Chapter 8
எவ்வளவோ நேரம் சென்றது.
கண்களில் ஏன் இந்தச் சூரியன் இப்படித் தகிக்க வேண்டும்?... யாரோ அணைத்திருக்கிறது மாதிரி ஒரு தோற்றம்...
தாயின் கனிவுடன் சற்று மேலோங்கி வளர்ந்தும் வளராத கன்னங்கள். கன்னத்தோடு சாய்ந்து...
"அம்மா அ அ அ!"
என்ன ஹீனஸ்வரம்! என்ன பலவீனம்!
கவிஞனின் கனவு போன்ற கண்கள் அவனைக் கவனித்துச் சிரிக்கின்றன.
திரும்புகிறான் - மாந்தளிரின் நிறம்! மனத்தில் சாந்தியளிக்கக்கூடிய அழகு...
கூந்தல் கறுத்துச் சுருண்டு ஆடையாக முதுகுப்புறத்தை மறைக்கின்றது!
அதுதான் ஆடை!
திடுக்கிட்டு எழ முயற்சிக்கிறான்; முடியவில்லை.
அவள் கரங்கள் அவனை அணைத்துக்கொள்கின்றன.

