்தை இங்குதான் வைத்திருந்தேன். காணவில்லை. பயப்படாதே; விலையைக் கொடுத்துவிடுவோம். சவுந்திரம் பயல் திருடி இருப்பானோ என்று சந்தேகம்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்.
நடராஜன் திடுக்கிட்டுவிட்டான். இப்படியும் அப்படியும் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அந்தப் புஸ்தகம் கண்ணில் பட்டது. ஆச்சரியம், திகில், கோபம்.

