பகலவனைக் கண்ட பனி
வெகு காலங்களுக்கு முன்பு விட்டுப் பிரிந்த தன் மகனைக் கண்டதும்,
பெற்ற பாசம் மூடிக் கொண்ட கோமதி மருதப்பனை வாரியணைத்துக் கொண்டு நின்ற காட்சியைக் கண்டு வியந்த மற்றையோர் " ஆ! இவருடைய அன்னை நீங்களா! உங்கள் குமாரரா இவர்! என்ன ஆச்சரியம்! இவர் பெயர் சுப்பிரமணிய யென்றல்லவோ எங்களிடம் தெரிவித்தார்; மருதப்பனா இவர் பெயர். அம்மணி! அன்று உங்கள் வீட்டிற்கு இவரும் வந்து நடித்தனரே! அப்போது ஒருவருமே கவனிக்க வில்லையே! இவர் உங்களை விட்டு எப்படிப் பிரிந்திருந்தார்; விஷயம் விளங்கவில்லை! எனக்கு விளங்கக் கூறுங்கள்" என்று மானேஜர் கேட்டார்.
இது கேட்ட கோமதி "ஐயா! என் குழந்தையைத் தாங்கள் இது பரியந்தம் காப்பாற்றியதற்கும், எங்கள் வீட்டிலேயே வந்து நடித்து எங்களுக்கு நாங்கள் இழந்த புதையலை எங்களிடம் சேரும் படியாகச் செய்ததற்கும், நான் எவ்விதம் வந்தனம் செய்வதும் கைம்மாறு செய்வது மென்பதே தெரியாமல் தவிக்கின்றேன். தங்களிடம் எங்கள் வரலாற்றைக் கூறாது வேறு யாரிடம் கூறுவேன்!" என்று ஆதி முதல் அன்றைய வரையில் நடந்த சகலமான விஷயங்களை யும் கூறி
கெட்ட பழக்கங்களுடையவர்கள் அஃதில்லாதவர்களைத் தங்கள் நிலைமைக்குக் கொண்டு வந்து சமத்வம் பாராட்ட விரும்புவது போல, தாழ்ந்த ஸ்திதியிலுள்ளவர்கள் தங்களை விட மேலான நிலைமையிலுள்ளோரைத்
தங்களது நிலைமைக்குத் தாழ்த்திவிட வேண்டுமென்று விரும்புகின்றார்களேயன்றி, தாங்கள் தமது ஊழல்களைத் துறந்து விட்டு உன்னதப் பதவியை அடைவோமென்கிற எண்ணம் கொள்வதில்லை.
"ஐயா! இவன் கதை போல வரைந்து நடித்தது முற்றும் இவனுடைய சொந்த சரிதை யாகும். இவன் முதன் முதல் திருடி எங்களை விட்டுச் சென்ற பிறகு இது வரையில் நடந்த விஷயங்களையே இப்போது உங்களுக்கோர் கதையாக நடித்து விட்டான். என் வீட்டில் வந்த போது நாங்கள் கவனிக்கவில்லை எனினும், எனது சிறிய மகள் கவனித்துக் கூறியதன் பேரில்தான் நான் சினிமாப் படம் பிடிக்கையில் பார்க்க வேண்டு மென்று என் மூத்த குமாரத்தி பாலாவை கேட்கச் சொன்னேன். ஐயா! எங்கள் கதை இன்னும் எஞ்சியதையும் கூடச் சேர்த்துக் கொண்டு நடிக்கலாம். எப்படி பிறந்து, எப்படி வளர்ந்து, கடைசியில் எங்கு கூலி வேலைக்குத் திண்டாடி எங்கள் கற்பை காத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் எமனுடன் இருப்பது போலப் பழகுகின்றோம் தெரியுமா ?” என்று வருந்திக் கொண்டே கூறினாள்.
இது கேட்ட மானேஜர் மிக்க ஆச்சரியமும் விசனமும் அடைந்தார். உண்மையில் அந்த மானேஜர் மகா உத்தம குணம் பொருந்தியவர்: யாருக்கும் தீங்கு செய்ய மனத்தினாலும் கருதாதவர் ஆகையினால் இவர்களின் சரிதை, அவர் மனத்தை யுருக்கியது. மருதப்பா தன் தாபைக் கண்ட தக்ஷணமே ஆநந்தத்தினால் மூர்ச்சை யானான். மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடன், இன்னது பேசுவதென்பதையே அறியாது தாயையும் சகோதரிகளையும் மாறிமாறிக் கட்டியணைத்து, ஆநந்தக் கண்ணீர் பெருகவிட்ட வண்ணம் தாயார் சொல்லிய பரிதாபகரமான செய்தியைக் கேட்டுக் கலங்கிப்போய் "ஹா! அம்மா! கேசவன் காணப்படவில்லையா! ஐயோ! என்னைத் தான் பிரிந்துப் பரிதவித்தாய் என்றல்லவோ எண்ணினேன், உத்தமனாகிய கேசவனையுமா பிரிந்துவிட்டாய்! கேசவனின் தகவல்
சில வியாபாரிகள் ஒரு குறிப்பிட்ட விகிதப்படி விளம்பரம் செய்வதாக ஒத்துக் கொண்டு விளம்பரம் வெளியான பிறகு "அவ்வளவு கொடுக்க முடியாது; கொஞ்சம் குறைத்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிப் பணத்தைக் கொடுக்காமல் இழுக்கடிப்பது. சில பத்திராதிபர்கள் ஒரு குறைந்த விகிதப்படி விளம்பரம் வெளியிடுவதாக வாக்குக் கொடுப்பது; அப்புறம் அதை அதிகப்படுத்தித் தாங்கள் முன்னர் சொன்ன வார்த்தையை மழுப்பி விடுவது. இந்தக் காலத்தில் வார்த்தைக்கு மதிப்பே யில்லை போலும்.
இன்னுமா கிடைக்கவில்லை! என்னருமை கேசவா! உன்னைப் பார்க்கப் பேராவல் கொண்டிருந்தேனே! நீ எப்படி மாயமாய் மறைந்துவிட் டாய்!" என்று மருதப்பா புலம்பினான்.
இவைகளைக் கேட்ட மானேஜர் "அம்மணீ! நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால் கேசவன் என்றொரு சிறுவன் நாடகத்தில் நடித்துவருகிறானே, அவனாகவிருக்குமோ! இதோ ஒவ்வொரு வேஷத்திலும் எடுக்கப்பட்டுள்ள அவனுடைய புகைப்படங்கள் என்னிடமிருக்கின்றன. நான் அந்தப் பக்கத்திலிருக்கையில் தினம் நாடகத்திற்குச் சென்றதால் இந்த புகைப் படங்களை வாங்கினேன். பையன் வெகு நன்றாகப் பாடுகின்றான், நடிக்கின்றான். இவனா பாருங்கள்!" என்று புகைப் படங்களைக் காட்டினார்.
இதைப் பார்த்த கோமதி, மருதப்பா முதலிய எல்லோரும் "ஹா! இவன் தான்! எல்லா வேஷல்களையும்விட நந்தனார் வேஷத்திலும், பட்டினத்தடிகள் வேஷத்திலும் கொஞ்சங்கூட மாறுதலின்றி நன்றாகத் தெரிகின்றது. ஆ கேசவா! என்னருமை கேசவா! நான் என்ன புண்ணியம் செய்தேனோ ஒரே சமயத்தில் இரு குமாரர்களையும் காண நேர்ந்தது! ஐயா! இதற்குக் காரணம் தாங்கள் தான்! எங்களுக்கு உயிர் கொடுத்ததே தாங்கள் தான்" என்று தாராளமாய்க் கூறுவோம்" என்று பெரு மகிழ்ச்சியோடு, உடனே அங்கு செல்வதற்கு ஓர் மார்க்கம் தாங்கள் தான் தேடித்தரவேண்டும். எங்களுக்கு வேறு கதி இல்லை. இந்தத் தோட்ட வேலையிலிருந்து விடுதலை படைய ஓர் வழி செய்யவேண்டும்" என்று பரிதாபமாகக் கேட்டார்கள்.
இதுகேட்ட மானேஜர் "ஆகா! இந்த தோட்டத்தில் இத்தகைய அனியாயங்கள் நடக்கின் றனவா! இது பரியந்தம் இவ்விஷயங்கள் வெளியாகாமலன்றோ இருந்தன! அம்மா! நான் எப்போதும் பிறருக்கு உதவி செய்வதிலேயே நோக்கங் கொண்டவன். உங்களை எனக்கு இதுகாறும் தெரியாது. தெரிந்திருக்குமாயின்
சாகர அலைக்காவது ஓய்வு இருக்கலாம். சிலரது மனக் கவலைக்கு ஓய்வே கிடையாது. அவர்களது அக்ஞானம், அநுபவமின்மை, சந்தேகப் பிசாசு முதலியவைகளே அதற்கு முக்கிய காரணமாகும்.
இத்தகைய கஷ்டங்கள் நீங்கள் அடைந்திருக்கமாட்டீர்கள். கடவுள் எல்லாவற் றிற்கும் ஒரு கால தவணை குறிப்பிடவில்லையா! இப்போது தான்
அதற்குக் காலம் வந்தது. அம்மா! இந்த தோட்டத்தின் சொந்தக் காரரும் எனது சிற்றப்பன்தான். என்னை எடுத்து வளர்த்தவரும் அவர்தான். ஆகையினால் நான் அவரிடத்தில் நேரில் சென்று உங்கள் விஷயங்களைக் கூறி நீங்கள் உங்கள் ஜன்மபூமியை அடைவதற்கான உத்தாவை வாங்கிக்கொண்டு வருகிறேன். என்னாலான உதவியைச் செய்ய நான் மறுக்கவில்லை. எங்கள் கம்பெனியின் விஷயத்தில் மருதப்பா காட்டியுள்ள ப்ரேமைக்கு நான் என்றும் அவருக்கும் உங்களுக்கும் உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் கவலை கொள்ளவேண்டாம். உங்களுடைய ஜீவிய சரிதையைக் கேட்க என் மனம் பதறுகின்றது. என் வண்டி தயாராக இருக் கின்றது. அதிலேயே நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். நான் நாளை வந்து சந்திக்கின்றேன்" என்றான்.
அந்த மானேஜருடைய நற்குணத்திற்கும், பச்சாத்தாப சிந்தைக்கும் எல்லோரும் வியப்புற்று அவருக்குப் பிரதி வந்தனம் செய்துவிட்டு, உத்தாவு பெற்றுக்கொண்டார்கள். மானேஜரும் அவர்களுடன் வண்டியில் வீட்டு வரையில் வந்து அவர்களைக் கொண்டு விட்டார். அப்போது பத்திரிகை விற்றது. அதை மானேஜர் வாங்கிப் படித்தார். அதில் அதிசயமான விஷயம் வெளியாயிருந்தது. அதாவது,-பாலாவின் பிதாமீது கொலைக்குற்றம் சாட்டுவதாகப் பயமுறுத்திய மனிதனே கொலையானி என்பது விளங்கிவிட்டதாயும், அவனைத் தண்டித்துவிட்டதாயும் இருந்தது.
இந்த சந்தோஷச் செய்தியைக் கேட்ட எல்லோரும் பேரானந்த மடைந்தார்கள், கங்காதானுக்கு அப்போதுதான் சரியானபடி மூச்சு வந்ததென்று கூறலாம். அந்த சந்தோஷத்துடன் தனது மூத்த குமாரனைக் கண்டதும்,
பூஜா காலத்தில் யாதொரு தடங்கலுமில்லாதிருந்தால்தான் ஒரு வழியில் நிலை நிறுத்த முடியும். அதை உத்தேசித்துப் பூஜை செய்யும் இடத்தை வீட்டின் உட்புறம், எவரும் திடீரென்று பிரவேசித்துத் தொந்தரவு செய்யாமலிருக்கும்படியாக அமைத்தல் உசிதமானது.
கேசவன் விஷய மறிந்ததும் ஆக எல்லா ஆநந்தமும் ஒன்றுகூடி அவரைப் பரவசமுறச் செய்தது. மகனைத் தழுவிக் கொண்டார். மானேஜருக்கு மனப்பூர்வமான வந்தனத்தை யளித்தார்; நன்றி யறிதலைத் தெரிவித்தார். மானேஜரும் உத்தரவு பெற்றுக்கொண்டு போய்விட்டார்.
மறுதினம் மானேஜரின் வருகையை வெகு ஆவலோடு எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். அந்தப் புண்ணியவான் தமக்காக எடுத்துக் கொண்ட சிரமத்தைப் பற்றி எல்லோரும் பேசிச் கொண்டு ஆனந்த சாகரத்தில் அக மகிழ்ந்தவாறு அந்த இரவைக் கழித்தார்கள்.
மறுதினம் உதயமானதும் மானேஜரின் வருகையைக் கோரியே எதிர்பார்த்திருக்கையில் அவரும் வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட எல்லோரும் அபாரமான சந்தோஷத்தை யடைந்து வரவேற்றார்கள். பாலா அவரை நோக்கி, "ஐயா! காயா, பழமா!” என்று குயில் போலக் கேட்டாள். மானேஜர் "அம்மா! கடவுளின் கருணை பிறந்த பிறகு காயேது! எல்லாம் பழமே! எல்லாம் ஜெயமே! இதோ இந்த பாஸ் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிற்றப்பாவுக்கு விஷயங்களை விளங்கக் கூறி உங்களுக்கு உத்தரவை வாங்கிக் கொண்டு வந்தேன். இவ்வாரக் கப்பலிலேயே தாங்கள் பிரயாணமாகலாம். மருதப்பா! நீ எங்கள் கம்பெனியில் இதுகாறும் நடித்ததற்காகவும், உன்னுடைய ஜீவிய சரிதையையே வெகு அழகாக எழுதித் திறமையாக நடித்ததற்காகவும் நான் பெருந் தொகையை உனக்குக் கொடுக்க வேண்டியது என் கடமையாதலால் நான் கொடுக்கும் இத்தொகையைத் தட்டாது நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்" என்று வெகு வணக்கத்துடன் சொன்னார்.
சிலர் அதிகாலையில் ஸ்நானஞ் செய்து, வித விதமான புஷ்பங்களால் பகவானை அர்ச்சித்து, வருபவர்களைத் தடபுடலாக உபசரிக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு "எப்பொழுது, யாரை எப்படிக் கெடுக்கலாம்” என்கிற யோசனை தான். இப்படிப்பட்ட புண்ணியாத்மாக்களின் பூஜையை எப்படி பகவான் ஏற்றுக் கொள்வாரோ!
இதைக் கேட்ட மருதப்பா “எஜமானரே! தங்கள் பெருந் தன்மைக்கும், உதார குணத்திற்கும் நாங்கள் என்றும் 'நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். என்னைப்போன்ற பாப ஜென்மம் இனி யாரும் பூவுலகில் எடுக்க வேண்டாம்; அநியாயமாகக் குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் உரை கேளாது பெரும் சோதாக்களுடன் சேர்ந்து கோலியாடுவது, சிகரெட்டுகள் பிடிப்பது, சினிமா டிராமா முதலிய இடங்களுக்குச் செல்வது, குடிப்பது முதலியவைகளுக்குப் பணம் வேண்டுவதற்காகத் திருடுவதும்,இன்னும் குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு, பணங் கட்டிச் சூதாடுதல், சீட்டாடுதல் முதலிய எத்தனையோ துர்ப் பழக்கங்களை கைக்கொண்டு கெட்டுப் போன பிள்ளைகளைக் கண்ணால் பார்த்திருப்பதோடு அவர்களால் நானும் இன்னிலைமைக்கு வந்தேன். எனக்குக் கடவுள் புத்தி, வரும்படிச் செய்தார். என்னுடைய உண்மையான ஜீவிய சரிதையை நடித்துப் பார்த்த பிறகேனும் பிள்ளைகள் கெட்டு விடாமலும், பெற்றோர்கள் அவர்களைச் சரியான வழியில் திருத்தியும் நடப்பார்களல்லவா! அந்த எண்ணத்தைக் கொண்டுதான் நான் இக்கதையை வரைந்தேன்; நானே நடித்தேன். இதற்காக நான் பணம் பெறுவது சரி இல்லை. எனினும் எங்களுடைய ஏழ்மை நிலைமையை உத்தேசித்தும், உங்கள் அன்பை நோக்கியும் நாங்கள் எங்கள் ஊருக்குச் சென்றும் திண்டாடாமல் புசிப்பதற்காகவும் வேண்டிச் சிறு தொகையை வாங்கிக் கொள்கிறேன். நாங்கள் ஊருக்குச் சென்றதும் ஏதேனும் ஒரு தொழிலில் அமர்ந்து என் குடும்பத்தைக் கடமையோடு காப்பாற்றுவேன், மூட்டை சுமந்தேனும், வண்டி இழுத்தேனும் காப்பாற்றுவேன். அன்றி தாங்கள் சிபார்சு செய்தால் வேறு சினிழாக் கம்பெனியிலேயே நடிக்க இசைவேன். என்னை மன்னித்து இதற்கு இணங்க வேண்டும்." என்றான்.
நமக்கு மிகவும் ஆப்தமானவர்களிடம் பக்ஷத்திற்கொருமுறை அரை மணி நேரம்தான் பேச சந்தர்ப்பம் ஏற்படின் அவர்களோடு அநேக விஷயங்களைப் பற்றிப் பேச நினைக்கிறோம். ஆனால் அவர்களை நேரில் பார்க்கும்போது எதைப் பற்றிப் பேசுவதென்று தெரியாமல் ஏதேதோ விஷயங்களைக் குறித்துப் பேசு கையில் அரை மணி அரை நிமிடமாக ஓடிவிடுவதால், அரை மணி அரை நாளாக வாவது வளரக்கூடாதா என்ற ஏக்கமுண்டாகின்றது.
பிறகு மானேஜர் 500 ரூபாயைக் கோமதியினிடம் கொடுத்து "அம்மா! இந்த தடவை இதை நான் செலுத்துகிறேன் எனினும் எனக்குச் சமயம் கிடைக்கும்போது நான் பார்த்துக் கொள்கிறேன். ஏதோ தோட்டத்து விஷயக் கொடுமைகளோடு எல்லாம் மறந்து விடப் போகின்றது; என் ஞாபகம் இருக்கட்டும். நான் சதா நினைத்துக் கொண்டே இருப்பேன்" என்று அவர்களிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து, பின்னர் விடை பெற்றுக் கொண்டு சென்றார். தங்கள் ஊருக்குப் போய்ச் சேர உத்தரவு தங்களுக்கு கிடைத்து விட்டதைப் பற்றி அவர்கள் மிக்க சந்தோஷமடைந்துப் பொங்கினார்கள். தாங்கள் கேசவனைக் காணப் போகும் நாள் என்று வரும் என்று ஏங்கித் தவித்தார்கள்.
மருதப்பா எழுதிய கதையை நடித்து முடிப்பதற்கு அன்றும் மறுநாளும் ஆயிற்று. அதற்குள் பிரயாண சித்தமாகி விட்டார்கள். மறுதினம் கப்பல் புறப்படும் நேரம் வந்தது. கோமதி குடும்பத் துடன் சென்று கப்பலேறினாள்; மானேஜரும் அவர்களை வழியனுப்ப வந்தார், பழ வகைகளும், பலகார வகைகளும் கொடுத்தார்; அவர்கள் வெகு மரியாதையோடு மானேஜருக்குப் பலதரம் வந் தனம் செய்தார்கள். “நீங்கள் செய்த பேருபகாரத்தை என்றும் மறவோம்!" என்று நன்றி கூறினார்கள்.
கப்பலும் நகரத் தொடங்கியது. பிரிவாற்றாத விசனம் எல்லோருடைய இதயத்திலும் உண்டாகிக் கண்ணீர் வடிந்தது; கப்பலும் கண்ணிற்கு மறைந்தது. கோமதி தான் முதலில் கப்பலில் வரும் போது அடைந்த துன்பத்தையும், இப்போது குடும்பத்துடன் சந்தோஷமாகச் செல்லும் இன்பத்தையும் பற்றிக் கூறி ஆநந்தப் பரவசமடைந்தாள்.
நமக்குப் பல தடவைகளில் பண உதவி செய்பவர்களுக்கு அவசியமான போது நாம் உதவுவதற்கில்லா அசந்தர்ப்ப மேற்படின் நாம் அதற்காக வருந்துவதுடன் அவர்கள் நம்மைப்பற்றி வித்தியாசமாக நினைத்துவிடுவார்களோ வென்றும் கவலைப்படவேண்டியிருக்கின்றது.
கப்பல் துறைமுகத்தில் வந்து நின்றது. அவர்கள் எங்லோரும் அந்த இடத்திற்குச் செல்வதென்று யோசித்தார்கள் பொன்னுசாமி நாடகக் கம்பெனிக்குச் சென்று அங்கு கேசலனைப் பார்த்து விட்டுப் பிறகு யோசிக்கலாம்" என்று நினைத்து நாடகக் கொட்டகைக்கு வர்தார்கள். அங்கிருந்த வேலையாளை நோக்கி "ஐயா! இங்கு கேசவன் என்று ஒரு சிறுவன் நடிக்கின்றானே, அவனையும் கம்பெனி யின் சொந்தக்காரரையும் நாங்கள் பார்க்க வேண்டும். எங்கே இருக் கிறார்கள்?" என்று கேட்டான் கோமதி.
வேலையாள்:-அம்மா! நீங்கள் யார்? எதற்காகப் பார்க்க விரும்புகின்றீர்கள்? உங்கள் முகத்தைப் போலவேதான் கேசவனுக் கும் இருக்கிறது. ஆதலால் நீங்கள் அவருடைய தாயாராக இருக்குமோ! ஐயோ பாவம்! கேசவன் இராப் பகலாகப் புலம்புகின்றார். உங்களைப் பார்க்க பாக்கியம் உண்டோ இல்லையோ என்ற
சந்தேகமே அவருக்கு உண்டாகி விட்டது.- என்று அவன் முக ஜாடையில் தெரிந்து கொள்வதைக் கவனித்த கோமதி "அப்பா! நான் தான் கேசவனின் தாயார். என் செல்வன் எங்கே இருக்கிறான்? சீக்கிரம் சொல்லு" என்று பதறியவாறு கேட்டாள். இவளுடைய வாஞ்சையை அறிந்த வேலைக்காரன் மிக்க சந்தோஷமும், ஆச்சரிய மும் அடைந்து "அம்மா! என் தாயே! நீங்கள் செய்த பாக்யமே பாக்கியம்! உங்கள் மகனை நீங்கள் விவாகக் கோலத்துடன் காணும் புண்ணியம் செய்தீர்கள், நாளைய தினம் பரிமளாவுக்கும் கேசவனுக்கும் திருப்பதியில் விவாகம். நிச்சயதார்த்தம் இன்று தான் நடக்கின்றது. வாருங்கள்; நான் அழைத்துக்கொண்டு செல்கிறேன்" என்றான், அன்றே தனி (ஸ்பெஷல்) கார் வைத்துக்கொண்டு எல்லோரும் திருப்பதிக்குச் சென்றார்கள்.
இந்த ஆநந்தமான விஷயத்தைக் கேட்ட எல்லோருக்கும் உண்டான அபார சந்தோஷத்திற்கு எல்லையுண்டா! மனம் கட்டு மீறிப் பொங்கியது.
நாம் முக்கியமான விஷயத்தைப்பற்றி யாருக்குக் கடிதமெழுதினாலும் அதன் நகல் ஒன்று கையில் வைத்திருப்பது அதியவசியமானது. சில சமயங் களில் அசல் கடிதம் அவர்களுக்குச் சேராவிடில் நாம் நகலைக் காட்டி அவர்களுக்கு உண்மையான நிலைமையைத் தெரிவிக்க அநுகூலமாகின்றது.
விவாக வீட்டில் மேளமும், தாளமும் தடபுடல் படுகின்றது. கேசவன் திருமணக் கோலத்துடன் வீற்றிருந்தான் பரிமளா ஜகஜ்ஜோதியுடன் ஐகன்மோகன சிங்காரியாய் விளங்கினாள். கோமதி ஆவேசத்துடன் சென்று “என் கண்ணே! கண் மணியே! கேசவா! என் செல்வா!" என்று கூறிக்கொண்டே கேசவனை இறுகத் தழுவிக்கொண்டாள். நீலா, பாலா, மருதப்பா அவன் தந்தை முதலிய எல்லோரும் ஏக காலத்தில் கேசவனைக் கட்டிக் கொண்டு ஆநந்த மிகுதியால் புலம்பியபடியே “என் கண்மணியே! உன்னைத் திருமணக்கோலத்துடன் காணச்செய்த கடவுளுக்கு அநந்தகோடி வந்தனம்." என்று கூறினார்கள்.
இரவு பகலாக ஏக்கங்கொண்டிருந்த கேசவனுக்கு ஒரே சமயத்தில் தனது மனிதர்கள் எல்லோரையும் பார்த்த சந்தோஷத்திற்கு அளவில்லை. "அம்மா! ஒருவாய்க் கஞ்சிக்குப் பஞ்சையாயலைந்து நான் தேடிச் செல்கையில் உங்களைப் பிரிந்த நாளின் துக்க சம்பவம் என் மனத்தில் இப்போதும் நன்றாகப் பதிந்து கிடக்கின்றது. என் செல்வச் சோதரிகளே! பாலா! நீலா! அண்ணா! என் தந்தையே!" என்று பலவாறு கூறி ஆனந்த நிர்த்தனம் செய்தான்.
பொன்னுசாமி இவ்வானந்தமான காட்சியைக் கண்டு இன்பக் கண்ணீர் சிந்தியவாறு கேசவனுடைய தந்தையையும், அண்ணனையும் விசாரித்து வந்தனம் செய்து, கோமதிக்கும் வந்தனம் செய்தார். பரஸ்பரமான ஆனந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்கே அரைமணியாயிற்று. பார்வதியம்மாள் வந்து சம்மந்தியம்மாளை விசாரித்து முகமன் கூறினாள். பரிமளாவின் இன்பத்திற்கோ எல்லையே இல்லை. கேசவனின் தேகம் இரட்டிப்பாகப் பூரித்தது. அன்று பூராவும். தங்கள் பிரிவைப்பற்றிப் பேசியும், பரிமளாவைக் கண்டு களித்தும் தங்களுக்கு இத்தகைய பாக்கியம் கிடைத்ததே என்கிற அபார சந்தோஷத்துடன் கோமதி
நாம் ஒருவரைப் பார்ப்பதற்காகக் கார்டு (Visiting Card) அனுப்பி அவர்களிடமிருந்து யாதொரு பதிலும் கிடைக்காவிடில், நம்மை அவர்கள் அலக்ஷியஞ் செய்துவிட்டதாக நினைக்க இடமுண்டாகின்றது. ஆனால் உண் மையை ஆராய்கையில் நடுவிலுள்ளவர்கள் தான் தாமதத்திற்குக் காரணமென்று வெளியாகின்றது.
தன் நோயையும் மறந்தான்.. இரவியைக் கண்ட பனி போல ஆனந்தத்தின் முன்பு நோயும் பறந்தது. அவர்கள் எல்லோரும் புதிய ஆடையாபாரங்கள் தரித்துப் புதிய மனிதர்களானார்கள்.
பொன்னுசாமி கட்டு மீறிய களிப்புடன் "அம்மா! உங்கள் வயிறு செய்த பாக்கியந்தான் கேசவனுக்குக் கண்டம் நீங்கியது. அவனுக்கேற்பட்ட மாசு அகன்று 10 தினங்களே ஆயின," என்று அவனுடைய சகலமான விவரங்களையும் கூறி, நாயுடு குற்றவாளியைப் பிடித்துக்கொடுத்துக் கேசவன் நிரபராதி என்று ரூபித்ததையும் விளக்கினார். குற்றம் செய்த மனிதனை விசாரித்ததில் தான் ஒருவனின் தூண்டுதலினால் செய்ததாகக் கூறினான், உங்கள் மருமகள் ஒரு சோதாவை வெரு திறமையோடு ஜெயிலில் அடைப்பது போல அடைத்துவிட்டாள். நாயுடு பிடித்த குற்றவாளி இந்த மனிதனைக் காட்டினான்.
அந்த மனிதனை நாங்கள் வந்து விசாரித்ததில் அவன் பரிமளாவின் அத்தை மருமகன் என்றும் அவன் பணத்திற்காசைப் பட்டுக் கொண்டு என் கம்பெனியில் நடிக்கும் ஒருவனின் தூண்டுத லுக்கு உட்பட்டு அவன் ஆட்டி வைத்தபடி எல்லாம் ஆடிய தாயும் என்னைக் கொலை செய்யவும்,பரிமளாவை அபகரிக்கவும், என்னு
பணங்களைத் தான் அடையவும், கேசவனை அடியோடு ஒழித்து விடவும் அந்த நடிகள் தீர்மானித்து ஆள்களை ஏவி வேலை செய்வதாயும் அதில் தானும் ஒருவன் என்றும் உண்மையைக் கூறி விட்டான்.
பிறகு நடிகனைப் பிடிக்க யத்தனிக்கையில் தன் விஷயம் வெளியாகி விட்டதை யறிந்து, நான் இனி தப்ப முடியாதென்று தெரிந்து கொண்டு,
நம்மைப்பற்றி இழிவாகப் பேசியவர்களைக் கண்டால் அவர்களோடு பேசுவோ, அல்லது பார்க்கலோ மனம் இடந்தருவதில்லை. அவர்களுக்கும் நம்மோடு பேச முகமில்லை. இந்த நிலைமையிலிருந்து விடுபட. யாராவது. மத்தியஸ்தம் செய்யவேண்டியிருக்கின்றது. ஆயினும் முறிந்த மனம் கூடுவது கஷ்டந்தான்.
தற்கொலை செய்து மாண்டதாக அவன் கடிதத்தினாலேயே தெரிந்து கொண்டோம். ஒரு சிறு கைக் குட்டையினால் இந்த விவரங்களை நாயுடு கண்டு பிடித்தார். பரிமளாவின் சாமர்த்தியத் தினால் அந்த மனிதன் கைக்குள் சிக்கினான். இந்த உளவை உரைத்த கிழவியை மட்டும் நாயுடு விடுதலை செய்து விட்டார். எப்படியோ கேசவன் மீதிருந்த குற்றம் நிவர்த்தியானதே எனக்குப் போதும்! என்னைக் கொல்ல நினைத்தபடி கொன்றிருப்பினும் எனக்குச் சம்மதமே! மகா பாவி யொழிந்தான் என்பதாகும். என் கண்மணிகள் சந்தோஷமான வாழ்க்கை நடத்தினால் போதும்; அதுதான் என் கோரிக்கை. குற்றவாளிகளுக்குத் தண்டனை சட்டப்படிக்கு விதித்தாயிற்று. கேசவன் ஜெயம் பெற்றது உங்கள் வயிறு செய்த பாக்யம்தான் என்றார்.
அன்று முற்றும் அது விஷயமாகவே பேச்சு நடந்தது. அடுத்த நாள் யாதொரு விக்கினமுமின்றி, குறையுமின்றி சந்தோஷ மாகவும், ஆடம்பரமாகவும் விவாகம் பரிமளாவுக்கும் கேசவனுக்கும் நடந்தேறியது. பொன்னுசாமி இத் திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தினார். ஆயிரக்கணக்கான எழைப் பரதேசிகளுக்குப் பல விதமான தானங்கள் வழங்கப்பட்டன. எல்லோரும் தம்பதிகளை ஆசீர்வதித்து வாழ்த்தினார்கள். விவாக மகோற்சவம் அனேக சங்கீதக் கச்சேரிகளுடன் நடந்தேறியது. எல்லோரும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து கொண்டு தம் ஊர் திரும்பினார்கள்.
தம்பதிகளின் இன்பத்தைக் கூற வேண்டுமா! சாக்ஷாத் பார் வதியும் பரம சிவனும் போலும், லக்ஷ்மியும் நாராயணனும் போலும், வாணி விரிஞன் போலும் மனமொத்த தம்பதிகளாய் ஆநந்தக் கட லில் மூழ்கினார்கள். நீலா, பாலா, பரிமளா, சகுந்தலா ஆகிய நால்வரும் தேனும் பாலும் போல நேசிகளாக விளையாடுவதைத் தவிர வேறு வேலை இல்லை; பொன்னுசாமியே எல்லாக் குடும்பங்களையும் நிர்வகிக்கும் தலைவரானார். இந்த ஆனந்தத்தில் நாயுடுவும் பங்கெடுத்துக் கொண்டார்.
இன்று கட்டாயம் கடிதம் எழுதுவதாக ஒருவருக்கு வாக்குக் கொடுத்தால் அவர்கள் மறுதினம் அதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் நம்மை மீறி ஏதாவது தடங்கல் ஏற்பட்டு அக்கடிதம் போய்ச்சேரத் தாமத முண்டாயின் அதனால் அவர்கள் நாம் வார்த்தை தவறிவிட்டதாக நினைக்கிறார்கள்.
இரண்டொரு மாதங்களாயின. கேசவலுக்கு ஒரு கடிதம் வந்தது; அது பின் வருமாறு :-
"அன்புள்ள கேசவனுக்கு அனேக ஆசீர்வாதம். க்ஷேமம்.க்ஷேமத்திற்கு எழுதவும், நான் இக் கடிதத்தை வெட்கத்தை விட்டு உனக்கு எழுதுவகில் நீயே வியப்புறலாம். ஆனால் காதலின் கனிந்த தன்மையை பரிமளாவின்பால் அனுபவித்தறிக்க அனுபவசாலியாகையினால் இதை உனக்கே நான் எழுதுகிறேன். என்னைப் பற்றி நீ நேரில் தெரிந்திராவிடி னும் உன் பெற்றோர் மூலம் தெரிந்து கொண்டிருக்கலாம். உன் கல்யாண விமரிசையைப் பத்திரிகையில் கண்டு களித்தேன். உன் பெற்றோரை நீ அடைந்த ஆநந்தத்தைப் படித்துப் பூரித்தேன். கேசவா! என்னுடைய மனத்தை உன் சகோதரி பெருங் கொள்ளைக்காரியாய்க் கவர்ந்து விட்டாள். நீயும் உன் பரிமளாவும்தான் அந்தக் கொள்ளைக்காரியை என் வசம் பிடித்துத் தருவதற்குச் சரியான துப்பறியும் வீரர்கள் எனது எண்ணி இதை எழுதுகிறேன்; பாலாவும் சம்மதித்தால்தான் தான் சந்தோஷமடையக் கூடும். இல்லையேல் என் விதிப்படிக்கு ஆகட்டும்; என் மனத்திலுள்ளதை உன்னிடம் தெரிவிக்கத் துணிந்தது போல மற்ற யாரிடமும் துணியவில்லை. இந்த கடி தத்திற்குப் பதில் நான் தந்தியை எதிர் பார்க்கிறேன். நான் எழுதியது குற்றமாயின் மன்னித்து இதை அடியோடு மறந்து விடு.
இன்ஙனம் ஸ்ரீ ராமன்
சினிமா கம்பெனியின் மானேஜர்.
அதைப் படிந்த கேசவன் பரமானந்தமடைந்து, பரிமளா வுக்குக் கடிதத்தைக் காட்டி “கண்ணே! பார்த்தாயா! உன்னால்தான் இக் காரியம் முடிய வேண்டுமாம்” என்று நகைத்தவாறு சொன்னான்.
இது கேட்ட அம் மின்னிடையாள் "நாதா! இந்த விஷயத்தை நான் எதிர் பார்த்தேதான், பாலாவுடன் விவாக விஷயமாய் நாள் விளையாட்டுப் பராக்கில் பேசுகையில் அவளது மனப் போக்கை அறிந்து கொண்டேன். இதைத் தங்கள் தாயிடம் தெரிவிக்க என்ணினேன். கடிதமே வந்து விட்டது, பழம் நழுனிப் பாலில்
நமது மனத்தில் ஒருவித ஆவேசமுண்டாகி வக்கனையாக எழுதிக் கொண்டேயிருக்கையில் யாராவதுவந்து தடை செய்துவிடின் அந்த உணர்ச் சிகள் மாறிவிடுவதுடன், விஷயங்களும் மறந்துவிடுகின்றன. அப்புறம் மூளையை எவ்வளவு உடைத்துச்கொண்டாலும் முன்போன்ற உற்சாக முண்டாவதில்லை. அது மற்றவர்களுக்குத் தெரிகின்றதா?
விழுந்தாக ஆயிற்று. உங்களுடைய சகோதரியும் அன்னையும் அதோ வருகிறார்கள்; நேரில் சொல்லி விடுங்கள்" என்றாள்.
அதே நிமிடத்தில் கோமதியும், பாலாவும் அங்கு வந்தார்கள். கேசவன் பாலாவிடமே கடிதத்தைக் கொடுத்து விட்டுக் கோமதியிடம் விஷயத்தைத் தெரிவித்தான். பாலா கடிதத்தைப் படித்து விட்டு மிக்க திருப் தியும் சந்தோஷமும் அடைந்து தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். பிறகு எல்லோரும் கூடி யோசித்து விவாகத்திற்கு நிச்சயம் செய்து ஸ்ரீராமனுக்குத் தந்தி யடித்து விட் டார்கள். நீலாவுக்கும் சகுந்தலாவுக்கும் இப்போது விவாகம் வேண்டாம்; இருவரும் நன்றாகப் படித்து டாக்டர் பரீக்ஷை பாஸ் செய்ய வேண்டுமென்று பிரியப்பட்டதால் அவர்களை அதே வழியில் செல்ல விட்டார்கள்.
தந்தியைக் கண்டு உள்ளங் களித்த ஸ்ரீராமன் விவாக சன்னத்டன் வந்து சேர்ந்தான். அந்த விவாகமும் விமரிசையாக பொன்னுசாமியினாலேயே நடத்தப்பட்டது. விவாகத்தையே நாடா மருதப்பா துறவி போலாகி விட்டரன். தம்பதிகள் தேனும் பாலும் போல வெகு அன்யோன்யமாயும், பேரானந்தத்தில் மூழ்கியவர்களாயும் பெரியோர்களை மகிழ்விக்கப் புத்திர செல்வங்களை ஈன்று கொடுத்து, அபாரமான சந்தோஷத்தில் துளைந்து வருகின்றார்கள். பொன்னுசாமி பரிமனவல்லியின் குழந்தையின் மோகத்தில், வாஞ்சையில் கட்டுப்பட்டு அவர் யாத்திரையையும் மறந்து குழந்தையே குல தெய்வமென்று எண்ணி விட் டார். நாடகக் கம்பெனியும் கேசவனின் பார்வையில் நடந்து கொண்டே வருகின்றது. இன்னமும் ஆயிரக் கணக்கான எழைகளுக்கு தருமங்கள் கம்பெனி மூலம் வழங்கப் பட்டு வருகின்றன.
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும் - திருக்குறள்.
சுபம்!
சுபம்!!
சுபம்!!!
“பரிமளகேசவன்” முற்றிற்று
ஓம் தத்சத்
ஒரு விஷயம் அச்சிட்டு வெளியான பிறகு சிலர் பார்த்தால் “நன்றாக இருக்கின்றது" என்கிறார்கள். அதையே எழுதும்போது பார்க்க நேரிட்டால் வேறுவித அபிப்பிராயம் உண்டாகின்றது, இது வீடு கட்டும்போது பார்ப்பதை விடக் கட்டியான பிறகு பார்ப்பதுபோல விருக்கின்றது.

