ஆசிரியர்களைப் பற்றி
1. என். பி. முஹம்மது
1928-ல் கோழிக்கோட்டினருகே பிறந்தார். ஹைஸ்கூல் படிப்பை முடித்தபின் தேசீய குடியாட்சி நிறுவனங்களில் பணிபுரிந்தார். சில காலத்திற்குப் பிறகு எல்லாப் பொது நிறுவனங்களிலிருந்தும் விலகி, தன்னந்தனியான படிப்பில் மூழ்கியிருந்தார். ஒரு நல்ல சிந்தனையாளரும் இலக்கியவாதியும்கூட. இலக்கியத்தில் ஒரு எழுச்சியோடும் சம்பந்தப்பட்டவரில்லை. ஆன்ம பரிசுத்தத்திற்காகப் போராடுபவர்களே அவரது கதாபாத்திரங்கள். தான் பிறந்து வளர்ந்த முஸ்லீம் சமுதாயத்தின் யதார்த்தமான சித்திரங்களைக் கதைகளில் காணலாம்.
நூல்கள் - தொப்பியும் தட்டும், நல்லவர்களின் உலகம், மரணம் தாலாட்டுப் பாடிற்று, நாற்பத்தியிரண்டாம் வீட்டில் சாத்தான். கவிதைகள் - முதுகெலும்புகள், பிரஸிடெண்டின் முதல் மரணம். கதைத்தொகுதிகள் - மரம், அரேபியத் தங்கம் (எம்.டி. வாசுதேவன் நாயருடன் சேர்ந்து) நாவல்கள் - இரண்ய கசிபு.
முகவரி- c/o பவன நிர்மாண ஸஹகரண சங்கம், ஒய். எம். ஸி. ஏ., கிராஸ் ரோடு, கோழிக்கோடு - 1
2. பட்டத்து விள கருணாகரன்
1101-ல் கர்க்கடகத்தில் கொல்லம் நகரில் பிறந்தார். கல்லூரிப்படிப்பு சென்னையிலும் நியூயார்க்கிலும். இதற்கிடையில், திருவனந்தபுரத்தில் கேரள கௌமுதி தினசரியில் சிலகாலம் வேலை பார்த்திருந்தார். படிப்பு முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு ஒரு அயல்நாட்டுக் கம்பெனியான பியர்ஸ் லெஸ்லியில் சேர்ந்தார். இப்போது, இக்கம்பெனியின் கோழிக்கோடு கிளையின் அஸிஸ்டெண்ட் மானேஜர். சில கதைகளே எழுதியுள்ளார். மனத்தை அள்ளிப்பிடிப்பவை அவை. குடத்து விளக்கான அவர் எழுச்சிகளுடனோ, பொது சங்கங்களுடனோ எந்தவித உறவும் கொண்டாடாமல் விலகி வாழ்கிறார்.
நூல்கள் : கண்ணே திரும்பு, பூர்ஷ்வா நண்பன், முனி (கதைத் தொகுப்புகள்).
முகவரி: பட்டத்துவிள, 287-ஸி, கொட்டாரம் ரோடு, நடக்காவு,கோழிக்கோடு.
3. கோவிலன்
வட்டம் பரம்பில் வேலப்பன் அய்யப்பன் என்பது இயற்பெயர். கொல்லம் வருடம் 1098-ல் குருவாயூரருகே ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதக் கல்லூரியில் வித்வான் பட்டத்துக்குப் படிக்கையில் படிப்பை நிறுத்தவேண்டி வந்தது. 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு" இய்க்கத்தில் பங்கு கொண்டார். 1943-ல் 'நேவி'யில்
சேர்ந்தபோதிலும் ஒரு வருடத்திற்குப் பிறகு அதிலிருந்து விலக்கப் பட்டார் - நேவி ம்யூட்டினியைத் தொடர்ந்து. நான்கு வருடங்களுக்குப் பின் ஆர்மியில் ஸிக்னல் கோரில் சேர்ந்தார். 1968-ல் ஹவில்தார் மேஜரென்ற பட்டத்துடன் ராணுவத்திலிருந்து விலகினார். கஷ்டமும் கொடுமையும் நிறைந்த ஒரு வாழ்க்கையாகவிருந்தது அவருடையது. ஆரம்ப கால நூல்களில் அதைத் தெளிவாகக் காணலாம். ஒரு கவிஞராகத்தான் இலக்கிய மேடையில் பிரவேசித்தார் என்றாலும், எழுதிய
நாவல்களும் கதைகளுமே ஏராளம். மலையாளக் கதை இயக்கத்தில்
'பட்டாளக் கதை' என்ற ஒரு பகுதியை வளர்த்தவர்களில் ஒருவர்.
நூல்கள் : ஒரு காலத்தில் மனிதனாயிருந்தான், ஒரு துண்டு எலும்பு, ஒரு பலம் நஞ்சு, இவ்வாழ்க்கை நாதியற்றது (கதைத் தொகுப்புகள்); உடைந்த இதயங்கள், ஏ மைனஸ் பி,
தோற்றங்கள் (நாவல்கள்); உன் நம்பிக்கை உன்னைக் காக்கும் (நாடகம்).
முகவரி : கங்ஙாணசேரி, குருவாயூர், கேரளா.
4. என். மோஹனன்
1933-ல் ராமபுரத்தில் பிறந்தார். தாயார் பிரபலமான கவிஞரும், கதாசிரியையுமான லலிதாம்பிகா அந்தர்ஜனம். கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இரண்டு வருடம் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்தார். பிறகு கவர்மென்ட் சர்வீஸில் சேர்ந்தார். இப்போது திருவனந்தபுரத்தில் கேரள அரசாங்கதின் கல்ச்சுரல் டெவலப்டென்ட் ஆஃபீஸர். மலையாளக்கதை இயக்கத்தில் சக்தி மிக்க ரொமான்டிஸிட்.
நூல்கள்- எது கதை (உனதும்), துக்கத்தின் இரவுகள், பூஜைக்குத் தொடாத பூக்கள் (கதைத் தொகுப்புக்கள்)
முகவரி - கல்ச்சுரல் டெவல்மென்ட் ஆஃபீஸர், கவர்ன்மென்ட் ஆஃப் கேரளா, திருவனந்தபுரம்.
5. எம். கோவிந்தன்.
பிறப்பு 1919-ல். வாழ்க்கைக் கஷ்டத்தினால் மேற்படிப்பு படிக்க இயலாமற் போயிற்று. சென்னையில் சிறியதோர் வேலையிலிருந்து கொண்டு ஏராளமாக வாசித்தார். எம். என். ராயின் விசிறியும் ராடிக்கல் ஹ்யூமானிஸ்டுமாக மாறினார். ராயுடைய நெருக்கம் சிந்தனாபூர்வமான சாத்யதைகளை வளர்த்தியது. கேரளம் என்ற மாகாணம் உருவானதும் திருவனந்தபுரத்தில் அரசாங்க வேலையில் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் அரசாங்கத்துடன் உண்டான கருத்து வேற்றுமையால் வேலையை ராஜினாமா செய்தார். கேரளம் நெடுக மக்களாட்சிப் பற்றாளர்களைக் கூட்டியும், ’ஸமீக்ஷா’ என்ற மாதப் பத்திரிகைளை நடத்தியும் தனது சித்தாந்தத்தைப் பிரபலப்படுத்தினார்.இதற்குள் இந்தியாவின் அறிவு ஜீவிகளுக்கு நடுவே விரும்பத்தக்க ஓரிடம் கிடைத்துவிட்டிருந்தது. அடிப்படையான சிந்தனாசக்தி கொண்ட அவர் மலையாள மொழியில் வேதாந்தமும், படைப்பு பூர்வமான மட்டங்களில் கனத்த ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் கவிதைகள் எழுதுகிறார். ஒரு கதாசிரியன் என்பதைவிட ஒரு சிந்தனையாளரும் கவிஞருமாவார். ஒரு எழுத்தாளரும் டாக்டருமான பத்மாவதி இவரது மனைவி.
நூல்கள் - ஞானஸ்தானம், மேனகா (கவிதைத் தொகுப்புக்கள்), அரசியின் நாய் (கதைத் தொகுப்பு), நீ மனிதனைக் கொல்லாதே (நாடகம்), தொடக்கம், சற்றுச் சிந்தித்தாலென்ன? அறிவின் பலன்கள், மன்பதை மதிப்புக்கள், கம்யூனிஸத்திலிருந்து முன்னே, சைத்தானும் மனிதனும், உயில், பஷீரின் அருமை மூஷிகன், கவிதைகள் நெருக்கங்கள் (பிரபந்தங்கள்).
முகவரி - 77-பி ஹாரிஸ் ரோடு, மௌன்ட் ரோடு, சென்னை - 2
6. ஜயதேவன், பி
ஜனார்த்தன மேனனின் எழுது பெயர். எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியிலும், சட்டக் கல்லூரியிலும் படிப்பை முடித்தபின் சிலகாலம் கேரளா ஹைக்கோர்ட்டில் அட்வக்கேட்டாக ப்ராக்டீஸ் செய்தார். இப்போது டில்லியில் மத்ய அரசின் சட்ட இலாக்காவில் அலுவலக மொழி (சட்ட இலாகா) கமிஷனில் வேலை பார்க்கிறார். கடந்த இருபதாண்டுக் காலமாக வழக்கமாக எழுதிவருகிறார். ஆகாசவாணிக்காக நாடகங்களும் ஏராளம் கதைகளும் எழுதியிருக்கிறார். இதுவரை புத்தக உருவில் வந்த படைப்புக்கள் - கோபுர துவாரத்தில், அகம்பாவங்கள் (கதைத் தொகுப்புக்கள்), விருச்சிகக் காற்றில் (நாவல்).
முகவரி - 217, விட்டல்பாய் பட்டேல் ஹௌஸ், ரஃபி மார்க், நியூ டெல்ஹி-1
7. காக்க நாடன்
காக்க நாட்டு ஜார்ஜ் வர்க்கீஸின் புனைப்பெயர். 1935-ல் கொல்லத்தில் பிறந்தார். தந்தை ஜார்ஜ் காக்க நாடன் திருக்கோயில்களுக்கும் ஊழல்களுக்கும் எதிராகப் போராடிய ஒரு புரட்சிமனவாதி. அக் காரணத்தால் சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட அவருக்குப் பிறந்த ஊரிலிருந்து வெளியேறவேண்டிவந்தது. 1955-ல் பி.எஸ்ஸி. , பாஸான காக்கநாடன் சென்னையிலும் திருச்சிராப்பள்ளியிலும் வேலை பார்த்தார். பிறகு டில்லியில் இரயில்வே மினிஸ்ட்ரியில் இரண்டு வருடங்கள். கிழக்கு ஜெர்மனி அழைப்பின்பேரில் டைப்ஸிக் யூனிவர்ஸிட்டியில், ’இந்தியாவில் இன்றைய சமூக, பொருளாதாரச் சூழ்நிலையில் இலக்கியக் கர்த்தாவின் பங்கு’ என்ற விஷயம் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக ஜெர்மனிக்குப் போனார். ஒரு வருடத்திற்குப் பின்னர் ஆராய்ச்சியை முடிக்காமல் திரும்பி வந்தார். இப்போது முழுநேர எழுத்தாளராக இருக்காமல் திரும்பி வந்தார். இப்போது முழுநேர எழுத்தாளராக இருக்கிறார். நவீன கதா இலக்கியத்தின் முக்யஸ்தர்களில் ஒருவர்.
நூல்கள்: வியாபாரம், கண்ணாடி வீடு, பதினேழு, போர் முடிவு, வெளியே போகும் வழி (கதைத் தொகுப்புக்கள்; சாட்சி, வைசூரி, ஏழாம் முத்திரை, உஷ்ண மேகலை, அறியாமை யின் பள்ளத்தாக்கு, பறங்கிமலை (நாவல்கள்).
முகவரி: C/o மலையாள நாட்டு வாரிக, கொல்லம், கேரளா.
8. ஓ.வி. விஜயன்
பிறப்பு 1931-ல். கவிஞரும் நாவலிஸ்ட்டும் கதாசிரியருமான இவர், அகில இந்தியப் பிராபல்யம் அடைந்த கார்ட்டூனிஸ்டுமாவார். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றபின் மூன்று வருடங்கள் கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்தார், பிறகு டில்லியில் 'சங்கர்ஸ் வீக்லி'யில் கார்ட்டூனிஸ்டாகச் சேர்ந்தார். 'பேட்ரியாட் ' தினப் பத்
திரிகையிலும் கார்ட்டூனிஸ்டாக இருந்தார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்', 'லிங்க்' முதலான பத்திரிகைகளின் கலை விமரிசகர். இப்போது சென்னையில் ஹிந்து தினசரியிலும், ஹாங்காங்கின் 'ஃபார் ஈஸ்ட்டர்ன் எக்கனாமிக்ஸ் ரெவ்யூ'விலும் வழக்கமாக வரைகிறார். மலையாளக்கதை நாவல் மேடைக்கு நவீன படைப்புக்களை
கொண்டு வந்தவர்களில் ஒருவர்.
நூல்கள்: மூன்று போர்கள், உச்சகோடி (கதைத் தொகுப்புக்கள்): கஸாக்கின் இதிகாசம் (நாவல்).
முகவரி: C/o சங்கர்ஸ் வீக்லி, ஓடியன் பில்டிங், கனாட் ப்ளேஸ், நியூ டெல்லி.
9. எம்.முகுந்தன்
1942-ல் ஒரு முன்னாள் ஃப்ரெஞ்சு பிரதேசமான மாஹியில் பிறந்தார். ஃப்ரெஞ்சு முறையிலான படிப்பு. இளமைக்காலம் முழுவதும் வருத்திய நோய் படிப்பை முடிக்க அனுமதிக்கவில்லை. 1961-ல் டில்லியில் வேலை தேடி வந்தார். ஒரு ஃப்ரெஞ்ச் பள்ளியில் இரண்டு வருடம் வேலை பார்த்தார். இப்போது டில்லியில் ஃப்ரெஞ்ச் எம்பாஸியில், கல்ச்சுரல் டிபார்ட்மென்ட் பகுதியில் வேலை பார்க்கிறார். 1961முதல் தொடர்ந்து கதைகளும் நாவல்களும் எழுதி வருகிறார். நவீன மலையாள இலக்கி
யத்தை வளர்த்து வருபவர்களில் ஒருவர்.
நூல்கள்- வீடு, நதியும் தோணியும், வேசிகளே, உங்களுக்கொரு கோயில், ஐந்தரை வயதுக் குழந்தை (கதை தொகுப்புக்கள்), டில்லி, ஆகாயத்தினடியில். ஆல்வாயில் சூரியோதயம், ஹரித்வாரில் மணிகள் முழங்குகின்றன. இவ்வுலகம், இதிலொரு மனிதன். மய்யழி நதி தீரங்களில் (நாவல்கள்).
முகவரி -C/o ஃப்ரெஞ்ச் எம்பஸி, டி-25, ஸௌத் எக்ஸ்டென்சஷன் பார்ட்-2, நியூ டெல்லி-49
10. எம். பி. நாராயண பிள்ளை
பிறப்பு 1939-ல் பனாரஸ் யூனிவர்ஸிடியிலிருந்து பி.எஸ்ஸி., பட்டம் பெற்றார் 1960-ல். ஐந்து வருடம் டில்லியில் ப்ளானிங் கமிஷனில் உத்யோகஸ்தராயிருந்தார். 1966-ல் ஹாங்காங்கில் ’ஃபார் ஈஸ்ட்டர்ன் எக்னாமிக்ஸ் ரெவ்யூ’வில் அசிஸ்டென்ட் எடிட்டராகச் சேர்ந்தார். இப்போது பம்பாயில் ’காமர்ஸ்" என்ற பிரசுரத்தில் இருக்கிறார். 1963 முதல் பத்திரிகைப் பிரசுரங்களில் கதைகள் எழுதி வருகிறார்.
நூல் - முருகன் என்ற பாம்பாட்டி (கதைத் தொகுப்பு)
முகவரி - 17-ஏ, மலபார் அப்பார்மென்ட்ஸ், நாப்பியன் ஸீ ரோடு (Napean Sea Road), பம்பாய்.
11. துளசி
துளசிதாஸின் புனைப்பெயர். மலையாள வருடம் 1116-ல் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தை முக்கியப் பாடமாக எடுத்து பி.ஏ. பாஸானார். இலக்கியக் கர்த்தாக்களின் கூட்டுறவுப் பிரசுர அமைப்பான எஸ்.பி.ஸி.எஸ்-ஸில் (கோட்டயம்), பப்ளிகேஷன் அஸிஸ்டென்டாக வேலை பார்க்கிறார். கலையழகுமிக்க கதைகளை எழுதும் துளஸி புதிய எழுத்தாளர்களில் கவனத்துக்குரியவர்.
நூல்கள் - தீவு, யுவதி, ஆருத்ரா, ராகக் குருவிகள், உஷ்ணஸீம (நாவல்கள்), கய்ப்ப நீரே நித்யம், நீயும் உன் வழியும், சிவப்பு ஜ்வாலையான ஸ்திரீ, சாபம் கொண்ட இரவு (கதைத் தொகுப்புக்கள்).
முகவரி - C/o ஸாதித்ய ப்ரவர்த்தக ஸஹகரண சங்கம், கோட்டயம், கேரளா.
12. பூனத்தில் குஞ்ஞப்துல்லா
1942-ல் தென் மலபாரில் பிறந்தார். பி.எஸ்ஸி., பாஸான பிறகு அலிகார் முஸ்லீம் யூனிவர்ஸிடியில் மருத்துவதற்குச் சேர்ந்தார். இப்போது ஊரில் ஒரு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில் ஸர்ஜன், அலிகாரில் படித்துக்கொண்டிருக்கையிலேயே கிறிஸ்துவரான மரியம்மையை மணம் புரிந்தார். குடும்பத்தினுடையவும் சமுதாயத்தினுடையவும் எதிர்ப்புக்களைச் சட்டை செய்யாமல், 1971-ல் அலிகாரில் மனைவி இறந்தார். என்.பி. முகமதுவின் கதைகளைப்போல முஸ்லீம் சமுதாயத்தின் இருளடைந்த பக்கங்களை குஞ்ஞப்துல்லாவின் கதைகளிலும் காணலாம்.
நூல்கள் - தவறு, அலிகாரில், கைதி (நாவல்கள்), கத்தி, காலாட்படையின் வரவு (கதைத் தொகுப்புக்கள்)
முகவரி- டாக்டர் பூனத்தில் குஞ்ஞப்துல்லா, போஸ்ட் மடப்பள்ளி காலேஜ், வடகரை, கேரளா.
13 - சேது
எம். சேது மாதவன். பிறப்பு 1942-ல். பி.எஸ்ஸி., பாஸான பிறகு ஆறு வருடம் வட இந்தியாவில் பலவிடங்களிலும் வேலை பார்த்தார். இப்போது ஸ்டே்ட பாங்க் ஆஃப் ட்ராவன்கூர், பறவூர் கிளையின் மனேஜர். புதிய தலைமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க காதாசிரியர்.
நூல்கள் - ஒளியின் ஊற்று, பாம்பும் ஏணியும் (கதைத் தொகுப்புக்கள்), அஸ்தமனம் (நாடகம்), நாங்கள் அடிமைகள், நனைந்த மண், அறியாத வழிகள் (நாவல்கள்).
முகவரி - மானேஜர், ஸ்டே்ட் பாங்க் ஆஃப் ட்ராவன்கூர், நார்த்பறவூர், கேரளா.
14. ஸக்கரியா
பால் ஸக்கரியாவின் எழுதுபெயர். 1945-ல் மத்ய திருவிதாங்கூரில் பிறந்தார். எம்.ஏ. பாஸான பின் கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்தார். ஒரு வருடம் ரூபி டயர் வொர்க்ஸின் கோயம்பத்தூர் கிளை மானேஜராகவும் வேலை பார்த்தார். இப்போது டில்லியில் ஒரு அமெரிக்கன் புத்தகப் பிரசுரக் கம்பெனியில் வேலை பார்க்கிறார். வெகு இளம் வயதிலேயே இலக்கியப் படைப்பை ஆரம்பித்த ஸக்கரியா, இன்றைய பத்திரிக்கைகளில் நிறைய எழுதி வருகிறார். இரண்டு கதைத் தொகுப்புக்களைப் பிரசுரித்திருக்கிறார்.
முகவரி - ஸி - 31, ஸௌத் எக்ஸ்டென்ஷன், பார்ட்-ஒன், நியூ டெல்லி - 49
15. எம். சுகுமாரன்
பிறப்பு 1943-ல், பாலக்காடு ஜில்லாவில். ஹைஸ்கூல் படிப்பிற்குப் பின்னர் திருவனந்தபுரத்தில் அக்கௌன்ட்ஸ் ஜெனரல் ஆஃபீஸில் லோயர் டிவிஷன் கிளார்க்காக வேலை பார்க்கிறார். மலையாளமொழியில் நடக்கும் சலனங்களிலிருந்து விலகி நின்று, வாழ்க்கை மணமிக்க கதைகள் எழுதுகிறார். ஒரு சுறுசுறுப்பான ட்ரேட்யூனியன் தொண்டர். மறியல்களில் பங்கெடுத்தத்தைத் தொடர்ந்து இப்போது ஸஸ்பென்ஷனில் இருக்கிறார்.
நூல்கள் - பாறை, ஆழிமுகம் (நாவல்கள்).
முகவரி - டி.ஸி. நம்பர் 23/519? வஞ்சியூர், திருவனந்தபுரம் - 1, கேரளா.
16 - பி. பத்மராஜன்
1945-ல் ஆலப்புழையில் பிறந்தார். கெமிஸ்ட்ரி கிராஜிவேட். 1665 முதல் ஆகாசவாணி திருவனந்தபுரம் நிலையத்தில் அறிவிப்பாளராக வேலை பார்க்கிறார். கடந்த ஏழு வருடங்களாக வழக்கமாகக் கதைகள் எழுதி வருகிறார். இதயத்தைத் துளைத்து ஏறும் தன்மையது அவருடைய நடை.
நூல்கள் - புதிர், மற்றவர்களின் வேனல், இன்னொருவன், புகைக் கண்ணாடி, ஒன்று இரண்டு மூன்று (கதைத் தொகுப்புக்கள்); நட்சத்திரங்களே காவல், பருவ மாற்றங்களின் பரிசு, இதோ இங்கு வரை; வாடகைக்கு ஒரு இதயம் (நாவல்கள்.)
முகவரி: C/O ஆகாசவாணி, திருவனந்தபுரம், கேரளா.
17. இ. ஹரிகுமார்
1943-ல் பிறப்பு. தந்தை பிரபல மலையாளக் கவிஞரான இடச்சேரி கோவிந்தன் நாயர். மெட்ரிகுலேஷன் பாஸான பிறகு உத்யோக நிமித்தமாய் கல்கத்தாவுக்குப் போனார். அங்கே ஓர் கமெர்ஷியல் நிறுவனத்தில் வேலை பார்த்தவாறே மாலை வகுப்புகளில் சேர்ந்து பி.ஏ., பாஸானார். கல்கத்தா, டில்லி, பம்பாய் என்ற இம்மூன்று மாநகரங்களில் வேலை பார்த்தார். சில கதைகளே எழுதியுள்ள போதிலும், கையாளும் விஷயத்தின் ஆழமும், திட்டமான நடையும் அவற்றைக் குறிப்பிடத்தக்கவையாக ஆக்குகின்றன.
நூல்கள்: கரப்பான் பூச்சிகள் (கதைத் தொகுப்பு).
முகவரி: C/o இடச்சேரி கோவிந்தன் நாயர், போஸ்ட் பொன்னாணி, மலபார், கேரளா.
18. அசமன்னூர் ஹரிஹரன்.
முழுப்பெயர் டி.கெ.ஹரிஹரன் நாயர். பிறப்பு 1940-ல். மனத் தத்துவத்தில் எம்.ஏ., பாஸாயிருக்கும் அவர், மத்ய அரசாங்கத்தில், திருடர்கள் பள்ளியில் மனத்தத்துவ நிபுணர் என்ற பதவி வகிக்கிறார். கவிஞரும் நாவலிஸ்டும் கட்டுரையாளரும் கூட.
நூல்கள்: மன நோய்கள் (கட்டுரைகள்.); மஞ்சட்குருவிகள் (நாவல்); கள்ளி (துண்டுக் காவியம்).
முகவரி: ரிஸர்ச் ஆபீஸர். டைரக்டரேட் ஆஃப் சைக்காலஜிக்கல் ரிஸர்ச், 'எம்' பிளாக். ப்ரதிரோத மந்த்ராலயம். நியூ டில்லி-1.

