காட்சி-1
15 வயதுப் பையன் : (சிரிக்கிறான்) ஹஹ்ஹ...ஹா!
25 வயதுக்காரர் : ஏய் அரப்படிச்ச மூஞ்சூறு! என்னத்த பார்த்து பிசாசாட்டுஞ் சிரிக்கிறே?
15 வயது : ஐயா எழுதினதப்பாத்து, சிரிக்காம அழவாச் சொல்றீங்க!
25 வயது : அப்படி என்ன எழுதிப்புட்டோம்? அத தப்புன்னு சொல்ற அளவுக்கு ஒங்ககிட்டே என்ன மேதாவிலாசம் இருக்குது? கொஞ்சங்கூட மரியாத
இல்லாம் ........சே;சே!
15 வயது : வயசாய்ப் போச்சுதுன்னா மரியாத கொடுக்க வேணும்! உண்மைதான்! ஒத்துக்கறேன்... ஆனாக்க வயசுக்காக மட்டும் மரியாத எதிர்பாக்றது சரி யில்லே! வயசுக்குத் தகுந்த புத்தியும்கூட இருக்கணும்....
25 வயது : அப்ப எனக்கு புத்தியில்லேங்கறே! காலம் அப்படி இருக்கு...சரி! விஷயத்த சொல்லிப்புட்டு சிரிச்சுத் தொலை...இல்லேன்னாக்க எவனாவது ஏதாவது ஒரு மாதிரின்னு நெனச்சுக்கப் போறான்.
15 வயது : இங்க வாங்க!
(25 வயதுக்காரர் வயிற்றைத் தடவுகிறார்).
25 வயது : ஏது! வரவர சேட்டை அதிகமாவுதே!
15 வயது : இல்லே! காலைல பணம்பழம் சாப்புட்டதா எழுதியிருந்தீங்க... அதான் வயித்ல தனியா சத்தங் கேட்குதான்னு தட்டிப் பார்த்தேன்......
25 வயது : ஐயய்யே! ஏம்ப்பா ! கிராமாந்தரத்ல இருந்து கிட்டுப் பணம்பழம் தெரியாது! 'நீ' ல்லாம் இருந்து என்ன ப்ரயோஜனம்?
15 வயது ! சின்னவங்க சொல்லி நீங்க என்னிக்கு ஒத்துக் கிட்டீங்க! இதோ வந்துகிட்டிருக்காரே, படிச்ச பெரியவர் அவரு சொன்னா ஒத்துக்குவீங்களா?
25 வயது : எவ்வளவு படிச்சவரு!... அவரு சொன்னாக்க சரி!
(தமிழ்ப் பேராசிரியர் வருகிறார்)
25 வயது, 15 வயது இருவரும் : ஐயா! வணக்கங்க...! பேராசிரியர் பெரியவர் : வாங்க! வாங்க. நான் அப்பவே கவனிச்சுகிட்டுத்தான் இருந்தேன்...ஒங்களுக்குள்ள
ஏதோ படிப்பு சம்பந்தமா சந்தேகம்...சரிதானே?
15 வயது : ரொம்ப கரெக்டுங்க...
25 வயது : குதிக்காதே' நானே அவருகிட்ட சொல்றேன் ... கம்முனு கெட! 15 வயது : வளவளன்னு பேசாம அவர் கைல கொடுங்க..
25 வயது : (சற்று அடக்கமும் வெட்கமும் கலந்து) : இங்க பாருங்கய்யா...இதுலே எ ழுதி இருக்கறது தப்புங்களா?...
பேரா : (எழுதியதைக் கையில் வாங்கிப் புன்முறுவல் பூக்கிறார்) : நீங்க நெனச்சு எழுதினது பனம்பழந் தான்...ஆனாக்க பணம்பழம்னு எழுதினாக்க : அர்த்தம் வேறயாப் போயிரும்...காசச் சாப் புட்டதா அர்த்தம்...சொல்லிப் பாருங்களேன் பழக்கத்ல சரியா வந்துப்புடும்....
25 வயது : சொல்லுங்கய்யா! தெரிஞ்சுக்கறோம்......
பேரா : பனம்பழம்......
25 வயது : பனம்பழம்........ பேரா : நீங்க சொல்லுங்க தம்பி...
15 வயது : பனம்பழம்...
பேரா : பாத்தீங்களா; சொல்றப்போ ரெண்டு பேருமே சரியாச் சொல்றீங்க எழுதறப்ப வித்தியாசம் வருது .... நம்ப தமிழ்ல 'ன' இருக்குது, 'ந' இருக்குது. இதுங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி எழுதி பழக்கப்படுத்திக்கிட்டா செரமமே இருக்காது....
25 வயது : எப்பிடீங்க!....எப்பிடீங்க...!
பேரா : இந்த அளவுக்கு உற்சாகம் இருந்தாக்க அதுவே போதும்!
25 வயது : (15 வயதுப் பையனை நோக்கி) : நல்பா கேட்டுக்க...மோட்டு வளையப் பாக்கற மாதிரி முளிக்காதே அப்புறம்...
15 வயது : (சற்று கிண்ட லுடன்) சரீங்க... உத்தரவு!
பேரா : "நண்பன்"ங்கற வார்த்தை கேள்விப்பட்டிருக்கீங்களா?
25 வயது : ஓஹோ! இந்த சினேகிதகாரன்னு சொல்ற மாதிரி வார்த்தைங்களா...டிராமா, சினிமால கூட வருமே....
15 வயது : ஐயா எனக்கும் தெரியுங்க...
பேரா : இந்த வார்த்தைல மூணு வகை னா' வும் இருக்குது
25 வயது : அப்பிடிங்களா?
15 வயது : ஒரேடியா வாய பொளக்காதீங்க...விஷயத்த கவனிங்க.....
பேரா : ஒருத்தரை ஒருத்தர் கேலி பண்ணிகிட்டே இருக்கக்கூடாது...கவனமாக் கேக்கணும்... மொதல்ல சொன்னதை மனசுல வச்சுக்குங்க... இப்ப சில வார்த்தைங்க சொல்லப் போறேன்.... கேளுங்க...எழுதியும் காட்றேன்... (பொதுவாக)
நண்டு, நஞ்சை, நடவு, நத்தை; மண்ணு. பொன்னு, கனவு, நனவு.
இருவர் : நண்டு, நஞ்சை, நடவு, நத்தை, மண்ணு பொன்னு , கனவு, நனவு....
பேரா : இதோ பாத்தீங்களா! எழுதியிருக்கிறேன்...
25 வயது : பள்ளிக்கூடத்லே இருக்ற மாதிரியே தோணு
பேரா : இப்ப நான் சொன்னதில் என்ன தெரிஞ்சுகிட்டீங்க ... தம்பி நீங்க சொல்லுங்க...யோசனை பண்ணிச் சொல்லுங்க!
15 வயது : (தயக்கத்துடன் அதாவதுங்கய்யா... நண்டு, நஞ்சை, நத்தை, நாணல், நாத்தங்கால்... இப்படி வர்ர வார்த்தைங்கள்ள 'மூணு 'னா' ல இந்த ‘நத்தை' 'நா’வைத் தான் மொதல்ல எழுதணும்! அப்படித்தாங்களே...
பேரா : பரவாயில்லையே! சொன்னவுடனே புரிஞ்சு கிட்டீங்களே! விடாமப் படிங்க... நெறைய சந்தர்ப்பம் இருக்குது...
25 வயது : இதெல்லாம் எங்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தைங்கதாங்க...வெவரமாச் சொன்னாத் தான வௌங்குதுங்க.... இன்னமே இந்த நத்தை ’நா'வையே மொதல்ல போட்டு எழுதுவோம்....
பேரா : இப்ப அந்த மாதிரி நத்தை 'நா'ல ஆரம்பிக்கிற செல வார்த்தைங்களைச் சொல்லுங்க (25 வயதுக் காரரை நோக்கி).
25 வயது : சொல்றேனுங்க! நன்னாரி, நடப்பு, நரி, நான்' நாடி, நாளு...
பேரா : ப்ரமாதம் போங்க... இப்ப இந்த * நண்பன்'ங்கற வார்த்தைல நத்தை ' நா'வுக்கப்பரம் வருது 'ண', அத மூணு சுழி “ணா”ன்னு சொல்வாங்க. ஒண்ணு அலை மில்லே! - உத்துப் பார்த்தீங்கன்னாக்க மூணு தடவை சுழிச்சிருக்கும் (செய்தே காட்டுகிறார்). இது எப்பவும் எடைல தான் வரும்... கொஞ்ச எடங்கள்ள தான் கடைசீல வரும்... ஆனா இந்தக் கடைசீல இருக்குதே ரெண்டு சுழி’னா' அது எடைலயும் வரும்... கடைசீலயும் வரும்
25 வயது : அடாடாடா! எப்பிடிப் புட்டு புட்டு கொழுந்த புள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்றீங்க!...
பேரா : இன்னொரு சங்கதி! இப்ப இந்த ரெண்டு சுழி, மூணு சுழி 'ன'வும், 'ணா'வும் ஒரே வார்த்தைல வந்தாக்க பெரியவருக்குச் சின்னவர் எடம் விட்ரு வாரு...
15 வயது : எப்பிடிங்க?
பேரா : அண்ணன், கண்ணன், திண்ணன்...
25 வயது : ஆமுங்க! ஆமுங்க! அண்ண னுக்குத் தம்பி எடம் விடுதுங்க....எழுத்துங்க கூட மரியாதை தெரிஞ்சு வச்சிருக்கு...
பேரா : இப்ப பாருங்க இதுங்களை கவனிக்கணும்.... ஆனி, ஆணி மனம், மணம் பனி, பணி பனை, பணை இதுங்களுக்கு வித்யாசம் சொல்லுங்க பார்ப்போம். நீங்க தான் சொல்லுங்களேன். (25 வயதுக்காரரை நோக்கி).
25 வயது : ஆனி ஒரு மாசம். ஆணி செவுத்ல அடிகிறது. 'மனம்'னா மனசுன்னு சொல்வாங்க...பனின்னாக்க கைகாலை நடுக்குமே அது தெரியுமே! அடுத்தது தெரியாது...பனைன்னா நொங்கு வெட்டுவோமே அந்த மரந்தானே...பணைக்கு தெரியாது'
பேரா : தம்பீ! நீங்க சொல்லுங்க... ஐயா சொல்லாதது ஒங்களுக்குத் தெரியுமா?
15 வயது : மணம்னா வாசனைங்க!... பணைன்னா தெரியாதுங்க...
பேரா : பணைன்னா மூங்கில்னு அர்த்தம்...
இருவரும் : இப்ப தெரிஞ்சு போச்சு!
பேரா : தெரிஞ்சு இருக்கணும்!...போயிரக்கூடாது... இந்த மாதரி சின்னச் சின்ன வார்த்தைங்களா எடுத்து ரெண்டு சுழி போட்டா என்ன அர்த்தம்... மூணு சுழி போட்டா என்ன அர்த்தம்னு அத்துபடி செய்துக்கணும்... இப்ப நீங்களே இந்த மாதிரி வார்த்தைங்க சொல்லுங்க!
15 வயது : நான் சொல்லட்டுங்களா?
பேரா : சொல்லுங்களேன்!
15 வயது : அண்ணி , அன்னி
காணம், கானம்.
பேரா : அண்ணின்னு சொன்னாக்க அண்ணன் சம்சாரம்!... அன்னின்னு சொன்னா?
15 வயது : ரொம்ப காலத்துக்கு முன்னாடி தமிழ்நாட்ல இருந்த ராஜாவாம்!
பேரா : பலே! பலே! ரொம்ப ஞாபகசக்தி தான் இன்னும் செல வார்த்தைங்க தர்ரேன்... மனசுல வச்சு நிதானமா சொல்லி அர்த்தம் புரிஞ்சு எழுதினா நாளாவட்டத்தில் கொழப்பமே வராது...
25 வயது : சரீங்கய்யா !
பேரா : நான் சொல்லச் சொல்ல சொல்லணும்...
இருவரும் : சரிங்க!
பேரா : நான், நாண்...
இருவரும் : நான், நாண்.
பேரா : கனை, சணை ...
இருவரும் : கனை, கணை.
பேரா : சரி! நாம புலி, சிங்கங்களையே - கூட்டுல அடச்சுப்புடறோம்... இந்த எழுத்துங்களை மனசுல நிறுத்த முடிடாதா! பயமே கூடாது! பயிற்சி வேணும்! பழக்கம் வேணும்! எங்க நான் சொன்னதையெல்லாம் சுருக்கமாச் சொல்லுங்க தம்பி .
15 வயது : வார்த்தைச்கு மொதல்ல எப்பவும் நத்தைல வர்ர 'நா'வைத்தான் போடணும்... அது பெரும் பாலும் எடைலயும் கடைசீலயும் வராது.
25 வயது : மேல் நான் சொல்லட்டுங்களா? பேரா : தாராளமா!
25 வயது : ஒரே வார்த்தைல ரெண்டு சுழி, மூணு சுழி வந்தாக்க மொதல்ல அண்ணனுக்கு மரியாத! அப்புறம் தம்பிக்கு!
பேரா : சின்ன சின்ன வார்த்தைங்களா எடுத்துக்கிட்டு ரெண்டு சுழி போட்டாக்க என்ன அர்த்தம்... மூணு சுழி போட்டாக்க என்ன அர்த்தம்னு கண்டுபுடிச்சு சொல்லியும் எழுதியும் பழகணும்!
25 வயது : இதுக்கு முன்னால ஒரே பயமா இருந்துச்சுங்க! கொஞ்சங் கொஞ்சமா புரியராப்ல இருக்குது... ரொம்ப சந்தோஷங்கய்யா.
15 வயது : எங்களுக்காக இவ்வளவு நேரம் செலவழிச் சத்துக்கு நன்றிங்க...
பேரா : இது என் கடமை. ஒங்க அன்புக்கு ரொம்ப சந்தோஷம்! வர்ரேன்! முயற்சிய விட்ரக் கூடாது.
25 வயது : மறக்க மாட்டோம்.
15 வயது : மாட்டோம்!

