Chapter 13

பிள்ளையவர்கள் உள்ளிருந்த செருப்பை ரஸ்தாவில் போட்டுவிட்டு மெதுவாக அதில் காலை வைத்து இறங்கினார்.

"கீளநத்தம் மேயன்னா இருக்காஹள்லா..."

"ஆமாம் நம்ம நாவன்னா கோனாவோட மச்சினப்பிள்ளை..."

"அவுஹதான்... அவுஹளோட சமுசாரத்தோட ஒடப்பிறந்தாளெ மருந்தூர்லே குடுத்திருந்தது - அவ 'செல்லா'யிப்போனா... பதினாறு... போயிட்டு வாரேன்!"

"மதினி போகலியா...?"

"அவ வராமெ இருப்பாளா? கூடத்தான் வந்தா; அங்கே ஆள் சகாயம் ஒண்ணுமில்லே - இருந்துட்டு வாரனேன்னா - விட்டுட்டு வந்திருக்கேன்; இப்பொ அவ இங்கெ சும்மாதானெ இருக்கா?..." என்றார்.

"ஆமாம், அதுக்கென்ன!... வயசென்ன இருக்கும்?" என்றார் சுப்புப் பிள்ளை மீண்டும்.

"வயசு அப்படி ஒண்ணும் ஆகலெ - முப்பது இருக்கும்!" என்றார்.

"புள்ளெக ஏதும் உண்டுமா?... சரி, அதிருக்கட்டும். அண்ணாச்சி, ஒங்கிட்ட ஒரு சமுசாரம்லா சொல்லணும்னு நெனச்சேன். ஏங்காதுலே ஒரு சொல் விழுந்தது. ஒங்கிளுக்கு அதெத் தெரிவியாமே இருந்தா, நாயமில்லை!" என்றார்.