Chapter 12
"அப்படியா! அந்தப் பயலைக் கொல்வது குற்றமல்ல. நல்ல மனிதன் எவனும் அவனைக் கொன்றுவிடுவான்."
"எப்படியானாலும் கொலை கொலைதான்" என்றார் வக்கீல்.
கிட்டுவிற்கு அர்த்தமாகவில்லை.
"கொலை கொலைதான். நீ எனது வாழ்க்கையின் ஏமாற்றம். எனது புகழையும் பட்டத்தையும் தேடும் அவசரத்தில் உன்னை மறந்தேன்."
"அப்பா அதற்காக வருத்தப்பட வேண்டாம்."
"கை எழுத்தைப் போடு."
கிட்டு கையெழுத்திட்டான்.
"கவலைப்படாதே. அரை மணி நேரத்தில் இதை கோர்ட்டிற்குக் கொண்டு போய் விடுகிறேன்."
பத்திரத்தைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.
"என்னை நம்பு. உம்! உன்னிடம் சில விஷயங்கள் கேட்க வேண்டும். கேஸில் சில விளங்கவில்லை. நீ கேஸைப் பேப்பரில் பார்த்தாயா?"
"ஆமாம் நேற்றுவரை அவன் தப்பித்துக்கொள்ளுவான் என்று நம்பியிருந்தேன்."
"இதிலிருந்து கேஸென்றால் உனக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிகிறதே. இறந்தவன் எப்படி இருப்பான் என்று சொல் பார்ப்போம்."
"அப்படி ஒன்றுமில்லையே."
"அவன் கையிலிருந்த மோதிரம் அதைப் பற்றி..."
கிட்டு தலையை அசைத்தான்.

