Chapter 5

பூவையாப் பிள்ளை பணத்தை பெட்டியில் வைத்துப் பூட்டுமுன் எண்ணினார். அதிகமாக இருந்தது. கொண்டு போய் கொடுத்துவிடலாமே என்று நினைத்தார். 'அவராக வரட்டுமே; என்ன இவ்வளவு கவலை ஈனம்' என்று நினைத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.

அன்று முழுவதும் சட்டைநாத பிள்ளை வரவில்லை. இரண்டு நாள் பார்த்துக் கொண்டு பாங்கிக்கு அனுப்பலாம் என்று நினைத்துச் சும்மாயிருந்தார்.

சாயங்காலம் நடராஜன் புஸ்தகத்தைக் கொண்டுவந்தான். பிள்ளையவர்கள் அதைக் கொண்டு கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அதைப் பற்றிப் பேசவில்லை.